Thiruvarur

News August 23, 2025

திருவாரூர் மாவட்டதின் முக்கிய எண்கள்!

image

▶️மாவட்ட கட்டுப்பாட்டு அறை-1077
▶️முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் -1800 425 3993
▶️பேரிடர் கால உதவி -1077
▶️குழந்தைகள் பாதுகாப்பு – 1098
▶️விபத்து உதவி எண்-108
▶️காவல்துறை கட்டுப்பாட்டு அறை -100
▶️பாலியல் துன்புறுத்தல் தடுப்பு உதவி – 1091
▶️விபத்து அவசர வாகன உதவி – 102
இந்த எண்களை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!

News August 23, 2025

மாவட்ட ஆட்சியர் அலுவலக முற்றுகை ஒத்திவைப்பு

image

திருவாரூர் NH67 தேசிய நெடுஞ்சாலை சரி செய்யாமல் கிடப்பில் போடப்பட்டதை புணரமைக்ககோரி, இன்று (ஆக.23) ஆட்சியர் அலுவலகம் முற்றுகைப் போராட்டம் தமுமுக & மமக கட்சி அறிவித்த நிலையில், நேற்று (ஆக.22) அரசுத் தரப்பிலிருந்து அமைதிப் பேச்சுவார்த்தை மாலை 6 மணிக்கு கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. கோட்டாட்சியர் எழுத்துப்பூர்வமாக உறுதியளித்ததன் அடிப்படையில் ஆட்சியர் அலுவலகம் முற்றுகை ஒத்திவைக்கப்பட்டது.

News August 23, 2025

திருவாரூர்: ITI போதும் அரசு வேலை!

image

மத்திய அரசின் பாரத் ஹெவி எலெக்ட்ரிக்கல் நிறுவனத்தில் (BHEL) காலியாக உள்ள எலெக்ட்ரிஷியன், பிட்டர், வெல்டர் உள்ளிட்ட 515 பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு ஐடிஐ படித்த 27 வயதுக்குட்பட்ட (SC/ST- 32, OBC-30) நபர்கள் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.29,500 முதல் ரூ.65,000 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <>இங்கே கிளிக் செய்து<<>>, விண்ணப்பிக்கலாம். இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!

News August 23, 2025

திருவாரூர்: சோழ சாம்ராஜ்யத்தின் மணிமகுடம்!

image

தென்னிந்தியாவின் நெற்களஞ்சியம் என அனைவராலும் அறியப்படும் காவிரி ஆற்றின் டெல்டா பகுதியில் அமைந்திருக்கும் திருவாரூர் மாவட்டம், சோழ சாம்ராஜ்யத்தின் 5 பாரம்பரிய தலைநகரங்களில் ஒன்றாக இருந்துள்ளது. முதலாம் குலோத்துங்க சோழன் காலத்தில் திருவாரூர் தலைநகரமாகவும், தியாகராஜர் கோயிலின் இருப்பிடமாக இருப்பதால், சைவ வளர்ச்சி மையமாகவும் திகழ்ந்துள்ளது. இதனால் திருவாரூர் சோழ சாம்ராஜ்யத்தின் மணிமகுடமாக விளங்கியது.

News August 23, 2025

மாவட்ட அளவில் எய்ட்ஸ் வினாடி வினா போட்டி

image

திருவாரூர் மாவட்ட பள்ளி கல்வி துறை மற்றும் எய்ட்ஸ் மாவட்ட கட்டுப்பாட்டு சங்கம் இணைந்து நடத்திய பள்ளி மாணவர்களுக்கான வினாடி வினா போட்டிகள் விளமல் அரசு உயர்நிலைப் பள்ளியில் இன்று (ஆகஸ்ட் 22) நடைபெற்றது. 26 பள்ளி ரெட்ரிப்பன் கிளப் மாணவர்கள் கலந்து கொண்டதில் திருவாரூர் அரசு உதவி பெறும் ஜிஆர்எம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் சாரா அக்ஷயா அணி முதலிடம் பெற்று மாநில போட்டிக்கு தகுதி பெற்றனர்.

