Thiruvarur

News January 11, 2025

வேலை வாய்ப்பற்றவர்களுக்கு உதவித்தொகை: கலெக்டர்

image

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள வேலைவாய்ப்பற்ற 10,12-ஆம் வகுப்பு மற்றும் பட்டப்படிப்பு தேர்ச்சிப் பெற்றவர்களுக்கு மாதாந்திர உதவித்தொகை வழங்கப்படவுள்ளது. மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நேரிலோ அல்லது tnvelaivaaippu.gov.in என்ற இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம். கடைசி நாள் பிப்.28 ஆகும். கூடுதல் விவரங்களுக்கு 04366-224226 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என திருவாரூர் கலெக்டர் சாருஸ்ரீ தெரிவித்துள்ளார். 

News January 11, 2025

பள்ளி மாணவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அழைப்பு

image

திருவாரூர் மாவட்டத்தில் 3-வது மாபெரும் புத்தகத்திருவிழா வரும்  ஜன.24 முதல் பிப். 02 வரை திருவாரூர் புதிய பேருந்து நிலையம் அருகில் S.S நகரில் நடைபெறவுள்ளது. இதில் ஆயிரக்கணக்கான தலைப்புகளில் லட்சக்கணக்கான புத்தகங்கள் இடம்பெறவுள்ளன. மேலும் அறிவுக்கு விருந்தளிக்கும் கலை நிகழ்வுகளும் நடைபெற உள்ளதால் இதில் பள்ளி மாணவர்கள் திரளாக கலந்து கொண்டு பயன்பெற வேண்டும் என கலெக்டர் சாருஸ்ரீ அழைப்பு விடுத்துள்ளார்.

News January 11, 2025

முத்துப்பேட்டை: வேன் மோதி விவசாயி

image

முத்துப்பேட்டை அடுத்த தோலி கிராமத்தை சேர்ந்தவர் செல்லக்கண்ணு (60). விவசாயியான இவர் நேற்று (ஜன.10) பொருட்கள் வாங்க உதயமார்த்தாண்டபுரம் கடைத்தெருவிற்கு வந்துவிட்டு கிழக்கு கடற்கரை சாலை வழியாக நடந்து ஊர் திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது பட்டுக்கோட்டையிலிருந்து வேளாங்கண்ணி நோக்கி சென்ற டூரிஸ்ட் வேன் ஒன்று எதிர்பாராதவிதமாக மோதியதில் செல்லக்கண்ணு சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். 

News January 10, 2025

புகையான் நோயால் 1000 ஏக்கர் சம்பா சாகுபடி பாதிப்பு

image

முத்துப்பேட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நடப்பாண்டு 30,000 ஏக்கரில் சம்பா சாகுபடி செய்யப்பட்டிருந்தது. அறுவடைக்கு இன்னும் 20 நாட்களே உள்ள நிலையில் தற்போது புகையான் நோயால் 1000 ஏக்கருக்கும் மேல் பயிர் பாதிக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். இதற்கு உரிய இழப்பீடு வழங்க விவசாயிகள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். ஷேர் செய்யவும்

News January 10, 2025

திருவாரூரை அதிர வைத்த படுகொலை பாகம் – 4

image

பூண்டி கலைச்செல்வன் ஆதரவில் டெல்டா பகுதிகளில் ஆதிக்கம் செலுத்த தொடங்கிய முட்டை ரவி, ஒரு வழக்கின் காரணமாக தமிழக காவல் துறையால் என்கவுண்டர் செய்யப்படுகிறார். அதன் பிறகு டெல்டா பகுதிகளில் மணல்மேடு சங்கர் அசுர வளர்ச்சி அடைந்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே சிறிய கசப்புணர்வு இருந்துள்ளது. இந்த சமயத்தில் தான் மணல்மேடு சங்கர் கைது செய்யப்பட்டு மதுரை சிறையில் அடைக்கப்பட்டார். தொடரும்…

