Thiruvarur

News April 5, 2025

திருவாரூர் விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு 

image

பி.எம் கிசான் உதவி பெரும் விவசாயிகள் மார்ச் 31க்குள் தனித்துவ அடையாளம் எண்ணை பெற விண்ணப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்ட நிலையில், ஏப்ரல் 15 வரை கால நீட்டிப்பு செய்து மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். விவசாயிகள் தங்களுடைய ஆதார் அட்டை, நிலப்பட்டா, ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட கைபேசி ஆகியவற்றுடன் பொது சேவை மையங்கள் கிராம பஞ்சாயத்து அலுவலகங்களை தொடர்பு கொண்டு பதிவு செய்யலாம். (SHARE பண்ணுங்க) 

News April 5, 2025

திருவாரூர்: லஞ்சம் வாங்கிய செயல் அலுவலர் பணியிடை நீக்கம்

image

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே பொங்குசனீஸ்வரர் கோயிலில் பணி புரியும் செயல் அலுவலர் ஜோதி (40), கோயில் எழுத்தர் சசிக்குமார் (50) என்பவரிடம் ரூ.1 லட்சம் லஞ்சம் வாங்கி நேற்றுமுன்தினம் கைதானார். இந்நிலையில் ஜோதியை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து, நேற்று இந்து சமய அறநிலையத் துறை நாகை மண்டல இணை ஆணையர் வே.குமரேசன் உத்தரவிட்டுள்ளார்.

News April 4, 2025

திருவாரூரில் இப்படி ஒரு இடமா?

image

திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை பகுதியில் உள்ள அலையாத்திக்காடு ஆசியா கண்டத்திலேயே மிகப்பெரியதாகும். முத்துப்பேட்டையில் 12,020 ஹெக்டேர் பரப்பளவில் உள்ள இக்காடுகள், தஞ்சை அதிராம்பட்டினத்தில் தொடங்கி நாகை கோடியக்கரை வரை நீண்டுள்ளது. கடந்த வருடம் இந்த அலையாத்திக் காடுகள் நடுவே வனத்துறை சார்பில் ‘தமிழ் வாழ்க’ எனும் சொற்கள் வடிவில் வாய்க்கால் அமைக்கப்பட்டுள்ளது. SHARE பண்ணுங்க..

News April 4, 2025

திருவாரூர் மாவட்ட இளைஞர்கள் கவனத்திற்கு…

image

தமிழக காவல்துறையில் சப் இன்ஸ்பெக்டர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி தமிழகம் முழுவதும் மொத்தம் 1,299 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் டிகிரி படித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு வரும் ஏப்.7-ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம். விருப்பமுள்ளவர்கள் tnusrb.tn.gov.in என்ற இணையதள பக்கத்திற்குச் சென்று மே.3-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். SHARE NOW

News April 4, 2025

திருவாரூர்: லஞ்சம் வாங்கிய கோயில் செயல் அலுவலர் கைது

image

திருவாரூர் மாவட்டம், திருக்கொள்ளிக்காடு பொங்கு சனீஸ்வரர் கோயில் செயல் அலுவலராக பணியாற்றி வருபவர் ஜோதி. இவர் கோவிலில் எழுத்தராக பணிபுரியும் சசிகுமார் என்பவரின் பழைய சம்பள பாக்கியை விடுவிக்க ரூ.1 லட்சம் லஞ்சம் கேட்டுள்ளார். இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் சசிகுமார் புகார் அளிக்கவே மன்னார்குடி ஆனந்த விநாயகர் கோயிலில் லஞ்ச பெற முயன்ற போது ஜோதியை போலீசார் கையும் களவுமாக நேற்று கைது செய்தனர். SHARE

News April 4, 2025

திருவாரூர் மாவட்டத்தில் இலவச நீட் பயிற்சி

image

திருவாரூர் மாவட்ட பள்ளிக் கல்வித்துறை சார்பில் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு இலவச நீட் (NEET) போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன. ஏப்.03 முதல் மே.02 வரை புலிவலம் அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் மன்னார்குடி அரசு மாதிரி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளன. மேலும் விவரங்களுக்கு 9843545343 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். SHARE NOW! 

News April 3, 2025

திருவாரூர் திட்டப் பயனாளிகள் குறைகளை தெரிவிக்க அழைப்பு 

image

திருவாரூரில் கலைஞர் கனவு இல்லம் உள்ளிட்ட அரசு வீடு கட்டும் திட்டத்தில் பயனாளிகளுக்கு குறைபாடுகள் இருப்பின் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு கலெக்டர் மோகனசுந்தரம் தெரிவித்துள்ளார். அதன்படி திருவாரூர் 7402607529, நன்னிலம் 7402607533, குடவாசல் 7402607538, கொரடாச்சேரி 7402607442, வலங்கைமான் 7402607566, மன்னார்குடி 7402607554 உள்ளிட்ட அலுவலகங்களை தொடர்பு கொள்ளலாம். (SHARE பண்ணவும்)

News April 3, 2025

திருவாரூரில் உதவி தொகை பெற விண்ணப்பிக்க அழைப்பு 

image

திருவாரூர் மாவட்டத்தில் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற மே.30ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் மோகனசந்திரன் அறிவித்துள்ளார். இந்த உதவித்தொகை விண்ணப்பிக்க மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் அல்லது https://tnvelaivaaippu.gov.in/download என்ற இணையத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து விண்ணைப்பிக்கலாம். உங்கள் நண்பர்களுக்கு SHARE செய்து உதவுங்கள். 

News April 3, 2025

மாணவர்களுக்கான கோடைக்கால இலவச ஹாக்கி பயிற்சி முகாம்

image

திருவாரூர் ஹாக்கி யூனிட், ASM ஹாக்கி கிளப் மற்றும் வ.சோ.ஆண்கள் அரசு உதவிபெறும் மேல் நிலைப் பள்ளி இணைந்து நடத்தும்
மாணவர்களுக்கான கோடைக்கால இலவச ஹாக்கி பயிற்சி முகாம்
27.04.2025 முதல் 18.05.2025 வரை திருவாரூர் வ.சோ.ஆண்கள் அரசு உதவிபெறும் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறுகிறது. இதில் 7 முதல்18 வயது வரை உள்ள
மாணவர்களுக்கு பயிற்சி வழங்கப்படுகிறது
பயிற்சி நிறைவில் சான்றிதழ் உண்டு தொடர்பிற்கு:8940266129

News April 3, 2025

திருவாரூரில் தேர் பணி தீவிரம் 

image

திருவாரூரில் வருகின்ற ஏப்ரல் 7ஆம் தேதி ஆழி தேரோட்டம் நடைபெறுவதால் தேரை அலங்கரிக்கும் பணி மிகச் சிறப்பாகவும் நேர்த்தியாகவும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. பக்தர்கள் அனைவரும் திருவாரூர் ஆழி தேரை காண்பதற்கு மிக ஆவலுடன் உள்ளனர். தேரை சுற்றி வருவதற்கு நான்கு வீதிகளும் இடையூறு இல்லாமல் அலங்கரிக்கப்பட்டு வருகிறது. இந்த வருடம் தேர் திருவிழா மிக விமர்சியாக கொண்டாடப்பட இருக்கிறது.

error: Content is protected !!