India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

திருச்சி மக்களே, மத்திய அரசின் உஜ்வாலா 2.0 திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின் தங்கிய பெண்களுக்கு அடுப்பு, கேஸ், ரெகுலேட்டர், குழாய், சிலிண்டர் என அனைத்துமே இலவசமாக வழங்கப்படுகிறது. இதற்கு ஆதார் அட்டை, ரேஷன் அட்டை, வங்கி கணக்கு புத்தகம் மற்றும் புகைப்படத்துடன் உங்கள் அருகில் உள்ள கேஸ் நிறுவங்களுக்கு நேரில் சென்றோ அல்லது <

குழந்தைகளின் கல்வி மற்றும் பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில், திருச்சி காவல்துறை முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில் குழந்தை திருமணத்தை முற்றிலும் ஒழிப்போம் எனவும், குழந்தை திருமணங்கள் தொடர்பான புகார்கள் தெரிவிக்க குழந்தைகளுக்கான உதவி எண் 1098 அல்லது திருச்சி மாவட்ட காவல் உதவி எண் 8939146100-ஐ அழைக்கலாம் என மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.

வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் சொந்தமாக தொழில் தொடங்க தமிழகத்தில் ‘UYEGP’ என்ற சூப்பரான திட்டம் செயல்பாட்டில் உள்ளது. இதன் மூலம் சொந்தமாக தொழில் தொடங்க ரூ.5,00,000 – ரூ.15,00,000 வரை 25% மானியத்தில் கடன் வழங்கப்படுகிறது. இதற்கு 8th தேர்ச்சி பெற்று, 18 வயது பூர்த்தியடைந்தால் போதும். விருப்பமுள்ளவர்கள்<

கால்நடை பராமரிப்பு துறை சார்பில், திருச்சி மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் வரும் 3ஆம் தேதி முதல் 21ஆம் தேதி வரை கோமாரி நோய் தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது. இதில் சுமார் 3 லட்சத்து 11 ஆயிரம் கால்நடைகள் பயன்பெற உள்ளன. காலை 6 மணி முதல் காலை 9:30 மணி வரையிலும், பிற்பகல் 3 மணி முதல் மாலை 5 மணி வரையிலும் இம்முகாம் நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.

இந்திய அஞ்சல் துறையின் கீழ் செயல்படும், ‘இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி’, பொதுக் காப்பீட்டு நிறுவனங்களுடன் இணைந்து, ஆண்டிற்கு வெறும் ரூ.520, ரூ.555, ரூ.755 பீரீமியத்தில், ரூ.5 லட்சம், ரூ.10 லட்சம், ரூ.15 லட்சம் மதிப்புள்ள விபத்துக் காப்பீட்டு திட்டத்தை வழங்குகிறது. 18 வயது முதல் 65 வயது உள்ளவர்கள் இந்தக் காப்பீட்டுத் திட்டத்தில் சேரலாம். உடனே உங்கள் அருகிலுள்ள தபால் நிலையத்தை அனுகவும். பகிரவும்

இந்திய அஞ்சல் துறையின் கீழ் செயல்படும், ‘இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி’, பொதுக் காப்பீட்டு நிறுவனங்களுடன் இணைந்து, ஆண்டிற்கு வெறும் ரூ.520, ரூ.555, ரூ.755 பீரீமியத்தில், ரூ.5 லட்சம், ரூ.10 லட்சம், ரூ.15 லட்சம் மதிப்புள்ள விபத்துக் காப்பீட்டு திட்டத்தை வழங்குகிறது. 18 வயது முதல் 65 வயது உள்ளவர்கள் இந்தக் காப்பீட்டுத் திட்டத்தில் சேரலாம். உடனே உங்கள் அருகிலுள்ள தபால் நிலையத்தை அனுகவும். பகிரவும்

முசிறி தண்டலை பகுதியைச் சேர்ந்தவர் சிலம்பரசன் (33). இவர் வலிப்பு பிரச்சனையால் பாதிக்கப்பட்டு, அதற்கான சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று தண்டலை பகுதியில் உள்ள ஒரு குளத்தில் அவர் மீன் பிடித்து கொண்டிருந்த போது, அவருக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டுள்ளது. அப்போது தண்ணீரில் மயங்கி விழுந்த அவர், நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து முசிறி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

திருச்சி மாவட்டத்திற்கு உட்பட்ட 9 சட்டமன்ற தொகுதிகளிலும் உள்ள அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும், இன்று மற்றும் நாளை (ஜன.3, 4) வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில் வாக்காளர்கள் கலந்து கொண்டு, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், திருத்தம், நீக்கம் உள்ளிட்ட சேவைகளை பெறலாம் என மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான சரவணன் தெரிவித்துள்ளார்.

மண்ணச்சநல்லூர் பகுதியை சேர்ந்த வணிகர்கள் நல சங்க தலைவரும், பிரபல பாத்திரக்கடை உரிமையாளருமான ராஜேந்திரன் நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் கடையை மூடிவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது திருப்பைஞ்ஞீலி பேருந்து நிறுத்தம் அருகே அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் அவரை வழிமறித்து தலையின் பின் பகுதியில் வெட்டியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த அவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.

▶️ சமயபுரம் மாரியம்மன் கோயில்
▶️ உறையூர் வெக்காளி அம்மன் கோயில்
▶️ புத்தூர் குழுமாயி அம்மன் கோயில்
▶️ தென்னூர் உக்கிரகாளியம்மன் கோயில்
▶️ மலைக்கோட்டை வானப்பட்டறை மாரியம்மன் கோயில்
▶️ உறையூர் செல்லாண்டி அம்மன் கோயில்
▶️ மணப்பாறை வேப்பிலை மாரியம்மன் கோயில்
▶️ உறையூர் வாராஹி அம்மன் கோயில்
▶️ கண்ணபுரம் மாரியம்மன் கோயில்
▶️ இதை எல்லோருக்கும் SHARE பண்ணுங்க
Sorry, no posts matched your criteria.