Thiruvarur

News March 27, 2024

அதிமுக செயல் வீரர்கள் ஆலோசனை கூட்டம்

image

அதிமுக சார்பில் நாகப்பட்டினம் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருத்துறைப்பூண்டி சட்டமன்ற தொகுதி செயல் வீரர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் வாக்கு சேகரிப்பு பணிகள் குறித்து ஆலோசனை வழங்கி சிறப்புரை வழங்கப்பட்டது. இதில் முன்னாள் அமைச்சர்கள் இரா. காமராஜ், ஓ.எஸ் .மணியன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். 

News March 27, 2024

திருவாரூரில் மழைக்கு வாய்ப்பு

image

தமிழ்நாடு (ம) புதுவையில் வெயில் படிபடியாக உயர்ந்து உச்சம் அடைந்து வருகிறது. இந்நிலையில் நாகை, திருவாரூர், தஞ்சை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இப்பகுதியில் கடந்த மாதம் முதல் வெயில் வாட்டி வந்த நிலையில், தற்போது மழை பெய்யும் என அறிவிப்பு வெளியாகியுள்ளதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

News March 27, 2024

பதற்றமான வாக்குச்சாவடிகளை ஆய்வு செய்த எஸ்.பி

image

ஏப்ரல்-19ஆம் தேதி அன்று மக்களவைத் தேர்தல் நடைபெற இருப்பதை முன்னிட்டு, திருத்துறைப்பூண்டி மற்றும் மன்னார்குடி சட்டமன்ற தொகுதிகளில் பதற்றமான வாக்குச்சாவடிகள் என கண்டறியப்பட்ட முத்துப்பேட்டை, தலையாமங்கலம், கோட்டூர் மற்றும் மன்னார்குடி ஆகிய பகுதிகளில் உள்ள வாக்குச்சாவடிகளை நேற்று (26.03.2024) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் நேரில் சென்று பார்வையிட்டார்கள்.

News March 26, 2024

திருவாரூர்: மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ உத்தரவு!

image

திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் வட்டத்தில் அமைந்துள்ள அருள்மிகு மகாமாரியம்மன் கோவிலில் (பாடைகட்டி மாரியம்மன்) புஷ்ப பல்லக்கு நடைபெறும் நாளான 31.03.2024 ஞாயிற்றுகிழமையன்றுவலங்கைமான் வட்டத்தில் செயல்படும் அரசு மதுபானக்கடை எண் 9660 மற்றும் 9627 மேலும் அதனை சார்ந்துள்ள மதுக்கடைகளையும் முழுவதுமாக மூட ஆணையிடப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ தெரிவித்துள்ளார்.

News March 26, 2024

மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆய்வு.

image

மக்களவைத் தோ்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்.19 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி, திருவாரூா் மாவட்டத்தில், தோ்தல் தொடா்பான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. திருவாரூரில், பதற்றமான வாக்குச் சாவடிகளில் பாதுகாப்பு நடவடிக்கைகள், அடிப்படை வசதிகள் குறித்து திங்கள்கிழமை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயக்குமாா் நேரில் ஆய்வு மேற்கொண்டாா்.

News March 26, 2024

ஆட்சியர் அலுவலகத்தில் பலத்த சத்தம்

image

திருவாரூர் மாவட்டம் முழுவதும் சுமார் அரை மணி நேரத்திற்கு முன்பு பலத்த சத்தம் கேட்ட நிலையில் இந்த சத்தம் சுமார் 50 கிலோமீட்டர் தொலைவில் வரை உள்ள கிராமத்திற்கு சட்டம் கேட்ட நிலையில் சுற்றுவட்டார பகுதிகள் முழுவதும் பரபரப்பு நிலவி வருகிறது. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இந்த அதிர்வை கண்டு ஏதேனும் அசம்பாவிதங்கள் நடந்திருக்கலாமா என அலுவலகத்தில் இருந்து பணியாளர்கள் வெளியேறி உள்ளனர்.

News March 26, 2024

15306 பேர் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதுகிறார்கள்

image

திருவாரூர் மாவட்டத்தில் இன்று தொடங்கும் பத்தாம் வகுப்பு அரசு பொது தேர்வை 15306 பேர் 71 தேர்வு மையங்களில். எழுதுகின்றனர் தேர்வானது வரும் ஏப்ரல் மாதம் 8 ஆம் தேதியுடன் முடிகிறது தேர்வு பணியில் ஆசிரியர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர் மேலும் தேர்வுகளில் எவ்வித முறைகேடுகள் நடக்காத வண்ணம் நிலையான பறக்கும் படையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்

News March 26, 2024

ராஜகோபால சுவாமி பங்குனி உத்திர திருவிழா 27 துவங்கும்

image

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருள்மிகு ராஜகோபால சுவாமி ஆலய ஆணி உத்தர திருவிழா வருகிற 27ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்க உள்ள நிலையில் இந்த திருவிழாவிற்கு மாவட்டம் முழுவதும் மட்டுமின்றி பல்வேறு பகுதிகளில் இருந்தும் திரளான பக்தர்கள் பங்கெடுக்க உள்ளதால் வருகிறது 27ஆம் தேதி அன்று கொடியேற்றத்துடன் திருவிழாவில் அறிவிக்கப்பட்டுள்ளது.

News March 26, 2024

100% வாக்களிப்பதன் குறித்து உறுதிமொழி கையொப்பம்

image

திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் நகராட்சி விழாக்கள் எதிர்வரும் 2024 நாடாளுமன்ற தேர்தல் அனைத்து வாக்காளர்களும் தவறாமல் வாக்களித்து 100% வாக்கினை செலுத்த வேண்டும் என்பன உறுதிமொழி கையொப்பமிட்டன .திருவாரூர் ஆட்சியர் அவர்கள் கலந்து கொண்டு கையொப்பமிட்டு துவக்கி வைத்தார் இந்த நிகழ்வில் கூத்தாநல்லூர் நகர மன்ற தலைவர் நகர மன்ற உறுப்பினர்கள் நகராட்சி ஆணையர்கள் கலந்து கொண்டனர்.

News March 26, 2024

தஞ்சாவூர்: நாம் தமிழர் கட்சி சார்பில் தெருமுனை பிரச்சாரம்

image

வருகின்ற ஏப்ரல் மாதம் 19 ஆம் தேதி நடைபெற உள்ள பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் தஞ்சாவூர் தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் ஹுமாயூன் அவர்களை ஆதரித்து இன்று தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது பந்தலடி ,கீழப்பாலம் ,தேரடி ஆகிய இடங்களில் மாநில ஒருங்கிணைப்பாளர் பாரதிசெல்வன் தலைமையில் அக் கட்சியினர் பிரச்சாரம் செய்து வாக்கு சேகரித்தனர்

error: Content is protected !!