India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழ்நாடு பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருத்து துறையின் கீழ் திருவாரூர் மாவட்டத்தில் காலியாக உள்ள பல்வேறு காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. பல்வேறு பணிகளுக்கு ரூ.8,500 முதல் ரூ.60,000 வரை ஊதியமாக வழங்கப்படும். விண்ணப்பிக்க நளையே (ஏப்.28) கடைசியாகும். மேலும் விவரங்களுக்கு <
கூத்தாநல்லூரை சேர்ந்த முகமது அன்சாரி என்பவர் தான் சார்பதிவாளர் அலுவலகத்தில் வாடகை ஒப்பந்த பத்திரத்திற்காக தான் செலுத்திய தொகையை திரும்ப வழங்க வேண்டி மன்னார்குடி நுகர்வோர் சங்கம் மூலமாக திருவாரூர் நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதனை விசாரித்த நீதிமன்றம், அன்சாரிக்கு சேர வேண்டிய தொகை தராமல் அவரை அலைக்கழித்ததற்காக ரூ.60,000 இழப்பீடு வழங்க வேண்டும் என இன்று தீர்ப்பளித்தது.
மன்னார்குடி ஸ்ரீ காசி விசாலாட்சி சமேத ஸ்ரீ காசிவிஸ்வநாதர் திருக்கோயிலில் தனிச்சன்னதியில் அருள்பாலித்து வரும் ஸ்ரீ ரணவிமோட்சகருக்கு நாளை (ஏப்.27) ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணிக்கு மேல் அமாவாசையை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற உள்ளது. நீண்ட நாள் கடன் சுமை மற்றும் தீராத நோய்கள் உடையோர் இந்த வழிபாட்டில் கலந்து கொண்டால் நன்மை கிடைக்கும் என்பது ஐதீகம். இதை இப்போதே SHARE செய்யவும்..
இளநிலை உதவியாளர், விஏஓ உள்ளிட்ட பணியிடங்களுக்காக நடத்தப்படும் TNPSC குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. வரும் ஜூலை 12 ஆம் தேதி தேர்வு நடைபெற உள்ளது. இதில் மொத்தம் 3935 பணியிடங்கள் நிரப்பப்படும் என TNPSC தெரிவித்துள்ளது. மே 24 ஆம் தேதிக்குள் https://www.tnpsc.gov.in/ என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனை உங்க நண்பர்களுக்கும் SHARE செய்து தெரியப்படுத்துங்க…
திருவாரூர் மாவட்டம், திருப்பாம்புரத்தில் உள்ள பாம்பு நாதர் கோயில், ஒரு மிகச் சிறந்த ராகு – கேது தோஷத்துக்கான பரிகாரத் தலம். 18 மாதத்திற்கு ஒருமுறை ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு இடம் பெயரும் ராகு – கேது பகவான் இடப்பெயர்ச்சி இன்று மாலை 4:20 மணிக்கு நடக்கிறது. இத்தலத்தில் வழிபட்டால் ராகு – கேது தோஷம் நிவர்த்தி அடையும். இதை உறவினர், நண்பர்களுக்கு SHARE செய்யுங்கள்.
வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இன்று மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதன்படி திருவாரூர் மாவட்டத்தின் ஓரிரு இடங்களில் இன்று (ஏப்.26) காலை 10 மணி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. எனவே மழையில் மக்கள் தேவையின்றி வெளியே செல்வதை தவிர்த்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர். SHARE NOW!
வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இன்று மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதன்படி திருவாரூர் மாவட்டத்தின் ஓரிரு இடங்களில் இன்று (ஏப்.25) மாலை இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. எனவே மாலை நேரத்தில் மக்கள் தேவையின்றி வெளியே செல்வதை தவிர்த்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர். SHARE NOW!
திருவாரூர் மாவட்டம், பின்னவாசல் அருகே பிச்சைப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த 10-ஆம் வகுப்பு மாணவன் சத்தியசாய் பொதுத்தேர்வு எழுதிவிட்டு வீட்டில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் இன்று தனது நண்பர்களுடன் அருகில் உள்ள குளம் ஒன்றில் குளிக்க சென்ற சத்தியசாய் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து மாணவனின் உடலை மீட்ட தீயணைப்பு துறையினர் திருவாரூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பட்டா, சிட்டா ஆன்லைனில் பெற அரசின் <
தமிழ்நாட்டில் உள்ள 1,299 எஸ்.ஐ காலி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பாணை வெளியாகியுள்ளது. அதன்படி தாலுகாவில் 933 பணியிடங்களும், ஆயுதப்படையில் 366 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது. அதன்படி ஏதேனும் ஒரு இளங்கலை பட்டம் முடித்தவர்கள் வரும் மே 3ஆம் தேதிக்குள் <
Sorry, no posts matched your criteria.