News January 10, 2025

திருவாரூர் மாவட்ட டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை

image

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,  ஜனவரி மாதம் 15 ஆம் தேதி மாட்டுப் பொங்கல் மற்றும் ஜனவரி 26 ஆம் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு, தமிழக அரசின் உத்தரவு படி திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அரசு மதுபான கடைகள் (டாஸ்மாக்) மற்றும் தனியார் மது விற்பனை கூடங்கள் ஜன.15 & 26 ஆகிய தினங்களில் செயல்படாது என மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ தெரிவித்துள்ளார். SHARE IT

News January 10, 2025

திருவாரூர்: பாலியல் குற்றவாளிக்கு 40 ஆண்டுகள் சிறை தண்டனை

image

கோட்டூர் தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் ஜெகபர் சாதிக். இவர் கடந்த 2020-ஆம் ஆண்டு மார்ச் மாதம் சிறுமி ஒருவரை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதையடுத்து இவர் மீது போக்ஸோ வழக்கு பதியப்பட்டு நடைபெற்று வந்த விசாரணையில் குற்றம் நிரூபிக்கப்பட்டதால் ஜெகபருக்கு 40 ஆண்டுகள் சிறை, ரூ.4000 அபராதம் விதித்து திருவாரூர் மகிளா நீதிமன்றம் நேற்று அதிரடி தீர்ப்பு வழங்கியது.

News January 10, 2025

அரசு பேருந்து ஓட்டுனர் மீது தாக்குதல்: 3 பேர் மீது வழக்கு பதிவு

image

பெருகவாழ்ந்தான் பகுதியைச் சேர்ந்த பூமிநாதன். இவர் அரசு பேருந்து ஓட்டுனராக பணியாற்றி வருகிறார். இவர் நேற்று பேருந்தை இயக்கிக் கொண்டு மண்ணுக்கு முண்டான் கிராமத்திற்கு சென்ற பொழுது, சசிகுமார், அருண், மனோஜ் ஆகிய மூன்று பேரும் சேர்ந்து ஓட்டுநரை அடித்து காயப்படுத்தி அரசு பணி செய்ய விடாமல் தடுத்துள்ளார்கள். இதுகுறித்த புகாரின் பேரில் மூன்று பேரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

News January 9, 2025

திருவாரூரை அதிர வைத்த படுகொலை பாகம் – 3

image

திருவாரூர் மாவட்டத்தை அரசியல், ஆள் பலம் என தன் கையில் வைத்திருந்ததால், இதர கட்சிகளுக்கு கலைச்செல்வன் மீது அதிருப்தி இருந்துள்ளது. இச்சமயத்தில் தான் முட்டை ரவி கலைச்செல்வன் ஆதரவுடன் டெல்டா பகுதிகளில் ஆதிக்கம் செலுத்த தொடங்கியுள்ளார். இதுதான் மணல்மேடு சங்கருக்கும் கலைச்செல்வனுக்கும் பகை ஏற்பட காரணம் என்றும், காலப்போக்கில் இவர்கள் இருவருக்கும் நேரடி மோதல் நடைபெற்று உள்ளதாக கூறப்படுகிறது. தொடரும்

News January 9, 2025

மேல்நிலை வகுப்பு செய்முறைத் தேர்வு தேதி அறிவிப்பு

image

திருவாரூர் மாவட்ட அனைத்து வகை மேல்நிலைப் பள்ளிகளிலும் 11 மற்றும் 12 ஆம் வகுப்புக்கான ஆண்டு பொது தேர்வு 2025 க்கான செய்முறை தேர்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி செய்முறை தேர்வுகள் 12 ஆம் வகுப்பிற்கு 07.02.2025 தொடங்கி 14.02.2025 முடிவடையும் எனவும், 11 ஆம் வகுப்பிற்கு 15.02.2025 தொடங்கி 21.02.2025 முடிவடையும் எனவும் மாவட்ட பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.

error: Content is protected !!