Tiruchirappalli

News May 7, 2025

திருச்சியில் நூதன முறையில் கள்ளநோட்டு விநியோகம்

image

திருச்சியில் சமீப காலமாக கள்ளநோட்டுகளின் புழக்கம் அதிகரித்ததை தொடர்ந்து, போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது திருச்சி அருகே ஆளவந்தான்நல்லூரை சேர்ந்த பவுல்ராஜ் என்பவர் ரூ.500 கள்ளநோட்டுகளை அச்சடித்து செலவு செய்து வந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். இதையடுத்து அவரை கைது செய்த போலீசார், கள்ளநோட்டு அச்சிட அவர் பயன்படுத்திய பிரிண்டர், ஸ்மார்ட் போன், இங்க் பாட்டில்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

News May 7, 2025

திருச்சியில் நூதன முறையில் கள்ளநோட்டு விநியோகம்

image

திருச்சியில் சமீப காலமாக கள்ளநோட்டுகளின் புழக்கம் அதிகரித்ததை தொடர்ந்து, போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது திருச்சி அருகே ஆளவந்தான்நல்லூரை சேர்ந்த பவுல்ராஜ் என்பவர் ரூ.500 கள்ளநோட்டுகளை அச்சடித்து செலவு செய்து வந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். இதையடுத்து அவரை கைது செய்த போலீசார், கள்ளநோட்டு அச்சிட அவர் பயன்படுத்திய பிரிண்டர், ஸ்மார்ட் போன், இங்க் பாட்டில்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

News May 7, 2025

திருச்சி எஸ்.பி எச்சரிக்கை

image

திருச்சி மாவட்ட எஸ்.பி செல்வரத்தினம் இன்று விடுத்துள்ள செய்தி குறிப்பில், சமயபுரம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் பைக் சாகசத்தில் ஈடுபட்ட நபரின் டூவீலர் பறிமுதல் செய்யப்பட்டு, கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், இதுபோல பொதுமக்களுக்கு இடையூறு மற்றும் அச்சுறுத்தல் ஏற்படுத்தும் செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை பாயும் என அவர் எச்சரித்துள்ளார்.

News May 7, 2025

திருச்சி: கால்நடைகள் மூலம் ரூ.23 லட்சம் வருவாய்

image

திருச்சி மாநகரில் சாலையில் சுற்றித்திரியும் கால்நடைகளின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த 2022 முதல் 28.04.2025 வரை 767 கால்நடைகளை பிடித்து, அவற்றின் உரிமையாளர்களிடமிருந்து ரூ.19,88,500 அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளது. மேலும் 51 கால்நடைகள் ஏலம் விடப்பட்டதன் மூலம் ரூ.3.45 லட்சம் கிடைத்துள்ளது. மொத்தத்தில் மாநகராட்சிக்கு ரூ.23,33,500 வருவாய் கிடைத்துள்ளது.

News May 7, 2025

திருச்சி: ரூ.49,000 சம்பளத்தில் பேங்க் வேலை!

image

மத்திய பொதுத்துறை நிறுவனமான யூனியன் வங்கியில் உதவி மேனேஜர் பதவிக்கான 500 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஏதேனும் பட்டப்படிப்புடன் கூடிய CA/CS/CMA முடித்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். மாத ஊதியமாக ரூ.48,480 முதல் ரூ.85,920 வரை வழங்கப்படும். 22 முதல் 30 வயதுக்குட்பட்டவர்கள் www.unionbankofindia.co.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். பேங்க் வேலை தேடும் உங்க நண்பருக்கு SHARE செய்யவும்!

News May 7, 2025

பாலக்காடு – திருச்சி ரயில் ரத்து

image

பராமரிப்பு பணிகள் காரணமாக பாலக்காடு – திருச்சி ரயில் பகுதியாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ரயில் பாதையில் பராமரிப்பு பணிகள் காரணமாக பாலக்காடு – திருச்சி தினசரி ரயில் மே.2ஆம் தேதி குளித்தலை – திருச்சி இடையே ரத்து செய்யப்படுகிறது. அன்றைய தினம் குளித்தலை – திருச்சி இடையே முன்பதிவு இல்லா சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News May 7, 2025

திருச்சி ரூ.25,000 சம்பளத்தில் வேலை

image

திருச்சியில் இயங்கி வரும் தனியார் நிறுவனத்தில் உள்ள Sales Executive பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் திறன் பயிற்சி துறை அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு ரூ.15,000-ரூ.25,000 வரை ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்கு 12ஆம் வகுப்பு முடித்தவர்கள் <>இங்கே க்ளிக் செய்து <<>>விண்ணப்பிக்கலாம். வேலை தேடும் நபர்களுக்கு SHARE செய்து உதவுங்கள்…

News April 30, 2025

அட்சய திருதியையில் இங்கு சென்று வழிபடுங்கள்

image

அட்சய திருதியை இன்று கொண்டாடப்படுகிறது. அட்சய திருதியைக்கு தங்க நகைகள், மஞ்சள் உள்ளிட்ட மங்களகரமான பொருட்களை வாங்கினால் செல்வம் பெருகும் என்பது நம்பிக்கை. எனவே திருச்சி மக்களே உங்கள் வீட்டின் அருகே உள்ள மகாலெட்சுமி, பெருமாள் மற்றும் குபேரர் கோயிலுக்கு சென்று வழிபட்டு தங்கம், மஞ்சள் மற்றும் கல்உப்பு போன்ற மங்கள பொருட்களை வாங்குங்கள். எல்லோருக்கும் SHARE பண்ணுங்க.

News April 30, 2025

அடுத்தடுத்து 3 வாகனங்கள் மோதி விபத்து

image

திருச்சியில் இருந்து தஞ்சாவூர் நோக்கி சென்ற அரசு பஸ் எலக்ட்ரானிக் ரிங் ரோட்டில் திடீரென இரும்பு தடுப்பில் மோதியது. இதில் இரும்பு தடுப்பு சாலையின் குறுக்கே விழுந்தது. அப்போது, தஞ்சையில் இருந்து திருச்சி நோக்கி வந்த கார் மோதியது. தொடர்ந்து சிலிண்டர் ஏற்றி வந்த சரக்கு வேனும் மோதி, சாலையில் கவிழ்ந்தது. இதில் வேன் டிரைவர் ரமேஷ் (37) பலத்த காயம் அடைந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

News April 30, 2025

திருச்சி மைய நூலகத்தில் கவிதை ஒப்புவித்தல் போட்டி

image

திருச்சி மாவட்ட மைய நூலகம், வாசகர் வட்டம் சார்பில் பாவேந்தர் பாரதிதாசன் 135வது பிறந்த நாளையொட்டி, மைய நூலகத்தில் மே 4ம் தேதி ஞாயிறு காலை 10 மணிக்கு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு “பாரதிதாசனின் கவிதை ஒப்புவித்தல் போட்டி” நடக்கிறது. இதில் 6 – 12ம் வகுப்பு மாணவர்கள் கலந்து கொள்ளலாம். முதல் 3 இடங்களை பெறுபவர்களுக்கு முறையே ரூ.500, ரூ.300, ரூ.200 பணப்பரிசு, பாரதிதாசன் கவிதை நூல் பரிசாக வழங்கப்படும்.

error: Content is protected !!