India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருவாரூர் ஆட்சியர் மோகனசந்திரன் அறிவுறுத்தலின்படி மாவட்டத்திலுள்ள அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி பயிலும் மாணவர்களுக்கு அவர்களின் பல் எடுப்பாக இருப்பதை சரி செய்வதற்காக கிளிப் வழங்கப்பட உள்ளது . இதனை முன்னிட்டு பள்ளியில் அவ்வாறு உள்ள மாணவர்களின் பெயர் பட்டியலை மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு உடனே தெரியபடுத்துமாறு கல்வி துறை சார்பில் தலைமை ஆசிரியர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இன்று வாரந்தோறும் புதன்கிழமை நடைபெறும் மக்கள் குறைதீர் முகாம் நடைபெற்றது. இதில் தஞ்சை சரக காவல்துறை டி.ஐ.ஜி கலந்துகொண்டு பொதுமக்களிடம் இருந்து 24 மனுக்களை பெற்றுக் பெற்றுக்கொண்டு, அதன் மீது உரிய நடவடிக்கை எடுக்க காவல் துணை கண்காணிப்பாளர்களுக்கு உத்தரவிட்டார். இந்நிகழ்வில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கருன்கரட் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மாவட்ட கண்காணிப்பாளர் காவல் அலுவலகத்தில் இன்று தஞ்சை சரக காவல் துறை துணைத்தலைவர் ஜியாவுல்ஹக் இன்று மாவட்ட ஆய்வு மேற்கொண்டார். அப்போது கடந்த ஆண்டு பதிவு செய்யப்பட்ட கொலை, கொள்ளை, திருட்டு, வழிப்பறி, தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை உள்ளிட்ட வழக்குகளில் எடுக்கப்பட்ட நடவடிக்கை பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டத்தில் திருவாரூர் மாவட்டத்தில் காலியாக உள்ள 1 குறைதீர்ப்பாளர் பணியிடத்திற்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு சம்பளமாக மாதம் ரூ.45,000 வரை வழங்கப்படும். ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் <
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் காலியாக உள்ள ( BRANCH MANAGER) பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வாயிலாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஊதியம் ரூ.15,000 – ரூ.25,000 வரை வழங்கப்படுகிறது. விருப்பம் உள்ள டிகிரி முடித்தவர்கள் இங்கே <
திருவாரூர் மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத் துறை அலுவலகத்தில் குவாரி குத்தகை உரிமம் வேண்டி இதுவரை தபால் மூலம் விண்ணப்பங்கள் பெறப்பட்டு அனுமதி வழங்கப்பட்ட நிலையில், தமிழக அரசின் உத்தரவுப்படி 30.4.2025 முதல் குவாரி குத்தகை வேண்டி விண்ணப்பிப்பவர்கள் ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் மோகன் சந்திரன் அறிவித்துள்ளார்.
சென்னை உயர்நீதி மன்றத்தில் உதவியாளர், எழுத்தர் ( Perosnal Assitant, Personal Secretary, Clerk) உள்ளிட்ட பணிகளுக்கான 47 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு ரூ.56,000 முதல் மாத சம்பளமாக வழங்கப்பட உள்ளது. ஏதேனும் டிகிரி முடித்த 18-37 வயதுக்குட்பட்ட நபர்கள் <
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் (Office Assistant) பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வாயிலாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஊதியம் ரூ.15,000 வரை வழங்கப்படுகிறது. விருப்பம் உள்ள 12ஆம் வகுப்பு முடித்தவர்கள் <
பெருந்தரக்குடியைச் சேர்ந்த வக்கீல் ஆனந்தன்(38) என்பவரது வீட்டிற்கு அருகில் வசித்து வருபவர் பாலகிருஷ்ணன்(28). இவர் ஆனந்தன் வீட்டிற்கு அருகே தகாத வார்த்தைகளால் பேசியுள்ளார். இதனை ஆனந்தன் கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பாலகிருஷ்ணன், ஆனந்தனை தகாத வார்த்தைகளால் திட்டி, கொலை மிரட்டல் விடுத்ததாக ஆனந்தன் கொடுத்த புகாரின் பேரில் போலீசார், பாலகிருஷ்ணன் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
திருவாரூர் மாவட்டத்தில் இன்று (14.04.2025) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவல் அதிகாரிகள். இரவு நேர குற்றங்களைத் தடுக்க காவல் துறையின் உடனடி உதவிக்கு, எங்களது இரவு ரோந்து காவல் அதிகாரிகளை அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யவும் என காவல்துறையின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.