India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திருவாரூர் மாவட்ட அளவில் தேர்தல் பாதுகாப்பு முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் இன்று ஆட்சியர் அரங்கில் நடைபெற்றது. தேர்தல் பார்வையாளர் (காவல்துறை) எஸ். டி. சரணப்பா தலைமை வகித்தார். ஆட்சியர் சாரு ஸ்ரீ மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜெயக்குமார் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
வருகின்ற ஏப்ரல் மாதம் 19 ஆம் தேதி நடைபெற உள்ள தஞ்சாவூர் நாடாளுமன்ற தொகுதிக்கு விவசாயிகள் சங்கம் சார்பில் போட்டியிடும் செந்தில் குமாருக்கு கப்பல் சின்னத்தில் ஆதரவு கேட்டு இன்று மன்னார்குடியில் பேரணி நடைபெற்றது. காவிரி அனைத்து விவசாயிகள் சங்க தலைவர் பி. ஆர். பாண்டியன் தலைமை வகித்தார் பேரணி நகரில் அனைத்து முக்கிய வீதிகளிலும் சென்று பேருந்து நிலையத்தில் முடிவடைந்தது
ஏப்ரல் 19-ஆம் தேதி மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், திருவாரூர் மாவட்டம் கோட்டூரில் அதிமுக சார்பில் நேற்று பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் அதிமுக மாவட்ட செயலாளரும், நன்னிலம் எம்எல்ஏ ஆர்.காமராஜ் கலந்து கொண்டு ஆலோசனை வழங்கினார். ஏப்ரல் 17ஆம் தேதியுடன் வாக்கு சேகரிப்பு நிறைவடைய உள்ள நிலையில், பல்வேறு பகுதிகளில் அதிமுக சார்பில் வாக்கு சேகரிப்பு நடைபெற்றது.
மன்னார்குடி :சட்டமன்ற தொகுதி காவல் ஆளிநர்களுக்கு பாராளுமன்ற தேர்தல் நடைபெற இருப்பதை முன்னிட்டு, திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி சட்டமன்ற தொகுதி வாக்குச்சாவடிகளுக்கு பாதுகாப்பு பணிக்கு நியமிக்கப்படும் காவல் ஆளினர்களுக்கு , வாக்குச்சாவடி பாதுகாப்பு பணியில் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் S.ஜெயக்குமார் இன்று அறிவுரை வழங்கினார.
திருவாரூரில் வாக்குப் பதிவு நாளில், வாக்குச்சாவடிகளில் போலீஸாருடன் சோ்ந்து முன்னாள் ராணுவத்தினா், ஓய்வுபெற்ற காவல்துறையினா் மற்றும் ஊா்க்காவல் படையினா் ஈடுபடுத்தப்பட உள்ளனா். இவா்கள் அனைவரும், ஏப்.17 ஆம் தேதி காலை 8 மணிக்கு திருவாருா் மாவட்ட ஆயுதப்படையில் தோ்தல் பாதுகாப்பு பணிக்காக அறிக்கை செய்து கொள்ள வேண்டும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயக்குமாா் தெரிவித்துள்ளார்.
திருவாரூர் மாவட்ட மனிதநேய மக்கள் கட்சி சார்பில் நாகை பாராளுமன்ற தொகுதி வை. செல்வராஜூக்கு கதிர் அரிவாள் சின்னத்தில் வாக்கு கேட்டு திருவாரூர், அடியக்கமங்கலம், கொடிக்கால்பாளையம், புலிவலம் ஆகிய பகுதிகளில் மாவட்ட தலைவர் முஜிபுர் ரஹ்மான், மாவட்ட பொருளாளர் நியாசுதீன் தலைமையில் இருசக்கர வாகண பிரச்சாரம் நேற்று நடைபெற்றது. இதில் மமக அமைப்பு செயலாளர் ஹலீம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
அம்பேத்கரின் 143 வது பிறந்த தினத்தை முன்னிட்டு, திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி வேதாரணியம் சாலையில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு விடுதலை சிறுத்தை கட்சியின், தெற்கு மாவட்ட செயலாளர் வெற்றி தலைமையில் முன்னாள் மாவட்ட செயலாளர் செல்வம் மற்றும் ஒன்றிய செயலாளர் நகர செயலாளர் கிளை பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு மாலை அணிவித்து உறுதிமொழி ஏற்கப்பட்டது.
பாடல் பெற்ற 108 வைணவ ஆலயங்களில் ஒன்றான திருவாரூர் அருகில் உள்ள திருக்கண்ணமங்கை அருள்மிகு ஸ்ரீ அபிஷேகவல்லி தாயார் சமேத ஸ்ரீ பக்தவத்சல பெருமாள் கோயிலில் சித்திரை திருவிழா இன்று முதல் தொடங்கி 25 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. தொடர்ந்து 18 ஆம் தேதி கருடசேவை திருவிழாவும் 23 ஆம் தேதி திருத்தேர் திருவிழாவும் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
பாஜக சார்பில் போட்டியிடும் நாகை நாடாளுமன்ற வேட்பாளர் எஸ் ஜி எம் ரமேஷ் கோவிந்த் திருத்துறைப்பூண்டி நகர் பகுதி மற்றும் ஒன்றிய பகுதிகளில் நேற்று தீவிர
வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது நெடும்பலம் பகுதியில் உள்ள சோடா கம்பெனியில் சோடா தயாரித்து கொடுத்து அங்கு வேலை பார்த்தவர்களிடம் நூதன வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
நாகை நாடாளுமன்ற தொகுதிக்கு பாஜக வேட்பாளராக எஸ்ஜிஎம் ரமேஷ் அறிவிக்கப்பட்ட நிலையில் பல்வேறு பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக கோட்டூரில் தாமரை சின்னத்திற்கு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார் இதில் கோட்டூர் பாஜக ஒன்றிய தலைவர் அரவிந்த் உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்
Sorry, no posts matched your criteria.