News August 23, 2025

திருவாரூர் இரவு ரோந்து பணி காவலர்கள் விவரம்

image

திருவாரூர் மாவட்டத்தில் (22.08.2025) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவல் அதிகாரிகளின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. இரவு நேர குற்றங்களை தடுக்க காவல் துறையின் உடனடி உதவிக்கு இரவு ரோந்து காவல் அதிகாரிகளை அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யவும். மற்றவர்களுக்கும் இதனை ஷேர் செய்யுங்கள்!

News August 22, 2025

திருவாரூர்: அறுபடை வீடுகளுக்கு செல்ல அரிய வாய்ப்பு!

image

திருவாரூர் மக்களே, முருகப் பெருமானின் அறுபடை வீடுகளான திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி, சுவாமிமலை, திருத்தணி, பழமுதிர்சோலை ஆகிய ஆறு கோவில்களுக்கும் அறநிலையத் துறை சார்பில், பக்தர்கள் இலவசமாக ஆன்மீக சுற்றுலா அழைத்து செல்லப்பட உள்ளனர். எவ்வித செலவும் இல்லாமல் ஆறுபடை வீடுகளில் உள்ள முருகனை காண விரும்புவோர் <>இங்கே <<>>க்ளிக் செய்து விண்ணப்பிக்கலாம். மேலும் தகவலுக்கு 1800 425 1757 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். SHARE பண்ணுங்க!

News August 22, 2025

திருக்குறள் பயிற்சி வகுப்புகள் நாளை ஆரம்பம்

image

திருவாரூர் ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் மாவட்டத்தில் பள்ளி மாணவர்களுக்கு இலவச திருக்குறள் பயிற்சி வகுப்புகள் நாளை (ஆகஸ்ட் 23) காலை 10 மணி முதல் தொடங்குவதாக தெரிவிக்கப்பட்டது. திருவாரூர் கஸ்தூரிபா பள்ளி, மன்னார்குடி தரணிபள்ளி, திருத்துறைப்பூண்டி தெரசா பள்ளி ஆகிய 3 மையங்களில் தொடர்ந்து 30 சனிக்கிழமையில் வகுப்பு நடைபெற்று நிறைவில் சான்றிதழ் வழங்கப்படுமென கூறப்பட்டுள்ளது.

News August 22, 2025

திருவாரூர்: அரசு வங்கியில் வேலை; மாதம் ரூ.48,000 சம்பளம்

image

மத்திய பொதுத்துறை நிறுவனமான பஞ்சாப் & சிந்து வங்கியில், தமிழத்தில் காலியாக உள்ள 85 ‘Local Bank Officer’ பணியிடங்கள் நிரப்பபட உள்ளன. ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் டிகிரி முடித்தவர்கள் இங்கே கிளிக் செய்து, வரும் செப்.4-ம் தேதிக்குள் இதற்கு விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.48,480 – 85,920/- வரை வழங்கப்படும். மத்திய அரசு வேலை தேடும் நபர்களுக்கு இந்த தகவலை SHARE பண்ணுங்க!

News August 22, 2025

திருவாரூர்: இனி ஈஸியா சிலிண்டர் புக் பண்ணலாம்!

image

கியாஸ் சிலிண்டரை புக்கிங் செய்ய போனில் இருந்து ஒரு SMS அனுப்பினாலே போதும். இண்டேன் சிலிண்டர் பயன்படுத்துவோர் ‘REFILL’ என டைப் செய்து 77189 55555 என்ற எண்ணுக்கு அனுப்ப வேண்டும். இதுவே பாரத் சிலிண்டர் பயன்படுத்துவோர் 18002 24344 என்ற எண்ணுக்கும், எச்.பி. சிலிண்டர் பயன்படுத்துவோர் 1906 என்ற எண்ணுக்கு மெசேஜ் அனுப்பி அலைச்சல் இல்லாமல் கேஸ் சிலிண்டரை புக்கிங் செய்யலாம். ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!