Tiruchirappalli

News August 20, 2025

திருச்சி: சான்றிதழ்கள் தொலைந்துவிட்டதா? 2/2

image

▶️ வருமான சான்று, ▶️ சாதி சான்று, ▶️ இருப்பிடச் சான்று, ▶️ கணவனால் கைவிடப்பட்டோர் சான்று, ▶️ முதல் பட்டதாரி சான்று, ▶️ வருமான சான்றிதழ், ▶️ வாரிசு சான்றிதழ், ▶️ குடிபெயர்வு சான்றிதழ், ▶️ சிறு/குறு விவசாயி சான்றிதழ், ▶️ கலப்பு திருமண சான்றிதழ், ▶️ சொத்து மதிப்பு சான்றிதழ், ▶️ விதவை சான்றிதழ் & வேலையில்லாதோர் சான்றிதழ் உள்ளிட்டவற்றை நீங்கள் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். ஷேர் பண்ணுங்க.

News August 20, 2025

திருச்சி: அதிக மகசூல் பெரும் விவசாயிகளுக்கு பரிசு அறிவிப்பு

image

மாநில வேளாண்மை வளர்ச்சி திட்டத்தில் விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில் மாநிலத்தில் அதிக மகசூல் பெரும் விவசாயிகளுக்கு முதல் பரிசாக ரூ.2.50 லட்சம், 2-ம் பரிசாக ரூ.1.50 லட்சம், 3-ம் பரிசாக ரூ.1 லட்சம் வழங்கப்பட உள்ளது. இதில் திருச்சியை சேர்ந்த விவசாயிகள் பயன்பெற, நிலத்தின் ஆவணங்களுடன் வேளாண்மை உதவி இயக்குனரை நேரில் அணுகி விண்ணப்பிக்க வேண்டும் என திருச்சி மாவட்ட வேளாண் இணை இயக்குனர் தெரிவித்துள்ளார்.

News August 20, 2025

திருச்சி – ராமேஸ்வரம் ரயில் மூன்று நாட்கள் ரத்து

image

திருச்சி – ராமேஸ்வரம் விரைவு ரயில் மூன்று தினங்கள் பகுதியாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இது குறித்து திருச்சி கோட்ட ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “திருச்சி – ராமேஸ்வரம் விரைவு ரயில் வரும் 25, 26, 28 ஆகிய தினங்கள் பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயில் திருச்சியில் இருந்து மானாமதுரை வரை மட்டுமே இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News August 20, 2025

திருச்சி: SBI வங்கியில் வேலை வாய்ப்பு

image

திருச்சி மக்களே, SBI வங்கியில் காலியாக உள்ள 5180 Junior associates (Customer Support and Sales) பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஏதேனும் பாடப்பிரிவில் டிகிரி முடித்தவர்கள் <>இங்கே கிளிக்<<>> செய்து, வரும் ஆக.26-க்குள் இதற்கு விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.24,050 முதல் ரூ.64,480 வரை வழங்கப்படும். வங்கி வேலை தேடும் நபர்களுக்கு இதை மறக்காம SHARE பண்ணுங்க!

News August 20, 2025

திருச்சி வரும் குடியரசு தலைவர்

image

இந்திய குடியரசு தலைவர் திரெளபதி முர்மு வரும் செப்டம்பர் 3 தேதி தனி விமானம் மூலம் திருச்சி வருகை தந்து ஹெலிகாப்டர் மூலம் திருவாரூர் புறப்பட்டுச் செல்கிறார். அதையடுத்து அன்றைய தினம் மாலை 6 மணிக்கு ஹெலிகாப்டர் மூலம் கொள்ளிடம் கரைக்கு வருகை தந்து பின்னர், ஸ்ரீரங்கம் கோவிலில் ஜனாதிபதி சாமி தரிசனம் செய்கிறார்.

