Tiruchirappalli

News April 17, 2025

சமயபுரத்தில் 50 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் மீட்பு

image

சமயபுரம் எஸ்.கண்ணனூர் கிராமத்தின் விஏஓ அளித்த தகவலின் அடிப்படையில், சமயபுரம் போலீசார் நேற்று புள்ளம்பாடி பகுதியில் சென்று பார்த்தபோது 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் சடலமாக கிடந்துள்ளார். உடனே, அந்த சடலத்தை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து, போலீசார் வழக்குப் பதிவு செய்து தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News April 16, 2025

ஸ்ரீரங்கத்தில் நாளை சித்திரை திருவிழா கொடியேற்றம்

image

திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் விருப்பன் திருநாள் எனப்படும் சித்திரை தேர்த்திருவிழா கொடியேற்றம் நாளை (17.04.25) நடைபெற உள்ளது. இதனையொட்டி நம்பெருமாள் அதிகாலை 3 மணிக்கு மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு கொடியேற்ற மண்டபம் வந்தடைகிறார். அதனைத் தொடர்ந்து காலை 4:30 மணி முதல் 5:30 மணிக்குள் மீன லக்னத்தில் கொடியேற்றம் நடைபெற உள்ளது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

News April 16, 2025

திருச்சியில் ரூ.45,000 சம்பளத்தில் அரசு வேலை!

image

மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டத்தில் திருச்சி மாவட்டத்தில் காலியாக உள்ள குறைதீர்ப்பாளர் பணியிடத்திற்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு சம்பளமாக மாதம் ரூ.45,000 வரை வழங்கப்படும். ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் tnrd.tn.gov.in வாயிலாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் 05.05.2025 ஆகும். அரசு வேலை தேடும் உங்க நண்பருக்கு இதை SHARE செய்யவும்.

News April 16, 2025

என்.எல்.சியில் 171 காலிப்பணியிடங்கள்

image

NLC நிறுவனத்தில் Junior Overman & Mining Sirdar பணிகளுக்கு 171 காலிப் பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக அறிவித்துள்ளனர். டிப்ளமோ, இன்ஜினியரிங் படித்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. Junior Overman பணிக்கு ஆண்டுக்கு ரூ. 8.53 லட்சமும், Mining Sirdar பணிக்கு ஆண்டுக்கு ரூ. 7.16 லட்சம் வழங்கப்படும் என தெரிவித்துள்ளனர். மேலும் அறிய <>இங்கு க்ளிக் செய்யவும்<<>>. வேலை தேடுபவர்களுக்கு SHARE செய்யவும்

News April 16, 2025

திருச்சி மாவட்டத்தில் ரூ.25000 சம்பளத்தில் வேலை

image

திருச்சி மாவட்டத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் காலியாக உள்ள Agri Field Officer பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வாயிலாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஊதியம் ரூ.15,000 – 25,000 வரை வழங்கப்படுகிறது. விருப்பம் உள்ள பட்டப்படிப்பு முடித்தவர்கள் <>இங்கே க்ளிக் செய்து<<>> விண்ணப்பிக்கலாம். வேலை தேடும் நண்பர்களுக்கு இதை SHARE செய்து தெரியப்படுத்துங்கள்.

News April 16, 2025

நில மோசடி: திருச்சி காவல்துறை எச்சரிக்கை

image

நில மோசடியை தடுக்கும் வகையில் திருச்சி மாவட்ட காவல்துறை இன்று விழிப்புணர்வு செய்தி வெளியிட்டுள்ளது. அதில், “ஒரு இடத்தை வாங்கும் முன் சொத்தின் உரிமைகள், வரிகள் மற்றும் ஏதேனும் பிரச்னைகள் இல்லை என்பதை உறுதிப்படுத்த <>அதிகாரபூர்வ இணையதளத்தில்<<>> ஆவணங்களை சரிபார்த்துக் கொள்ளவும். மேலும் நில மோசடியில் பாதிக்கப்படாமல் விழிப்புணர்வுடன் இருக்கவும்” கூறப்பட்டுள்ளது. இதனை உங்க நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க..

News April 16, 2025

லாரி டிரைவர் தற்கொலை-போலீசார் விசாரணை

image

உப்பிலியபுரத்தை அடுத்த நாகநல்லூரைச் சேர்ந்த லாரி டிரைவர் கண்ணன்(38) என்பவர் கடந்த சில வருடங்களாக கிட்னி பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தநிலையில், மன அழுத்தத்தால் விஷம் குடித்ததாகவும், குடும்பத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக துறையூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது அவர் வழியிலேயே உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது. இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

News April 15, 2025

தமிழ்நாடு இளைஞர்களுக்கு சிங்கப்பூர் அரசு விருது

image

கடந்த வாரம் சிங்கப்பூர் பள்ளி ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் பல குழந்தைகள் தீயில் சிக்கி கொண்டனர். அப்போது அருகில் பணியில் இருந்த லால்குடி,  கல்லகம் ஊராட்சியை சேர்ந்த சரண்ராஜ் உள்பட 4 தமிழக இளைஞர்கள் தீயணைப்பு வாகனம் வரும் முன் துரிதமாக செயல்பட்டு 16 குழந்தைகள் உட்பட 22 பேரை காப்பாற்றியுள்ளனர். இவர்களின் வீர தீர செயலை பாராட்டி சிங்கப்பூர் அரசாங்கம் ‘Friends of ACE’ எனும் விருதினை வழங்கி பாராட்டியது.

News April 15, 2025

திருச்சி: அக்னிவீர் பிரிவுக்கு ஆள் சேர்ப்பு தேதி நீட்டிப்பு

image

திருச்சி ராணுவ ஆள்சேர்ப்பு அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அக்னி வீரர்களின் பல்வேறு பிரிவுகளுக்கான ஆள்சேர்ப்புக்கான பதிவு ஏப்ரல் 25-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதில் திருச்சி, பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருவாரூர், நாகப்பட்டினம், சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், திருநெல்வேலி, தென்காசி உள்ளிட்ட 16 மாவட்டங்களை சேர்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News April 15, 2025

திருச்சி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை

image

திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயில் சித்திரை தேரோட்டத்தை முன்னிட்டு இன்று (ஏப்.15) திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் உத்தரவிட்டுள்ளார். மேலும் அதனை ஈடுசெய்யும் வகையில் வரும் மே.3 ஆம் தேதி வேலைநாளாக செயல்படும் என்றும் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். இதனை SHARE பண்ணுங்க..

error: Content is protected !!