India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருச்சி மாவட்டத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் (Digital Marketing Manager) காலி பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வாயிலாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு ஊதியமாக ரூ.15,000 முதல் ரூ.25,000 வரை வழங்கப்படுகிறது. 12ஆம் வகுப்பு முடித்துவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். விருப்பமுள்ளவர்கள் <
திருச்சி கொட்டப்பட்டு பகுதியில் உள்ள கால்நடை பல்கலைக் கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் வரும் வெள்ளிக்கிழமை (ஏப்.11) இலவச நாட்டுக் கோழி வளர்ப்பு பயிற்சி அளிக்கப்படவுள்ளது. இந்தப் பயிற்சி வகுப்பில் தரமான நாட்டுக் கோழி இனங்களைத் தேர்ந்தெடுத்தல், முறையான பராமரிப்பு, வளர்ப்பு உள்ளிட்ட ஆலோசனைகள் மற்றும் தொழில்நுட்ப முறைகள் குறித்து பயிற்சி வழங்கப்படும் என மைய தலைவர் ஷிபாதாமஸ் தெரிவித்துள்ளார்.
குற்றங்களை தடுக்கும் வகையில் திருச்சி காவல்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில் வீடு மற்றும் வணிக நிறுவனங்கள் போன்ற இடங்களில் பொதுவெளி மற்றும் சாலை போன்றவை தெரியும்படி சிசிடிவி கேமராக்கள் பொருத்த கூறியுள்ளது. மேலும் பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் சந்தேக நபர்கள் அல்லது சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் நபர்கள் பற்றி புகார் தெரிவிக்க அழைக்கவும் மாவட்ட காவல் அலுவலக உதவி எண் 8939146100 அழைக்கலாம்.
திருச்சி மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள சொத்து உரிமையாளர்கள் தங்களது நடப்பாண்டிற்கான சொத்து வரியினை ஏப்ரல் 30ஆம் தேதிக்குள் செலுத்தி 5 சதவீதம் முதல், அதிகபட்சமாக ரூ.5,000 வரை ஊக்கத்தொகையினை பெற்றுக் கொள்ளலாம். குறித்த காலத்தில் சொத்து வரி செலுத்தவில்லை என்றால் 1 சதவீதம் அபராதம் வசூலிக்கப்படும் என திருச்சி மாநகராட்சி ஆணையர் சரவணன் தெரிவித்துள்ளார். (SHARE பண்ணுங்க)
திருச்சி, தென்னூரைச் சேர்ந்த அம்ருதீன் (40) என்பவரது ஆட்டோவில் அதே பகுதியைச் சேர்ந்த அப்துல் கரீம், நியாஸ் ஆகியோர் நேற்று காலை சென்று கொண்டிருந்தனர். அப்போது திடீரென ஓட்டுநர் அம்ருதீனுக்கு வலிப்பு ஏற்பட்டதால் சாலையோரம் நின்றிருந்த சரக்கு லாரி மீது ஆட்டோ மோதியதில் அம்ருதீன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். மற்ற இருவரும் படுகாயமடைந்து திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் கோட்டத்திற்கு உட்பட்ட விவசாயிகளுக்கான குறை தீர்க்கும் முகாம் நாளைய தினம் (08.04.25) திருச்சி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இதில் ஸ்ரீரங்கம் கோட்டத்திற்கு உட்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு தங்களது குறைகளை தெரிவிக்கலாம் என திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் நடைபெறும் என்.டி.ஏ, என்.ஏ மற்றும் சி.டி.எஸ் தேர்வுகள் திருச்சி மாவட்டத்தில் வரும் 13-ம் தேதி நடைபெற உள்ளது. காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெற உள்ள இந்த தேர்வை திருச்சி மாவட்டத்தில் 854 பேர் எழுத உள்ளனர். தேர்வு எழுத வருபவர்கள் செல்போன் உள்ளிட்ட மின்னணு சாதனங்கள் எடுத்து வர அனுமதி இல்லை. இந்த தகவலை திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் தெரிவித்துள்ளார்.
திருச்சி, டிஐஜி வருண்குமார் வழக்கில் இன்று (ஏப்.07) சீமான் நேரில் ஆஜராக ஏற்கெனவே உத்தரவிட்டிருந்தது. ஆனால் அவர் ஆஜராகாத நிலையில், இன்று மாலை 5 மணிக்குள் ஆஜராகவில்லை என்றால் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்படும் என்று திருச்சி மாவட்ட நீதிமன்றம் கெடு விதித்து, உத்தரவிட்டுள்ளது.
லால்குடி அருகே வாளாடி மேல்நிலைப் பள்ளி வகுப்பறை ஒன்றில் நேற்றுமுன் தினம் ஆண், பெண் என 2 பேர் உறங்கிக் கொண்டிருந்தனர். ஆசிரியர்கள் கண்டித்தபோது, அந்த இளைஞர் அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது. இந்நிலையில் லால்குடி போலீசார் வழக்குப் பதிவு செய்து, வகுப்பறையில் இருந்த கீழவாளாடியைச் சேர்ந்த நவீன்குமாரை (28) கைது செய்தனர்.
திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்கு சொந்தமாக சுபத்ரா யானை இருந்தது. திருவிழா காலங்களில் இந்த யானை பயன்படுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் வயது முதிர்வு காரணமாக யானை இறந்து விட்டது. சட்டமன்ற அறிவிப்பின்படி கோயில் நிர்வாகம் யானைக்கு சுமார் ரூ.49.50 லட்சத்தில் நினைவு மண்டபம் கட்டப்படுகிறது. இதனை அறங்காவலர் குழுத்தலைவர் வி.எஸ்.பி.இளங்கோவன், கோயில் இணை ஆணையர் பிரகாஷ் உள்ளிட்டோர் பார்வையிட்டனர்.
Sorry, no posts matched your criteria.