Thiruvarur

News March 19, 2025

திருவாரூரில் இரத்ததான முகாம்: எம்.எல்.ஏ பங்கேற்பு

image

திருவாரூர் மாவட்ட அனைத்திந்திய இளைஞர் மற்றும் மாணவர் பெருமன்றம் சார்பில் 1000 இளைஞர்கள் மாணவர்கள் பங்கேற்கும் இரத்ததான முகாம் திருவாரூர் மருத்துவமனையில் வரும் 23.03.2025 (ஞாயிறு) காலை 10 மணி முதல் நடைபெற உள்ளது. முகாமை திமுக மாவட்ட செயலாளர் பூண்டி கே. கலைவாணன் எம்எல்ஏ துவக்கி வைக்கிறார். நாகை எம்பி வை.செல்வராஜ், மருத்துவ கல்லூரி முதல்வர் எஸ்.ராஜேந்திரன் ஆகியோர் இதில் கலந்துகொள்கின்றனர்.

News March 19, 2025

மன்னார்குடியில் இலவச டிஎன்பிசி பயிற்சி வகுப்பு

image

மன்னார்குடி ரோட்டரி சங்கம் சார்பில் வரும் ஜூலை.13-ஆம் தேதி நடைபெற உள்ள டி.என்.பி.எஸ்.சி குரூப்-4 தேர்வுகளுக்கு தயாராகும் ஏழை மாணவ மாணவிகளுக்கு உதவும் வகையில் இலவச பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளது. மன்னார்குடி வடசேரி சாலையில் அமைந்துள்ள ஆண்டாள் வெங்கடேசன் அரங்கத்தில் நாளை (மார்ச்.20) மாலை 4 மணியளவில் நடைபெறும் அறிமுக வகுப்பில் ஆர்வமுள்ளோர் கலந்து கொள்ளும்மாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. SHARE NOW!

News March 19, 2025

எள் பயிர் காப்பீடு திட்ட தேதியை நீட்டிக்க கோரிக்கை

image

திருவாரூர் மாவட்டத்தில் தொடர்ந்து பெய்த கனமழையின் காரணமாக மன்னார்குடி கோட்டூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சாகுபடி பணியில் விவசாயிகள் ஈடுபட்டிருந்தனர். கடந்த 2 நாட்களுக்கு முன்பு பெய்த மழையால் எள் பயிர்கள் பெரிது பாதிக்கப்பட்டு இருக்கிறது. எனவே, பயிர் காப்பீடு செய்வதற்கான தேதியை மாவட்ட ஆட்சியர் நீட்டித்து தர வேண்டும் என காவிரி டெல்டா பாசன விவசாய சங்க தலைவர் தர்மசுவாமிநாதன் கோரிக்கை விடுத்துள்ளார்.

News March 19, 2025

ஆழி தேரோட்டத்தை முன்னிட்டு கூட்டம்

image

திருவாரூர் மாவட்ட ஆட்சியரக அலுவலக கூட்டரங்கில் அருள்மிகு திருவாரூர் தியாகராஜ சுவாமி திருக்கோயில் ஆழி தேரோட்டம் 2025 முன்னிட்டு அலுவலர்களுடனான ஒருங்கிணைப்பு கூட்டம் ஆட்சியர் வ.மோகனச்சந்திரன் தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கருண்கரட் உடனிருந்தார். மேலும், இக்கூட்டத்தில் அனைத்து துறை அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

News March 19, 2025

பாலியல் வன்கொடுமைக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

image

பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இதனை கண்டித்து தமிழக முழுவதும் இந்திய மாதர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக திருவாரூர் மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாதர் சங்க மாவட்ட செயலாளர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

News March 18, 2025

திருவாரூரில் ரோந்து காவலர்களின் விவரம்

image

திருவாரூர் மாவட்டத்தில் இன்று (18.03.2025) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவல் அதிகாரிகள் விவரம் வழங்கப்பட்டுள்ளது. இரவு நேர குற்றங்களைத் தடுக்க காவல் துறையின் உடனடி உதவிக்கு, இரவு ரோந்து காவல் அதிகாரிகளை அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யவும் என காவல் துறையின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News March 18, 2025

திருவாரூர் மாவட்ட விவசாயிகளே 31ஆம் தேதி தான் கடைசி

image

திருவாரூர் மாவட்டம் முழுவதும் அந்தந்த வருவாய் கிராமங்களில் நடைபெற்று வரும் நில உடமை பதிவுகள் சரிபார்த்தல் முகாமில், விவசாயிகள் தனித்துவமான அடையாள எண்ணை பெற்றுக் கொள்ள வேண்டும். இந்த அடையாள எண் பெற்ற விவசாயிகளுக்கு மட்டுமே மத்திய அரசு வழங்கும் ரூ.6000 கிடைக்கும் என்று மாவட்ட வேளாண் இணை இயக்குநர் தெரிவித்துள்ளார். எனவே, விவசாயிகள் இதற்கு மார்ச் 31ஆம் தேதிக்குள் விண்ணபிக்கவும். இதை SHARE பண்ணுங்க.

News March 18, 2025

திருவாரூர் ஆழித்தேர் அதிசயங்கள்

image

திருவாரூர் தியாகராஜர் கோயில் ஆழித்தேர் ஆசியாவின் மிகப்பெரிய தேர் என்ற பெருமைக்குரியதாகும். பூதப்பார், சிறு உறுதலம், பெரிய உறுதலம், நடகாசனம், விமாசனம், தேவாசனம், சிம்மாசனம் என 7 அடுக்குகளைக் கொண்ட தேரின் 4ஆவது அடுக்கில்தான் தியாகராஜர் வீற்றிருப்பார். மேலும் குந்தியாலம், கொடியாலம், பாம்பு பாலம் உட்பட மொத்தம் 92 அலங்காரங்கள் தேருக்குச் செய்யப்படும். தியாகராஜர் பக்தர்களுக்கு SHARE பண்ணுங்க..

News March 18, 2025

கோடை வெயிலில் தற்காத்துக் கொள்ள கலெக்டர் அறிவுரை

image

திருவாரூர் மாவட்டத்தில் கோடை வெயில் தொடக்கத்திலேயே அதிகமாக இருக்கிறது. எனவே வெயிலில் இருந்து தற்காத்துக் கொள்ள தேவையான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும், எலுமிச்சை ஜூஸ், மோர் போன்ற ஜூஸ்கள் அருந்த வேண்டும், முதியோர்களின் உடல் நிலையை தினமும் இருமுறை சரிபார்த்துக் கொள்ள வேண்டும் உள்ளிட்ட அறிவுரைகளை மாவட்ட ஆட்சியர் மோகனசந்திரன் வழங்கியுள்ளார். உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு SHARE பண்ணுங்க..

News March 17, 2025

Way2News எதிரொலி: முத்துப்பேட்டை அருகே சாலை சீரமைப்பு

image

திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை ஒன்றியம், உதயமார்த்தாண்டபுரம் ஊராட்சியில் இருந்து மேலப் பெருமழை செல்லும் இணைப்பு சாலையானது கடந்த சில தினங்களுக்கு முன் பெய்த மழையினால் மிகுந்த சேதமடைந்தது. இதுகுறித்து கடந்த மார்ச்.16 ஆம் தேதி Way2News-இல் செய்தி வெளியிடப்பட்டது. இதன் காரணமாக தற்போது சாலையோரத்தில் மண் மூட்டைகளை அமைத்து சீரமைக்கும் பணிகளில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். SHARE NOW!

error: Content is protected !!