India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
அம்மையப்பன் குளோபல் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட முன்னோடி வங்கியான இந்தியன் ஓவர்சீஸ் இணைந்து நடத்திய மாபெரும் கல்வி கடன் முகாமில் நடைபெற்றது. அதில் திருவாரூரை சேர்ந்த 63 மாணவ, மாணவியர்களுக்கு ரூ.3 கோடியே 13 லட்சம் மதிப்பில் கல்வி கடனுக்கான வங்கி வரைவோலையை மாவட்ட ஆட்சித்தலைவர் தி.சாருஸ்ரீ வழங்கினார்கள்.
திருவாரூர் அருகே நடைபெற்ற கல்வி கடன் வழங்கும் நிகழ்ச்சியில் ஆட்சியர் பேசியதாவது: தமிழக அரசு மாணவர்களின் கல்விக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன்படி, அனைத்து மாவட்டங்களிலும் முன்னோடி வங்கிகள் மூலம் கல்லூரி பயிலும் மாணவ, மாணவிகளுக்கு கல்வி கடன் பெறுவது குறித்து விழிப்புணர்வு முகாம் நடத்தவும், விண்ணப்பங்களை பரிசீலித்து கல்வி கடன் வழங்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார் அவர்.
திருவாரூர் மாவட்டம், அம்மையப்பன் பகுதியில் அமைந்துள்ள குளோபல் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் திருவாரூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் முன்னோடி வங்கி இணைந்து நடத்தும் மாணவர்களுக்கான கல்வி கடன் வழங்கும் முகாம் மாவட்ட ஆட்சியர் சாரூஸ்ரீ தலைமையில் இன்று நடைபெற்றது. இதில் மாணவர்கள், வங்கி மேலாளர்கள் மற்றும் வங்கி அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
திருவாரூர் மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி திருவிழாவை முன்னிட்டு ஊர்வல விவரங்கள் மாவட்ட காவல்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதன்படி, கூத்தாநல்லூரில் வரும் 7 மற்றும் 8 ஆம் தேதிகளிலும், திருவாரூரில் 9 ஆம் தேதியன்றும், திருத்துறைப்பூண்டியில் 10 ஆம் தேதியன்றும், முத்துப்பேட்டையில் 14 ஆம் தேதியன்றும், மன்னார்குடியில் 15 ஆம் தேதியன்றும் நடைபெற உள்ளது.
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் செப்.14ல் விநாயகர் சிலை ஊர்வலம் நடைபெறுவதை முன்னிட்டு 11 டாஸ்மாக் கடைகளை மூட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும் கூத்தாநல்லூர், மன்னார்குடி, திருத்துறைப்பூண்டியில் விநாயகர் சிலை ஊர்வலம் நடக்கும் நாளில் டாஸ்மாக் கடைகளை திருவாரூர் மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ மூட ஆணை பிறப்பித்துள்ளார்.
தமிழ்நாட்டைச் சேர்ந்த முன்னாள் விளையாட்டு வீரர்களுக்கு மாத ஓய்வூதிய திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த சர்வதேசம், ஒன்றியம் அல்லது ஒலிம்பிக் அளவில் விளையாடி போட்டிகளில் வெற்றி பெற்றவர்கள் ஓய்வூதியம் பெற விண்ணப்பிக்கலாம். இதற்கு 58 வயது பூர்த்தி அடைந்தவராக இருத்தல் வேண்டும். SHARE NOW!
திருவாரூர் மாவட்ட விளையாட்டு வீரர்களுக்கு ரூ 6,000 ஓய்வூதியம் தமிழ்நாட்டைச் சேர்ந்த முன்னாள் விளையாட்டு வீரர்களுக்கு மாத ஓய்வூதிய திட்டத்தின் கீழ் வழங்கப்படுகிறது. தகுதி சர்வதேச தேசிய போட்டிகளில் முதல் மூன்று இடங்களில் வெற்றி பெற்றவர்கள் ஒன்றிய அளவில் ஒலிம்பிக் சங்கத்தால் நடத்தப்பட்ட போட்டியில் வெற்றி பெற்றவர்கள், வயது 58 வயது பூர்த்தி அடைந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
விநாயகர் சதுர்த்தி விழா மன்னார்குடி பகுதி கோவில்களில் வருகின்ற 7ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதற்காக சிலை பாதுகாப்பு மையங்களில் வைக்கப்பட்டிருக்கும் தங்கள் கோவிலின் விநாயகர் சிலைகளை நிர்வாகிகள் பெற்றுச் சென்றனர். ராஜகோபாலசாமி கோவில் பாதுகாப்பு மையத்தில் வைக்கப்பட்டிருந்த மும்மூர்த்தி விநாயகர் கோவில் உற்சவர் விநாயகரை நிர்வாகி பெற்று செல்வதை படத்தில் காணலாம்.
முத்துப்பேட்டை பகுதியில் விநாயகர் ஊர்வலம் நடத்துவது தொடர்பான பாதுகாப்பு முன்னேற்பாடுகள் குறித்து தஞ்சை சரக காவல்துறை துணை தலைவர் ஜியா உல் ஹக், இன்று விநாயகர் ஊர்வலம் செல்லக்கூடிய பகுதிகளை நேரில் ஆய்வு செய்தார். அப்போது, பாதுகாப்பு முன்னேற்பாடுகள் குறித்த திட்டத்தை பார்வையிட்டார்கள். உடன் திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார், இருந்தனர்.
திருவாரூர் மாவட்டத்தில் 700க்கும் மேற்பட்ட நியாய விலை கடைகள் இயங்கி வருகின்றன. இந்நிலையில், இன்று தமிழ்நாடு அரசு நியாய விலை கடை பணியாளர் சங்கம் சார்பில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, மாவட்டத்தில் 100க்கும் மேற்பட்ட நியாய விலை கடைகளை அடைத்து ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன் வகையில், முத்துப்பேட்டை பகுதியில் 10க்கும் மேற்பட்ட கடைகள் மூடப்பட்டிருந்தன.
Sorry, no posts matched your criteria.