India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருவாரூர், மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி நகர் பகுதியில் இன்று (செப்.14) தேதி மட்டன் தனிக்கறி ஒரு கிலோ ரூ.750 முதல் ரூ.900 வரையிலும், எழும்பு கறி ரூ.500 முதல் ரூ.700 வரையிலும் விற்பனை செய்யப்படுகிறது. குறிப்பாக முத்துப்பேட்டையில் மட்டன் தனி கறி ரூ.800 முதல் ரூ.1,000 வரை விற்கப்படுகிறது. எறும்பு கறி ரூ.500 முதல் 700 வரை விற்பனை செய்யப்படுகிறது.
நன்னிலம் அருகே ஆலங்குடியை சேர்ந்தவர் மணிகண்டன் (30). கூலி தொழி–லாளி. மணிகண்டன் மகளிர் குழுவில் மனைவியின் பெயரில் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. கடனை திருப்பி செலுத்த முடியாததால் மணிகண்டன் மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் திடீரென வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து நன்னிலம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
முத்துப்பேட்டையில் இன்று மாலை நடைபெறும் விநாயகர் ஊர்வலத்தில் அசம்பாவிதங்கள் ஏதும் முன்னிட்டு திருச்சி ஐ.ஜி கார்த்திகேயன் தலைமையில் திருச்சி டி.ஐ.ஜி, தஞ்சை டி.ஐ.ஜி, திருவாரூர், தஞ்சை, நாகை, திருச்சி, புதுக்கோட்டை, பெரம்பலூர், மயிலாடுதுறை, கடலூர் உள்ளிட்ட 11 மாவட்டங்களை சேர்ந்த எஸ்பி-கள், 12 ஏடிஎஸ்பி, 41 டிஎஸ்பிகள், உட்பட 3,000-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளனர்.
திருவாரூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான நலத்திட்ட உதவி குறித்த கோரிக்கை மனுக்கள் பெற்று தீர்வு காணும் வகையில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறை தீர்க்கும் கூட்டம் வரும் 20.09.2024, காலை 10.00 மணிக்கு திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சியர் சாரு ஸ்ரீ தெரிவித்துள்ளார்.
சென்னை டூ திருத்துறைப்பூண்டி வண்டி எண் 06103/06104 தாம்பரம் இருந்து ராமநாதபுரம் தற்பொழுது வாரம் ஒரு முறை இயக்கப்படும் ரயில் வரும் 19/09/2024 வாரம் மும்முறை இயக்கப்பட]உள்ளது. அதன்படி திங்கள், வியாழன் மற்றும் சனி தாம்பரத்திலிருந்து மறுமார்க்கமாக ராமநாதபுரத்திலிருந்து செவ்வாய், வெள்ளி மற்றும் ஞாயிறு வழியாக விழுப்புரம், கடலூர், சிதம்பரம், மயிலாடுதுறை திருத்துறைப்பூண்டி வரை இயக்கப்படுகிறது.
நான் முதல்வன் உயர்கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி திருவாரூர் மாவட்டத்தில் வரும் 16-ஆம் தேதி தொடங்குகிறது என மாவட்ட ஆட்சியர் தி.சாருஸ்ரீ தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் 16.09.2024 மற்றும் 26.09.2024 ஆகிய நாட்களில் திருவாரூர் – வேலுடையார் அரசு உதவிப்பெறும் பள்ளி வளாகத்தில் நடைபெறுகிறது. எதிர்வரும் 19.09.2024 மற்றும் 27.09.2024 ஆகிய நாட்களில் மன்னார்குடி ஃபின்லே மேல்நிலைப் பள்ளி வளாகத்திலும் நடைபெறவுள்ளது.
நாகை மாவட்டம் அகஸ்தியன்பள்ளியில் இருந்து வேதாரண்யம், திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை, தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம், பட்டுக்கோட்டை, பேராவூரணி மற்றும் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி, காரைக்குடி, ராமநாதபுரம் வழியாக ராமேஸ்வரத்திற்கு தினசரி ரயில் இயக்க வேண்டும் என்று ரயில் உபயோகிப்பாளர்கள் சங்கம் சார்பில் தென்னக ரயில்வே பொது மேலாளருக்கு மனு அனுப்பி கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
டி.என்.பி.எஸ்.சி நடத்தும் குருப்-2 தேர்வு நாளை (செப்.14) தமிழகம் முழுவதும் நடைபெற உள்ளது. இதில் திருவாரூர் மாவட்டத்தில் இருந்து மட்டும் 11,994 தேர்வர்கள் தேர்வு எழுத உள்ளனர். 42 முதன்மை கண்காணிப்பாளர்கள், 13 நடமாடும் கண்காணிப்பு குழுக்கள், 3 பறக்கும் படைகள், 42 ஆய்வு அலுவலர்கள், 45 வீடியோ ஒளிப்பதிவாளர்கள் தேர்வு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக கலெக்டர் சாரு ஸ்ரீ தெரிவித்துள்ளார்.
டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தோ்வு சனிக்கிழமை (செப்.14) நடைபெறவுள்ள நிலையில், திருவாரூா் மாவட்டத்தில் மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு, ஆட்சியா் சாருஸ்ரீ தலைமை வகித்தார். திருவாரூரில் உள்ள 28 தோ்வு மையங்களில் 42 தோ்வுக் கூடங்களில் நாளை காலை 9.30 மணி முதல் பகல் 12.30 மணி வரை நடைபெறவுள்ளது. 11,994 போ் தோ்வெழுத உள்ளனா் என்று தெரிவித்தார்.
திருத்துறைப்பூண்டி புதிய பேருந்து நிலையத்தில் ஸ்வீட் கடை மோகன் இவருடைய மகன் அருள் பிரகாஷ் கடந்த மாதம் இட தகராறில் அடித்து படுகொலை செய்யப்பட்ட நிலையில், காவல்துறை சார்பில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். விசாரணையில் மூன்று நபர்கள் கைது செய்யப்பட்ட நிலையில் நான்காவது நபராக இன்று காலை ராமலிங்கம் என்பவர் கைது செய்யப்பட்டு திருத்துறைப்பூண்டி காவல் நிலையத்தில் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Sorry, no posts matched your criteria.