Thiruvarur

News August 10, 2025

திருவாரூர்: இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்களின் விவரம்

image

திருவாரூர் மாவட்டத்தில் இன்று (ஆக.10) இரவு 10 மணி முதல் நாளை (ஆக.11) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவல் அலுவலர்களின் விபரங்கள் மாவட்ட காவல் அலுவலகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இரவு நேர குற்றங்களை தடுக்க காவல் துறையின் உடனடி உதவிக்கு, இரவு ரோந்து காவல் அலுவல்ரகளை அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News August 10, 2025

திருவாரூர் மக்களே உஷார்! இதை NOTE பண்ணிக்கோங்க!

image

திருவாரூரில் அநேக இடங்களில் அடைமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்த நிலையில் உங்கள் பகுதியில் மழையால் ஏற்படும் பாதிப்புகளான, வெள்ளம், மின்தடை மற்றும் அத்தியாவசியத் தேவைகள் குறித்து தகவல் தெரிவிக்க இந்த எண்ணை Save பண்ணிக்கோங்க மாநில உதவி எண் – 1070, மாவட்ட உதவி எண்- 1077, அவசர மருத்துவ உதவி – 104 என்ற எண்கள் மழைக்காலங்களில் தேவைப்படலாம். இத்தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்

News August 10, 2025

திருவாரூர்: டிகிரி போதும்! மிஸ் பண்ணிடாதீங்க!

image

பட்டதாரி இளைஞர்களே வங்கி வேலைக்கு செல்ல ஒரு சூப்பர் வாய்ப்பு வந்துள்ளது. இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் (IOB) 750 Apprentices பணியிடங்கள் நிரப்படவுள்ளது. இதற்கு ஏதேனும் பட்டப்படிப்பு முடித்தால் போதும். வயது வரம்பு 20 முதல் 28 வயதிற்குள் இருக்க வேண்டும். மாத சம்பளமாக ரூ.15,000 முதல் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <>இங்கே கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். இத்தகவலை SHARE செய்யுங்க..

News August 10, 2025

அங்கன்வாடி மையத்தை திறந்து வைத்த அமைச்சர்

image

திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் வட்டத்திற்குட்பட்ட ரிசியூர் கிராமத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி மையத்தினை தமிழ்நாடு தொழில் முதலீடு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா நேற்று திறந்து வைத்து; குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

News August 10, 2025

மன்னார்குடி பேருந்து நிலைய கடைகள் ஏலம் ஒத்தி வைப்பு

image

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி நகராட்சியில் பழைய பேருந்து நிலையத்தை இடித்து பல கோடி ரூபாய் மதிப்பில் புதிய பேருந்து கட்டப்பட்டு உள்ளது அந்த பேருந்து நிலையத்தில் கட்டப்பட்டு இருக்கும் கடைகள் ஆக. 20,28 தேதிகளில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட கடைகளில் ஏலம் நிர்வாக காரணங்களினால் ஒத்தி வைக்கப்படுகிறது மறு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என நகராட்சி ஆணையர் அறிவிப்பு.

News August 10, 2025

திருவாரூர்: ரூ.68,400 சம்பளத்தில் அரசு வேலை-APPLY NOW!

image

தமிழ்நாடு அரசின் சுற்றுச்சூழல் துறையில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு ஏதேனும் டிகிரி முடித்த 40 வயதிற்குப்பட்டோர் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.68,400 வரை வழங்கப்படுகிறது. ஆர்வமுள்ளவர்கள் <>இந்த லிங்கை கிளிக் செய்து<<>> ஆகஸ்ட் 15ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். அரசு வேலை தேடும் உங்கள் நண்பர்களுக்கும் இதை SHARE பண்ணுங்க!

News August 10, 2025

திருவாரூர் மாவட்டத்தில் 4,506 பேர் கைது

image

திருவாரூர் மாவட்டத்தில் சட்டவிரோதமாக மது, அரசால் தடைசெய்யப்பட்ட கஞ்சா, புகையிலை பொருட்கள் விற்பனையில் ஈடுபடுபவர்கள், கடத்துபவர்கள், அச்செயலுக்கு உடந்தையாக இருப்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி, கடந்த ஜூலை மாதத்தில் சட்டவிரோதமாக கஞ்சா, மது, புகையிலை பொருட்கள் விற்பனை மற்றும் கடத்தலில் ஈடுபட்ட 4,506 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக எஸ்.பி கருண் கரட் தெரிவித்துள்ளார்.

News August 9, 2025

இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்களின் விவரம்

image

திருவாரூர் மாவட்டத்தில் இன்று (ஆக.9) இரவு 10 மணி முதல் நாளை (ஆக.10) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவல் அதிகாரிகளின் விபரங்கள் மாவட்ட காவல் அலுவலகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இரவு நேர குற்றங்களை தடுக்க காவல் துறையின் உடனடி உதவிக்கு, இரவு ரோந்து காவல் அதிகாரிகளை அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News August 9, 2025

திருவாரூர்: பெற்றோர்கள் கவனத்திற்கு!

image

திருவாரூர் மாவட்டத்தில் குழந்தைகள், பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்ய இந்த எண்களை தெரிந்து வைத்துக்கொள்வது அவசியம். 24 மணி நேரமும் பாதுகாப்பு குறித்து தகவல் தெரிவிக்கலாம்.
✅ குழந்தைகள் பாதுகாப்பு ( 1098 )
✅பெண்கள் பாதுகாப்பு ( 1091) ( 181 )
✅போலீஸ் ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு சேவை ( 112 )
✅சைபர் பாதுகாப்பு ( 1930 )
இந்த எண்களை Save பண்ணி வச்சுக்கோங்க ! மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!

News August 9, 2025

திருவாரூர்: இழந்ததை மீட்டுத் தரும் எண்கண் முருகன்!

image

திருவாரூர் – தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில் எண்கண் சுப்பிரமணிய சுவாமி கோயில் அமைந்துள்ளது. இங்கு வீற்றிருக்கும் முருகனின் சிலையை வடித்த சிற்பியின் இரு கண்களை, முத்தரச சோழன் தானமாக பெற்றுக் கொண்டதாகக் கூறப்படுகிறது. ஆனால் அவருக்கு முருகன் கண்களை வழங்கியதால் எண்கண் முருகன் என பெயர் வந்துள்ளது. இதனால் இங்கு பிராத்தித்தால் இழந்தவை எல்லாம் கிடைக்கும் என்பது ஐதீகமாக உள்ளது. இதை Share பண்ணுங்க…

error: Content is protected !!