Thiruvarur

News April 29, 2025

மன்னார்குடி பாஜக நிர்வாகிக்கு ஜாமீன்

image

மன்னார்குடியை சேர்ந்த லெனின் பாஜக மாவட்ட செயற்குழு உறுப்பினராக பதவி வகித்து வருகிறார். இவர் கடந்த சில தினங்களுக்கு முன் தனது முகநூல் பக்கத்தில் முதல்வர் ஸ்டாலின் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் புகைப்படம் பதிவிட்டதற்காக போலீசாரால் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. இதையடுத்து இன்று விடுதலை செய்யப்பட்ட அவருக்கு பாஜக நிர்வாகிகள் வரவேற்பு அளித்தனர்.

News April 29, 2025

திருவாரூர் மாவட்டத்தின் வரலாறு

image

திருவாரூர் மாவட்டத்தின் பயோடேட்டா குறித்து உங்களுக்கு தெரியுமா? திருவாரூர் மாவட்டம் கடந்த 1997-இல் தஞ்சை மற்றும் நாகை மாவட்டங்களிலிருந்து பிரித்து கலைஞரால் தனிமாவட்டமாக உருவாக்கப்பட்டது. 9 தாலுகா, 10 ஊராட்சி ஒன்றியங்கள், 4 நகராட்சிகள், 573 வருவாய் கிராமங்கள் என பரந்து விரிந்த நிர்வாக அமைப்பை திருவாரூர் மாவட்டம் கொண்டுள்ளது. உங்களுக்கு தெரிந்த இந்த தகவலை உங்க நண்பர்களுக்கும் SHARE செய்யவும் !

News April 29, 2025

திருவாரூர்: அறிந்துகொள்ள வேண்டிய காவல்துறை எண்கள்

image

திருவாரூர் மாவட்ட மக்கள் கட்டாயம் தெரிந்து வைத்திருக்க வேண்டிய முக்கியமான மாவட்ட காவல்துறை அதிகாரிகளின் எண்கள்: மாவட்ட கண்காணிப்பாளர்-9498110066, திருவாரூர் துணை கண்காணிப்பாளர்-9498100866, நன்னிலம் துணை கண்காணிப்பாளர்-9498100874, மன்னார்குடி துணை கண்காணிப்பாளர்-9498100881, திருத்துறைபூண்டி துணை கண்காணிப்பாளர்-9498100891, முத்துபேட்டை துணை கண்காணிப்பாளர்-9498100897. இதை மறக்காமல் SHARE செய்யவும்!

News April 28, 2025

ரோட்டரி நடத்தும் இலவச கண் சிகிச்சை முகாம்

image

மன்னார்குடி ரோட்டரி சங்கம் மற்றும் கோவை தனியார் கண் மருத்துவமனை சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம் (04/05/2025) ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி முதல் மதியம் 1 மணிவரை வடசேரி சாலையில் உள்ள ரோட்டரி ஹாலில் நடைபெற உள்ளது. பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள ரோட்டரி சங்கத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இதில் கண்கள் தொடர்பான அனைத்து பிரச்சனைகளுக்கு சிகிச்சை குறித்து இந்த முகாம் நடைபெறவிருக்கிறது.

News April 28, 2025

பட்டா, சிட்டாவுக்கு இனி சிரமம் இல்லை.

image

உங்கள் நிலத்தின் சர்வே எண், பட்டா விவரங்களை அறிய தமிழக அரசால் புதிய செயலி உருவாக்கப்பட்டுள்ளது. செல்போனில் TamilNilam Geo-Info என்ற செயலியை பதிவிறக்கம் செய்தால் போதும். அதில் நாம் தற்போது எந்த இடத்தில் இருக்கின்றோமோ அந்த கூகுள் மேப்புடன், சர்வே எண் ஆகிய விவரங்கள் தெரியும். இதில் வீடு, மனை உள்ளிட்ட ஆவணங்களை மக்கள் எளிதாக சரிபார்த்து கொள்ளலாம். அனைவருக்கும் Share செய்து பயனடையுங்கள்..

