Thiruvarur

News March 24, 2025

திருவாரூரில் 40 ஊராட்சிகளுக்கு  காசநோய் இல்லா விருது

image

திருவாரூர் அரசு மருத்துவமணை மருத்துவ கல்லூரியில் இன்று உலக காசநோய் தினத்தினை முன்னிட்டு, திருவாரூர் மாவட்டத்தில் காசநோய் இல்லா 40 ஊராட்சிகளுக்கு ஆட்சியர் மோகனசந்திரன் கேடயம் மற்றும் நற்சான்றிதழ்களை வழங்கினார். இதில் மருத்துவ கல்லூரி முதல்வர் மற்றும் ஊராட்சி செயலர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர். நம்ம திருவாரூர் பெருமையை எல்லோருக்கும் SHARE பண்ணுங்க.

News March 24, 2025

திருவாரூரில் இன்று விரல் ரேகை பதிவு சிறப்பு முகாம்

image

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளில் குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் பயனாளிகள் விரல் ரேகை பதிவு செய்ய சிறப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் இன்று (மார்ச்.24) அந்தந்த நியாய விலை கடைகளில் விரல் ரேகை பதிவு சிறப்பு முகாம் நடத்த மாவட்ட ஆட்சியர் மோகனசந்திரன் அறிவித்திருந்தார். எனவே அனைவரும் கட்டாயம் ரேகை பதிவு செய்ய அறிவுறுத்தியுள்ளார். ரேஷன் அட்டைதாரர்களுக்கு SHARE பண்ணுங்க.. 

News March 24, 2025

திருவாரூரில் மூடப்படாமல் இருக்கும் ஜீவ சமாதி

image

திருவாரூர் அருகே மடப்புரம் ஓடம்போக்கி ஆற்றங்கரையில் அமர்ந்து 1835ஆம் ஆண்டு தட்சிணாமூர்த்தி சுவாமிகள் ஜீவசாமதி அடைந்தார். சிறப்பு என்னவென்றால் இவரின் சமாதி மண்ணுக்கு அடியில் மூடப்படாமல் உள்ளது. மடாதிபதி மட்டும் உள்ளே இறங்கி பூஜை செய்வார். இங்கு ஆவணி உத்திரத்தன்று குருபூஜை சிறப்பு வாய்ந்ததாகும். மேலும் உங்களுக்குத் தெரிந்த சிறப்பு வாய்ந்த இடங்களை கமெண்ட பண்ணுங்க..தெரியாதவர்களுக்கு SHARE பண்ணுங்க..

News March 24, 2025

மன்னார்குடி: 30 நாட்களுக்கு நடைபெறும் திருவிழா

image

வைணவ ஆலயங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற மன்னார்குடி ஸ்ரீஇராஜகோபால சுவாமி கோயில் பங்குனி திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்தது. வேறெந்த ஊரிலும் இல்லாத வகையில் மன்னார்குடியில் மட்டுமே 18 நாட்கள் திருவிழா, 12 நாட்கள் விடாயாற்றி திருவிழா என மொத்தம் 30 நாட்கள் ஊரே கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. மேலும் உங்க ஊர் சிறப்பு குறித்து கமெண்ட் பண்ணுங்க.. இதனை உங்கள் நண்பர்கள் மற்றும் பக்தர்களுக்கு SHARE பண்ணுங்க..

News March 23, 2025

திருவாரூர் ஆட்சியர் தலைமையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

image

உலக காசநோய் தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் நாளை பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. அதன் ஒரு பகுதியாக திருவாரூர் மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் தலைமையில் திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உலக காசநோய் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சி  நடைபெற உள்ளது.

News March 23, 2025

திருவாரூரில் 2 நாட்கள் குடிநீர் நிறுத்தம்

image

திருவாரூர் மாவட்டத்தில் குடிநீர் வடிகால் வாரியத்தின் வயிலாக பராமரிக்கபட்டு வரும் வேதாரண்யம் கூட்டுகுடிநீர் திட்டத்தின் பிரதான நீர்உந்து குழாய் பழுதாகி குடிநீர் கசிவு ஏற்பட்டுள்ளது. அதனால் வரும் மார்ச்.26, 27 ஆகிய தேதிகளில் குடிநீர் நிறுத்தம் செய்யப்படும் என்று தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய நிர்வாக பொறியாளர் தெரிவித்துள்ளார். உங்கள் பகுதி மக்களுக்கு SHARE பண்ணுங்க.. 

News March 23, 2025

திருவாரூர் அருகே சிக்கிய குட்கா பொருட்கள்

image

வடுவூர் காவல் சரகம் தனிப்பிரிவு காவலர்களுக்கு வந்த ரகசிய தகவலை அடுத்து வடுவூர் காவல்துறையினர் அத்திக்கோட்டை பகுதியைச் சேர்ந்த முத்துசாமி என்பவரின் வீட்டை சோதனை செய்தனர். அப்போது அங்கு ரூ.1,10 ,000 மதிப்பிலான குட்கா பொருட்கள் மொத்த விற்பனைக்காக வைத்திருந்தது தெரிய வந்தது. உடனடியாக காவல்துறையினர் முத்துசாமியை கைது செய்து அவரை சிறையில் அடைத்தனர்.

News March 22, 2025

திருவாரூர்: சொத்துவரி செலுத்த கலெக்டர் அறிவுறுத்தல்

image

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாரங்களிலும் உள்ள 430 கிராம ஊராட்சிகளில் 2024-25ஆம் ஆண்டு சொத்து வரி, குடியிருப்பு மற்றும் வணிக கட்டிடங்கள் வரி, குடிநீர் கட்டணங்களை மார்ச்.31க்குள் vptax.tnrd.tn.gov.in என்ற இணையதளத்தின் வாயிலாக செலுத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியர் மோகனசந்திரன் தெரிவித்துள்ளார். நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க..

News March 22, 2025

திருவாரூர் மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை இல்லை

image

திருவாரூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் (பொ) செளந்தரராசன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், இன்று (மார்ச்.22) சனிக்கிழமை திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வகை பள்ளிகளுக்கும் வேலை நாளாகும். தமிழ்நாடு அரசு புதிய நாட்காட்டியின்படி முழு ஆண்டு தேர்வுக்கு மாணவர்களை தயார் செய்யும் விதமாக சனிக்கிழமை முழு வேலைநாள் என்று தெரிவித்துள்ளார். மாணவர்களுக்கும், பெற்றோருக்கும் SHARE பண்ணுங்க..

News March 21, 2025

திருத்துறைப்பூண்டி: ரூ.14 லட்சத்திற்கு நடைபெற்ற சேவல் ஏலம்

image

திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருகே தகரவெளி பகுதியில் அமைந்துள்ள புற்றடி மாரியம்மன் கோவிலில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு காணிக்கையாக வழங்கப்பட்ட உயிர்சேவல்களை ஏலம் விடும் நிகழ்ச்சி கோவில் நிர்வாகம் சார்பில் கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்தது. இந்நிலையில் ரூ.13.77 லட்சத்திற்கு காணிக்கையாக வழங்கப்பட்ட சேவல்கள் ஏலம் போனதாக கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!