Tiruchirappalli

News March 21, 2025

திருச்சி என்.ஐ.டியில் வேலை வாய்ப்பு

image

திருச்சி என்.ஐ.டி (NIT) நிறுவனத்தில் இண்டர்ன்ஷிப் பயிற்சி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி B.E./B.Tech. Mechanical Engineering படித்தவர்கள் மார்ச்.28ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். பணியிடங்கள் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படும். மேலும் விபரங்களுக்கு <>இங்கு க்ளிக் <<>>செய்து அறிந்து கொள்ளுங்கள். இன்ஜினியரிங் பட்டதாரிகளுக்கு SHARE பண்ணுங்க..

News March 21, 2025

திருச்சி ரயில்வே எச்சரிக்கை

image

திருச்சி ரயில்வே பாதுகாப்பு படை அலுவலக நிர்வாகம், ரயில் பயணிகளின் பாதுகாப்பு குறித்து முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில், ரயிலில் பயணம் செல்லும் பயணிகள் பட்டாசு பொருள்கள் மற்றும் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை எடுத்து செல்வது கண்டறியப்பட்டுள்ளது. இதை மீறுவோர் மீது ரயில்வே சட்டத்தின் படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளது.

News March 20, 2025

திருச்சி ஜங்ஷனில் மோப்ப நாய் உதவியுடன் தீவிர சோதனை

image

திருச்சி ஜங்ஷன் ரயில்வே நிலையத்தில் குற்ற சம்பவங்கள் மற்றும் போதைப் பொருள் கடத்தலை தடுக்கும் விதமாக இன்று ரயில்வே பாதுகாப்பு போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அதில் மோப்ப நாய் உதவியுடன், ரயில் பயணிகளின் உடைமைகள் சோதனை செய்யப்பட்டன. மேலும் ரயிலில் இருந்து கொண்டு வரப்படும் பார்சல்கள் மற்றும் பார்சல் மையங்களையும் மோப்ப நாய் உதவியுடன் ஆராய்ந்தனர்.

News March 20, 2025

ஓடத்துறை பாலத்தில் உயிரிழப்பு

image

மல்லியம்பத்தை சேர்ந்த கண்ணதாசன்(61) இன்று டூவிலரில் ஓடத்துறை பாலத்தில் சென்றபோது நிலை தடுமாறி பாலத்தின் சுவரில் மோதி கீழே விழுந்ததில் படுகாயமடைந்தார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பினர். ஆனால், மருத்துவமனை செல்லும் வழியிலேயே கண்ணதாசன் உயிரிழந்தார். இதையறிந்த வடக்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

News March 20, 2025

தெரியாத எண்களில் இருந்து வீடியோ அழைப்புகள் – எச்சரிக்கை

image

காவல் நிலையங்களில் அளிக்கப்படும் புகாரின் அடிப்படையில் பொதுமக்களின் நலன் கருதி திருச்சி மாவட்ட காவல்துறை தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில், தெரியாத எண்களிலிருந்து வரும் வீடியோ அழைப்புகளை எடுக்க வேண்டாம். உங்கள் வீடியோ உரையாடலை பதிவு செய்து உங்களிடம் பணம் கேட்டு மிரட்டலாம் என்று அறிவுறுத்தியுள்ளனர். மேலும் சைபர் குற்ற புகார்கள் தெரிவிக்க 1930ஐ அழைக்கவும். SHARE பண்ணுங்க..

News March 20, 2025

அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் வேலை

image

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் 3,274 ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. திருச்சி மாவட்டத்தில் 176 ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பணியிடங்கள் நிரப்பட உள்ளன. இந்த பணியிடங்களுக்கு 10ஆம் வகுப்பு முடித்தவர்கள் நாளை முதல் ஏப்.,21ஆம் தேதி வரை இங்கு <>க்ளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். வேலை தேடும் உங்க நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க..

News March 20, 2025

திருச்சி விமான நிலையம் தனியார்மயம் – எம்.பி எதிர்ப்பு

image

திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தை தனியார் மயமாக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து திருச்சி எம்பி துரை வைகோ நேற்று அறிக்கை வெளியிட்டார். அதில், இந்தியாவின் முதுகெலும்பாக விளங்கும் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான விமான போக்குவரத்து, தனியார் மயமாக்கப்படும் என்ற அறிவிப்பு அதிர்ச்சி அளிப்பதாகவும், திருச்சி விமான நிலையத்தை தனியாரிடம் தாரைவார்க்கும் முடிவை கைவிடுமாறும் மத்திய அரசை கேட்டுக் கொண்டுள்ளார்.

News March 20, 2025

திருச்சி ரயில்வே எச்சரிக்கை அறிவிப்பு

image

திருச்சி ரயில்வே டிஆர்எம் அலுவலகம் ரயில் பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், ரயில் பயணிகள் தேவையில்லாத காரணங்களுக்காக அபாய சங்கிலியை இழுப்பதாக கூறியுள்ளது. இந்நிலையில் அபாய சங்கிலியை இழுத்ததற்கான காரணம் ஏற்றுக்கொள்ளப்படாத பட்சத்தில் அது தண்டனைக்குரிய சட்டமாக கருதப்பட்டு அபராதம் விதிக்கப்படும் என எச்சரித்துள்ளது.

News March 20, 2025

திருச்சி: பொதுமக்களிடம் குறைகளை கேட்ட எஸ்பி

image

திருச்சியில் வாராந்திர பொதுமக்கள் குறை தீர்ப்பு கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செ.செல்வநாகரத்தினம், அவர்களின் தலைமையில் மாவட்ட காவல் அலுவலகத்தில் இன்று (19.03.2025) நடைபெற்றது. பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்டத்திற்கு மனு கொடுக்க வந்திருந்த பொதுமக்களிடமிருந்து திருச்சி மாவட்ட எஸ்பி, 44 மனுக்களை நேரடியாக பெற்று குறைகளை கேட்டறிந்தார். மேலும் மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.

News March 20, 2025

நினைவுகளை பகிர்ந்து கொண்ட முன்னாள் காவலர்கள்

image

தமிழ்நாடு சிறப்பு போலீஸ் முதல் அணியில் 1981, 1982 வது ஆண்டு பணியில் சேர்ந்து ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரிகளின் நான்காம் ஆண்டு மலரும் நினைவுகள் சந்திப்பு நிகழ்ச்சி திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் உள்ள ஒரு தனியார் ஹோட்டலில் இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் முன்னாள் காவல்துறை அதிகாரிகள் முதல் ஏட்டுகள் வரை கலந்து கொண்டு தத்தம் நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.

error: Content is protected !!