India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் திருச்சி பிரிவின் சார்பாக வருகிற ஏப்ரல் 1ஆம் தேதி முதல் நீச்சல் பயிற்சி ஆரம்பிக்கப்படவுள்ளது 8 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் கட்டாயம் சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டும் ஆண் பெண் இருவருக்கும் தனித்தனியாக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது ஏப்ரல் 1 முதல் 12 வரை முதல் வரை முதல் பேஜ் ஆரம்பமாக உள்ளது திருச்சி மாவட்ட விளையாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது.
திருச்சியை சுற்றியுள்ள கல்லூரிகளின் பட்டியல்: ▶தந்தை பெரியார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி (திருச்சி) ▶ஏ.ஏ. அரசு கலைக் கல்லூரி (முசிறி) ▶டாக்டர் கலைஞர் அரசு கலைக் கல்லூரி (குளித்தலை) ▶அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி (லால்குடி, மணப்பாறை, திருவெறும்பூர், இனாம்குளத்தூர்) 12ஆம் வகுப்பு முடித்த மாணவ-மாணவிகள் இந்த கல்லூரிகளின் பட்டியலை பயன்படுத்தி கொள்வதோடு உங்க நண்பர்களுக்கும் SHARE பண்ணுங்க…
தமிழ்நாட்டில் வறண்ட காற்று காரணமாக அடுத்த 5 நாட்களுக்கு வெப்பம் அதிகரிக்குமென வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி திருச்சி மாவட்டத்தில் 102.2 – 105.8 டிகிரி வரை பதிவாகக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, ▶ காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை தேவையின்றி வெளியில் செல்வதை தவிர்க்கவும் ▶ முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அறிவுறுத்தியுள்ளனர். இத்தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க…
திருச்சி மாநகரத்தில் மக்களுக்கு பெரும் தொல்லையாக இருக்கும், தெரு நாய்களை கட்டுப்படுத்தும் வகையில், மாநகராட்சி சார்பில் செயல்பட்டு வரும் நாய்களுக்கான 4 கருத்தடை மையங்கள் மூலம், நடப்பு 2024-25 நிதியாண்டில், 8 ஆயிரத்து 345 தெரு நாய்களுக்கு ரூ.1.38 கோடி செலவில் கருத்தடை செய்யப்பட்டு, ரேபீஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக மாநகராட்சி பட்ஜெட் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மண்ணச்சநல்லூர் உத்தமர் கோயிலுக்கு சென்று வழிபட்டால், கல்வி, ஞானம் மற்றும் செல்வம் பெருகும் என்றும், மும்மூர்த்திகளும் தேவியர்களோடு அருள்வதால் இங்கு வழிபட்டால் குடும்ப ஒற்றுமை மேலோங்கி சகல தோஷங்களும் நீங்கும் என நம்பப்படுகிறது. மும்மூர்த்திகளான சிவன், பிரம்மா, விஷ்ணு ஆகிய ஆகியோர் தனித்தனி சன்னதிகளில் அம்பாள்களுடன் காட்சி தருவதே இக்கோவிலின் தனிச்சிறப்பாகும். இதனை உங்களது நண்பர்களுக்கு பகிரவும்!
திருச்சி கருமண்டபம் பகுதியில் நடைபெற்ற இஃப்தார் நிகழ்ச்சியில் தேவையான சஹர் உணவுகள், நோன்பு கஞ்சி, பழங்கள் மற்றும் குளிர் பானங்களை விநியோகிக்கும் விதமாக திருச்சியைச் சேர்ந்த ஆஷிக் ரகுமான் தலைமையிலான ரோபாட்டிக்ஸ் வடிவமைப்பாளர் குழுவினரால் உருவாக்கப்பட்ட நவீன ரோபோ மூலமாக குளிர்பானங்கள் உள்ளிட்ட பொருட்கள் விநியோகிக்கப்பட்டது. இது அங்கிருந்த மக்கள் அனைவரையும் வெகுவாக கவர்ந்தது. SHARE NOW!
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நாளுக்கு நாள் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து கொண்டே வருகிறது. அந்த வகையில் திருச்சி, வேலூர் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் இன்று முதல் 31-ஆம் தேதி வரை 39 டிகிரி சென்டிகிரேடு முதல் 41 டிகிரி சென்டிகிரேடு வரை வெயிலின் தாக்கம் இருக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் தேவையின்றி பகல் வேளையில் வெளியே செல்வதை தவிர்த்துக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர். SHARE NOW!
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கில் உள்ள நீச்சல் குளத்தில் நீச்சல் கற்றுக் கொடுக்கும் பயிற்சி வரும் 01.04.25 முதல் 08.06.25 வரை ஐந்து கட்டங்களாக நடைபெற உள்ளது. இதற்கான கட்டணம் ₹.1,500 + ஜி.எஸ்.டி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் அண்ணா விளையாட்டு அரங்கில் நேரில் வந்து முன்பதிவு செய்து கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
மணப்பாறை ராக்கம்பட்டி கிராமத்தில் மாடு மேய்த்துக் கொண்டிருந்த குழந்தையை கடத்திச்சென்று பாலியல் துன்புறுத்தல் செய்ததாக சண்முகசுந்தரம் என்கிற கோபால் என்பவர் மீது மணப்பாறை போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.இந்நிலையில் இன்று இந்த வழக்கின் விசாரணை,திருச்சி கோர்ட்டில் நடைபெற்றது.இதில் குற்றம் சாட்டப்பட்டவருக்கு 5 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனையும் ரூ.15,000 அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்
தமிழகத்தின் 4-ஆவது பெரிய நகரமாக விளங்கும் திருச்சியை தலைமையகமாக கொண்ட திருச்சிராப்பள்ளி மாவட்டம் வரலாறு, கலாச்சாரம், ஆன்மீகம், தொழில் என பல்வேறு வகைகளில் தமிழகத்தின் மிக முக்கிய மாவட்டமாக விளங்குகிறது. சுமார் 31 லட்சம் மக்கள் தொகை கொண்ட திருச்சி மாவட்டத்தில், ஆண்களை விட பெண்களின் எண்ணிக்கையே அதிகமாகும். மாவட்டத்தின் சராசரி படிப்பறிவு விகிதம் 85 சதவீதமாக உள்ளது. SHARE NOW!
Sorry, no posts matched your criteria.