Thiruvarur

News March 12, 2025

திருவாரூர்: விவசாயிகளின் வங்கி கணக்கில் ரூ.210 கோடி வரவு

image

திருவாரூர் மாவட்டத்தில் கடந்த செப்டம்பர் 1 ஆம் தேதி அரசு நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்ட நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் 172 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் 86,822 மெட்ரிக் டன் குருவை நெல் கொள்முதல் செய்யப்பட்டு புதிய தொகை ரூ.210 கோடியானது 19 ஆயிரம் விவசாயிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டது என திருவாரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.

News March 12, 2025

திருவாரூர் மாவட்ட நிலமற்ற ஆதிதிராவிடர்களுக்கு கடனுதவி

image

திருவாரூர் மாவட்டத்தில் நன்னிலம் மகளிர் நில உரிமை திட்டத்தின் கீழ் நிலமற்ற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி இன மகளிர்களுக்கு நிலம் வாங்குவதற்கு ரூ.5 லட்சம் அல்லது 50 சதவீத மானியம் வழங்கப்படும். இந்த கடனுதவி இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மூலம் வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு திருவாரூர் மாவட்ட தாட்கோ மேலாளர் அல்லது <>லிங்க்<<>> இணைய தளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

News March 11, 2025

திருவாரூர்: இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு

image

திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை ஆகிய டெல்டா மாவட்டங்களில் இன்று (மார்ச்.11) கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருந்தது. அதன்படி திருவாரூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று விடியற்காலை முதலே கனமழையானது கொட்டித் தீர்த்து வருகிறது. இந்நிலையில் இன்று இரவு 7 மணி வரை திருவாரூர் மாவட்டத்தில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News March 11, 2025

திருவாரூர்: விவசாயிகளுக்கு ஆட்சியர் அறிவுறுத்தல்

image

திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த பட்டா நிலம் வைத்துள்ள விவசாயிகள் நில உடமை சரிபார்ப்பு முகாமில் தங்களது விவசாய நில பட்டா, ஆதார் அட்டை, ஆதார் இணைக்கப்பட்ட அலைபேசி எண் ஆகிவற்றை மார்ச்.31ஆம் தேதிக்குள் பதிவு செய்து தனித்துவமான அடையாள எண்ணை பெற்றுக் கொண்டு பயன்பெற வேண்டுமென திருவாரூர் மாவட்ட ஆட்சியர் கேட்டுக் கொண்டுள்ளார். SHARE NOW..

News March 11, 2025

திருவாரூர் மாவட்டத்திற்கு கனமழை எச்சரிக்கை

image

கடந்த சில தினங்களாக வறண்ட வானிலை நிலவியது. அதைத் தொடர்ந்து தமிழகத்தில் இன்று (மார்ச்.11) திருவாரூர், மயிலாடுதுறை, தஞ்சை, நாகை, புதுக்கோட்டை உள்ளிட்ட 12 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள பொதுமக்கள், விவசாயிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. SHARE NOW..

News March 10, 2025

திருவாரூர்: ரூ.1,30,400 சம்பளத்தில் வேலை

image

தமிழக மருத்துவ தேர்வாணையம் பார்மசிஸ்ட் பிரிவில் உள்ள 425 காலியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இப்பணியிடங்களுக்கு ஆன்லைன் வாயிலாக தேர்வு நடைபெறும். ஊதியம் ரூ.35,000 – ரூ.1,30,400ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எனவே டி.பார்ம், பி.பார்ம், பார்ம்.டி படிப்பை முடித்தோர் இங்கு <>க்ளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க இன்றே (மார்ச்.10) கடைசி நாளாகும். இப்போதே SHARE பண்ணுங்க…

News March 9, 2025

ரேஷன் கடைகளில் விரல் ரேகை பதிவு சிறப்பு முகாம்

image

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் விரல் ரேகை பதிவிற்காக இன்று (மார்ச்.09) சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. திருவாரூர் மாவட்டத்தின் அனைத்து வட்டங்களிலும் இன்று நடைபெறும் சிறப்பு முகாம்களில் விரல் ரேகை பதிவு செய்யாத நபர்கள் தங்கள் பகுதி ரேஷன் கடைகளில் பதிவு செய்து கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் அறிவுறுத்தியுள்ளார். SHARE NOW.

News March 9, 2025

திருவாரூர்: சவுதி அரேபியாவில் பணிபுரிய விண்ணப்பிக்கலாம்

image

தமிழக அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு  நிறுவனம் சார்பில் டெலிகம்யூனிகேஷன் துறையில் பட்டப்படிப்பு மற்றும் டிப்ளமோ முடித்த 25 முதல் 44 வயதுடைய நபர்கள் சவூதி அரேபியா நாட்டில் பணிபுரிய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு விண்ணப்பிக்க கடைசி நாள் வரும் மார்ச்.25 ஆகும். ஆர்வமுள்ளவர்கள் www.omcmanpower.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என திருவாரூர் கலெக்டர் தெரிவித்துள்ளார்.

News March 9, 2025

திருவாரூர் மாவட்டத்தில் கிரிக்கெட் வீரர்கள் தேர்வு

image

திருவாரூர் கிரிக்கெட் சங்கம் சார்பில் 19 வயதிற்கு உட்பட்ட கிரிக்கெட் வீரர்களுக்கான தேர்வு வரும் மார்ச் 30-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 9 மணிக்கு திரு.வி.க அரசு கலைக் கல்லூரி மைதானத்தில் நடைபெற உள்ளது. இத்தேர்வில் திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த வீரர்கள் மட்டுமே பங்கேற்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தகவல்களுக்கு 96296-75870, 95772-99772 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம். SHARE NOW! 

News March 8, 2025

கோவில்வெண்ணி: டூவீலர்-ஆம்புலன்ஸ் மோதி விபத்து

image

திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் வட்டம், கோவில்வெண்ணி சுங்கச்சாவடி அருகே இன்று (மார்ச்.8) தஞ்சை சாலையில் சென்று கொண்டிருந்த ஆம்புலன்ஸ் ஒன்று அவ்வழியாக வந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. அப்போது ஆம்புலன்ஸ் அடியில் சிக்கிய டூவீலர் சுமார் 50 மீட்டர் தூரத்திற்கு இழுத்து செல்லப்பட்டதில் டூவீலரில் பயணித்தவர் படுகாயமடைந்தார். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். 

error: Content is protected !!