News August 20, 2025

திருச்சி: கோழி பண்ணை அமைக்க 50% மானியம்

image

மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் தமிழக அரசு சார்பில் கோழி பண்ணை அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் 250 கோழி குஞ்சுகள் வீதம் இலவசமாக வழங்கப்படுகின்றன. மேலும் கோழி கொட்டகை, உபகரணங்கள், 4 மாதங்களுக்கு தேவையான தீவனம் என மொத்த செலவில் 50 % மானியமும் வழங்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் தங்கள் அருகிலுள்ள கால்நடை மருத்துவமனையில் விண்ணப்பிக்லாம். ஷேர் பண்ணுங்க <<17460250>>தொடர்ச்சி<<>>

News August 20, 2025

திருச்சி: கோழி பண்ணை அமைக்க 50% மானியம் (2/2)

image

▶️ இத்திட்டத்தில் விண்ணப்பிக்க குறைந்தபட்சம் 625 சதுர அடி நிலம் சொந்தமாக இருக்க வேண்டும்
▶️ மின் இணைப்பு இருக்க வேண்டும்
▶️ ஏற்கனவே நாட்டுக்கோழி திட்டத்தின் கீழ் பயனடைந்த பயனாளிகள் மற்றும் குடும்பத்தினர் மானியம் பெற தகுதி இல்லை
▶️ தேர்வு செய்யப்படும் பயனாளி 3 வருடங்களுக்குக் குறையாமல் பண்ணையைப் பராமரிக்க உறுதி அளிக்க வேண்டும். ஷேர் பண்ணுங்க!

News August 20, 2025

திருச்சி: ரயில் பயண சீட்டு விற்பனை முகவர் வேலை

image

திருச்சி மாவட்டத்தின் குமாரமங்கலம், கல்பட்டிசத்திரம், கொளத்தூர் ஆகிய ரயில் நிலையங்களில் பயண சீட்டு விற்பனை முகவர் வேலைக்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கு திருச்சி மாவட்டத்தை சேர்ந்த இளைஞர்கள் மட்டுமே விண்ணப்பிக்க இயலும். விருப்பமுள்ளவர்கள் <>sr.indianrailways.gov.in<<>> என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, ஆக.25-க்குள் மதுரை ரயில்வே கோட்ட அலுவலகத்தில் அளிக்க வேண்டும். SHARE NOW!

News August 20, 2025

ரயில் பயண சீட்டு விற்பனை முகவர் பணி: தெற்கு ரயில்வே அறிவிப்பு

image

திருச்சி மாவட்ட குமாரமங்கலம், கல்பட்டிசத்திரம், கொளத்தூர், பூங்குடி ரயில் நிலையத்தில் பயண சீட்டு விற்பனை முகவர் வேலைக்கு தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அந்தந்த ரயில் நிலையத்தில் அமைந்துள்ள மாவட்ட இளைஞர்களுக்கு மட்டுமே தகுதி உள்ளது. குறைந்தபட்ச வயது 18ஆக இருக்க வேண்டும். விண்ணப்பத்தை ஆக.,25-ம் தேதிக்குள் கொடுக்க வேண்டும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. தகவல்களுக்கு ரயில் நிலைய மேலாளரை அணுகவும்.

News August 19, 2025

திருச்சி: தமிழ் தெரிந்தவர்களுக்கு சூப்பர் வாய்ப்பு

image

திருச்சி மக்களே.. தமிழ் தெரிந்தவர்களுக்கு வங்கியில் பணி புரிய அறிய வாய்ப்பு! ரெப்கோ வங்கியில் வாடிக்கையாளர்கள் சேவை அதிகாரி காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு டிகிரி முடித்த நன்கு தமிழ் தெரிந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.24,050 முதல் ரூ.64,480 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள்<> இங்கே கிளிக் செய்து<<>> 08.09.2025க்குள் விண்ணப்பிக்கலாம். இத்தகவலை SHARE பண்ணுங்க.!

error: Content is protected !!