Tiruchirappalli

News May 8, 2025

திருச்சி: தமிழக வனத்துறையில் வேலைவாய்ப்பு

image

தமிழக வனத்துறையில் காலியாக உள்ள 257 வனக் காவலர், வனக் கண்காணிப்பாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 18 முதல் 32 வயது வரை உள்ள, 10th, 12th முடித்தவர்கள் www.tnpsc.gov.in என்ற இணையதளம் மூலமாக இதற்கு விண்ணப்பிக்கவும். சம்பளமாக மாதம் ரூ.16,600 முதல் ரூ.57,900 வரை வழங்கப்படும். அரசு வேலை தேடும் உங்க நண்பர்களுக்கு இதை SHARE செய்யவும்!

News May 8, 2025

திருச்சி மாவட்ட எம்.எல்.ஏ-க்கள் செல்போன் எண்கள் (பாகம்-2)

image

▶️ மணப்பாறை – அப்துல் சமது (9500062790)
▶️ லால்குடி – ஏ. சௌந்தரபாண்டியன் (9942235277)
▶️ மண்ணச்சநல்லூர் – எஸ். கதிரவன் (9842475656)
▶️ முசிறி – என். தியாகராஜன் (9443838388)
▶️ ஸ்ரீரங்கம் – பழனியாண்டி (9443789999)
▶️ துறையூர் – எஸ்.ஸ்டாலின் குமார் (9787815511). SHARE செய்யவும்!

News May 8, 2025

திருச்சி மாவட்டத்தில் 231.4 மி.மீ மழை பதிவு

image

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக திருச்சி மாவட்டத்தில் கடந்த இரண்டு தினங்களாக பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. இதில் நேற்றைய தினம் (மே.07) துறையூர் பகுதியில் அதிகபட்சமாக 45 மி.மீ, சிறுகுடியில் 30.2 மி.மீ, கு
புள்ளம்பாடியில் 28.4 மி.மீ மழை பதிவாகியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் மொத்தமாக 231.4 மி.மீ மழை பதிவாகியுள்ளதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News May 7, 2025

திருவாரூர்: எடுத்த காரியத்தில் வெற்றியடையவில்லையா

image

பாற்கடலை கடையும்போது தடங்கல் ஏற்பட விநாயகரை வணங்காததால் தடங்கல் ஏற்பட்டதாக எண்ணிய தேவர்கள், பாற்கடலில் ஏற்பட்ட நுரையால் விநாயகரை செய்து அதனை வழிபட்டு அமிர்தம் பெற்றனர். நுரையால் செய்யப்பட்ட வெள்ளை விநாயகரை கும்பகோணம் அருகே உள்ள திருவலஞ்சுழி கபர்தீஸ்வரர் கோயிலில் வைத்து வழிபட்டனர். இவரை வழிபட்டால் நினைத்தது நடக்கும் எடுத்த காரியத்தில் நிச்சயமாக வெற்றி கிடைக்கும் என்பது நம்பிக்கை ஆகும். Share It

News May 7, 2025

சாலையை கடந்த புள்ளிமான் பலி

image

துவரங்குறிச்சி அடுத்த சொரியம்பட்டி அருகே நேற்று இரவு திருச்சியிலிருந்து மதுரை நோக்கி சென்ற கார் மீது சாலையை கடக்க முயன்ற ஆண் புள்ளிமான் எதிர்பாராத விதமாக மோதியதில் மான் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது. துவரங்குறிச்சி வனத்துறையினர் புள்ளி மானை மீட்டு விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் உணவிற்காகவும், தண்ணீருக்காகவும் சாலையை கடக்கும் வனவிலங்குகள் உயிரிழப்பதாக சமூக ஆர்வலர்கள் வேதனையடைந்துள்ளனர்.

News May 7, 2025

திருச்சி: அரசு அலுவலங்களுக்கு இனி அலைய வேண்டாம்

image

உங்கள் பகுதியில் குறைகள் அல்லது புகார் இருந்தால் அதனை அரசு அலுவலர்களிடம் மனுக்களாக அளிப்பது வழக்கம். இனி அலுவலகங்களுக்கு நேரடியாக செல்லாமல் நீங்கள் இருக்குமிடத்திலிருந்தே கோரிக்கைகளையும் புகார்களையும் மனுவாக அளிக்களாம். செல்போனில் TN CM HELPLINE என்ற APP-யை பதிவிறக்கம் செய்து அதில் உங்கள் புகார் மற்றும் கோரிக்கைகளை நேரடியாக முதல்வருக்கு தெரியப்படுத்துங்கள். உங்கள் பகுதியினருக்கும் Share செயவும்.

News May 7, 2025

திருச்சி மாவட்ட காவல்துறை அறிவிப்பு

image

போலி ஆன்லைன் வேலை வாய்ப்பு மோசடிகள் குறித்து விழிப்புடன் இருக்க திருச்சி காவல்துறை முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மேலும்
ஆன்லைன் மற்றும் சமூக ஊடகங்களில் வரும் போலி வேலை வாய்ப்பு விளம்பரங்களை நம்பி யாரிடமும் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம்.
சைபர் குற்றங்கள் தொடர்பான புகார் தெரிவிக்க அழைக்கவும் 1930
அல்லது www.cybercrime.gov.in என்ற தேசிய சைபர் குற்ற இணையதளத்தில் புகாரை பதிவு செய்ய கூறியுள்ளது.

News May 7, 2025

திருச்சி – கொச்சி விமான சேவை அறிவிப்பு

image

திருச்சி – கொச்சி விமான சேவை வழங்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். அதன்படி மே.7ஆம் தேதி முதல் ஏர்இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் திருச்சி – கொச்சி இடையே தினசரி விமான சேவையை தொடங்க உள்ளது. திருச்சியில் இருந்து மதியம் 12 மணிக்கு புறப்பட்டு மதியம் 1 மணிக்கு கொச்சி சென்றடையும். கொச்சியிலிருந்து மதியம் 1:40க்கு புறப்பட்டு மதியம் 2:40க்கு திருச்சி வந்தடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News May 7, 2025

திருச்சி: 10th பாஸ் போதும்.. அரசு வேலை ரெடி

image

மத்திய அரசின் ஜிஎஸ்டி & சுங்க வரித்துறையில் காலியாக உள்ள Seaman, Greaser, Tradesman போன்ற 14 குரூப்-சி காலிபணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு ஊதியமாக ரூ.18000 முதல் ரூ.56900 வரை வழங்கப்படும். 10 th, ஐ.டி.ஐ முடித்த 18 – 25 வயதுக்குட்பட்ட நபர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். மேலும் தகவலுக்கு www.cbic.gov.in என்ற இணையத்தை பார்க்கவும். வேலை தேடும் நபர்களுக்கு இதை SHARE செய்யவும்!

News May 7, 2025

திருச்சி சி.ஐ.டி.யு மாவட்ட செயலாளர் விபத்தில் மரணம்

image

சி.ஐ.டி.யு தொழிற்சங்கத்தின் திருச்சி புறநகர் மாவட்ட கட்டுமான சங்க மாவட்ட செயலாளராக பதவி வகித்து வந்தவர் பூமாலை (53). இவர் கடந்த ஏப்.29 தனது டூவீலரில் துறையூர்-திருச்சி சாலையில் சென்று கொண்டிருந்த போது அடையாளம் தெரியாத வாகனம் பூமாலை டூவீலர் மீது மோதியுள்ளது. இதில் படுகாயம் அடைந்த பூமாலை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து மண்ணச்சநல்லூர் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

error: Content is protected !!