Tiruchirappalli

News July 10, 2025

செய்தியாளர்களிடம் மன்னிப்பு கேட்ட திருச்சி எம்.பி

image

‘ஜனநாயகம் செழிக்க வேண்டுமானால் பத்திரிக்கை சுதந்திரம் பேணிப் பாதுகாக்கப்பட வேண்டும். சாத்தூரில் நடந்த நிகழ்வுக்கு, தனிப்பட்ட முறையிலும், கட்சியின் சார்பிலும் பத்திரிகை, ஊடக நண்பர்களிடம் எனது ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன்” என ‌திருச்சி நாடாளுமன்ற உறுப்பினரும், மதிமுக முதன்மைச் செயலாளருமான துரை வைகோ தெரிவித்துள்ளார்.

News July 10, 2025

புதிய மோசடி: திருச்சி மாவட்ட காவல்துறை எச்சரிக்கை

image

நீங்கள் செய்யாத போக்குவரத்து விதிமீறலுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது போல உங்களது செல்போனுக்கு வரும் குறுஞ்செய்திகளை நம்ப வேண்டாம் என திருச்சி காவல்துறை எச்சரித்துள்ளது. மேலும் குறுஞ்செய்திகளில் வரும் லிங்கை தொடுவதன் மூலம் உங்கள் வங்கி கணக்குகளில் உள்ள பணம் திருடப்படலாம். சைபர் குற்றங்கள் தொடர்பாக புகார் தெரிவிக்க தேசிய சைபர் கிரைம் உதவி எண் 1930-ஐ அழைக்கலாம். இந்த தகவலை மறக்காம SHARE பண்ணுங்க!

News July 10, 2025

கடலூர் ரயில் விபத்து: திருச்சியில் 11 பேர் ஆஜர்

image

கடலூர் அருகே செம்மங்குப்பம் நேற்று முன்தினம் நடைபெற்ற ரயில் விபத்து தொடர்பாக 13 பேருக்கு ரயில்வே நிர்வாகம் சம்மன் அனுப்பியது. இந்நிலையில் இன்று ரயில் லோகோ பைலட் சக்தி குமார், உதவி லோகோ பைலட் ரஞ்சித் குமார், ரயில் நிலைய அதிகாரிகள் விக்ராந்த் சிங், அஜித்குமார், விமல், அங்கித் குமார், ஆனந்த், வடிவேலன் உட்பட 11 பேர் இன்று திருச்சி கோட்ட ரயில்வே மேலாளர் அலுவலகத்தில் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.

News July 10, 2025

திருச்சி : VAO லஞ்சம் வாங்கினால் என்ன செய்யலாம்?

image

பயிர்களை ஆய்வு செய்வது, பிறப்பு, இறப்பு, திருமணத்தை பதிவு செய்வது, நிலம் தொடர்பான புகார்களை பெறுவது, பட்டா மாறுதல், சிட்டா சான்றிதழ் வழங்குவது, வங்கிகள், கூட்டுறவு சங்கத்திடமிருந்து கடன் வாங்கி கொடுப்பது உள்ளிட்டவை விஏஓ-வின் முக்கிய வேலையாகும். இவற்றை சரியாக செய்யமால் விஏஓ யாரேனும் உங்களிடம் லஞ்சம் கேட்டால், திருச்சி மாவட்ட மக்கள் 0431-2420166 என்ற எண்ணில் புகாரளிக்கலாம். இந்த தகவலை SHARE பண்ணுங்க

News July 10, 2025

திருச்சியில் பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி

image

திருச்சி மாவட்ட மைய நூலகத்தில் பள்ளி மாணவா்களுக்கு வரும் ஜூலை13 அன்று இலவச சதுரங்க பயிற்சி காலை 10.30 மணி முதல் 11.30 மணி வரை நடைபெறவுள்ளது. மேலும், காலை 10.30 முதல் நண்பகல் 12.30 மணி வரை பள்ளி சிறாா்களுக்கான கிராஃப்ட் காகிதங்களை கொண்டு உருவங்களை உருவாக்கும் ‘ஓரிகாமி’ பயிற்சியும் அளிக்கப்பட உள்ளது. மேற்கண்ட நிகழ்ச்சிகளில் மாணவா்கள், பங்கேற்று பயன்பெற மாவட்ட நூலக அலுவலா் கேட்டு கொண்டுள்ளார்.

