Tiruchirappalli

News April 8, 2025

திருச்சியில் வேலைவாய்ப்பு

image

திருச்சி மாவட்டத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் (Digital Marketing Manager) காலி பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வாயிலாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு ஊதியமாக ரூ.15,000 முதல் ரூ.25,000 வரை வழங்கப்படுகிறது. 12ஆம் வகுப்பு முடித்துவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். விருப்பமுள்ளவர்கள் <>இங்கே க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். வேலை தேடும் நபர்களுக்கு SHARE செய்யுங்கள்.

News April 8, 2025

திருச்சி: நாட்டுக்கோழி வளர்ப்பு இலவச பயிற்சி

image

திருச்சி கொட்டப்பட்டு பகுதியில் உள்ள கால்நடை பல்கலைக் கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் வரும் வெள்ளிக்கிழமை (ஏப்.11) இலவச நாட்டுக் கோழி வளர்ப்பு பயிற்சி அளிக்கப்படவுள்ளது. இந்தப் பயிற்சி வகுப்பில் தரமான நாட்டுக் கோழி இனங்களைத் தேர்ந்தெடுத்தல், முறையான பராமரிப்பு, வளர்ப்பு உள்ளிட்ட ஆலோசனைகள் மற்றும் தொழில்நுட்ப முறைகள் குறித்து பயிற்சி வழங்கப்படும் என மைய தலைவர் ஷிபாதாமஸ் தெரிவித்துள்ளார். 

News April 8, 2025

சிசிடிவி கேமரா பொருத்த காவல்துறை அறிவுரை

image

குற்றங்களை தடுக்கும் வகையில் திருச்சி காவல்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில் வீடு மற்றும் வணிக நிறுவனங்கள் போன்ற இடங்களில் பொதுவெளி மற்றும் சாலை போன்றவை தெரியும்படி சிசிடிவி கேமராக்கள் பொருத்த கூறியுள்ளது. மேலும் பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் சந்தேக நபர்கள் அல்லது சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் நபர்கள் பற்றி புகார் தெரிவிக்க அழைக்கவும் மாவட்ட காவல் அலுவலக உதவி எண் 8939146100 அழைக்கலாம்.

News April 8, 2025

திருச்சி: சொத்து வரி செலுத்தினால் ஊக்கத்தொகை

image

திருச்சி மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள சொத்து உரிமையாளர்கள் தங்களது நடப்பாண்டிற்கான சொத்து வரியினை ஏப்ரல் 30ஆம் தேதிக்குள் செலுத்தி 5 சதவீதம் முதல், அதிகபட்சமாக ரூ.5,000 வரை ஊக்கத்தொகையினை பெற்றுக் கொள்ளலாம். குறித்த காலத்தில் சொத்து வரி செலுத்தவில்லை என்றால் 1 சதவீதம் அபராதம் வசூலிக்கப்படும் என திருச்சி மாநகராட்சி ஆணையர் சரவணன் தெரிவித்துள்ளார். (SHARE பண்ணுங்க)

News April 8, 2025

திருச்சி: சரக்கு லாரி மீது ஆட்டோ மோதி ஒருவர் உயிரிழப்பு 

image

திருச்சி, தென்னூரைச் சேர்ந்த அம்ருதீன் (40) என்பவரது ஆட்டோவில் அதே பகுதியைச் சேர்ந்த அப்துல் கரீம், நியாஸ் ஆகியோர் நேற்று காலை சென்று கொண்டிருந்தனர். அப்போது திடீரென ஓட்டுநர் அம்ருதீனுக்கு வலிப்பு ஏற்பட்டதால் சாலையோரம் நின்றிருந்த சரக்கு லாரி மீது ஆட்டோ மோதியதில் அம்ருதீன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். மற்ற இருவரும் படுகாயமடைந்து திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

News April 7, 2025

ஸ்ரீரங்கம்: விவசாயிகள் குறைதீர் கூட்டம் அறிவிப்பு

image

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் கோட்டத்திற்கு உட்பட்ட விவசாயிகளுக்கான குறை தீர்க்கும் முகாம் நாளைய தினம் (08.04.25) திருச்சி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இதில் ஸ்ரீரங்கம் கோட்டத்திற்கு உட்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு தங்களது குறைகளை தெரிவிக்கலாம் என திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் தெரிவித்துள்ளார்.

News April 7, 2025

திருச்சியில் மத்திய அரசு தேர்வுகள் தேதி அறிவிப்பு

image

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் நடைபெறும் என்.டி.ஏ, என்.ஏ மற்றும் சி.டி.எஸ் தேர்வுகள் திருச்சி மாவட்டத்தில் வரும் 13-ம் தேதி நடைபெற உள்ளது. காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெற உள்ள இந்த தேர்வை திருச்சி மாவட்டத்தில் 854 பேர் எழுத உள்ளனர். தேர்வு எழுத வருபவர்கள் செல்போன் உள்ளிட்ட மின்னணு சாதனங்கள் எடுத்து வர அனுமதி இல்லை. இந்த தகவலை திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் தெரிவித்துள்ளார்.

News April 7, 2025

சீமானுக்கு கெடு விதித்த நீதிமன்றம்

image

திருச்சி, டிஐஜி வருண்குமார் வழக்கில் இன்று (ஏப்.07) சீமான் நேரில் ஆஜராக ஏற்கெனவே உத்தரவிட்டிருந்தது. ஆனால் அவர் ஆஜராகாத நிலையில், இன்று மாலை 5 மணிக்குள் ஆஜராகவில்லை என்றால் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்படும் என்று திருச்சி மாவட்ட நீதிமன்றம் கெடு விதித்து, உத்தரவிட்டுள்ளது.

News April 7, 2025

வகுப்பறையில் பெண்ணுடன் தங்கியிருந்த இளைஞர் கைது

image

லால்​குடி அருகே வாளாடி மேல்​நிலைப் பள்​ளி வகுப்​பறை ஒன்​றில் நேற்றுமுன்​ தினம் ஆண், பெண் என 2 பேர் உறங்​கிக் கொண்​டிருந்​தனர். ஆசிரியர்​கள் கண்​டித்​த​போது, அந்த இளைஞர் அவர்​களு​டன் வாக்​கு​வாதத்​தில் ஈடு​பட்​டார். இதுதொடர்பான வீடியோ சமூக வலை​தளங்​களில் பரவியது. இந்நிலையில் லால்​குடி போலீ​சார் வழக்​குப் பதிவு செய்​து, வகுப்​பறை​யில் இருந்த கீழ​வாளாடியைச் சேர்ந்த நவீன்​கு​மாரை (28) கைது செய்​தனர்.

News April 6, 2025

சமயபுரம் மாரியம்மன் கோயில் யானைக்கு நினைவு மண்டபம்

image

திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்கு சொந்தமாக சுபத்ரா யானை இருந்தது. திருவிழா காலங்களில் இந்த யானை பயன்படுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் வயது முதிர்வு காரணமாக யானை இறந்து விட்டது. சட்டமன்ற அறிவிப்பின்படி கோயில் நிர்வாகம் யானைக்கு சுமார் ரூ.49.50 லட்சத்தில் நினைவு மண்டபம் கட்டப்படுகிறது. இதனை அறங்காவலர் குழுத்தலைவர் வி.எஸ்.பி.இளங்கோவன், கோயில் இணை ஆணையர் பிரகாஷ் உள்ளிட்டோர் பார்வையிட்டனர்.

error: Content is protected !!