Tiruchirappalli

News August 2, 2024

ஸ்ரீரங்கத்தில் ஓபிஎஸ் சுவாமி தரிசனம்

image

அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் முதலமைச்சருமான ஓ பன்னீர்செல்வம் ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி திருக்கோவிலில் இன்று சுவாமி தரிசனம் செய்தார். அவருக்கு கோயில் அர்ச்சகர்கள் மற்றும் ஆதரவாளர்கள் சார்பில் மரியாதை செய்யப்பட்டது. பின்னர் சுவாமியை வழிபட்ட அவருக்கு மங்களப் பொருட்கள் வழங்கப்பட்டன.

News August 2, 2024

திருச்சியில் இங்கு செல்ல தடை

image

மணப்பாறை அடுத்த வீரமலை பாளையத்தில் உள்ள துப்பாக்கி சுடும் இடத்தில் இந்த மாதம் 5ஆம் தேதி முதல் 14ஆம் தேதி வரை காலை 7.30 மணி முதல் மாலை 5.30 மணி வரையும், மாலை 7 மணி முதல் இரவு 10 மணி வரையும் 20ஆவது பீகார் குரூப் யூனிட் பயிற்சியாளர்களால் துப்பாக்கி சுடும் பயிற்சி நடைபெற உள்ளது. அச்சமயம் மேய்ச்சலுக்காக கால்நடைகள் மற்றும் மனித நடமாட்டம் இருக்கக் கூடாது என ஆட்சியர் இன்று அறிவித்துள்ளார். ஷேர் பண்ணுங்க

News August 2, 2024

திருச்சியில் உதவி எண்கள் அறிவிப்பு

image

திருச்சி காவிரி, கொள்ளிடம் ஆற்று கரையோர கிராமங்களில் உள்ள பொதுமக்கள், சலவை தொழிலாளர்கள் எச்சரிக்கையாக இருக்குமாறும், தேவைப்பட்டால் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், ஆறுகளில் குளிக்கவோ, நீந்தவோ பொதுமக்களுக்கு அனுமதி இல்லை. மேலும், ஏதேனும் உதவி தேவைப்பட்டால் 0431-2331929 என்ற எண்ணை தொடர்பு கொள்ள திருச்சி கமிஷனர் இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார்.

News August 2, 2024

திருச்சியில் திட்டப் பணிகள் குறித்த ஆய்வு கூட்டம்

image

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் நீர்வளத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் மணிவாசன் தலைமையில், மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் முன்னிலையில் பல்வேறு துறைகளின் திட்ட பணிகளின் முன்னேற்றம் குறித்த ஆய்வு கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாநகராட்சி ஆணையர் சரவணன், உதவி ஆணையர் அமித்குப்தா, மாவட்ட வருவாய் அலுவலர் ராஜலட்சுமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

News August 2, 2024

கரியமாணிக்கம் பகுதியில் திடீர் ஆய்வு

image

சிறுகாம்பூர், கரியமாணிக்கம் பகுதியில் கொள்ளிடம் ஆற்றங்கரையோரம் ஏற்பட்டுள்ள மணல் அரிப்பைத் தடுக்க மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகளை இன்று மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார் முன்னிலையில், நீர்வளத்துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் மற்றும் கண்காணிப்பு அலுவலர் மணிவாசன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் தேவையான முன்னேற்பாடு பணிகளை விரைந்து முடிக்க தக்க அறிவுரை வழங்கினார்.

News August 2, 2024

50 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பில் கலெக்டர் கைது

image

திருச்சி கேகே நகரை சேர்ந்தவர் கதிர்வேல். இவர் துவாக்குடி நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் வீடு கட்டுவதற்காக, மனைக்கு வரி நிர்ணயம் செய்ய வேண்டி துவாக்குடி நகராட்சி அலுவலகத்திற்கு சென்று அங்கிருந்த பில் கலெக்டர் சௌந்தரபாண்டியனிடம் முறையிட்டார். சௌந்தர பாண்டியன் 50,000 லஞ்சம் கேட்டு இன்று பெற்ற போது லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

News August 2, 2024

ஆடிப்பெருக்கு முன்னேற்பாடு பணிகள் ஆய்வு

image

திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில் ஆடிப்பெருக்கை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்டு வரும் பாதுகாப்பு ஏற்பாடுகளை மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த நிகழ்வில் நிர்வாகத்துறை அரசு கூடுதல் தலைமை செயலாளர் மற்றும் கண்காணிப்பு அலுவலர் மணிவாசன் மற்றும் பல அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

News August 2, 2024

வடிவேலு படத்தை போட்டு கிண்டல் செய்த அண்ணாமலை

image

திருச்சி கொள்ளிடம் ஆற்றில் திமுக ஆட்சியில் 6.5 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட தடுப்பணையை காணவில்லை எனக்கூறி, வடிவேல் படத்தை பதிவிட்டு அண்ணாமலை கிண்டல் செய்துள்ளார். திருச்சி கொள்ளிடம் ஆற்றில் நேப்பியர் பாலம் அருகே மண் அரிப்பைத் தடுக்க, சில மாதங்களுக்கு முன்பு கட்டப்பட்ட பாலம், தற்போது வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. இதனை விமர்சித்து அண்ணாமலை X பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

News August 2, 2024

திருச்சிஅருகே விபத்து – ஒருவர் பலி

image

சிங்கப்பூரில் குடும்பத்துடன் வசிக்கும் நாமக்கல்லை சேர்ந்த கவிதா தனது தாயான லோகலட்சுமி என்பவரை திருச்சி விமான நிலையம் அழைத்துச் செல்ல காரை நாமக்கல் முத்துவேல் என்பவர் ஓட்டி வந்தார். திருச்சி முக்கொம்பு அருகே வந்த அரசுப் பேருந்து கார் மீது மோதியது. இதில், லோகலெட்சுமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்த கவிதா, முத்துவேல் இருவரும் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

News August 2, 2024

துறையூர் மாணவிக்கு அமைச்சர் அறிவுரை

image

துறையூர் சின்னஇழுப்பூரில் ஜே.இ.இ தேர்வில் வெற்றி பெற்று திருச்சி தேசிய தொழில்நுட்ப கழகத்தின் தேர்வாகியுள்ள பழங்குடியினர் மாணவி ரோகினியை, அவரது இல்லத்திற்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், கே.என் நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேரில் சென்று சந்தித்து பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்தனர். மேலும் கல்வி சம்பந்தமாக ஏதேனும் உதவி தேவைப்பட்டால் சொல்லும்படி அறிவுரை வழங்கினர்.

error: Content is protected !!