India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருச்சி கலையரங்கம் திருமண மண்டபத்தில் வரும் 30ஆம் தேதி ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் இயங்கும் மேல்நிலைப் பள்ளிகளில் 12ஆம் வகுப்பு பயிலும் மாணவ-மாணவிகளுக்கு ‘என் கல்லூரி கனவு’ என்ற தலைப்பின் கீழ் வழிகாட்டு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. எனவே, இந்த நிகழ்ச்சியில் மாணவ மாணவிகள் கலந்து கொண்டு பயன்பெறலாம் என கலெக்டர் அறிவித்துள்ளார். இதனை 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு SHARE பண்ணுங்க..
ரயில்வே பாதுகாப்பு படை அலுவலகம் ரயில் பயணிகளின் நலன் குறித்து தொடர்ந்து முக்கிய அறிவிப்பு வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், ரயிலில் பயணம் செல்லும் பயணிகள் ரயில்வே தண்டவாளங்களை கடப்பது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. எனவே, விலை மதிப்புள்ள உங்கள் உயிரை இழக்க வேண்டாம் எனவும், பிளாட்பாரங்களுக்கு செல்ல, மேல்தளம் அல்லது சப்வே உபயோகப்படுத்துமாறு கூறப்பட்டுள்ளது.
திருச்சி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் 2025 பிப்ரவரி மாதத்திற்கான கலந்தாய்வு கூட்டம் திருச்சி மாநகர காவல் ஆணையர் காமினி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், மாநகர காவல் துணை ஆணையர் சிபின் ஈஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும், காவல்துறையில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு பணி பாராட்டு சான்றிதழ் வழங்கி மாநகர காவல் ஆணையர் காமினி பாராட்டினார்.
சென்னை – திருச்சிக்கு புத்தம் புதிய போயிங் (Boeing) ரக பெரிய விமானத்தை ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் இயக்கியது. இன்று துவங்கிய முதல் விமானத்தில் அமைச்சர் கே.என்.நேரு மற்றும் திருச்சி எம்.பி துரை வைகோ இருவரும் சென்னையிலிருந்து திருச்சி வந்தனர். இன்று முதல் திருச்சியிலிருந்து கோவா, பெங்களூர், ஹைதராபாத், டெல்லி பெருநகரங்களுக்கு விமான சேவை துவங்கியது.
டெல்லியில் போராட்டம் நடத்தும் விவசாயிகளுக்கு ஆதரவாக தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் ஐயா கண்ணு தலைமையில் நேற்று ரயில் மறியல் போராட்டம் நடந்தது. இந்நிலையில் திருச்சி அண்ணாமலை நகரில் உள்ள அவரது வீட்டில் காவல்துறையினர், அவரை வீட்டுக் காவலில் வைத்துள்ளனர். காவல்துறையினர் பாதுகாப்பில் ஐயா கண்ணு வீட்டு காவலில் உள்ளார்.
பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான வன்முறையை தடுக்கும் வகையில் திருச்சி மாவட்ட காவல்துறை முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில் பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான வன்முறையை ஒருபோதும் அனுமதிக்க வேண்டாம். மேலும் பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான வன்முறைகள் பற்றி புகார் தெரிவிக்க எந்த நேரத்திலும் அழைக்கவும். பெண்களுக்கான உதவி எண்கள் 181 மற்றும் 1091 அழைக்க கூறியுள்ளது.
தொட்டியம் ஒன்றியம் காட்டுப்புத்தூர் அருகே கூலித்தொழிலாளியைக் கொலை செய்ததாக ஐந்து பேரை காட்டுப்புத்தூர் போலீசார் கைது செய்தனர். அயினாப்பட்டியைச் சேர்ந்தவர் சுரேஷ்(48). இவர் பெரிய பள்ளிபாளையம் அறிவழகன் (48) என்பவரின் பைக்கை திருடியதாகக் கூறி சிவா, அறிவழகன், ராஜேந்திரன் உள்ளிட்ட 5 பேர் தென்னை மட்டையால் அடித்ததாகவும், இதில் சுரேஷ் இறந்ததாகவும் போலீசார் வழக்கு பதிவு செய்து 5 பேரை கைது செய்தனர்.
திருச்சி டைடல் பார்க் நிறுவனத்தில், தொழில்நுட்ப உதவியாளர், நிர்வாக உதவியாளர் உள்ளிட்ட பதவிகளுக்கு காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. மாதம் ரூ.30,000 முதல் ரூ.1,87,000 வரை சம்பளம் வழங்கப்படும். இந்தப் பணியிடங்களுக்கு பி.இ / பி.டெக் முடித்தவர்கள் ஏப்.,2ஆம் தேதி வரை இங்கே <
மக்கள் தொகை அடிப்படையிலான மறுவரையறையை எதிர்கின்ற தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்திய ஒன்றியத்திற்கே வழிகாட்டியாக தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் விளங்குவதாக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று புகழாரம் சூட்டியுள்ளார். மேலும் முதல்வரின் வழிகாட்டுதலின்படி இதற்கு தொடர்ந்து குரல் கொடுப்போம். நமது உரிமையைக் காப்போம் என்று தெரிவித்துள்ளார்.
*சமயபுரம் மாரியம்மன் கோயில்
*உறையூர் வெக்காளி அம்மன் கோயில்
*புத்தூர் குழுமாயி அம்மன் கோயில்
*தென்னூர் உக்கிரகாளியம்மன் கோயில்
*மலைக்கோட்டை வானப்பட்டறை மாரியம்மன் கோயில்
*உறையூர் செல்லாண்டி அம்மன் கோயில்
*மணப்பாறை வேப்பிலை மாரியம்மன் கோயில்
*உறையூர் வாராஹி அம்மன் கோயில்
*கண்ணபுரம் மாரியம்மன் கோயில்
இந்த கோயில்களுக்கு நீங்க சென்றதுண்டா? இதை எல்லோருக்கும் SHARE பண்ணுங்க
Sorry, no posts matched your criteria.