India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

திருச்சி மாவட்டம் வேலங்குறிச்சி காயங்காடு காட்டுப்பகுதியில் 70 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் பிணமாக கிடந்தார். இதுகுறித்து தகவலறிந்த துவரங்குறிச்சி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, இறந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிந்து இறந்தவர் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருச்சி மக்களே, இனி வக்கீல் ஆலோசனை பெற நீங்கள் அங்கும் இங்கும் அலைய வேண்டிய அவசியமில்லை. இதற்காக மத்திய சட்டம் மற்றும் நீதி அமைச்சகம் புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. ‘72177 11814’ என்ற எண்ணிற்கு உங்களது Whatsapp-ல் இருந்து ஒரு மெசேஜ் அனுப்பினால் போதும், சொத்து தகராறு, குடும்ப பிரச்சனை, சிவில் வழக்கு போன்றவற்றிற்கு இலவச சட்ட ஆலோசனைகள் வழங்கப்படும். இந்த பயனுள்ள தகவலை SHARE பண்ணுங்க!

‘இ-ஷ்ரம்’ அட்டை அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான மத்திய அரசின் சமூக பாதுகாப்புத் திட்டமாகும். 16-59 வயதுக்ககுட்பட்ட, வருமானவரி செலுத்தாத தொழிலாளர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். விபத்து மரணத்திற்கு ரூ.2 லட்சம், ஊனத்திற்கு ரூ.1 லட்சம் காப்பீடு கிடைக்கும். மேலும், இதன் மூலம் 60 வயதுக்கு பின் மாதம் ரூ.3,000 பென்ஷன் பெறலாம். இதற்கு ஆதார், வங்கி விவரங்களுடன் <

திருச்சி மாவட்டத்தில் உள்ள மணப்பாறை, ஸ்ரீரங்கம், திருச்சி மேற்கு, திருச்சி கிழக்கு, திருவெறும்பூர், லால்குடி, மண்ணச்சநல்லூர், முசிறி, துறையூர் ஆகிய 9 சட்டமன்ற தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி ஒவ்வொரு தொகுதிக்கும் தலா ஒரு தேர்தல் நடத்தும் அலுவலரும், 2 உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களையும் நியமித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

இரவு நேரங்களில் திடீரென மின்தடை ஏற்பட்டால், நம்மில் பலருக்கு என்ன செய்வதென்று தெரியாது. இனி கவலை வேண்டாம்! நீங்கள் திருச்சி மாவட்டத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் சரி, ‘94987 94987’ என்ற TNEB Customer Care எண்ணை தொடர்புகொண்டு, உங்களது மின் இணைப்பு எண் மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால் போதும், அடுத்த 5 நிமிடங்களில் லைன்மேன் உங்கள் வீடு தேடி வருவார். அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

தமிழகத்தில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொது தேர்வுகள் விரைவில் தொடங்க உள்ளது. இந்நிலையில் திருச்சி மாவட்டத்தில் தேர்வு நடைபெறும் அனைத்து நாட்களுக்கும் தடையில்லா மின்சாரம் வழங்கிடவும், தேர்வு நடைபெறும் அனைத்து நாட்களிலும் மாணவர்கள் தேர்வு மையங்களுக்கு எளிதில் சென்று வர வசதியாக பேருந்துகளை இயக்க வேண்டும் எனவும், துறை சார்ந்த அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் சரவணன் உத்தரவிட்டுள்ளார்.

நாளுக்கு நாள் குடும்பத்தில் பெண்களுக்கு எதிராக நிகழும் வன்முறைகள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் கணவன் அடிப்பது, வரதட்சணை கேட்டு துன்புறுத்துவது போன்ற குடும்ப வன்முறைகளை திருச்சி மாவட்ட பெண்கள் யாரேனும் எதிர்கொண்டால், தயங்காமல் மாவட்ட குடும்ப வன்முறை தடுப்புச் சட்ட பாதுகாப்பு அலுவலரை (9843072080) தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம். இத்தகவலை மற்றவர்களுக்கும் SHARE செய்து தெரியப்படுத்துங்க!

திருச்சி அமைச்சர் நேரு நேற்று அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “திருச்சியில் மார்ச்.9ம் தேதி ஸ்டாலின் தொடரட்டும் தமிழ்நாடு வெல்லட்டும் என்ற நிர்வாகிகள் சந்திப்பு மாநாடு நடைபெற உள்ளது. இம்மாநாடு திருப்புமுனை மாநாடு என்பதை விட, கழகத்தின் வெற்றியை உறுதி செய்திடும் மாநாடாக நடத்திட வேண்டும். இங்கு திரளும் கூட்டத்தின் மூலம் தேர்தலில் வெற்றி பெற்று, திராவிட மாடல் 2.o ஆட்சி அமைப்போம்” என தெரிவித்துள்ளார்.

திருச்சி அமைச்சர் நேரு நேற்று அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “திருச்சியில் மார்ச்.9ம் தேதி ஸ்டாலின் தொடரட்டும் தமிழ்நாடு வெல்லட்டும் என்ற நிர்வாகிகள் சந்திப்பு மாநாடு நடைபெற உள்ளது. இம்மாநாடு திருப்புமுனை மாநாடு என்பதை விட, கழகத்தின் வெற்றியை உறுதி செய்திடும் மாநாடாக நடத்திட வேண்டும். இங்கு திரளும் கூட்டத்தின் மூலம் தேர்தலில் வெற்றி பெற்று, திராவிட மாடல் 2.o ஆட்சி அமைப்போம்” என தெரிவித்துள்ளார்.

திருச்சி அமைச்சர் நேரு நேற்று அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “திருச்சியில் மார்ச்.9ம் தேதி ஸ்டாலின் தொடரட்டும் தமிழ்நாடு வெல்லட்டும் என்ற நிர்வாகிகள் சந்திப்பு மாநாடு நடைபெற உள்ளது. இம்மாநாடு திருப்புமுனை மாநாடு என்பதை விட, கழகத்தின் வெற்றியை உறுதி செய்திடும் மாநாடாக நடத்திட வேண்டும். இங்கு திரளும் கூட்டத்தின் மூலம் தேர்தலில் வெற்றி பெற்று, திராவிட மாடல் 2.o ஆட்சி அமைப்போம்” என தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.