India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஊரக வளர்ச்சி துறையில் காலியாக உள்ள ஊராட்சி செயலர் பதவிகளை உடனடியாக நிரப்ப வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று (ஜன.7) திருவாரூர் கலெக்டர் அலுவலகம் முன்பு ஊரக வளர்ச்சி துறை அலுவலர் சங்கத்தினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதைத்தொடர்ந்து போலீசாருடன் ஏற்பட்ட வாக்குவாதத்தில் 16 பெண்கள் உட்பட 133 பேரை போலீசார் கைது செய்து காட்டூரில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.
டெல்டா மாவட்டங்களை கடந்த 2007 ஆம் ஆண்டு அதிர வைத்தது தான் பூண்டி கலைச்செல்வன் படுகொலை. யார் இந்த கலைச்செல்வன் ? எதற்காக கொலை ? நடந்தது என்ன. தற்போதைய திருவாரூர் மாவட்ட திமுக செயலாளரும், சட்ட மன்ற உறுப்பினருமான பூண்டி கலைவாணன் அண்ணன் தான் கலைச்செல்வன். திருவாரூர் திமுகவின் அசைக்க முடியாத நபர் என்றால் அது கலைச்செல்வன் எனக்கூறலாம். இவர் பகை காரணமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார். தொடரும்…
1) way2news-ல் உங்களுக்கு பிடித்த செய்தி/அம்சம் என்ன?
2) way2news-ல் உங்களுக்கு பிடிக்காத அம்சம் என்ன?
3) way2news-ல் என்ன மாற்றம் செய்தால் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறீர்கள்?
கமெண்ட் செய்யவும்
சிதம்பரம் அருகே சக்தி நகரை சேர்ந்தவர் 15 வயது சிறுமி. பத்தாம் வகுப்பு படித்து வந்த இவருக்கு திருவாரூர் நெய்விளக்கு தோப்பு பகுதியைச் சேர்ந்த சந்தோஷ் என்ற இளைஞருடன் கடந்த 2024-ஆம் ஆண்டு மார்ச் மாதம் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் இதுகுறித்து தகவலறிந்த போலீசார் குழந்தை திருமண செய்த சந்தோஷ், சிறுமியின் தந்தை முருகன் மற்றும் உறவினர்களான அமுதா, வளர்மதி ஆகிய 4 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
திருவாரூர் மாவட்டத்திற்கான இறுதி வாக்காளர் பட்டியலை கலெக்டர் சாருஸ்ரீ நேற்று வெளியிட்டார். அதில் மாவட்டத்தில் ஆண் வாக்காளர்கள் மொத்தம் 5,18,157 பேரும், பெண் வாக்காளர்கள் 5,46,414 பேரும் மற்றும் இதர பாலினத்தவர் 69 பேர் என மொத்தம் 10 லட்சத்து 64 ஆயிரத்து 640 வாக்காளர்கள் இடம்பெற்றுள்ளனர். இதில் கடந்த முறை போலவே மாவட்டத்தில் ஆண்களை விட பெண் வாக்காளர்களே அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. SHARE NOW!
திருவாரூர் மாவட்டத்தில் வரும் 24-ஆம் தேதி முதல் பிப்.2-ஆம் தேதி வரை புத்தக கண்காட்சி நடைபெற உள்ளது. இந்நிலையில் புத்தக கண்காட்சிக்கான இலச்சினை (Logo) மற்றும் கருப்பொருள் ஆகியவற்றை தயார் செய்து அனுப்புபவர்களுக்கு ரூ.15,000 பரிசு வழங்கப்படும் என கலெக்டர் சாருஸ்ரீ தெரிவித்துள்ளார். இதனை அனுப்ப ஜன.15-ஆம் தேதி (செவ்வாய்) கடைசி நாளாகும். மாவட்ட நிர்வாகம் தேர்தெடுக்கும் நபருக்கு பரிசு வழங்கப்படும்.
திருவாரூர் மாவட்டத்தில் மக்கள் மோசடிக்காரர்களுக்கு ஏதுவாக தேவையற்ற பல இணையதள பதிவேற்றம் மற்றும் பதிவிறக்கங்களின் போது, இணையதள பக்கங்களில் கேட்கப்படும் தங்களின் தனிப்பட்ட விவரங்களை வெளியிடுவதை தவிர்க்க வேண்டும் என்று காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் பொதுமக்கள் கவனத்துடன் இருக்கும்படி கேட்டுக்கொண்டுள்ளது. SHAREIT
மன்னார்குடி நிலக்கரி படுகை ஆனது தென்னிந்தியாவிலேயே உள்ள மிகப்பெரிய படுகையாகும். இந்தியாவின் மிகப்பெரிய நிலக்கரி படுகைகளில் மன்னார்குடியும் ஒன்று. இப்பகுதியில் அடையாளம் காணப்பட்ட லிக்னைட் இருப்புகளின் அளவு 19.5 மி.டன்கள் ஆகும். மேலும் இங்கு நிலக்கரி எடுக்க அனுமதிக்க கூடாது என விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது. இது குறித்த உங்களின் கருத்து என்ன? COMMENT AND SHARE
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மாவட்டத்தில் நீர் நிலைகளைப் பாதுகாப்பவர்களுக்கு விருது வழங்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. மாவட்டத்திற்கு ஒருவர் வீதம், ரூ.1 லட்சம் பரிசுடன் நீர் நிலை பாதுகாவலர் விருது வழங்கப்படும். இந்த விருதுக்கு https://awards.tn.gov.in என்கிற இணையதளம் மூலம் வரும் 17 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். SHAREIT
கன்னியாகுமரியில் திருவள்ளுவரின் சிலை நிறுவப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவு பெறுவதை முன்னிட்டு, திருவாரூர் மாவட்ட மைய நூலகத்தில் நடைபெற்ற பேச்சுப்போட்டி, திருக்குறள் ஒப்புவித்தல், வினாடி வினா போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுத்தொகை மற்றும் பாராட்டு சான்றிதழ்களை மாவட்ட ஆட்சியர் சாரு ஸ்ரீ இன்று வழங்கினார். இதில் மாவட்ட எஸ்பி உடனிருந்தார். SHAREIT
Sorry, no posts matched your criteria.