News April 28, 2025

திருவாரூரில் வருகிற 1ம் தேதி கிராம சபை கூட்டம்

image

திருவாரூர் மாவட்டத்திலுள்ள 430 கிராம ஊராட்சிகளிலும், தொழிலாளர் தினமான 01.05.2025 அன்று கிராம சபை கூட்டங்கள் நடைபெறவுள்ளன. இக்கூட்டத்தில், தொழிலாளர் தினத்தின் கருப்பொருள், கிராம ஊராட்சி நிர்வாகம், பொதுநிதி செலவினம், இணையவழி மனைப்பிரிவு மற்றும் கட்டட அனுமதி வழங்குதல்,ஆகிய இனங்களை இணையவழி செலுத்துவதை உறுதிப்படுத்த பொதுமக்கள் கலந்து கொள்ள ஆட்சியர் மோகனசந்தரன் கேட்டுக் கொண்டுள்ளார்.

News April 28, 2025

திருவாரூர்: மின்தடை புகார்களுக்கான எண்

image

திருவாரூர் மாவட்டத்தில் மின்தடை புகார்களுக்கு கட்டணமில்லா தொலைப்பேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி உள்ளது. அதன்படி, திருவாரூர் மாவட்ட மேற்பார்வை பொறியாளர் அலுவலக முகவரி: 73, C – துர்கலையா ரோடு , திருவாரூர் -610001; மின்னஞ்சல் : setrvr@tnebnet.org மற்றும் தொலைப்பேசி எண்: 04366244099. இந்த தகவலை உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு SHARE செய்து தெரியப்படுத்துங்க…

News April 28, 2025

திருவாரூர்: காணாமல்போன பெண் சடலமாக மீட்பு

image

முத்துப்பேட்டை ஜாம்புவானோடை கிராமத்தைச் சேர்ந்த கஸ்தூரி(46) என்ற மனநிலை பாதிக்கப்பட்ட பெண், கடந்த 23ம் தேதி காணாமல் போயுள்ளார். இதுகுறித்து கணவர் ரமேஷ் முத்துப்பேட்டை போலீசில் புகார் செய்திருந்தார். இந்த நிலையில், நேற்று அப்பகுதியில் உள்ள கந்தபரிச்சான் ஆற்றில் கஸ்தூரி அரைகுறை ஆடையுடன் இறந்த நிலையில் கிடந்துள்ளார். சடலத்தை மீட்ட போலீசார் பிரேதப்பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்

News April 27, 2025

நோய் ஏற்படாமல் காக்கும் பூவனூர் சாமுண்டீஸ்வரி அம்மன்

image

நீடாமங்கலம் அருகே பூவனூர் சதுரங்க வல்லபநாதர் கோயில் அமைந்துள்ளது. திருநாவுக்கரசரால் பாடல் பெற்ற இக்கோவிலில் சாமுண்டீஸ்வரி அம்மனுக்கென தனிசன்னதி அமைந்துள்ளது. வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை சாமுண்டீஸ்வரி அம்மனுக்கு நடைபெறும் சிறப்பு பூஜையில் கலந்து கொண்டு அங்கு வழங்கப்படும் வேர் ஒன்றை உடம்பில் கட்டிக்கொண்டால் நோய்கள் ஏதும் நெருங்காது என்பது இப்பகுதி மக்களின் நம்பிக்கையாக உள்ளது. SHARE!

News April 27, 2025

திருவாரூர்: விமான நிலையத்தில் வேலைவாய்ப்பு

image

இந்தியாவில் உள்ள பல்வேறு விமான நிலையங்களில் காலியாக உள்ள 309 விமான போக்குவரத்து கட்டுப்பாட்டாளர் (Air Trafiic Controller) பணியிடங்களுக்கான அறிவிப்பை இந்திய விமான நிலையங்கள் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதன்படி பி.ஈ /பி.டெக் முடித்த பொறியியல் பட்டதாரிகள் www.aai.aero என்ற இணையதளம் வாயிலாக இதற்கு விண்ணப்பிக்கலாம். இன்ஜினியரிங் முடித்துவிட்டு வேலைதேடும் உங்க நண்பருக்கு இதனை SHARE செய்யவும்..

error: Content is protected !!