India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ஜனவரி மாதம் 15 ஆம் தேதி மாட்டுப் பொங்கல் மற்றும் ஜனவரி 26 ஆம் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு, தமிழக அரசின் உத்தரவு படி திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அரசு மதுபான கடைகள் (டாஸ்மாக்) மற்றும் தனியார் மது விற்பனை கூடங்கள் ஜன.15 & 26 ஆகிய தினங்களில் செயல்படாது என மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ தெரிவித்துள்ளார். SHARE IT
கோட்டூர் தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் ஜெகபர் சாதிக். இவர் கடந்த 2020-ஆம் ஆண்டு மார்ச் மாதம் சிறுமி ஒருவரை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதையடுத்து இவர் மீது போக்ஸோ வழக்கு பதியப்பட்டு நடைபெற்று வந்த விசாரணையில் குற்றம் நிரூபிக்கப்பட்டதால் ஜெகபருக்கு 40 ஆண்டுகள் சிறை, ரூ.4000 அபராதம் விதித்து திருவாரூர் மகிளா நீதிமன்றம் நேற்று அதிரடி தீர்ப்பு வழங்கியது.
பெருகவாழ்ந்தான் பகுதியைச் சேர்ந்த பூமிநாதன். இவர் அரசு பேருந்து ஓட்டுனராக பணியாற்றி வருகிறார். இவர் நேற்று பேருந்தை இயக்கிக் கொண்டு மண்ணுக்கு முண்டான் கிராமத்திற்கு சென்ற பொழுது, சசிகுமார், அருண், மனோஜ் ஆகிய மூன்று பேரும் சேர்ந்து ஓட்டுநரை அடித்து காயப்படுத்தி அரசு பணி செய்ய விடாமல் தடுத்துள்ளார்கள். இதுகுறித்த புகாரின் பேரில் மூன்று பேரையும் போலீசார் தேடி வருகின்றனர்.
திருவாரூர் மாவட்டத்தை அரசியல், ஆள் பலம் என தன் கையில் வைத்திருந்ததால், இதர கட்சிகளுக்கு கலைச்செல்வன் மீது அதிருப்தி இருந்துள்ளது. இச்சமயத்தில் தான் முட்டை ரவி கலைச்செல்வன் ஆதரவுடன் டெல்டா பகுதிகளில் ஆதிக்கம் செலுத்த தொடங்கியுள்ளார். இதுதான் மணல்மேடு சங்கருக்கும் கலைச்செல்வனுக்கும் பகை ஏற்பட காரணம் என்றும், காலப்போக்கில் இவர்கள் இருவருக்கும் நேரடி மோதல் நடைபெற்று உள்ளதாக கூறப்படுகிறது. தொடரும்
திருவாரூர் மாவட்ட அனைத்து வகை மேல்நிலைப் பள்ளிகளிலும் 11 மற்றும் 12 ஆம் வகுப்புக்கான ஆண்டு பொது தேர்வு 2025 க்கான செய்முறை தேர்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி செய்முறை தேர்வுகள் 12 ஆம் வகுப்பிற்கு 07.02.2025 தொடங்கி 14.02.2025 முடிவடையும் எனவும், 11 ஆம் வகுப்பிற்கு 15.02.2025 தொடங்கி 21.02.2025 முடிவடையும் எனவும் மாவட்ட பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.
திருவாரூர் மாவட்டத்தில் யாரேனும் சட்ட விரோதமாக அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள், கஞ்சா விற்பனை, கள்ளச்சாராயம் காய்ச்சுதல், கடத்தல், விற்பனை போன்றவற்றில் ஈடுபட்டால் பொதுமக்கள் ‘10581’ என்ற இலவச எண்ணைத் தொடர்பு கொண்டு ரகசிய தகவல் தெரிவிக்கலாம். மேலும் இது தொடர்பான போட்டோ அல்லது வீடியோக்களை 8072589305 என்ற வாட்ஸ்ஆப் எண்ணிற்கு அனுப்பி வைக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. SHARE NOW!
திருத்துறைப்பூண்டி பகுதியை சேர்ந்தவர் கஜேந்திரன் (42). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ஸ்டாலின் என்பவருக்கும் முன் விரோதம் காரணமாக கடந்த 2016-ஆம் ஆண்டு, நவம்பர் மாதம் சண்டை ஏற்பட்டுள்ளது. இதில் ஸ்டாலினை கஜேந்திரன் அரிவாளால் வெட்டியதில் அவர் படுகாயமடைந்தார். இந்நிலையில் இவ்வழக்கை விசாரித்த திருவாரூர் நீதிமன்றம் கஜேந்திரனுக்கு 19 ஆண்டுகள் சிறை, ரூ.15,000 அபராதம் விதித்து தீர்ப்பளித்தது.
திருவாரூர் திமுக பிரமுகர் கலைச்செல்வன் படுகொலையின் நேற்றைய தொடர்ச்சியை காண்போம். கலைஞர் பிறந்த மாவட்டமான திருவாரூர் மாவட்ட திமுக செயலாளர் தான் பூண்டி கலைச்செல்வன். அப்போதைய காலக்கட்டத்தில் திருவாரூரில் திமுக மட்டுமின்றி இதர கட்சிகளும் கலைச்செல்வன் இல்லாமல் எதுவும் செய்ய இயலாது என்ற நிலையில் இருந்தது. இதனாலேயே திமுகவின் தலைமைக்கு இவர் மிகவும் நெருக்கமாக இருந்தார் எனக் கூறப்படுகிறது. தொடரும்…
ஈரோட்டில் அண்மையில் நடைபெற்ற மாநில அளவிலான கலைத் திருவிழா போட்டியில், திருவாரூர் மாவட்டம், நன்னிலம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் மாணவி சாருமதி வீணை வாசிப்பதில் மாநில அளவில் முதலிடம் பெற்றுள்ளார். மாநில அளவில் வெற்றி பெற்ற மாணவியை இன்றைய இறைவணக்கக் கூட்டத்தில் பள்ளியின் தலைமையாசிரியர் பாராட்டி கௌரவித்தார். SHAREIT
நன்னிலம் அருகே உள்ள பனங்காட்டாங்குடி பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ் (37). கூலி தொழிலாளியான இவர், கடந்த 2017-ஆம் ஆண்டு கொல்லுமாங்குடியில் பூக்கடை வைத்துள்ள முத்து என்பவரை கடுமையாக தாக்கியுள்ளார். இதுதொடர்பாக நன்னிலம் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கில் சுரேசுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.11,500 அபராதம் விதித்து நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியது.
Sorry, no posts matched your criteria.