Tiruchirappalli

News April 10, 2025

பெண் எஸ்.எஸ்.ஐ இடம் மாற்ற வாக்கி டாக்கியில் உத்தரவு

image

அரியலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் எஸ்.எஸ்.ஐ.யாக பணியாற்றிய சுமதி, கற்பழிப்பு தொடர்பாக புகார் அளிக்க வந்த பெண்ணிடம் தகாத வார்த்தைகளில் பேசி, புகாரை ஏற்க மறுத்துள்ளார். இந்த விவகாரம் டி.ஐ.ஜி. வருண்குமார் கவனத்திற்கு சென்றதால், அவர் வாக்கி டாக்கி மூலம் இன்ஸ்பெக்டரிடம் விசாரணை நடத்தி, வாக்கி டாக்கியில் எஸ்.எஸ்.ஐ சுமதி-யை இடம் மாற்ற செய்ய உத்தரவிட்டார்.

News April 10, 2025

ராணுவத்தில் சேர கடைசி வாய்ப்பு-APPLY NOW!

image

இந்திய ராணுவத்தில் நடப்பாண்டிற்குரிய அக்னிவீர் ஜெனரல் டியூட்டி, டெக்னிக்கல், அலுவலக உதவியாளர் மற்றும் ஸ்டோர் கீப்பர் டெக்னிக்கல் ஆகிய பிரிவுகளுக்கு அதிகாரப்பூர்வ <>இணையத்தில்<<>> ஏப்.10ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று ஆட்சேர்ப்புக்கான அறிவிப்பு வெளியாகியிருந்த நிலையில், இன்றே கடைசி நாள் என்பதால் திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர்கள் உடனே APPLY செய்து உங்க நண்பர்களுக்கும் இத்தகவலை SHARE பண்ணுங்க…

News April 9, 2025

திருச்சியில் கார் மோதி 2 பேர் பலி

image

திருச்சி பஞ்சபூர் பகுதியில் புதிய டைட்டில் பார்க் கட்டுமானப் பணியில் புதுக்கோட்டையைச் சேர்ந்த வெற்றிவேல், மோகன் ஆகியோர் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் இன்று பணி காரணமாக இருவரும் ஒரே டூவிலரில் பஞ்சப்பூர் அருகே வந்து கொண்டிருந்த போது, அவ்வழியே வேகமாக வந்த கார் ஒன்று டூவீலர் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் சம்பவ இடத்திலேயே இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

News April 9, 2025

திருச்சியில் மாவட்ட அளவிலான செஸ் போட்டி

image

திருச்சியில் உள்ள தனியார் செஸ் அகாடமி சார்பில் மாவட்ட அளவிலான ஓபன் மற்றும் சிறுவர்களுக்கான செஸ் போட்டி வரும் 20-ம் தேதி நடைபெற உள்ளது. ஸ்ரீரங்கம் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறும் இப்போட்டியில் 7, 9, 11, 15 வயது பிரிவினர் கலந்து கொள்ளலாம். போட்டியில் கலந்து கொள்பவர்கள் வயது சான்றிதழ் உடன் வரவேண்டும். போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு சான்றிதழ்களும் பரிசு கோப்பையும் வழங்கப்பட உள்ளது. SHARE NOW!

News April 9, 2025

திருச்சி மாநகராட்சியில் ரூ.237 கோடி வரி வசூல்

image

திருச்சி மாநகராட்சி பகுதியில் சொத்துவரி, குடிநீர் கட்டணம், தொழில் வரி போன்ற வரி இனங்கள் மூலம் வரவேண்டிய வருவாய் ரூ.357 கோடியில், கடந்த பிப்ரவரி மாதம் இறுதி வரை ரூ.190 கோடி மட்டுமே வசூல் ஆகியிருந்தது. இதையடுத்து நிலுவை தொகையை செலுத்த தவறியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதன் மூலம் கடந்த மார்ச் வரை (நிதி ஆண்டு) ரூ.237 கோடி வரி வசூலிக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது.

News April 9, 2025

திருச்சி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை

image

திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயில் பங்குனித் தேரோட்டத்தை முன்னிட்டு வரும் ஏப்ரல் 15,ஆம் தேதி திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் உத்தரவிட்டுள்ளார். மேலும் அதனை ஈடுசெய்யும் வகையில் வரும் மே.3 ஆம் தேதி வேலைநாளாக செயல்படும் என்றும் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். ஷேர் பண்ணுங்க!

News April 9, 2025

திருச்சியில் 2 குற்றவாளிகள் குண்டர் சட்டத்தில் கைது

image

திருச்சி காட்டூர் கைலாஷ் நகரில் நடந்த ரியல் எஸ்டேட் அதிபர் பொன்ராஜ் கொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளில் நிஷாந்த் என்பவரை ஏற்கனவே குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய ஸ்ரீரங்கத்தை சேர்ந்த குணசேகரன் மற்றும் ஸ்ரீரங்கத்தை சேர்ந்த  பிரசன்னா ஆகிய இருவரும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் நேற்று கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

News April 9, 2025

திருச்சியில் மதுக்கடைகள் மூடல்-ஆட்சியர் அறிவிப்பு

image

மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு வரும் 10-ம் தேதி திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து மதுபான சில்லறை விற்பனைக் கடைகளும் மூடப்பட்டிருக்கும். அதனுடன் இணைந்து இயங்கும் மது கூடங்கள் FL2/FL3/FL3A/FL3AA & FL 11 உள்ளிட்ட அனைத்து பார்களும் மூடப்பட்டிருக்கும். மேலும், அன்றைய தினத்தில் மதுபானங்களை விற்பனை செய்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் பிரதீப்குமார் அறிவித்துள்ளார்.

News April 8, 2025

திருச்சி ஏர்போர்ட்டில் சீமானிடமிருந்து கத்தி பறிமுதல்

image

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று திருச்சி விமான நிலையத்திற்கு வருகை தந்தார்.அப்போது,அவரை அதிகாரிகள் சோதனை செய்தனர்.அவர் பாக்கெட்டில் சிறிய அளவிலான கத்தி ஒன்று வைத்திருந்தார். விமான நிலையத்தில் எந்த ஆயுதங்களும் எடுத்துச் செல்லக்கூடாது என்ற விதி உள்ளதால்,அதனை அதிகாரிகள் சீமானிடம் இருந்து பறிமுதல் செய்தனர்.இதனால் திருச்சி விமான நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

News April 8, 2025

திருச்சியில் வேலைவாய்ப்பு

image

திருச்சி மாவட்டத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் (Digital Marketing Manager) காலி பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வாயிலாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு ஊதியமாக ரூ.15,000 முதல் ரூ.25,000 வரை வழங்கப்படுகிறது. 12ஆம் வகுப்பு முடித்துவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். விருப்பமுள்ளவர்கள் <>இங்கே க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். வேலை தேடும் நபர்களுக்கு SHARE செய்யுங்கள்.

error: Content is protected !!