Tiruchirappalli

News August 3, 2024

காவிரி தாய்க்கு மங்களப் பொருட்கள் வழங்கிய ரங்கநாதர்

image

ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோவில் சார்பில் ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு இன்று நம்பெருமாள் அம்மா மண்டபத்தில் எழுந்தருளி, காவேரி தாய்க்கு பட்டுப் புடவை, மலர் மாலை, சந்தனம், குங்குமம், தாலி பொட்டு, அலங்காரம் உள்ளிட்ட மங்களப் பொருட்கள் அடங்கிய சீர் வரிசை பொருட்களை யானை மீது அமர்ந்து ஆற்றில் வழங்கினார். இதில் திரளான பக்தர்கள் வழிபாடு செய்தனர்.

News August 3, 2024

திருச்சியில் சதமடித்த வெயில்

image

தமிழ்நாட்டில் இன்று 7 இடங்களில் வெயில் சதமடித்துள்ளது. இதில் அதிகபட்சமாக மதுரை விமான நிலையம் பகுதியில் 104.36 டிகிரி பாரன்ஹீட், தஞ்சையில் 102.2, நாகப்பட்டினத்தில் 101.48, பாளையங்கோட்டையில் 101.3, திருச்சியில் 100.94, கரூர் பரமத்தியில் 100.4 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை பதிவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

News August 3, 2024

திருச்சியில் 25 பேர் பணியிட மாற்றம்

image

திருச்சி மாவட்டத்தில் மாநகராட்சி, நகராட்சி, இணை இயக்குநர்கள், ஆர்.டி.எம்.ஏ, துணை ஆணையர்கள் உள்ளிட்ட 25 பேரை இன்று பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அந்த வகையில் திருச்சி மாநகராட்சி துணை ஆணையர் நாராயணன் புதிதாக உருவாக இருக்கும் புதுக்கோட்டை மாநகராட்சிக்கு ஆணையராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். மேலும் துணை ஆணையர் செல்வபாலாஜி, முனிசிபல் இணை ஆணையராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

News August 3, 2024

கல்லூரி மாணவர் வழக்கில் சிக்கிய 4 பேர்

image

திருச்சி ஸ்ரீரங்கத்தில் காவிரி ஆற்றை வேடிக்கை பார்த்த கல்லூரி மாணவர் உயிரிழந்த வழக்கில், ஸ்ரீரங்கம் போலீசார் இன்று 4 பேரை கைது செய்தனர். அதில் ஸ்ரீரங்கத்தை சேர்ந்த நவீன், விஜய், 17 வயதான 2 பள்ளி மாணவர்களை கைது செய்தனர். மேலும் சரித்திர பதிவேடு குற்றவாளி சுரேஷ் என்பவரை தேடி வருகின்றனர். விசாரணையில், 5 பேரும் சேர்ந்து தான் மதுபோதையில் ரஞ்சித் கண்ணனை கட்டையால் தாக்கினோம் என்பதை ஒப்புக்கொண்டனர்.

News August 3, 2024

ஸ்ரீரங்கத்தில் இளைஞர் அடித்து கொலை

image

திருச்சி ஸ்ரீரங்கத்தில் காவிரி ஆற்றை வேடிக்கை பார்க்க சென்ற மாணவர் அடித்துக்கொடூரமாக கொல்லப்பட்டது, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆடி பெருக்கையொட்டி, காவிரி ஆற்றில் மக்கள் புனித நீராடி வரும் நிலையில், வேடிக்கை பார்ப்பதில் ஏற்பட்ட மோதலில், இக்கொலை அரங்கேறியுள்ளது. திருச்சி மாநகரில் அண்மைக்காலமாக அடுத்தடுத்து கொலைகள் நடப்பதால், போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க கோரிக்கை எழுந்துள்ளது.

News August 3, 2024

ஆடிப்பெருக்கு – இந்த இடங்களில் குளிக்க தடை

image

ஆடிப்பெருக்கு விழா இன்று ( ஆக.3) கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. ஸ்ரீரங்கம், அம்மா மண்டபங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளன. ஆடிப்பெருக்கு, ஆடி அமாவாசையை முன்னிட்டு காவிரி, கொள்ளிடம் ஆறுகளில் படித்துறை இல்லாத பகுதிகளில் பொதுமக்கள் இறங்குவதற்கும், நீராடுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. படித்துறை இல்லாத 52 இடங்கள் கண்டறியப்பட்டுள்ளதாக ஆட்சியர் பிரதீப் குமார் தெரிவித்துள்ளார்.

News August 3, 2024

திருச்சியில் சர்வதேச விளையாட்டு வீரர் பங்கேற்பு

image

திருச்சி சுந்தர்நகரிலுள்ள தனியார் பள்ளியில் 45ஆம் ஆண்டு விளையாட்டு விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவிற்கு பள்ளியின் 12ஆம் வகுப்பு மாணவி சுவேதா வரவேற்புரையாற்றினார். இதில் பள்ளி தாளாளர் வீ.அன்புராஜ், பெரியார் மணியம்மை நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் உயிரித் தொழில்நுட்பத் துறை பேராசிரியர் கிருஷ்ணகுமார், பள்ளி முதல்வர் க.வனிதா, சர்வதேச தடை தாண்டும் ஓட்டப் போட்டி வீரர் முத்துசாமி பங்கேற்றனர்.

News August 3, 2024

திருச்சி மாநகராட்சி திட்ட பணிகள் நிலவரம்

image

திருச்சி மாநகராட்சியில் இன்று மண்டலம் 01 – 11450 கிலோ, மண்டலம் 02 – 8542 கிலோ, மண்டலம் 03 – 8060 கிலோ, மண்டலம் 04 – 9150 கிலோ மற்றும் மண்டலம் 05 – 9450 கிலோ, மொத்தம் 46652 கிலோ தூசி மற்றும் வடிகால் வண்டல் நீக்கப்பட்டது. மேலும் சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக சுற்றி திரிந்த மொத்தம் 29 நாய்கள் பிடிக்கப்பட்டு நாய்கள் கருத்தடை மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டன.

News August 2, 2024

திருவெறும்பூர்- விமான நிலையத்திற்கு புதிய வழித்தட பேருந்து

image

திருவெறும்பூரில் இருந்து நாவல்பட்டு ஐடி பார்க் 100 அடி ரோடு வழியாக ஐடி பார்க் ஊழியர்கள் பயன்பெறும் வகையிலும் குண்டூர் தனியார் கல்லூரி மாணவி மாணவர்கள் பயன்படும் வகையிலும் அ 100 அடி ரோடு வழியாக விமான நிலையம் வரை பேருந்துகளை இயக்க வேண்டும். திருச்சி டிராபிக் திருவேங்கடம் என்பவர் முதலமைச்சர் தனிப்பிரிவுக்கு மனு அளித்துள்ளார்.

News August 2, 2024

திருச்சியில் மதுபான கடையை அகற்றக்கோரி ஆர்ப்பாட்டம்

image

திருச்சி திருவெறும்பூரில் அரசு ஐடிஐ செயல்பட்டு வருகிறது. இதில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் பயின்று வருகின்றனர். கல்வி நிலையத்திற்கு அருகில் செயல்படும் அரசு டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி இந்திய மாணவர் சங்கம் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் திருச்சி மாநகர் மாவட்டத் தலைவர் சூர்யா தலைமை வகித்து கண்டன முழக்கம் எழுப்பினார். ஆர்ப்பாட்டத்தில் மாணவர்கள் பங்கேற்றனர்.

error: Content is protected !!