Tiruchirappalli

News April 3, 2025

வயலூர் முருகன் கோயிலில் சஷ்டி வழிபாடு

image

பங்குனி மாத வளர்பிறை சஷ்டியை முன்னிட்டு இன்று திருச்சி வயலூர் முருகன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. வளர்பிறை சஷ்டி நாட்களில் முருகனை வழிபட்டால் நீண்ட காலமாக தீராத பிரச்சனைகள் தீரும் என்பது ஐதீகம். அந்த வகையில் இன்று வயலூர் முருகன் கோவிலில் வளர்பிறை சஷ்டியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு முருகனை வழிபட்டு சென்றனர். SHARE NOW!

News April 3, 2025

மாணவர்களுக்கு பாலியல் தொல்லை: இருவர் கைது

image

சமயபுரத்தில் உள்ள அரசு உதவிபெறும் மேல்நிலை பள்ளி செயல்படுகிறது. இப்பள்ளி விடுதியில் தஞ்சாவூரை சேர்ந்த குழந்தைநாதன் விடுதி வார்டனாக பணிபுரிந்து வருகிறார். இவரது நண்பரான அரியலூரைச் சேர்ந்த சுந்தர்ராஜன் விடுதியில் உள்ள மாணவர்களிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இதையறிந்த லால்குடி அனைத்து மகளிர் போலீசார் விடுதி வார்டனையும், அவரது நண்பரையும் இன்று போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

News April 3, 2025

திருச்சியில் ரூ.25,000 சம்பளத்தில் வேலை

image

திருச்சி மாவட்டத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேளாண் கள அலுவலர் (Agri Field Officer) பணிக்கான 50 இடங்களை நிரப்ப தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வாயிலாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணியிடங்களுக்கு ரூ.15,000-25,000 ஊதியமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தகுதியுடையவர்கள் <>இங்கே க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். வேலை தேடும் நண்பர்களுக்கு SHARE செய்து தெரியப்படுத்துங்கள்..

News April 3, 2025

திருச்சியில் பலத்த மழை: விவசாயிகள் மகிழ்ச்சி

image

அரங்கூர், ஏலூர்பட்டி, சீனிவாசநல்லூர், கொளக்குடி, அப்பணநல்லூர், மணமேடு, மகேந்திரமங்கலம் போன்ற பகுதிகள் மற்றும் அதனை சுற்றியுள்ள சுற்றுவட்டார பகுதிகளில் இன்று அதிகாலை திடீரென பலத்த மழை பெய்ய தொடங்கி இரண்டு மணி நேரம் கனமழை பெய்தது. வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில் திடீரென மழை பெய்ததால் அப்பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

News April 2, 2025

பல் சிகிச்சையால் தலைவலி: குடும்பத்தோடு சாலை மறியல்

image

காவல்காரன்பட்டியைச் சேர்ந்த வெண்ணிலா என்பவர் கடந்த 07.12.2025 அன்று பல் வலி காரணமாக வேர் சிகிச்சை மேற்கொண்ட நிலையில் தீராத தலைவரால் அவதிப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொண்டும் தலைவலி தீராததால் இன்று பல் மருத்துவமனை முன்பு சாலை மறியலில் ஈடுபட்ட நிலையில் அவர்களை காவல் நிலையம் அழைத்துச் சென்று போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

News April 2, 2025

திருச்சியில் கனமழைக்கு வாய்ப்பு

image

தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் வட தமிழக பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென்னிந்திய பகுதிகளின் கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக ஏப்ரல் 4,5 ஆகிய தேதிகளில் திருச்சி உள்ளிட்ட 15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது. இந்த தகவலை உங்க நண்பர்களுக்கும் SHARE செய்து, மழைக்கான முன்னேச்சரிக்கையோடு இருங்கள்.

News April 2, 2025

திருச்சியில் 106 குற்றவாளிகள் கைது

image

திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக செல்வநாகரத்தினம் பதவியேற்றது முதல் 106 சரித்திர பதிவேடு குற்றவாளிகள் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும் 15 குற்றவாளிகள் மீது குண்டர் தடுப்பு பிரிவிலும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.. இதுமட்டும் அல்லாது, திருச்சி மாவட்டத்தில் சட்டம், ஒழுங்கு பேணிகாக்கப்பட்டு வருவதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

News April 2, 2025

எஸ்.பி பதவி ஏற்றதில் இருந்து 106 பதிவேடு குற்றவாளிகள் கைது

image

திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வ ராகரத்தினம் பதவியேற்றது முதல் 106 சரித்திர பதிவேடு குற்றவாளிகளை கைது செய்து சிறையில் அடைத்துள்ளார். மேலும் 15 குற்றவாளிகள் மீது குண்டர் தடுப்பு பிரிவிலும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், திருச்சி மாவட்டத்தில் சட்டம், ஒழுங்கு பேணிகாக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

News April 2, 2025

திருச்சியில் செய்தியாளர்களுக்கு அழைப்பு

image

சுதந்திர போராட்ட தியாகி வ.வே.சுப்பிரமணிய அய்யரின் பிறந்த நாளை முன்னிட்டு நாளை (02.04.2025) காலை 8:45மணியளவில், திருச்சி வரகனேரியில் உள்ள சுதந்திர போராட்ட தியாகி வ.வே.சுப்பிரமணிய அய்யரின் நினைவில்லத்தில் அவரது திருவுருவப்படத்திற்கு கலெக்டர் மா.பிரதீப் குமார் மாலை அணிவித்து மலர் தூவி அரசின் சார்பில் மரியாதை செய்ய உள்ளார். இதில் செய்தியாளர்கள் அனைவரும் கலந்து கொள்ள தகவல் வெளியாகியுள்ளது.

News April 2, 2025

திருச்சி – பாலக்காடு விரைவு ரயில் பகுதியாக ரத்து

image

திருச்சி கோட்டை ரயில்வே சார்பில் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், திருச்சி – பாலக்காடு விரைவு ரயிலானது (16843) வரும் ஏப். 4, 6, 12, 14, 18 ஆகிய தேதிகளில் சூலூா் – பாலக்காடு இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. பராமரிப்புப் பணிகள் முடிந்ததும் இந்த ரயிலானது சூலூா் – பாலக்காடு இடையே முன்பதிவற்ற சிறப்பு ரயிலாக இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!