Thiruvarur

News November 20, 2024

திருவாரூர் சுயசான்று அடிப்படையில் கட்டிட அனுமதி

image

திருவாரூர் மாவட்டத்தின் 430 ஊராட்சிகளிலும் மனை பிரிவுகளுக்கான அனுமதி மற்றும் கட்டிட அனுமதி எளிதாக வழங்க, ஒற்றைச் சாளரை முறையில் விண்ணப்பங்கள் இணைய வழியில் பெறப்பட்டு உடன் அனுமதி வழங்கப்படும். இந்த நடைமுறையில் குடியிருப்பு கட்டிடங்களுக்கான அனுமதி சான்றிதழின் அடிப்படையில் வழங்கப்படவுள்ளது. விபரங்களுக்கு www.onlineppa.tn.gov.in தெரிந்துகொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ தெரிவித்துள்ளார்.

News November 20, 2024

திருவாரூரில் தனியார் வேலை வாய்ப்பு முகாம்

image

திருவாரூர் வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நவம்பர் 22ஆம் தேதி நடைபெறும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில், தனியார் தொழில் நிறுவனங்கள் கலந்து கொண்டு 500க்கும் மேற்பட்ட தகுதியான நபர்களை வேலைக்கு தேர்ந்தெடுக்க உள்ளனர். இதில் கலந்து கொள்ள 18 வயது நிரம்பியவர்கள் தங்களின் ஆதார் அட்டை மற்றும் கல்விச்சான்றுடன் நேரில் செல்ல ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.

News November 20, 2024

கலைத்திருவிழா போட்டிகள் திட்டமிட்டபடி நடைபெறும்

image

திருவாரூர் மாவட்டத்திற்கு கனமழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டிருந்தாலும் திட்டமிட்டபடி இன்று மாவட்ட அளவிலான கலைத்திருவிழா போட்டிகள் நடைபெறும் எனவும், போட்டிகள் மழையின் காரணமாக சற்று தாமதமாக 11 மணியளவில் துவங்கும் எனவும், பங்கேற்க கூடிய மாணவர்களை பொறுப்பாசிரியர்கள்  பாதுகாப்பாக அழைத்து வர வேண்டும் எனவும் திருவாரூர் முதன்மை கல்வி அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News November 20, 2024

விவசாயிக்கு இழப்பீடு பதிவு வழங்க நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு

image

மன்னார்குடியை சேர்ந்த விவசாயி ரமேஷ், நீடாமங்கலம் இந்தியன் வங்கியில் கடன் பெற்று டிராக்டர் வாங்கியுள்ளார் கடனை முழுமையாக செலுத்திய பின்பும்,ஆர்.சி புத்தகத்தை வழங்காத வங்கி மீது மன்னார்குடி நுகர்வோர் சங்கத்தின் வேல்முருகன் திருவாரூர் நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்த நிலையில், இழப்பீடாக ரூ.1.10 லட்சம் மற்றும் ஆர்.சி புத்தகத்தை வழங்க நுகர்வோர் நீதிமன்றம் வங்கிக்கு நேற்று அதிரடி உத்தரவிட்டது

News November 20, 2024

திருவாரூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை

image

திருவாரூர் மாவட்டத்தில் நேற்று நள்ளிரவு முதல் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் இன்று (20.11.2024) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து திருவாரூர் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். தூத்துக்குடி, தென்காசி, நெல்லையை தொடர்ந்து திருவாரூரில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யவும்

News November 19, 2024

திருவாரூர் மாவட்டத்துக்கு மழை எச்சரிக்கை

image

தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள மேலடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழக டெல்டா மாவட்டங்களில் கடந்த ஒரு வாரமாக தொடர் கனமழை மழை பெய்து வருகிறது. இந்நிலையில் திருவாரூர் மாவட்டத்தின் ஓரிரு இடங்களில் இன்று (நவ.19) இரவு 7 மணி வரை இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. உங்கள் பகுதியில் மழை பெய்கிறதா? கமெண்டில் தெரிவிக்கவும். SHARE NOW!

News November 19, 2024

மன்னார்குடி அருகே நூதன மோசடி: ஒருவர் கைது

image

மன்னார்குடியைச் சேர்ந்த மணிமாறன் என்பவர் புகார் அளித்ததன் அடிப்படையில் பெண்களைப் போல் பேசி பல்வேறு நபர்களிடம் ஆன்லைன் வழியே ரூ.1.60 லட்சம் பணத்தை பெற்று ஏமாற்றிய அரியலூர் மாவட்டம், பெரிய கிருஷ்ணபுரம் பகுதியைச் சேர்ந்த பிரசாந்த் குமார் என்பவரை திருவாரூர் சைபர் கிரைம் காவல் துறையினர் பிரசாந்த் குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர். 

News November 18, 2024

திருவாரூர் மாணவர்களுக்கு ஆட்சியர் அழைப்பு

image

திருக்குறள் முற்றோதல் போட்டியில் பங்கேற்க 20 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு ஆட்சியர் சாரு ஸ்ரீ தெரிவித்துள்ளார். பள்ளிகளில் படிக்கும் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் 1330 குறள்களையும் ஒப்புவிக்கும் திறன் பெற்றவர்களாக இருக்க வேண்டும். விண்ணப்ப படிவத்தினை தமிழ் வளர்ச்சித் துறையின் இணைய தளத்தில் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து 20 ஆம் தேதிக்குள் ஆட்சியர் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும்.

News November 18, 2024

பயிர் காப்பீடு செய்ய கால அவகாசம் நீட்டிப்பு

image

திருவாரூர் மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து விவசாயிகளும் தங்கள் விளைநிலங்களுக்கு மத்திய அரசின் பயிர் காப்பீடு செய்ய நவம்பர் 15 கடைசி நாளாக அறிவிக்கப்பட்ட நிலையில், மழையின் காரணமாக விவசாயிகளின் நலன் நவம்பர் 30-ஆம் தேதி வரை பயிர் காப்பீடு செய்ய கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

News November 18, 2024

திருவாரூர்: விண்ணப்பிக்க 20 ஆம் தேதி கடைசி நாள்

image

திருவாரூா் மாவட்டத்தைச் சோ்ந்தவா்கள், அம்பேத்கா் விருது பெற நவ.20 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என ஆட்சியா் சாருஸ்ரீ தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: ஆதிதிராவிடா் மக்களின் முன்னேற்றத்துக்கு தொண்டு செய்பவருக்கு, அம்பேத்கா் விருது தமிழக அரசால் வழங்கப்படுகிறது. இதற்கான விண்ணப்பத்தை, திருவாரூா் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளலாம்.

error: Content is protected !!