India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருச்சி மக்களே தமிழ்நாடு அரசில் தேர்வில்லாமல் நல்ல ஊதியத்தில் வேலை வேண்டுமா? மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் கீழ் செயல்படுத்தப்படும் “TN Rights” திட்டத்தின் கீழ் பணிபுரிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு ரூ.15,000 முதல் ரூ.1.25 லட்சம் வரை மாத சம்பளம் வழங்கப்படும். முதுகலை பட்டம் பெற்று விருப்பமுள்ளர்கள் ஆக.,13ஆம் தேதிக்குள் <
தமிழகம் முழுவதும் 280 காவல் நிலையங்கள் தரம் உயர்த்தப்பட்ட நிலையில் திருச்சியில் 8 காவல் நிலையங்கள் தரம் உயர்த்தப்பட்டுள்ளது. காவல் உதவி ஆய்வாளர்கள் நிர்வகித்து வந்த, ஸ்ரீரங்கம் அருகே உள்ள கொள்ளிடம் காவல் நிலையம், காட்டுப்புத்தூர், உப்பிலியபுரம், புத்தாநத்தம், வளநாடு, பெட்டவாய்த்தலை, கல்லக்குடி உள்ளிட்ட 8 காவல் நிலையங்கள் தரம் உயர்த்தப்பட்டது.
திருச்சியில் வாடகை வீட்டில் வசிப்பவர்கள், வாடகை உயர்வு, திடீர் வெளியேற்றம், முன்பண பிரச்சனை போன்ற பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். வாடகை வீட்டில் குடியிருப்போர் உரிமைகளை பாதுகாக்க தனி சட்டமே உள்ளது. உங்கள் வீட்டின் உரிமையாளர் அதிக கட்டணம் வசூலித்தாலோ அல்லது தொந்தரவு செய்தாலோ, 1800 599 01234 என்ற தமிழக வீட்டுவசதித் துறையின் கட்டணமில்லா எண்ணில் புகார் அளிக்கலாம். இத்தகவலை SHARE பண்ணுங்க.
பௌத்த மதத்தை சேர்ந்தவர்கள் நாக்பூர் தீக் ஷா பூமியில் விஜயதசமி அன்று நடைபெறும் தம்ம சக்கர திருவிழாவிற்கு புனித பயணம் சென்று வரும் 150 நபர்களுக்கு மானியமாக ரூ.5000 வழங்கப்படுகிறது. இதனை பெறுவதற்கு நவம்பர் 30-ம் தேதிக்குள் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பங்களை மாவட்ட பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் பெற்று சென்னைக்கு அனுப்பி வைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.
திருச்சி விமான நிலையத்தில் விசிக தலைவர் திருமாவளவன் இன்று காலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது ‘தேசிய ஜனநாயக கூட்டணி இன்னும் கூட்டணியாகவே உருவாகவில்லை. அதில் பாஜக-அதிமுக ஆகிய இரண்டு கட்சிகள் மட்டுமே உள்ளன. அந்த கூட்டணியிலே தொடர்வார்கள் என எதிர்பார்க்கப்பட்ட கட்சிகள் அந்த கூட்டணியில் இருந்து வெளியேறி வருவது அவர்களின் உறுதிபாடு எந்த அளவிற்கு இருக்கிறது என்பதை காட்டுகிறது’ என்றார்.
▶️ திருச்சி மேற்கு – கே.என்.நேரு (mlatiruchirappalliwest@tn.gov.in)
▶️ திருச்சி கிழக்கு – இனிகோ இருதயராஜ் (mlatiruchirappallieast@tn.gov.in)
▶️ திருவெறும்பூர் – அன்பில் மகேஷ் பொய்யாமொழி (mlathiruverumbur@tn.gov.in)
▶️ மணப்பாறை – அப்துல் சமது (mlamanapparai@tn.gov.in)
▶️ ஸ்ரீரங்கம் – பழனியாண்டி (mlasrirangam@tn.gov.in)
▶️ இந்த தகவலை மறக்காமல் SHARE செய்யவும். பாகம்-2 ஐ காண <<17307802>>இங்கே க்ளிக்<<>> செய்யவும்
▶️ லால்குடி – சௌந்தரபாண்டியன் (mlalalgudi@tn.gov.in)
▶️ மண்ணச்சநல்லூர் – எஸ். கதிரவன் (mlamanachanallur@tn.gov.in)
▶️ முசிறி – என். தியாகராஜன் (mlamusiri@tn.gov.in)
▶️ துறையூர் – ஸ்டாலின் குமார் (mlathuraiyur@tn.gov.in)
▶️ இதன் மூலம் உங்கள் பகுதியில் நிலவும் பிரச்சனைகளை, வீட்டிலிருந்த படியே உங்கள் தொகுதி எம்எல்ஏ-விடம் உங்களால் தெரிவிக்க முடியும். SHARE NOW !
தமிழகத்திலுள்ள அரசு பள்ளிகளில் நடப்பாண்டு 1-ஆம் வகுப்பில் மட்டும் 2,75,459 மாணவா்கள் சோ்க்கை பெற்றுள்ளனா். இந்நிலையில் மாணவா் சோ்க்கை அடிப்படையில் 8,571 மாணவா்களுடன் தென்காசி மாவட்டம் முதலிடத்தையும், 8000 மாணவா்களுடன் திண்டுக்கல் மாவட்டம் இரண்டாம் இடத்தையும், 7,711 மாணவா்களுடன் திருச்சி மாவட்டம் மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளதாக பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
திருச்சி மாவட்டத்தில் கடந்த 2 ஆண்டுகளாக சாலை விபத்துகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றன. கடந்த 2023-ம் ஆண்டில் திருச்சி மாவட்டத்தில் நடைபெற்ற 1,806 சாலை விபத்துகளில் 555 பேர் பலியாகினர். அதுபோல 2024-ம் ஆண்டில் நடைபெற்ற 1,922 சாலை விபத்துகளில் 633 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் 2025-ம் ஆண்டு மே மாதம் வரை நடந்த 763 விபத்துகளில் 245 பேர் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. SHARE !
திருச்சியிலிருந்து கரூர் செல்லும் பேருந்துகளை திருச்சி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து தற்காலிகமாக இயக்கலாம் என உயர்நீதிமன்ற கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. பஞ்சப்பூர் பேருந்து நிலையம் துவக்கிய நாள் முதல் அனைத்து பேருந்துகளும் பஞ்சப்பூர் சென்ற நிலையில் கரூர் செல்லும் தனியார் பேருந்துகள் பேருந்து நிலையத்தில் இருந்து இயங்கின. இதுதொடர்பான வழக்கில் இன்று நீதிமன்றம் அனுமதி வழங்கியது.
Sorry, no posts matched your criteria.