India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
வரும் 30ஆம் தேதியிலிருந்து திருச்சி – மும்பைக்கு ஏர் இந்தியா விமான சேவை தொடங்குகிறது. திருச்சி எம்.பி துறை வைகோ, டெல்லியில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் அலுவலகத்துக்குச் சென்று, உயர் அதிகாரிகளைச் சந்தித்து, திருச்சியிலிருந்து உள்நாட்டு விமானச் சேவைக்கான அவசியம் குறித்து விளக்கமாக எடுத்துரைத்தார். அதை ஏற்றுக்கொண்ட ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ், விமானச் சேவையைத் தொடங்கியுள்ளது.
துறையூர் பகுதி கோட்டத்தூரில் அண்ணா நகர் கிராமத்தில் வனத்தாயி ராமர் என்பவர் நேற்று காலை இயற்கை எய்தினார். இவருக்கு 109 வயது. இவர், இந்தப் பகுதியில் நான்கு தலைமுறைகளை கண்டு பெருமையாக வாழ்ந்தவர். இவருக்கு இந்த பகுதியில் இருக்கும் அனைவரும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர். நம்ம திருச்சி மாவட்டத்தில் 109 வயது வரை வாழ்ந்த பாட்டி செய்தியை எல்லோருக்கும் SHARE பண்ணுங்க.
திருச்சி விமான நிலையத்தில் நேற்று கோலாலம்பூரில் இருந்து வந்த ஏர் ஏசியா விமான பயணிகளை அதிகாரிகள் சோதனை செய்தபோது ஒரு பயணியின் உடைமையில் 5 கோடி மதிப்பிலான ஐந்து கிலோ ஹைட்ரோபோனிக் போதை பொருள் கடத்தி வந்தது கண்டறியப்பட்டது. இதனைத் தொடர்ந்து போதை பொருளை பறிமுதல் செய்த அதிகாரிகள் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருச்சி மாவட்டத்தில் இந்த வருடம் அடுத்தடுத்து வரவிருக்கும் தேர் திருவிழாக்களின் தேதிகள் அறிவிப்பு:
*திருவெள்ளரை – 25.03.25
*திருவானைக்காவல் – 30.03.25
*உறையூர் வெக்காளியம்மன் – 14.04.25
*சமயபுரம் மாரியம்மன் – 15.04.25
* ஸ்ரீரங்கம் ரங்கநாதர் – 26.04.25
* மலைக்கோட்டை தேர் – 09.05.25
* திருப்பைஞ்சலி – 11.05.25
திருச்சி மக்களே இந்த தகவலை உங்க நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு SHARE பண்ணுங்க…
வனப்பகுதியில் மலை அடிவாரத்தில் நீரோடைகளும், சிற்றருவிகளும் நிறைந்த பசுமையான மற்றும் ஓர் அழகான சுற்றுலா இடம் புளியஞ்சோலை. கொல்லிமலைகளின் உச்சியில் ”தட்சினகங்கா” என்று அழைக்கப்படும் நீர்வீழ்ச்சியின் மருத்துவ குணங்கள் நிறைந்த நீர், புளியஞ்சோலையை அடைந்து, காவிரியின் துணை நதியான கொள்ளிடத்தில் இணைகிறது. இது ஒரு வற்றாத நீரோடையாகும். இந்த லீவுக்கு மறக்காம இங்க போங்க. உங்க நண்பர்களுக்கும் SHARE பண்ணுங்க…
தமிழ்நாட்டின் தொழில் நகரமான திருச்சியில், நாம் பார்க்க வேண்டிய இடங்கள். காவிரி, கொள்ளிடம் சங்கமிக்கும் முக்கொம்பு அணை, பசுமை மிகுந்த பச்சமலை, கரிகாலன் கட்டிய கல்லணை, புளியஞ்சோலை, திருச்சியின் அடையாளமான மலைக்கோட்டை, புகழ்பெற்ற ஸ்ரீரங்கம் கோயில், 1000 ஆண்டு பழமையான நாதிர்ஷா தர்கா, அறிவியல் கோளரங்கம், சமயபுரம் மாரியம்மன் கோயில் என ஏராளமான இடங்கள் உள்ளன. உங்களுக்கு தெரிந்த இடங்களை கமெண்ட் பண்ணுங்க..
ரமலான் கூட்ட நெரிசலைக் குறைக்க திருச்சி – தாம்பரம் ஜன் சதாப்தி சிறப்பு விரைவு ரயிலானது (06048) வரும் 29, 30, 31 ஆம் தேதி வரையும், மறுமார்க்கமாக தாம்பரம் – திருச்சி ஜனசதாப்தி சிறப்பு விரைவு ரயிலானது (06047) வரும் 29, 30, 31 ஆம் தேதிகளிலும் இயக்கப்பட உள்ளது என திருச்சிராப்பள்ளி கோட்டை ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
திருச்சி நகரப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு அலுவலகத்தில் பொதுமக்கள் கோரிக்கைகளை மனுக்களாக கொடுக்கும் நிகழ்ச்சி நேற்று மார்ச் 22, நடைபெற்றது. அந்த வகையில் பொதுமக்கள் அமைச்சரை சந்தித்து கோரிக்கை மனுக்களை கொடுத்தனர். அவர்களிடம் கோரிக்கை மனுக்களைப் பெற்றுக் கொண்ட அமைச்சர் நேரு, விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.
திருச்சி மாவட்டம் மறுக்காளம்பட்டியை சேர்ந்த சகாதேவன்(48) என்பவர் கூலி வேலை பார்த்து வந்த சூழலில், திடீரென மனநலம் பாதிக்கப்பட்டு அதற்காக சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் திடீரென நேற்று தனது வீட்டில் யாரும் இல்லாத போது சகாதேவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக அளிக்கப்பட்ட தகவளின் அடிப்படையில், இது குறித்து ஜம்புநாதபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
கீரம்பூரைச் சேர்ந்த மோகன்(33) தனக்கு திருமணம் ஆகாததால் கடந்த ஐந்து மாதங்களாக லதா என்பவருடன் தகாத உறவில் இருந்துள்ளார். இதை அறிந்த லதாவின் கணவர் மோகனை கண்டித்து தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சல் அடைந்த மோகன் நேற்று தனது வீட்டில் யாரும் இல்லாத போது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து துறையூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Sorry, no posts matched your criteria.