India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மக்களவை தேர்தலில் முதல் கட்ட ஓட்டுப்பதிவு தமிழக முழுவதும் நாளை மறுநாள் 19ஆம் தேதி நடக்கிறது. திருச்சி தொகுதியில் அதிமுக சார்பில் துரை வைகோ, அதிமுக சார்பில் கருப்பையா ,அமமுக சார்பில் செந்தில்நாதன்,நாம் தமிழர் சார்பில் ராஜேஷ் உட்பட 15 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.இந்நிலையில் தேர்தல் கமிஷன் விதிமுறைப்படி , இன்று மாலையோடு தேர்தல் பிரச்சாரம் முடிவடைகிறது.
மக்களவை தேர்தலில் முதல் கட்ட ஓட்டுப்பதிவு தமிழக முழுவதும் நாளை மறுநாள் 19ஆம் தேதி நடக்கிறது. திருச்சி தொகுதியில் லோக்சபா தொகுதியில் அதிமுக சார்பில் துரை வைகோ, அதிமுக சார்பில் கருப்பையா ,அமமுக சார்பில் செந்தில்நாதன்,நாம் தமிழர் சார்பில் ராஜேஷ் உட்பட 15 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.இந்நிலையில் தேர்தல் கமிஷன் விதிமுறைப்படி , இன்று மாலையோடு தேர்தல் பிரச்சாரம் முடிவடைகிறது.
திருச்சி லோக்சபா அதிமுக வேட்பாளர் கருப்பையா திருச்சி ஓலையூர் முள்ளிப்பட்டி பல்வேறு கிராமங்களில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார். கிராமம் கிராமமாக சென்ற கருப்பையாவுக்கு பெண்கள் வரிசையில் நின்று ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர். உங்களிடம் எத்தனை வேட்பாளர்கள் வேண்டுமானாலும் வரலாம் அவர்களை , நீங்கள் இதற்குப் பிறகு பார்க்க முடியாது, ஆனால் நான் உங்களில் ஒருவன் என்று கூறி வாக்கு சேகரித்தார்.
மருங்காபுரி அடுத்த பளுவஞ்சியை சேர்ந்த கோபாலகிருஷ்ணன் (26). இவர் இன்று நள்ளிரவு 1 மணியளவில் மதுரை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கல்லாமேடு அருகே நடந்து சென்றபோது பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து வளநாடு போலீசார் சடலத்தை மீட்டு உடற்கூறாய்விற்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
திருச்சி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் திருச்சி மாவட்டத்தில் உள்ள வாக்குச்சாவடிகளுக்கு அனுப்புவதற்காக முத்திரைகள் பேப்பர் அழியாத மை உள்ளிட்ட பொருட்களை தயார் செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஏற்கனவே மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் வேட்பாளரின் பெயர் சின்னம் அடங்கிய பேலட் பேப்பர் பொருத்தப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது,
திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயில் திருவிழா இன்று நடைபெறவிருக்கிறது.இதனால் திருச்சி மாவட்டத்திற்கு இன்று விடுமுறை அறிவித்து அறிவிப்பை வெளியிட்டார்.ஆட்சியர் பிரதீப் குமார். மேலும் இந்த விடுமுறையை ஈடு செய்யும் வகையில் வரும் ஜூன்- 8 அன்று வேலை நாளாக அறிவித்தார் ஆட்சியர் பிரதீப்.
தமிழ்நாடு காங்கிரஸ் மாநில தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான செல்வப்பெருந்தகை பிறந்த தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு காங்கிரஸ் மாநில பொதுச் செயலாளர் வழக்குரைஞர் எம்.சரவணன் சிறுகனூர் பகுதியில் அவரை நேரில் சந்தித்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார். அவருடன் எல்.ரெக்ஸ், தேர்தல் பொறுப்பாளர் பஜார் மைதீன் கலை பிரிவு ராஜீவ் காந்தி சிந்தை ஸ்ரீராம் வினோத் புருஷோத்தமன் மற்றும் பலர் உள்ளனர்.
சமூக சமத்துவத்திற்கான டாக்டர் சங்க பொது செயலாளர் ரவீந்திரநாத் செய்தியாளரிடம் நேற்று பேசுகையில், அலோபதி, சித்தா, ஆயுர்வேதம், யுனானி ஆகியவற்றை இணைத்து மிக்சோபதி எனும் மருத்துவ முறையை மத்திய அரசு அறிவித்துள்ளது. இது அலோபதி எனும் நவீன அறிவியல் சிகிச்சை முறையை ஒழித்துக் கட்டும் செயலாகும். மூடநம்பிக்கையும், ஆன்மீகத்தையும், மருத்துவத்துறையில் நுழைக்க கூடாது என்று வன்மையாக கண்டித்தார்.
கரூர் மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் செந்தில்நாதனை ஆதரித்து வேலுச்சாமிபுரத்தில் தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் நேற்று வாக்கு சேகரிக்கும்போது, கரூரில் இருந்தவர் இப்போது சிறையில் இருக்கிறார். கரூரைச் சேர்ந்த பெரிய தம்பி, அண்ணாமலை கோவையில் பாஜக சார்பில் போட்டியிடுகிறார். அவரை நாங்கள் வெற்றிபெறச் செய்து விடுவோம். சின்னத்தம்பி செந்தில்நாதனை நீங்கள் வெற்றி பெறச் செய்யுங்கள் என்று கூறினார்.
திருச்சி ஸ்ரீரங்கம் கீழ அடையவளஞ்சான் வீதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் 23 குடும்பங்கள் வசித்து வருகிறார்கள். இந்த குடியிருப்பு வாசிகளுக்கு 40க்கும் மேற்பட்ட செல்போன் எண்களில் இருந்து இரவு பகல் என எந்நேரமும் மர்ம நபர்கள் அழைத்து பேசுவதாகவும் வெடிகுண்டு மிரட்டல் விடுப்பதாகவும், பாலாஜி குடியிருப்பு உரிமையாளர் நலச்சங்கம் நேற்று ஸ்ரீரங்கம் உதவி கமிஷனர் நிவேதா லட்சுமி இடம் புகார் அளித்தனர்.
Sorry, no posts matched your criteria.