India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருத்துறைப்பூண்டி, ராயநல்லூர் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின்பேரில் திருத்துறைப்பூண்டி டிஎஸ்பி சோமசுந்தரம் தலைமையிலான போலீசார் ராயநல்லூர் கடை தெருவில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு வந்த ராயநல்லூர் செட்டிமுளை தென்பாதி பகுதியைச் சேர்ந்த ராஜேஷ் கண்ணன் (26) விற்பனைக்காக 1,250 கிராம் கஞ்சா வைத்திருந்தது தெரியவந்ததையடுத்து அவரை கைது செய்தனர்.
திருவாரூர், திருத்துறைப்பூண்டி 20-வது வார்டில் இன்று (10.4.2024) நாகை நாடாளுமன்ற வேட்பாளர் சுர்ஜித் சிங் சங்கரை ஆதரித்து இரட்டை இலை சின்னத்தில் திருத்துறைப்பூண்டி நகர கழக செயலாளர் டிஜி சண்முகசுந்தரம் தலைமையில் பொதுமக்களிடம் வாக்குகள் சேகரித்தனர். இதில் அதிமுக நகர பொறுப்பாளர்கள் வார்டு பொறுப்பாளர்கள் மற்றும் கூட்டணி கட்சி பொறுப்பாளர்கள் உடன் இருந்தனர்.
நீடாமங்கலம் பகுதியில் பறக்கும் படை அதிகாரி முத்துகுமரன் தலைமையில், திருமக்கோட்டை சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் வீராசாமி, மன்னாா்குடி காவலா் பாலமுருகன் உள்ளிட்டோரை கொண்ட குழுவினா், அனுமந்தபுரம் சாலையில் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, ஆவணங்களின்றி இருசக்கர வாகனத்தில் எடுத்துவரப்பட்ட ரூ.1.26 லட்சத்தை தோ்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.
கூத்தாநல்லூர் அருகே உள்ள பொதக்குடி நோன்பு பெருநாள் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு ரமலான் சிறப்பு தொழுகை (பிறை தெரிந்தவுடன்) பொதக்குடி நூரியா தெருவில் நூருல்லா நினைவு விளையாட்டு மைதானத்தில் காலை 7.15 மணிக்கும், சவுக்கத்தலி தெருவில் அமைந்துள்ள ஜன்னத்துல் பிர்தௌஸ் பள்ளிவாசலில் காலை 7 மணிக்கும், அப்துல்லா தெருவில் அமைந்துள்ள பாத்திமா பள்ளிவாசலில் காலை 6.45 மணிக்கும் நடைபெறும் எனக் கூறப்பட்டுள்ளது.
திருவாரூா் மாவட்டத்தில் பரவலாக இருளா் சமுதாயத்தினா் வசித்து வருகின்றனா். அந்த வகையில் நீடாமங்கலம் தாலுகா, எடக்கீழையூா் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட பழங்குடி இருளா் சமுதாயத்தினா் வசித்து வருகின்றனா். திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு நேற்று வந்த அவர்கள் சாதிச் சான்றிதழ் வழங்காததால் மக்களவைத் தோ்தலை புறக்கணிக்கவுள்ளதாக தெரிவித்தனா். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
நாம் தமிழர் கட்சியின் சார்பில் நாகை நாடாளுமன்ற வேட்பாளராக போட்டியிடும் கார்த்திகா அவர்கள் நேற்று நாச்சிகுளம், பாண்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது மேலத்தொண்டியக்காடு பகுதியில் உற்சாக வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து அப்பகுதி மக்கள் நீண்டநாள் கோரிக்கையான தடுப்பணை மற்றும் குடிநீர் வசதிகளை செய்து தர வேண்டும் என கோரிக்கை மனு அளித்தனர்.
பாஜக சார்பில் நாகை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் எஸ்.ஜி.எம்.ரமேஷை ஆதரித்து திருவாரூர் தெற்கு வீதியில் தேர்தல் பிரச்சார கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்துகொண்டு பொதுமக்களிடையே பேசினார். இக்கூட்டத்தில் கூட்டணி கட்சியை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர். மேலும், அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி வட்டம் மேலும் மருதூர், வடபாதி, பிச்சங்கொட்டகம், கட்டிமேடு ஆகிய ஊராட்சி பகுதிகளில் இன்று (8.4.2024) அதிமுக நாகை நாடாளுமன்ற வேட்பாளர் சுர்ஜித் சிங் சங்கருக்கு, அதிமுக மாவட்ட செயலாளர், நன்னிலம் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.காமராஜர் கூட்டணி கட்சித் தொண்டர்களுடன் வாக்கு சேகரித்தார்.
திருவாரூர் மாவட்டம், அதங்குடி பகுதியைச் சேர்ந்த பிரித்திவிராஜ்(21) நாகை, தோப்புத்துறையைச் சேர்ந்த தமிழரன் என்பருடன் காருக்குடியில் உள்ள உறவினர் வீட்டு நிகழ்வுக்கு நேற்று இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது, திருக்குவளை அருகே முன்னால் சென்ற லாரியை முந்தி செல்ல முயன்ற போது எதிர்பாராத விதமாக லாரியில் மோதி தலை நசுங்கி உயிரிழந்தார். பின்னால் இருந்த தமிழரசன் லேசான காயங்களுடன் உயிர்தப்பினார்.
திருவாரூர், மன்னார்குடி காரிக்கோட்டை அருகே அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவர்கள் சதீஷ்குமார், தேவேந்திரன். இருவரும் மன்னார்குடியில் இருந்து பைக்கில் வந்துகொண்டிருந்தனர். அப்போது, மேலவாசல் அருகே கட்டுப்பாட்டை இழந்த பைக் மின்கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில், பைக்கை ஓட்டிய தேவேந்திரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சதீஷ் படுகாயமடைந்தார். விபத்து குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
Sorry, no posts matched your criteria.