India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மீனவர் நல வாரிய உறுப்பினர்கள் தங்களது விவரங்களை மென்பொருளில் பதிவு செய்து கொள்ளுமாறு கலெக்டர் மோகனசந்திரன் தெரிவித்துள்ளார். பழைய உறுப்பினர் அட்டை, ஆதார் அட்டை, வங்கி கணக்கு ஆகிய ஆவணங்களுடன் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இயங்கும் மீனவர்நலத்துறை அலுவலகம் மற்றும் முத்துப்பேட்டையில் உள்ள மீன்வளத்துறை அலுவலகத்தில் நேரடியாக சென்று வரும் 31ஆம் தேதிக்குள் பதிவு செய்து கொள்ளலாம். SHARE NOW!
திருவாரூர் மாவட்டம் விளமல் பகுதியில் பதஞ்சலி மனோகரர் கோயில் உள்ளது. இங்கு ஒவ்வொரு அமாவாசை நாளிலும் சிவனுக்கு அன்னாபிஷேகம் செய்யும் பழக்கம் உள்ளது. இக்கோயிலில் சிவன் காட்டிய ருத்ர பாதத்திற்கு தினமும் பூஜைகள் நடைபெறுகின்றன. சிவன் திருவடி காட்டி அருளிய தலம் என்பதால் இங்கு நவகிரகங்கள் கிடையாது. இக்கோவில் பற்றி தெரிந்தால் கமெண்ட் பண்ணுங்க.. தெரியாதவங்களுக்கு SHARE பண்ணுங்க…
இந்திய ராணுவத்தில் நடப்பாண்டுக்குரிய ஆட்சேர்ப்புக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்நிலையில் அக்னிவீர் ஜெனரல் டியூட்டி, அக்னிவீர் டெக்னிக்கல், அக்னிவீர் அலுவலக உதவியாளர்/ ஸ்டோர் கீப்பர் டெக்னிக்கல் ஆகிய பிரிவுகளுக்கு இங்கே <
திருவாரூர் தியாகராஜர் கோயில், எண்கண் பிரம்மபுரீஸ்வரர் கோயில், திருக்கொட்டாரம் ஐராவதீஸ்வரர் கோயில், மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கோயில், ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோயில், திருப்பாம்புரம் சேஷபுரீஸ்வரர் கோயில், திருவீழிமிழலை விழிநாதர் கோயில், திருக்கண்ணமங்கை பக்தவச்சல பெருமாள் கோயில், திருமீயச்சூர் லலிதாம்பிகை ஆலயம், ஸ்ரீவாஞ்சியம் வாஞ்சிநாத சுவாமி கோயில் ஆகிய கோவில்களை மிஸ் பண்ணிடாம பாருங்க! பகிரவும்..
தமிழ்நாடு சட்டப்பேரவையில் அமைச்சர் தங்கம் தென்னரசு பட்ஜெட்டை வாசித்து வருகிறார். இந்நிலையில் திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் புதிய அரசுக் கலைக்கல்லூரி அமைக்கப்படும் என அறிவித்துள்ளார். மேலும் பல அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. திருவாரூர் மக்களே SHARE பண்ணுங்க..
டேராடூனில் உள்ள இராஷ்ட்ரீய இந்திய ராணுவக் கல்லூரியில் ஜனவரி 2026 பருவத்தில் 8ஆம் வகுப்பு மாணவ, மாணவிகள் சேர்க்கைக்கான தேர்வு ஜுன் 1ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதில் சேர விருப்பம் உள்ளவர்கள் பெற்றோர் (அ) பாதுகாவலர் தமிழ்நாட்டில் வசிப்பவராக இருத்தல் வேண்டும். 2026ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் தேதியன்று பதினொன்றரை வயது நிரம்பியவராக 13 வயது அடையாதவராக இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். SHARE NOW..
சைவத்திருத்தலங்களின் தலைமை பீடமாகவும் பிறந்தாலே முக்தி தரும் சிறப்பு வாய்ந்த தலமாகவும் திகழ்கின்ற திருவாரூர் ஸ்ரீ தியாகராஜ சுவாமி திருக்கோயிலில் வருகின்ற ஏப்ரல் 7 ஆம் தேதி உலக பிரசித்தி பெற்ற ஆழித்தேர் திருவிழா நடைபெற உள்ளது. அதற்காக இன்று (13.03.2025) விக்னேஸ்வர பூஜை மற்றும் வாஸ்து பூஜை ஆகியவை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே திருவிசயமங்கை கிராமத்தில் அமைந்துள்ளது ஸ்ரீ மங்களநாயகி சமேத திருவிஜயநாதேஸ்வரர் கோயில். தேவார பாடல் பெற்ற இக்கோயிலில் விஜயநாதரை வணங்கினால் ஜெயம் கிட்டும் என்பதால் வியாபார செயல்களில் வெற்றி அடைய ஏராளமான பக்தர்கள் இங்கு வந்து தரிசனம் செய்கின்றனர். தொழிலில் முன்னேற, வியாபாரம் சிறக்க வியாபார அபிவிருத்தி ஸ்தலமாக இக்கோயில் விளங்குகிறது. உங்களது நண்பர்களுக்கு பகிரவும்!
தமிழக அரசின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு, காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை சார்பாக தனிநபர்கள் மற்றும் அமைப்புகளுக்கு பசுமை சாம்பியன் விருதும், ரூ.1 லட்சம் பணமும் வழங்கப்பட உள்ளது. விண்ணப்பத்தினை www.tnpcb.gov.in என்ற வலைத்தளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அதற்கு கடைசி தேதி ஏப்.15 ஆகும். திருவாரூர் மாவட்டத்தில் தகுதி உடையவர்கள் விண்ணப்பிக்க கலெக்டர் மோகனசந்திரன் அழைப்பு விடுக்கிறார். SHARE NOW.
நீடாமங்கலம் வேளாண் அறிவியல் நிலைய விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ள அறிக்கையில்: பருத்தி வறட்சியை தாங்கி கொள்ளும். ஆனால் அதிக மழை அல்லது நீர் தேக்கத்தை தாங்காது. எனவே பதிப்புகளில் இருந்து விவசாயிகள் தங்களது பயிர்களை தற்காத்து கொள்ள வயலில் தேங்கி உள்ள நீரை வடிகால் வசதி செய்து வடிய வைக்க வேண்டும். பின்னர் காம்ப்ளக்ஸ் (19:19:19 ) உரம் தெளிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளனர். விவசாயிகளுக்கு SHARE பண்ணுங்க..
Sorry, no posts matched your criteria.