Tiruchirappalli

News April 1, 2025

10 இருசக்கர வாகனங்களை காவலர்களுக்கு வழங்கிய எஸ்.பி.

image

திருச்சி மாவட்டத்தில் குற்ற செயல்களை தடுப்பதற்கு அரசால் வழங்கப்பட்ட 10 இருசக்கர வாகனங்களை ரோந்து காவலர்களுக்கு இன்று திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வ நாகரத்தினம் வழங்கினார். இதில், 5 உட்கோட்டங்களில் உள்ள 2 காவல் நிலையங்களுக்கு இரவு நேர ரோந்து பணியில் ஈடுபட இந்த இருசக்கர வாகனங்கள் கொடுக்கப்பட்டன.

News April 1, 2025

BREAKING: தமிழகத்தின் அடுத்த தலைநகர் திருச்சி?

image

தமிழக சட்டசபை கூட்டத்தில் இன்று எம்.எல்.ஏ நயினார் நாகேந்திரன் பேசுகையில், “திருச்சியை தமிழகத்தின் தலைநகராக அறிவிக்க வேண்டும்” என்ற கோரிகையை முன்வைத்து பேசினார். இதற்கு சபாநாயகர் அப்பாவு, “இதுகுறித்து பரிசீலிக்கப்படும்” என்று தெரிவித்தார். திருச்சி தலைநகர் ஆகவேண்டுமா? உங்களது கருத்துக்களை COMMENTல் சொல்லுங்க, SHARE பண்ணுங்க..

News April 1, 2025

12ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு SBI வங்கியில் வேலை

image

திருச்சி மாவட்டத்தில் 12ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு, ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBI) வங்கியில் தற்காலிக அலுவலக உதவியாளர் பணிவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு தகுதி அடிப்படையில் 25,000 முதல் சம்பளம் வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு <>இங்கே கிளிக்<<>> செய்யவும். இந்த தகவலை உடனே வேலை தேடும் நண்பர்களுக்கு ஷேர் செய்யவும்.

News April 1, 2025

அங்கன்வாடி ஆசிரியராக இலவச பயிற்சி!

image

தமிழ்நாடு அரசு திறன் மேம்பாட்டு கழகம் மூலம் இலவசமாக, அங்கன்வாடி ஆசிரியர் பயிற்சி வழங்கப்பட உள்ளது. இந்த பயிற்சியில் 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 18-35 வயதிற்கு அதிகமான பெண்கள் விண்ணப்பிக்கலாம். இப்பயிற்சியின் மூலம் தகுதிபெறுபவர்களுக்கு தொடக்கமே மாதம் ரூ.7,500 முதல் ரூ.20,000 வரை சம்பளம் கிடைக்கும். மேலும் விவரங்களை <>இங்கு கிளிக் செய்து<<>> அறியலாம். இந்த தகவலை உங்க நண்பர்களுக்கு ஷேர் செய்யவும்.

News April 1, 2025

கிணற்றில் குளிக்கச் சென்ற பெண் உயிரிழப்பு

image

திருச்சி மாவட்டம், தா.பேட்டையைச் சேர்ந்த மகேஸ்வரி (63) என்பவர் நேற்று அப்பகுதியில் உள்ள ஒரு கிணற்றில் குளிக்க சென்றபோது, அவருக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டு கிணற்றில் தவறி விழுந்துள்ளார். பின்னர் அவர் மூச்சு திணறி உயிரிழந்ததாகக் கூறப்பட்ட தகவலின் பெயரில், தா.பேட்டை போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து, இது குறித்து வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News March 31, 2025

திருச்சியில் விடுமுறைக்கு சிறந்த 5 இடங்கள்

image

திருச்சி மாவட்டத்தில் கோடை விடுமுறையை முன்னிட்டு, குட்டீஸ் பொழுதை கழிக்க சிறந்த 5 இடங்கள்.
* மலைக்கோட்டை
* முக்கொம்பு
* பட்டாம்பூச்சி பூங்கா
* பச்சை மலை
* கல்லணை
இந்த இடங்களுக்கு போங்க. விடுமுறைக்கு எங்க போறது தெரியாம இருக்குற உங்க FRIENDSக்கு SHARE பண்ணுங்க

News March 31, 2025

திருச்சி மத்திய மண்டலத்தில் விபத்துக்கள் அதிகரிப்பு

image

திருச்சி மத்திய மண்டலத்தில் 2023-ஆம் ஆண்டை விட கடந்தாண்டு விபத்துகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதில் திருச்சி மாவட்டத்தில் 2023-இல் 1,806 விபத்து வழக்குகள் பதியப்பட்டு 555 இறப்புகள் ஏற்பட்டு 1,278 போ் காயமடைந்தனா். 2024-இல் 1,922 வழக்குகள் பதியப்பட்டு 634 இறப்புகள் ஏற்பட்டு 1,317 போ் காயமடைந்துள்ளனா். வழக்குகள் 116-ம், இறப்புகள் 79-ம், காயங்கள் 39-ம் அதிகரித்துள்ளன.

News March 31, 2025

ரேஷன் கார்டில் கைரேகை வைக்கலயா?

image

திருச்சி மாவட்டத்தில் AAY மற்றும் PHH குடும்ப அட்டைதாரர்கள் தங்கள் கைரேகையை பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்யாதவர்கள் இன்றைக்குள் (மார்ச்.31) பதிவு செய்ய வேண்டும் என்றும், தவறும் பட்சத்தில் அட்டையை இழக்க நேரிடும். ஒருவேளை நீங்கள் வெளி மாவட்டத்திலோ, வெளி மாநிலத்திலோ இருந்தால் அருகில் உள்ள ரேஷன் கடைகளுக்கு சென்று அங்கு ரேகையை பதிவு செய்து கொள்ளலாம். (உடனே SHARE பண்ணுங்க)

News March 30, 2025

திருச்சி: மாதம் ரூ.30,000 சம்பளத்தில் வேலை!

image

அக்னிபாத் திட்டத்தின் கீழ் இந்திய ராணுவ படையில் ஆள்சேர்க்கும் அறிவிப்பை திருச்சி ராணுவ ஆள்சேர்ப்பு அலுவலகம் வெளியிட்டுள்ளது. குறைந்தது 10-ஆம் வகுப்பு கல்வி தகுதி கொண்ட, 21 வயதுக்குட்பட்ட திருமணமாகாத இளைஞர்கள் இதில் விண்ணப்பிக்கலாம். ரூ.30,000 முதல் ரூ.40,000 வரை மாத சம்பளமாக வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் joinindianarmy.nic என்ற முகவரியில் விண்ணப்பிக்கலாம். வேலை தேடும் உங்க நண்பருக்கு பகிரவும்!

News March 30, 2025

மணப்பாறையில் எலக்ட்ரீசியன் மர்மமான முறையில் உயிரிழப்பு

image

மதுரை எம்கே புரத்தைச் சேர்ந்த முகேஸ்வரன் என்பவர் மணப்பாறையில் திண்டுக்கல் சாலையில் இயங்கி வரும் நகை கடையில் கடந்த ஆறு மாதங்களாக எலக்ட்ரீசியனாக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் இவர் இன்று ரயில்வேக்கு சொந்தமான இடத்தில் இறந்து கிடப்பதாக கிடைத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த மணப்பாறை போலீசார் உடலை கைப்பற்றி உடற்கூராய்வுக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

error: Content is protected !!