India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
அரியலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் எஸ்.எஸ்.ஐ.யாக பணியாற்றிய சுமதி, கற்பழிப்பு தொடர்பாக புகார் அளிக்க வந்த பெண்ணிடம் தகாத வார்த்தைகளில் பேசி, புகாரை ஏற்க மறுத்துள்ளார். இந்த விவகாரம் டி.ஐ.ஜி. வருண்குமார் கவனத்திற்கு சென்றதால், அவர் வாக்கி டாக்கி மூலம் இன்ஸ்பெக்டரிடம் விசாரணை நடத்தி, வாக்கி டாக்கியில் எஸ்.எஸ்.ஐ சுமதி-யை இடம் மாற்ற செய்ய உத்தரவிட்டார்.
இந்திய ராணுவத்தில் நடப்பாண்டிற்குரிய அக்னிவீர் ஜெனரல் டியூட்டி, டெக்னிக்கல், அலுவலக உதவியாளர் மற்றும் ஸ்டோர் கீப்பர் டெக்னிக்கல் ஆகிய பிரிவுகளுக்கு அதிகாரப்பூர்வ <
திருச்சி பஞ்சபூர் பகுதியில் புதிய டைட்டில் பார்க் கட்டுமானப் பணியில் புதுக்கோட்டையைச் சேர்ந்த வெற்றிவேல், மோகன் ஆகியோர் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் இன்று பணி காரணமாக இருவரும் ஒரே டூவிலரில் பஞ்சப்பூர் அருகே வந்து கொண்டிருந்த போது, அவ்வழியே வேகமாக வந்த கார் ஒன்று டூவீலர் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் சம்பவ இடத்திலேயே இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
திருச்சியில் உள்ள தனியார் செஸ் அகாடமி சார்பில் மாவட்ட அளவிலான ஓபன் மற்றும் சிறுவர்களுக்கான செஸ் போட்டி வரும் 20-ம் தேதி நடைபெற உள்ளது. ஸ்ரீரங்கம் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறும் இப்போட்டியில் 7, 9, 11, 15 வயது பிரிவினர் கலந்து கொள்ளலாம். போட்டியில் கலந்து கொள்பவர்கள் வயது சான்றிதழ் உடன் வரவேண்டும். போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு சான்றிதழ்களும் பரிசு கோப்பையும் வழங்கப்பட உள்ளது. SHARE NOW!
திருச்சி மாநகராட்சி பகுதியில் சொத்துவரி, குடிநீர் கட்டணம், தொழில் வரி போன்ற வரி இனங்கள் மூலம் வரவேண்டிய வருவாய் ரூ.357 கோடியில், கடந்த பிப்ரவரி மாதம் இறுதி வரை ரூ.190 கோடி மட்டுமே வசூல் ஆகியிருந்தது. இதையடுத்து நிலுவை தொகையை செலுத்த தவறியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதன் மூலம் கடந்த மார்ச் வரை (நிதி ஆண்டு) ரூ.237 கோடி வரி வசூலிக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது.
திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயில் பங்குனித் தேரோட்டத்தை முன்னிட்டு வரும் ஏப்ரல் 15,ஆம் தேதி திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் உத்தரவிட்டுள்ளார். மேலும் அதனை ஈடுசெய்யும் வகையில் வரும் மே.3 ஆம் தேதி வேலைநாளாக செயல்படும் என்றும் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். ஷேர் பண்ணுங்க!
திருச்சி காட்டூர் கைலாஷ் நகரில் நடந்த ரியல் எஸ்டேட் அதிபர் பொன்ராஜ் கொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளில் நிஷாந்த் என்பவரை ஏற்கனவே குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய ஸ்ரீரங்கத்தை சேர்ந்த குணசேகரன் மற்றும் ஸ்ரீரங்கத்தை சேர்ந்த பிரசன்னா ஆகிய இருவரும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் நேற்று கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு வரும் 10-ம் தேதி திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து மதுபான சில்லறை விற்பனைக் கடைகளும் மூடப்பட்டிருக்கும். அதனுடன் இணைந்து இயங்கும் மது கூடங்கள் FL2/FL3/FL3A/FL3AA & FL 11 உள்ளிட்ட அனைத்து பார்களும் மூடப்பட்டிருக்கும். மேலும், அன்றைய தினத்தில் மதுபானங்களை விற்பனை செய்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் பிரதீப்குமார் அறிவித்துள்ளார்.
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று திருச்சி விமான நிலையத்திற்கு வருகை தந்தார்.அப்போது,அவரை அதிகாரிகள் சோதனை செய்தனர்.அவர் பாக்கெட்டில் சிறிய அளவிலான கத்தி ஒன்று வைத்திருந்தார். விமான நிலையத்தில் எந்த ஆயுதங்களும் எடுத்துச் செல்லக்கூடாது என்ற விதி உள்ளதால்,அதனை அதிகாரிகள் சீமானிடம் இருந்து பறிமுதல் செய்தனர்.இதனால் திருச்சி விமான நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
திருச்சி மாவட்டத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் (Digital Marketing Manager) காலி பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வாயிலாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு ஊதியமாக ரூ.15,000 முதல் ரூ.25,000 வரை வழங்கப்படுகிறது. 12ஆம் வகுப்பு முடித்துவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். விருப்பமுள்ளவர்கள் <
Sorry, no posts matched your criteria.