Thiruvarur

News March 9, 2025

ரேஷன் கடைகளில் விரல் ரேகை பதிவு சிறப்பு முகாம்

image

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் விரல் ரேகை பதிவிற்காக இன்று (மார்ச்.09) சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. திருவாரூர் மாவட்டத்தின் அனைத்து வட்டங்களிலும் இன்று நடைபெறும் சிறப்பு முகாம்களில் விரல் ரேகை பதிவு செய்யாத நபர்கள் தங்கள் பகுதி ரேஷன் கடைகளில் பதிவு செய்து கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் அறிவுறுத்தியுள்ளார். SHARE NOW.

News March 9, 2025

திருவாரூர்: சவுதி அரேபியாவில் பணிபுரிய விண்ணப்பிக்கலாம்

image

தமிழக அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு  நிறுவனம் சார்பில் டெலிகம்யூனிகேஷன் துறையில் பட்டப்படிப்பு மற்றும் டிப்ளமோ முடித்த 25 முதல் 44 வயதுடைய நபர்கள் சவூதி அரேபியா நாட்டில் பணிபுரிய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு விண்ணப்பிக்க கடைசி நாள் வரும் மார்ச்.25 ஆகும். ஆர்வமுள்ளவர்கள் www.omcmanpower.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என திருவாரூர் கலெக்டர் தெரிவித்துள்ளார்.

News March 9, 2025

திருவாரூர் மாவட்டத்தில் கிரிக்கெட் வீரர்கள் தேர்வு

image

திருவாரூர் கிரிக்கெட் சங்கம் சார்பில் 19 வயதிற்கு உட்பட்ட கிரிக்கெட் வீரர்களுக்கான தேர்வு வரும் மார்ச் 30-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 9 மணிக்கு திரு.வி.க அரசு கலைக் கல்லூரி மைதானத்தில் நடைபெற உள்ளது. இத்தேர்வில் திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த வீரர்கள் மட்டுமே பங்கேற்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தகவல்களுக்கு 96296-75870, 95772-99772 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம். SHARE NOW! 

News March 8, 2025

கோவில்வெண்ணி: டூவீலர்-ஆம்புலன்ஸ் மோதி விபத்து

image

திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் வட்டம், கோவில்வெண்ணி சுங்கச்சாவடி அருகே இன்று (மார்ச்.8) தஞ்சை சாலையில் சென்று கொண்டிருந்த ஆம்புலன்ஸ் ஒன்று அவ்வழியாக வந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. அப்போது ஆம்புலன்ஸ் அடியில் சிக்கிய டூவீலர் சுமார் 50 மீட்டர் தூரத்திற்கு இழுத்து செல்லப்பட்டதில் டூவீலரில் பயணித்தவர் படுகாயமடைந்தார். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். 

News March 8, 2025

மீனவர்கள் நிவாரணம் உதவித்தொகை பெற அழைப்பு

image

திருவாரூர் மாவட்டத்தில் தமிழ்நாடு மீனவர்கள் நல வாரியத்தில் உறுப்பினராக இருந்து இதுவரை மென்பொருள் பதிவேற்றம் செய்யப்படாமல் விடுபட்டுள்ளவர்கள் ஏப்.01ஆம் தேதி முதல் தங்களது புகைப்படம், பழைய உறுப்பினர் அட்டை, ஆதார், வங்கிகணக்கு ஆகிய ஆவணங்களுடன் கலெக்டர் அலுவலகத்தில் இயங்கி வரும் மீன்வளம் மீன்நலத்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தில் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். 

News March 8, 2025

திருவாரூர் மாவட்டத்திற்கு கனமழை எச்சரிக்கை

image

கடந்த சில தினங்களாக வறண்ட வானிலை நிலவியது. அதைத் தொடர்ந்து தமிழகத்தில் வரும் 11ஆம் தேதி திருவாரூர், மயிலாடுதுறை, தஞ்சை, நாகை, புதுக்கோட்டை உள்ளிட்ட 12 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள பொதுமக்கள், விவசாயிகளுக்கு அறிவுறுத்தபட்டுள்ளது.

News March 8, 2025

திருவாரூர்: ரூ.1,30,400 சம்பளத்தில் வேலை

image

தமிழக மருத்துவ தேர்வாணையம் பார்மசிஸ்ட் பிரிவில் உள்ள 425 காலியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இப்பணியிடங்களுக்கு ஆன்லைன் வாயிலாக தேர்வு நடைபெறும். ஊதியம் ரூ.35,000 – ரூ.1,30,400ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எனவே டி.பார்ம், பி.பார்ம், பார்ம்.டி படிப்பை முடித்தோர் இங்கு <>க்ளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க மார்ச்.10 கடைசி நாளாகும். பிறரும் பயனடைய SHARE பண்ணுங்க…

News March 8, 2025

திருவாரூர் தியாகராஜர் கோயில் பெரிய கொடியேற்றம்

image

திருவாரூர் ஶ்ரீ தியாகராஜர் சுவாமி கோயில் பங்குனி உத்திர பெருவிழா தொடங்க இருப்பதை முன்னிட்டு, திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான மகா துஜா ரோஹணம் எனும் பெரிய கொடியேற்றம் மார்ச்.15ஆம் தேதி காலை 10.30 மேல் 11.30 மணிக்குள் வெகு விமரிசையாக நடைபெற உள்ளது. தியாகராஜர் சுவாமி பக்தர்களுக்கு SHARE பண்ணுங்க.. ஆரூரா தியாகேசா..

News March 7, 2025

கோட்டூர் அருகே மின்சாரம் தாக்கி முதியவர் உயிரிழப்பு

image

திருவாரூர் மாவட்டம், களப்பால் அருகே தெற்கு நாணலூர் ஊராட்சியில் நீர்த்தேக்க தொட்டி ஆப்ரேட்டராக கணேசன் எனும் முதியவர் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று (மார்ச்.6) மாலை மோட்டார் அறையில் ஸ்விட்ச்சை இயக்கியபோது எதிர்ப்பாராத விதமாக மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து சம்பவம் குறித்து களப்பால் காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

News March 6, 2025

வியாபாரம் செழிக்க ஒரு முறையாவது இந்த கோயிலுக்கு போயிட்டு வாங்க

image

திருவாரூர் மாவட்டம் பூந்தோட்டம் அருகே அய்யன்பேட்டையில் ஸ்ரீ படி அளந்தநாயகி சமேத செட்டியப்பர் கோயில் உள்ளது. சிவபெருமான் தராசு பிடித்தும், பார்வதி தேவி அளவை படியை ஏந்தியும் வியாபாரம் செய்யும் கோலத்தில் காட்சியளிக்கும் இந்த கோயிலுக்கு வியாபாரிகள் ஒரு முறை சென்று தரிசித்தால் தங்களது வியாபாரம் பெருகும், நஷ்டம் தீரும் கடன்கள் அடையும் என்பது ஐதீகம்.. வியாபார நண்பர்களுக்கு ஷேர் செய்யவும்.

error: Content is protected !!