India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருச்சி பெட்டவாய்த்தலை பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திகேயன். இவர் திருச்சி சிபிசிஐடி தலைமை காவலராக பணிபுரிந்து வருகிறார். இவரது வீட்டில் மராமத்து வேலை நடைபெற்று வருகிறது. இதனால், இன்று காலை சிமெண்ட் பூச்சிக்கு தண்ணீர் விடும் பொழுது மின்சாரம் தாக்கி மயங்கி விழுந்தார். மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற போது அவர் இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
மணப்பாறையை அடுத்த காட்டுப்பட்டியில் வசித்து வருபவர் தமிழ்குடிமகன் (28). இவருக்கும் அவரது மனைவிக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் விரக்தியில் இருந்த அவர் நேற்று மதுபோதையில் வீட்டுக்கு வந்து தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து கொண்டார். அக்கம் பக்கத்தினரால் மீட்கப்பட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
திருச்சியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வருகை தந்துள்ள திராவிட கழக தலைவர் வீரமணியை திருச்சி புத்தூர் நால்ரோடு அருகே உள்ள பெரியார் மாளிகையில் அமைச்சர் கே என் நேரு இன்று மரியாதை நிமித்தமாக சந்தித்தார். மேலும் இந்நிகழ்வில் திமுக மத்திய மாவட்டச் செயலாளர் வைரமணி, மாநகராட்சி மேயர் அன்பழகன், மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பரணி குமார் ஆகியோர் உடனிருந்தனர்.
திருச்சி கோட்டத்தில் ஈரோடு- திருப்பூர் இடையே ஈங்கூர்- ஊத்துக்குளி ரயில் நிலையங்களுக்கு இடையே அமைந்துள்ள விஜயமங்கலம் ரயில்வே யார்டில் இன்ஜினியரிங் பணிகள் நடைபெறுவதால் திருச்சி- பாலக்காடு டவுன் இடையே இயக்கப்படும் முன்பதிவு இல்லாத, பாலக்காடு எக்ஸ்பிரஸ் (16843) ரயில் நாளை 15,4.24. மதியம் 1மணிக்கு திருச்சியில் இருந்து ஈரோடு வரை தான் செல்லும். பாலக்காடு செல்லாது என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
திருச்சியின் அடையாளமான மலைக்கோட்டை சாமி கோயிலில் சித்திரை திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதற்காக அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி கொடிமரத்திற்கு வந்தார். அதன் பின்பு தீப ஆரத்திகள் நடைபெற்றது. பின்னர் கொடியேற்றம் நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை கோயில் அறங்காவலர்கள், ஊழியர்கள், பொதுமக்கள் இணைந்து செய்திருந்தனர்.
திருச்சி கலெக்டர் பிரதீப் குமார் நேற்று விடுத்த அறிக்கையில், மக்களவை தேர்தலில் , வாக்காளர்கள் அனைவரும் கட்டாயம் வாக்களிக்க வேண்டும், என்றும். மேலும் வீட்டின் உரிமையாளரின் அனுமதி பெறாமல் வீட்டிற்கு முன் கட்சியின் சின்னத்தின் ஸ்டிக்கர் ஒட்டுவது வரைவது போன்ற செயல்களில் ஈடுபடும் அரசியல் கட்சிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.
திருச்சி இபி ரோட்டில் தேர்தல் பறக்கும் படையினர் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, விதிமுறைகளை மீறி , திமுக வார்டு செயலாளர் உட்பட மூன்று பேர் அங்கு திமுக கொடியையும் வேட்பாளரின் சின்னத்தையும் உரிய அனுமதி பெறாமல் கட்டிக் கொண்டிருந்தனர். இதுகுறித்து தேர்தல் பறக்கும் படையினர் கொடுத்த புகாரின் பேரில், தேர்தல் நடத்தை விதி மீறல்களை, மீறியதாக கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
திருச்சி ஆட்சியர் இன்று செய்தியாளர்களிடம் பேசியபோது, எட்டரை கிராமத்தில் ஊராட்சி மன்ற தலைவியான திவ்யா வீட்டில் பிடிபட்ட ரூ.1 கோடி பணம் பறிமுதல் செய்த விவகாரத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, அந்த பணம் குறித்து விசாரணை நடைபெறுகிறது.மேலும் வீட்டின் உரிமையாளரின் அனுமதி இல்லாமல் வீட்டின் முன்பு கட்சியின் சின்னத்தை ஸ்டிக்கராக ஒட்டுவது, வரைந்தாலோ கட்சியினர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
திருச்சி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மிதமான மழை பெய்து வந்தது. அந்த வகையில் தமிழகத்தில் திருச்சி மாவட்டம் உள்ளிட்ட 15 மாவட்டங்களுக்கு இன்று மாலை 7 மணி வரை இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
திருச்சி மாவட்ட ஆட்சியர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், திருச்சி மாவட்டத்தில் 100% வாக்களிப்பதன் அவசியம் குறித்து பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றது. அது பொதுமக்களிடையே மிகப்பெரிய விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. எனவே கட்டாயம் பொதுமக்கள் அனைவரும் ஏப்ரல் 19ம் தேதி அன்று வாக்குச்சாவடிக்கு சென்று தவறாமல் வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டார்.
Sorry, no posts matched your criteria.