India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருவாரூர் ஆட்சியர் வி.மோகனசந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மாவட்டத்தில் 27,500 விவசாயிகளின் நில உடைமை பதிவுகள் சரிபார்க்கப்பட்டுள்ளன. மீதமுள்ள விவசாயிகள் அனைவரும் இம்மாத இறுதிக்குள் தங்கள் நில உடைமை விவரங்களை சரிபார்க்க வேண்டும். எனவே விவசாயிகள் தங்கள் அருகிலுள்ள கிராம பஞ்சாயத்து அலுவலகம் அல்லது பொது சேவை மையங்களை தொடர்பு கொண்டு பதிவுகளை சரிபார்த்து கொள்ளலாம் என அவர் தெரிவித்துள்ளார்.
அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இப்பணியிடங்களுக்குத் தேர்வு கிடையாது. 10ஆம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையிலேயே பணி நியமனம் வழங்கப்படும். தமிழ்நாடு முழுவதும் 2,292 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. ரூ.10,000 – ரூ.30,000 வரை சம்பளம் வழங்கப்படும். 18 வயது முதல் 40 வயது வரை உள்ளவர்கள் மார்ச் 3ஆம் தேதிக்குள் இங்கு <
இந்தியா முழுவதற்குமான மத்திய பல்கலைக்கழகங்களில் இளங்கலை பட்டப் படிப்புக்கான கியூட் தேர்வை (*CUET-UG*) தேசிய தேர்வு முகமை நடத்தி வருகிறது. இந்நிலையில், பல்கலைக்கழகங்களில் (CUET-UG 2025) கான பொது நுழைவுத் தேர்வு வருகின்ற மே.8 முதல் ஜூன்.1-ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு மார்ச்.1 முதல் வரும் மார்ச்.22-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் பிளஸ்-2 அரசு பொதுத்தேர்வுகள் நாளை (மார்ச்.3) திங்கட்கிழமை முதல் தொடங்கி நடைபெற உள்ளது. இந்நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வினை 13,599 மாணவ மாணவிகள் நாளை எழுத உள்ளனர். இதற்கான அனைத்து முன்னேற்பாடு பணிகளும் முழுவீச்சில் முதன்மை கல்வி அலுவலர் செளந்தரராசன் தலைமையில் நடைபெற்று வருகிறது.
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திருவாரூர் வழியாக நாகப்பட்டினத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக செல்ல உள்ளார். இந்நிலையில் திருவாரூரில் முதலமைச்சர் செல்லும் பாதை ரெட்டி ஷோன் ஆக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே இன்றும், நாளையும் திருவாரூரில் முதல்வர் செல்லும் வழியில் ட்ரோன்கள் பறக்க தடைவிதித்து மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் உத்தரவிட்டுள்ளார்.
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் விரல் ரேகை பதிவிற்காக இன்று (மார்ச்.2) சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. திருவாரூர் மாவட்டத்தின் அனைத்து வட்டங்களிலும் இன்று நடைபெறும் சிறப்பு முகாம்களில் விரல் ரேகை பதிவு செய்யாத நபர்கள் தங்கள் பகுதி ரேஷன் கடைகளில் பதிவு செய்து கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் அறிவுறுத்தியுள்ளார். SHARE NOW!
முத்துப்பேட்டை, தம்பிக்கோட்டை கிழக்கு கடற்கரை சாலையோரம் நின்றுக்கொண்டிருந்த லாரி மீது, நேற்று இரவு இரு சக்கர வாகனம் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் இரு சக்கர வாகனத்தில் சென்ற ஆசாத்நகரை சேர்ந்த நவாஸ்கான் மகன் முகமது தவ்பிக்(22) என்ற வாலிபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்து அங்கு சென்ற போலீசார் உடலை மீட்டு திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பொதுத்துறை நிறுவனமான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் மாதம் ரூ.23 000 முதல் ரூ.78,000 வரையிலான சம்பளத்தில் காலியாக உள்ள 246 பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு 18 முதல் 26 வயதுக்குள் இருக்கும் தகுதியானவர்கள்<
2019ஆம் ஆண்டு உள்ளாட்சி தேர்தலில் வார்டு கவுன்சிலராக தேர்ந்தெடுக்கப்பட்ட அதிமுகவைச் சேர்ந்த பாப்பாசுப்பிரமணியன் வேட்புமனுவில் சொத்து விபரங்களை முழுமையாக குறிப்பிடவில்லை. அதுதொடர்பாக தொடர்ந்த வழக்கில், நடவடிக்கை எடுக்க ஐகோர்ட் உத்தரவிட்டிருந்தது. ஆனால் நடவடிக்கை எடுக்காமல் அவரை 5 ஆண்டுகள் பதவிநிறைவு செய்ய அனுமதித்த மாவட்ட கலெக்டர், அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் நாளை (மார்ச்.01) கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து, நெல் கொள்முதல் நிலையங்களில் இருக்கும் நெல் மூட்டைகளைப் பாதுகாப்பான இடத்தில் வைக்க வேண்டும், உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும், கனமழை தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர்களுக்கு வருவாய் நிர்வாக ஆணையர் சாய் குமார் அறிவுறுத்தியுள்ளார்.
Sorry, no posts matched your criteria.