India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருவாரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் முகாம் திருவாரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் சாருஸ்ரீ தலைமையில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில், பொதுமக்கள் பட்டா மாறுதல், புதிய குடும்ப அட்டை, ஆக்கிரமிப்பு அகற்றுதல், கல்விக்கடன், வீட்டுமனைப்பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்த 187 மனுக்களை ஆட்சியரிடம் அளித்தனர்.
திருத்துறைப்பூண்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மேட்டுப்பாளையம் அம்மன் நகர் பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் மனைவி குணசுந்தரி என்பவர் 15. 1/2 பவுன் நகையை அடகு வைத்துவிட்டு காணாமல் போனதாக பொய் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்ட போது குணசுந்தரி பொய் புகார் அளித்துள்ளதை கண்டறிந்த போலீசார் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்து சிறையில் அடைத்தனர்.
திருவாரூர் ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தூய்மை பாரதம் திட்டத்தின் கீழ் ஊரக வளர்ச்சி முகமையில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தற்காலிக பணியிடத்திற்கு விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது. இதற்கு புகைப்படத்துடன் கூடிய தன்விவரகுறிப்பினை 15ஆம் தேதிக்குள் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கவும். 30ஆம் தேதி நடைபெறும் எழுத்து தேர்வில் பங்கேற்க வேண்டும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
திருத்துறைப்பூண்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மேட்டுப்பாளையம் அம்மன் நகர் பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் மனைவி குணசுந்தரி என்பவர் 15 1/2 பவுன் நகையை அடகு வைத்துவிட்டு காணாமல் போனதாக பொய் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்ட போது குணசுந்தரி பொய் புகார் அளித்துள்ளதை கண்டறிந்த போலீசார் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்து சிறையில் அடைத்தனர்.
திருவாரூர் மாவட்ட எஸ்.பி. ஜெயக்குமார் வார இறுதி நாட்களில் (2/11/24 & 3/11/24) காவல்துறையினரை ஒன்று திரட்டி சட்ட விரோத செயல்களில் ஈடுபடுவோரை கண்டறிய அதிரடி வேட்டை நடத்தியதில் 74 பேர் கைது செய்யப்பட்டனர். கஞ்சா விற்பனையில் 9 பேரும், கள்ளத்தனமாக மது விற்பனையில் 27 பேரும், பணம் வைத்து சீட்டு விளையாடியதில் 38 பேரும் கைதாகி உள்ளதாக தெரிவித்துள்ளார்.
திருவாரூர் மாவட்டத்தில் தொடர்ந்து சட்ட விரோத செயல்களான கஞ்சா, சட்டவிரோத மது மற்றும் தடை செய்யப்பட்ட குட்கா, லாட்டரி சீட்டு விற்பனையில் ஈடுபட்ட 62 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் மொத்தமாக 650 கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது. மேலும் மது அருந்திவிட்டு வாகனம் இயக்கியதாக கூறி 53 பேர் மீது வழக்கு பதியப்பட்டு அவர்களது வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.
கூத்தாநல்லூர் காவல்நிலையத்திற்குட்பட்ட பகுதியில் 18 வயதிற்குட்பட்ட பள்ளிக்கு செல்லும் சிறுவர்களை இரு சக்கர வாகனம் ஓட்ட அனுமதித்ததாக நடராஜன் மகன் கார்த்தி என்பவர் மீது வழக்கு பதிவு செய்து இருசக்கர வாகனம் பறிமுதல் செய்து, திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் நடவடிக்கை எடுத்துள்ளார். மேலும் சிறுவர்களை இரு சக்கர வாகனம் ஓட்ட அனுமதிக்க கூடாது என எச்சரித்துள்ளார்.
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், முத்துப்பேட்டை தர்கா பெரிய கந்தூரி சந்தனக்கூடு திருவிழா நடைபெறுவதை முன்னிட்டு வருகின்ற 13/11/2024 (புதன்கிழமை) அன்று திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது. இதனை ஈடுசெய்யும் வகையில் வரும் டிசம்பர் 7-ஆம் தேதி பணி நாளாக அறிவித்து மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டையில் பிரசித்தி பெற்ற சேக்தாவூது ஆண்டவர் தர்கா உள்ளது. இந்த தர்காவில் ஆண்டு தோறும் பெரிய கந்தூரி விழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு தர்காவின் 723-ஆவது பெரிய கந்தூரி விழா நாளை இரவு (நவ.3) கொடி ஏற்றத்துடன் தொடங்க உள்ளது. அதனைத் தொடரந்து நவம்பர் 12-ஆம் தேதி சந்தனக்கூடும், 13-ம் தேதி கந்தூரி விழாவும் நடைபெற உள்ளது. SHARE NOW!
கைப்பேசி மூலம் பம்புசெட்டுகளை இயக்கும் கருவிக்கும், புதிதாக மின் மோட்டாா் வாங்குவதற்கும் மானியம் பெற விண்ணப்பிக்கலாம் என திருவாரூா் மாவட்ட ஆட்சியா் தி. சாருஸ்ரீ தெரிவித்துள்னர். இத்திட்டத்தின்கீழ் பயன்பெற விரும்பும் திருவாரூா் மாவட்ட விவசாயிகள், வேளாண்மைப் பொறியில் துறை திருவாரூா் மற்றும் மன்னாா்குடி உபகோட்ட அலுவலகங்களை நேரில் தொடா்பு கொண்டு விண்ணப்பங்கள் கொடுத்து பயன் பெறலாம்.
Sorry, no posts matched your criteria.