India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித்துறை முலமாக நடைபெற்று முடிந்த பத்தாம் வகுப்பு அரசு பொதுத் தேர்வு முடிவுகள் நாளை மே 10 ஆம் தேதி காலை 9.30 மணிக்கு வெளிமிடப்படுவதாகவும் மாணவ, மாணவிகள் tnresults.nic. இந்த என்ற இணையதள முகவரியில் நாளை காலை முதல் தெரிந்து கொள்ளலாம் எனவும், திருவாரூர் மாவட்ட ஆட்சியர் சாரு ஸ்ரீ வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
ரூ.78 கோடியில் அம்ரூட் குடிநீர் திட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அம்மையப்பன் ஓடம்போக்கி ஆற்று கரையில் புதிதாக 5 ராட்சத போர்வெல் அமைக்கப்பட்டுள்ளது. 4 இடங்களில் 13 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட புதிய மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் அமைக்கப்பட்டு வருகின்றன. கிடாரங்கொண்டான், கொடிக்கால் பாளையம், கேடிஆர் நகர், ஈவிஎஸ் நகர் ஆகிய இடங்களில் இந்த நீர்த் தேக்க தொட்டிகள் கட்டப்படுகிறது.
திருவாரூர் மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, திருவாரூர் மாவட்டத்தில் இன்று (மே.09) நண்பகல் 1 மணி வரை மிதமான மழை பெய்யக்கூடும். கோடையின் வெப்பம் அதிகமான நிலையில் தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே ஆங்காங்கு மழை பொழிவு ஏற்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
தென்னிந்திய பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்குகளில் காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது. இதனால் தமிழகத்தில் 7 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு தெரிவித்துள்ளது. அதன்படி திருவாரூர் மாவட்டத்தில் இன்று காலை 10 மணி வரை மிதமான மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற பொதுச்செயலாளர் சண்முகநாதன் முத்துப்பேட்டை செய்தியாளர்களிடம் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளியில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களை மாநில அளவில் பணியிட நிரவல் செய்வதை தமிழக அரசு கைவிடல் வேண்டும். தலைமையாசிரியர்களுக்கு ஒன்றியத்திற்குள் மட்டுமே இடமாற்றங்கள் அளித்திட வேண்டும். பதவி உயர்வுகளுக்கு ஆசிரியர் தகுதித்தேர்வு தேர்ச்சியினை கட்டாயமாக்கிட கூடாது என்றார்.
திருவாரூர் மாவட்ட காவல் அலுவலகத்தில், பொதுமக்கள் குறைதீர் கூட்டம் இன்று நடைபெற்றது. மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தலைமை வகித்தார். கூட்டத்தில் புதிதாக மனு கொடுக்க வந்த 20 மனுதாரர்களிடம் நேரடியாக மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் புகார் மனுக்களை பெற்று, அவர்களின் குறைகளை கேட்டறிந்து நடவடிக்கை மேற்கொண்டார்.
மன்னார்குடி தேசிய மேல்நிலைப்பள்ளி, அன்னை தெரசா கல்வி அறக்கட்டளை இணைந்து நடத்தும் கல்வி கண்காட்சி மே.18, 19 ஆகிய தேதிகளில் தேசியப் பள்ளியில் நடைபெற உள்ளது. சென்னை, கோவையை சேர்ந்த 40 கல்லூரிகள், 10 பல்கலைக்கழகங்கள், வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள் இந்த கண்காட்சியில் பங்கேற்க உள்ளன. வங்கி கடன் வசதிகளுக்கு வழிகாட்டுதல் தரப்படும் மாணவர்கள் வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மன்னார்குடியில் இருந்து ஜோத்பூர் வரை செல்லும் பகத் கி கோதி எக்ஸ்பிரஸ் ரயில் நீடாமங்கலத்தில் நின்று செல்ல பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நீடாமங்கலம் வழி செல்லும் அனைத்து ரயில்களும் நீடாமங்கலத்தில் நின்று பயணிகளை ஏற்றிச் செல்கின்றன. ஆனால் இந்த ரயில் மட்டுமே நிற்பதில்லை. ஆனால் சர்வீஸ்-க்காக திருச்சி செல்லும் போது இரு வழியிலும் இன்ஜின் மாற்றுவதற்கு அரைமணி நேரம் நீடாமங்கலத்தில் நிற்கிறது.
திருவாரூர் மாவட்டத்தில் இன்று (மே.08) மதியம் 1 மணி வரை இடியுடன்கூடிய, மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வெப்பநிலை அதிகரிகத்து வரும் நிலையில், கடந்த சில நாட்களாகவே ஆங்காங்கு மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.
திருவாரூர் அருள்மிகு ஸ்ரீ தியாகராஜ சுவாமி திருக்கோவில் தெப்ப திருவிழா கமலாலயம் தெப்ப குளத்தில் வரும் 22.05.24 (புதன்கிழமை) 23.05.24 (வியாழக்கிழமை) 24.05.24 (வெள்ளிக்கிழமை) ஆகிய 3 நாட்கள் நடைபெறுவதை முன்னிட்டு. முக்கிய பிரமுகர்கள், அரசு அதிகாரிகள் அழைக்கும் விதமாக தமிழ்நாடு அரசு அறநிலையத்துறை சார்பில் அழைப்பிதழ் வழங்கப்பட்டு வருகின்றது.
Sorry, no posts matched your criteria.