Tiruchirappalli

News March 18, 2025

திருச்சி: காவல் உதவி ஆப்பை டவுன்லோடு செய்ய அறிவுரை

image

குற்ற சம்பவங்களை தடுக்கும் வகையில் திருச்சி மாவட்ட காவல்துறை பொதுமக்களுக்கு தொடர்ந்து முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் இன்று, காவல் உதவி செயலியின் மூலம் ஸ்மார்ட்போனை பாதுகாவலனாக மாற்ற கூறியுள்ளது. குறிப்பாக பெண்கள் காவல் உதவி செயலியை இன்றே பதிவிறக்கம் செய்ய வேண்டும். Download link:https://play.google.com/store/apps/details?id=com.amtexsystems.kaavaluthavi இதில் பதிவிறக்கலாம்.

News March 18, 2025

திருச்சியில் பாஜக மாவட்ட தலைவர் கைது

image

பாஜக திருச்சி புறநகர் மாவட்ட தலைவர் R. அஞ்சாநெஞ்சன் தலைமையிலும் மாநில பொது செயலாளர் திருச்சி பெருங்கோட்ட பார்வையாளர் கருப்பு முருகானந்தம் வழிகாட்டுதலின் படி இன்று நம்பர் எண்.1 டோல்கேட்டில் மதுபான கடை முற்றுகை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இது பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கைதை கண்டித்து நடைபெற்றது. இதில் 200க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

News March 17, 2025

குறைதீர் கூட்டத்தில் 748 மனுக்கள் பெறப்பட்டன

image

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் இலவச வீட்டுமனைப் பட்டா, சாதிச் சான்றுகள், தமிழ்நாடு வாழ்விட மேம்பாட்டு வாரியத்தில் வீடு ஒதுக்கீடு, வேலை வாய்ப்பு மற்றும் இதர மனுக்கள் என மொத்தம் 748 மனுக்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டன. இம்மனுக்கள் மீது உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு ஆட்சியர் பிரதீப் குமார் உத்தரவிட்டார்.

News March 17, 2025

திருச்சிராப்பள்ளி பெயர் வந்த கதை

image

16 ஆம் நூற்றாண்டில் கிடைத்த ஒரு பாறையில் உள்ள கல்வெட்டில் திருச்சிராப்பள்ளியை ‘திரு-சிள்ள-பள்ளி’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதற்கு ‘புனித-மலை-நகரம்’ என்று பொருள். சில அறிஞர்கள் இந்நகரத்தின் பெயரானது சிறிய புனித நகரம் என்று பொருள்படும் ‘திரு-சின்ன-பள்ளி’ என்ற பெயரில் இருந்து வந்திருக்கலாம் என்று நம்புகின்றனர். புனித நகரம் என்னும் திருச்சி பெயர் காரணத்தை எல்லோருக்கும் SHARE பண்ணுங்க.

News March 17, 2025

பிளஸ் 2 போதும்: APP டெவலப்பர் ஆகலாம்

image

திருச்சியில் தமிழ்நாடு அரசு சார்பில் இலவச மொபைல் ஆப் டெவலப்பர் பயிற்சி வழங்கப்பட உள்ளது. இதற்கு 12ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இப்பயிற்சிக்கு பின்னர் தனியார் நிறுவனங்களில் வேலை வாய்ப்புகள் ஏற்படுத்தி தரப்படும். பயிற்சியில் சேர மார்ச் 24ஆம் தேதிக்குள் <>இதை க்ளிக் <<>> செய்து விண்ணப்பிக்கவும். இதை SHARE பண்ணுங்க.

News March 17, 2025

தீ விபத்தில் உயிரிழந்த மூதாட்டி-போலீசார் வழக்குப்பதிவு

image

திருச்சி, வாளசிராமணி பகுதியைச் சேர்ந்த பெரியம்மாள் (76) முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்டிருந்தார். நேற்று அவர் இருந்த குடிசை வீட்டில் திடீரென தீப்பிடித்து எரிந்த நிலையில், பெரியம்மாள் மீதும் தீப்பிடித்து அதிகமாக காயமடைந்து நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்துள்ளார். இது குறித்து தா.பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

News March 17, 2025

திருச்சி – ஈரோடு ரயில் சேவைகளில் மாற்றம்

image

பராமரிப்புப் பணிகள் காரணமாக, திருச்சி – ஈரோடு பயணிகள் ரயில் (வண்டி எண்: 56809) நாளை (மார்ச் 18) மற்றும் மார்ச் 20, 23, 25, 28, 31 ஆகிய தேதிகளில் காலை 7.20 மணிக்கு புறப்பட்டு கரூர் வரை மட்டும் இயங்கும் என்றும், பின்னர் கரூரில் இருந்து முன்பதிவில்லா சிறப்பு ரயிலாக ஈரோடு வரை இயங்கும் என்றும் திருச்சி ரயில்வே கோட்ட அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News March 17, 2025

பிரசவத்திற்காக மனைவி அனுமதி: சாலை விபத்தில் கணவன் பலி

image

திருச்சியை அடுத்த கம்பரசம்பேட்டையைச் சேர்ந்த தீபக்(33) என்பவர். நேற்று முன்தினம் பிரசவத்திற்காக திருச்சியில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தன்னுடைய மனைவியை பார்த்துவிட்டு மோட்டார் சைக்கிளில் கம்பரசம்பேட்டை நோக்கி சென்றபோது, கார் ஒன்று மோதி தலையில் பலத்த காயமடைந்து உயிரிழந்தார். இது தொடர்பாக காரில் வந்த கோயமுத்தூரைச் சேர்ந்த பெட்ரிக்ஸ் ஜான்(49) என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

News March 16, 2025

திருச்சி: குரூப் 4 தேர்வுக்கான மாதிரி தேர்வு

image

திருச்சி மாவட்ட மைய நூலகம், வாசகர் வட்டம் சார்பில் டி.என்.பி.எஸ்.சி நடத்தும் குரூப் 4 போட்டி தேர்வுக்கான மாதிரி தேர்வு, மாவட்ட மைய நூலகத்தில் நாளை (மார்ச் 17) காலை 10 மணி முதல் மதியம் 1.30 மணி வரை நடைபெற உள்ளது. இதில் 2025 ஜூலை மாத நடப்பு நிகழ்வுகள், கணிதத்தில் நேரம் மற்றும் வேலை ஆகியவற்றிலிருந்து வினாக்கள் இடம்பெறும். இதில் மாணவர்கள் கலந்து கொண்டு பயனடையலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News March 16, 2025

வாகன ஓட்டிகளுக்கு திருச்சி காவல்துறை எச்சரிக்கை

image

இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் அதிவேகமாக செல்வோர் குறித்து திருச்சி மாவட்ட காவல்துறை இன்று எச்சரிக்கை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில், அதிவேகம், கடுமையான காயங்கள் அல்லது மரணத்தை ஏற்படுத்தும் எனவும், சாலை விதிகளை மீறுவோர் குறித்தும், சாலை விபத்துகள் குறித்து தகவல் தெரிவிக்க மாவட்ட காவல் அலுவலக உதவி எண் 8939146100 -க்கு அழைக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த செய்தியை பகிருங்கள்..

error: Content is protected !!