Tiruchirappalli

News April 6, 2025

அங்கன்வாடி பணியாளர்: விண்ணப்பிக்க அழைப்பு

image

திருச்சி மாவட்டத்தில் செயல்படும் குழந்தைகள் மையங்களில் காலியாக உள்ள 17 அங்கன்வாடி பணியாளர், 17 குறு அங்கன்வாடி பணியாளர் மற்றும் 262 அங்கவாடி உதவியாளர் பணியிடங்கள் நேரடியாக நியமனம் செய்யப்பட உள்ளன. எனவே இதற்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் விண்ணப்பங்களை www.icds.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம் என ஆட்சியர் அறிவித்துள்ளார். வேலை தேடும் உங்க நண்பருக்கு பகிரவும்… SHARE NOW!

News April 6, 2025

டிகிரி முடித்தவர்களுக்கு வங்கியில் வேலை

image

திருச்சியில் இயங்கி வரும் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBI) வங்கியில் GENERAL MANAGER பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் திறன் பயிற்சி துறை அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு ரூ.15,000-ரூ.25,000 வரை ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்கு பட்டப்படிப்பு முடித்தவர்கள் <>இங்கே க்ளிக் செய்து<<>> விண்ணப்பிக்கலாம். வேலை தேடும் நபர்களுக்கு SHARE செய்து உதவுங்கள்…

News April 5, 2025

தோஷங்கள் தீர்க்கும் மாந்துறை ஆம்ரவனேசுவரர் கோயில்

image

துன்பங்கள் நீக்கும் காயதிரி நதி கொண்ட தலம் எனக்கூறப்படும் ஆம்ரவனேசுவரர் கோயில் திருச்சி மாந்துறையில் உள்ளது. இது 1800 ஆண்டுகள் பழமையானதாகும். இங்குள்ள சிவன் சுயம்புவாய் தோன்றியவர் என கூறப்படுகிறது. இங்குள்ள சிவனை வணங்கினால் திருமண தடை, தோஷங்கள், பாவங்கள், சாபங்கள் என அனைத்தும் தீரும் என கூறப்படுகிறது. நாம் செய்த தவறுகளுக்கு மனம் திருந்தி இங்கு வந்து வழிபட்டால் மன்னிப்பு கிடைக்கும் என்கிறார்கள்.

News April 5, 2025

வேலைவாய்ப்பு மோசடி: காவல்துறையை எச்சரிக்கை

image

வேலைவாய்ப்பு மோசடி கொடுத்து திருச்சி மாவட்ட காவல்துறையில் முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில்
நிறுவனம் பற்றிய நம்பகத்தன்மையை சரிபார்க்கவும், வேலை வாய்ப்பு உண்மையானது என்பதை உறுதிப்படுத்தும் வரை உங்களின் தனிப்பட்ட தகவல்களை யாரிடமும் பகிர வேண்டாம்.
தேவையற்ற சலுகைகள், முன்பணம் செலுத்த சொல்வது, நடைமுறைக்கு மாறான வாக்குறுதிகள் போன்றவற்றிலிருந்து எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தியுள்ளது.

News April 5, 2025

பெண்களுக்கான இலவச எலக்ட்ரிக் ஆட்டோ பயிற்சி

image

இந்தியன் ஓவர்சீஸ் வங்கி திருச்சி, ஊரக சுய வேலை வாய்ப்பு நிறுவனம் இணைந்து பெண்களுக்கான 30 நாள் இலவச எலக்ட்ரிக் ஆட்டோ ஓட்டுநர் பயிற்சியை ஏற்பாடு செய்துள்ளது. கல்வி தகுதி: 8ம் வகுப்பு, வயது: 18 முதல் 40வயது வரை உள்ள பெண்கள். மாதம் பத்தாயிரம் முதல் 15 ஆயிரம் வரை வருமானத்தில், 100% வேலை வாய்ப்பையும் ஏற்படுத்தித் தரும் இப்பயிற்சிக்கு விண்ணப்பிக்க, வரும் 16/04/25 தேதி கடைசி நாள். தொடர்புக்கு: 8903363396

News April 5, 2025

திருச்சியில் ரூ.25,000 சம்பளத்தில் வேலை

image

திருச்சி மாவட்டத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் சேல்ஸ் ஆஃபீசர் (Sales Officer) பணிக்கான 50 இடங்களை நிரப்ப தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வாயிலாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணியிடங்களுக்கு ரூ.25,000 வரையில் ஊதியமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. +2 முடித்த தகுதியுடையவர்கள் <>இங்கே க்ளிக் செய்து<<>> விண்ணப்பிக்கலாம். வேலை தேடும் நண்பர்களுக்கு இதை SHARE செய்து தெரியப்படுத்துங்கள்.

News April 4, 2025

சமயபுரம் மாரியம்மன் கோயில் திருவிழாவிற்கு அழைப்பு

image

திருச்சி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோயில் உள்ளது. அக்கோவிலில் சித்திரை பெருந்திருவிழா வரும் ஏப்ரல்.15ஆம் தேதி காலை 10:31 மணிக்கு மேல் 11:30 மணிக்குள் நடைபெற உள்ளது. அச்சமயம் திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடைபெற இருப்பதால், பக்தர்கள் கலந்து கொண்டு அம்மன் அருள் பெற கோவில் நிர்வாகம் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அம்மன் அருள் பெற அனைவருக்கும் SHARE பண்ணுங்க…

News April 4, 2025

திருச்சி மாவட்ட இளைஞர்கள் கவனத்திற்கு…

image

தமிழக காவல்துறையில் சப் இன்ஸ்பெக்டர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி தமிழகம் முழுவதும் மொத்தம் 1,299 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் டிகிரி படித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு வரும் ஏப்.7-ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம். விருப்பமுள்ளவர்கள் <>tnusrb.tn.gov.in<<>> என்ற இணையதள பக்கத்திற்குச் சென்று மே.3-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். SHARE NOW

News April 4, 2025

திருச்சி: கோவில் குளத்தில் கற்சிலை கண்டெடுப்பு

image

திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரா் உடனுறை அகிலாண்டேஸ்வரி கோயிலுக்கு சொந்தமான ராமா் தீா்த்தக் குளத்தில் தற்போது புனரமைப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் குளத்தின் முள்புதரில் கற்சிலை ஒன்றின் தலைப்பகுதி மட்டும் நேற்று கண்டெடுக்கப்பட்டது. இந்த சிலை குறித்த விவரங்கள் உடனடியாக தெரியவில்லை. இது குறித்து தொல்லியல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த காட்சியை உங்களது நண்பர்களுக்கு பகிரவும்!

News April 3, 2025

திருவிழாவை முன்னிட்டு போக்குவரத்து மாற்றம்

image

திருச்சி மாவட்டம், தொட்டியம் மதுர காளியம்மன் தேர் திருவிழாவை முன்னிட்டு மாலை நேரங்களில் பக்தர்கள் கூட்டம் அதிகரிக்கும் என்பதால் திருச்சியில் இருந்து நாமக்கல் செல்லும் கனரக வாகனங்கள் மணமேட்டில் இருந்து பவித்திரம் செல்லும் சாலை வழியாக சென்று தோளூர்பட்டி இனைப்பு சாலை வழியாக நாமக்கல் புறவழி சாலையை அடையலாம் என காவல்துறையினரால் அறிவுறுத்தப்பட்டுள்ளது. SHARE NOW!

error: Content is protected !!