News July 10, 2025

திருச்சி: குரூப்-4 தோ்வுக்கு 197 மையங்கள் தயார்

image

திருச்சி மாவட்டத்தில் வரும் (ஜூலை 12) நடைபெறவுள்ள குரூப்-4 தோ்வுக்கு திருச்சி, ஸ்ரீ ரங்கம், லால்குடி, முசிறி, மணப்பாறை உள்ளிட்ட மாவட்டத்தின் அனைத்து வட்டங்களிலும் 197 தோ்வு மையங்கள் தயாா் நிலையில் உள்ளதாகவும், இத்தேர்வினை எழுத திருச்சி மாவட்டத்தில் இருந்து 55,456 போ் விண்ணப்பித்துள்ளனா் என்றும் திருச்சி கலெக்டர் வே.சரவணன் தெரிவித்துள்ளார்.

News July 10, 2025

திருச்சியில் வாகன ஏலம் அறிவிப்பு: கமிஷனர் அறிக்கை

image

திருச்சி மாநகர காவல் துறை வாகன சோதனையின் பறிமுதல் செய்யப்பட்டு, உரிமை கோரப்படாத 251 டூவீலர்கள், 2 கார்கள் , 1 ஆட்டோ ரிக்ஷா, 4 மிதிவண்டிகள் என மொத்தம் 258 வாகனங்கள் பொது ஏலம் மூலம் வரும் ஜூலை 15-ம் தேதி விற்பனை செய்யப்பட உள்ளது. திருச்சி மாநகர ஆயுதப்படை மைதானத்தில் நடைபெறும் ஏலத்தில், விருப்பமுள்ளவர்கள் ஆதார் அட்டையுடன் விண்ணப்பிக்குமாறு மாநகர போலீஸ் கமிஷனர் காமினி தெரிவித்துள்ளார். ஷேர் பண்ணுங்க!

News July 9, 2025

திருச்சி: பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்டம்

image

திருச்சி எஸ்.பி அலுவலகத்தில் வாராந்திர பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்டம் எஸ்பி செ.செல்வநாகரத்தினம் தலைமையில் மாவட்ட காவல் அலுவலகத்தில் இன்று (09.07.2025) நடைபெற்றது. இதில் மனு கொடுக்க வந்திருந்த பொதுமக்களிடமிருந்து 30மனுக்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நேரடியாக பெற்று குறைகளை கேட்டறிந்தார். மேலும் பெறப்பட்ட மனுக்கள் மீது துரிதமாக நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

News July 9, 2025

ஶ்ரீரங்கத்தில் குடிநீர் விநியோகம் தடை

image

ஶ்ரீரங்கம் துணை மின் நிலையத்தில் ஜூலை 10ஆம் தேதி பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் கொள்ளிடம் ஆளவந்தான் படித்துறை நீரேற்று நிலையங்களிலிருந்து குடிநீர் செல்லும் இடங்களான மத்திய சிறைச்சாலை, சுந்தராஜ நகர் , ஜே.கே. நகர், செம்பட்டு, காஜாமலை பழையது, ரெங்காநகர், சுப்ரமணிய நகர் புதியது, குடிநீர் வினியோகம் 11.07.2025 அன்று இருக்காதென மாநகராட்சி ஆணையர் இன்று தெரிவித்துள்ளார் .

News July 9, 2025

திருச்சி விமான நிலையில் வேலை! Apply பண்ணுங்க!

image

இளைஞர்களே விமான நிலையத்தில் வேலை பார்க்க ஆசை இருக்கா? AAI கார்கோ லாஜிஸ்டிக்ஸ் நிறுவனத்தில் காலியாகவுள்ள 393 Assistant (Security), Security Screener (Fresher) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 21 வயது அதிகபட்சம் 27 வயதுக்குள் இருப்பவர்கள்<> இங்கே கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக 30,000 வரை வழங்கப்படுகிறது. நண்பர்களுக்கும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!