India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நீடாமங்கலம் வேளாண் அறிவியல் நிலைய விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ள அறிக்கையில்: பருத்தியானது வறட்சியை தாங்கி கொள்ளும். ஆனால் அதிக மழை அல்லது நீர் தேக்கத்தை தாங்காது. எனவே பதிப்புகளில் இருந்து விவசாயிகள் தங்களது பயிர்களை தற்காத்து கொள்ள வயலில் தேங்கி உள்ள நீரை வடிகால் வசதி செய்து வடிய வைக்க வேண்டும். பின்னர் காம்ப்ளக்ஸ் (19:19:19 ) உரம் தெளிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளனர்.
கணினி உதவியாளர்கள் மற்றும் எஸ்பிஎம் திட்ட ஒருங்கிணைப்பாளர்களுக்கு பணி வரன்முறை செய்து காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்பட 21 அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி மாநிலம் தழுவிய ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தை நாளை 13.03.2025 அன்று தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்கத்தினர் நடத்துகின்றனர்.திருவாரூர் மாவட்டத்தில் 10 ஊராட்சி ஒன்றியங்களில் இந்த போராட்டம் நடைபெறுகிறது.
திருவாரூர் அருகே கிடாரங்கொண்டான் பகுதியில் செயல்பட்டு வரும் திரு.வி.க அரசு கலைக்கல்லூரியில் மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய கல்விக் கொள்கை மற்றும் மும்மொழி கொள்கைக்கு எதிராக இந்திய மாணவர் சங்கத்தின் சார்பில் கல்லூரி நுழைவாயில் முன்பு திடீர் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாணவ மாணவிகள் பலர் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர். இதனால் அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது.
குமரிக்கடல் பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால் தமிழகத்தின் தென் மற்றும் டெல்டா மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் மழை எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி திருவாரூர் மாவட்டத்தில் இன்று (மார்ச்.12) இரவு 7 மணி வரை இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. உங்கள் பகுதியில் மழை பெய்கிறதா ? கமெண்ட் செய்யவும்!
திருவாரூர் மாவட்டத்தில் கடந்த செப்டம்பர் 1 ஆம் தேதி அரசு நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்ட நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் 172 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் 86,822 மெட்ரிக் டன் குருவை நெல் கொள்முதல் செய்யப்பட்டு புதிய தொகை ரூ.210 கோடியானது 19 ஆயிரம் விவசாயிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டது என திருவாரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.
திருவாரூர் மாவட்டத்தில் நன்னிலம் மகளிர் நில உரிமை திட்டத்தின் கீழ் நிலமற்ற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி இன மகளிர்களுக்கு நிலம் வாங்குவதற்கு ரூ.5 லட்சம் அல்லது 50 சதவீத மானியம் வழங்கப்படும். இந்த கடனுதவி இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மூலம் வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு திருவாரூர் மாவட்ட தாட்கோ மேலாளர் அல்லது <
திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை ஆகிய டெல்டா மாவட்டங்களில் இன்று (மார்ச்.11) கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருந்தது. அதன்படி திருவாரூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று விடியற்காலை முதலே கனமழையானது கொட்டித் தீர்த்து வருகிறது. இந்நிலையில் இன்று இரவு 7 மணி வரை திருவாரூர் மாவட்டத்தில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த பட்டா நிலம் வைத்துள்ள விவசாயிகள் நில உடமை சரிபார்ப்பு முகாமில் தங்களது விவசாய நில பட்டா, ஆதார் அட்டை, ஆதார் இணைக்கப்பட்ட அலைபேசி எண் ஆகிவற்றை மார்ச்.31ஆம் தேதிக்குள் பதிவு செய்து தனித்துவமான அடையாள எண்ணை பெற்றுக் கொண்டு பயன்பெற வேண்டுமென திருவாரூர் மாவட்ட ஆட்சியர் கேட்டுக் கொண்டுள்ளார். SHARE NOW..
கடந்த சில தினங்களாக வறண்ட வானிலை நிலவியது. அதைத் தொடர்ந்து தமிழகத்தில் இன்று (மார்ச்.11) திருவாரூர், மயிலாடுதுறை, தஞ்சை, நாகை, புதுக்கோட்டை உள்ளிட்ட 12 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள பொதுமக்கள், விவசாயிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. SHARE NOW..
தமிழக மருத்துவ தேர்வாணையம் பார்மசிஸ்ட் பிரிவில் உள்ள 425 காலியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இப்பணியிடங்களுக்கு ஆன்லைன் வாயிலாக தேர்வு நடைபெறும். ஊதியம் ரூ.35,000 – ரூ.1,30,400ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எனவே டி.பார்ம், பி.பார்ம், பார்ம்.டி படிப்பை முடித்தோர் இங்கு <
Sorry, no posts matched your criteria.