India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருவாரூர் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக பெய்து வரும் கனமழை காரணமாக பருத்தி மற்றும் எள் சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர். இந்நிலையில், திருவாரூர் மாவட்டம் முழுவதும் கனமழையால் பாதிக்கப்பட்ட பருத்தி மற்றும் எள் பயிர்கள் குறித்து கணக்கெடுப்பு நடத்த மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ வேளாண் மற்றும் வருவாய் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
திருவாரூர் மாவட்டத்திற்கு இன்று (மே.22) கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, திருவாரூரில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கனமழை பதிவாகக்கூடும். தென்தமிழக கடலோரப் பகுதிகளில் மேல் உள்ள வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சமுதாய வளர்ச்சிக்கு சேவை ஆற்றும் இளைஞர்களது பணியை அங்கீகரிக்கும் வகையில் முதலமைச்சர் மாநில இளைஞர்கள் விருது ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினம் அன்று வழங்கப்படுகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு சுதந்திர தினத்தன்று விருது வழங்கப்பட உள்ள நிலையில் தகுதியானவர்கள் www.sdat.tn.gov.in பதிவு செய்யுமாறு திருவாரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் சாருஸ்ரீ தெரிவித்துள்ளார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் வலங்கைமானில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில். பருவம் தவறி பெய்யும் தொடர் மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரன வழங்கவும் பயிர் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு பயிர் காப்பீடும் வழங்கவும் வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மே 25ஆம் தேதி வட்டாட்சியர் அலுவலகம் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என நேற்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
திருவாரூர் மாவட்ட தமுமுக மகளிர் பேரவை சார்பில் 13 வயது முதல் 20வயதிற்குட்பட்ட மாணவிகளுக்கான கோடை கால பயிற்சி வகுப்பு வரும் மே 26, 27, 28 ஆகிய மூன்று நாட்கள் திருவாரூர் தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழக மாவட்ட அலுவலகத்தில் காலை 10 மணி முதல் 4 மணி வரை நடைபெறும். இதில் சுய ஒழுக்கம் மன உறுதி கல்வி வழிகாட்டல் ஆளுமைத் திறன் குறித்து பயிற்சி வழங்கப்பட்டு சான்றிதழ் வழங்கப்படும்.
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் ஒரு தரப்பு விசிகவினர் அரசு மருத்துவமனையை தரம் உயர்த்த கோரி ஆர்ப்பாட்டமும், மற்றொரு தரப்பினர் போலீசாரை கண்டித்து காவல்நிலைய முற்றுகை போராட்டம் என அறிவித்தால் ஏடிஎஸ்பி ஈஸ்வரமூர்த்தி, டிஎஸ்பிக்கள் ராஜா , சோமசுந்தரம் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் அங்கு பதற்றம் நிலவுகிறது.
தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை, கடத்தலில் ஈடுப்பட்ட திருவாரூர், நல்லப்பா நகரை சேர்ந்த மகேந்திரன், நீடாமங்கலம் அனுமந்தபுரம் கீழத்தெருவை சேர்ந்த ஜோயல் நீடாமங்கலம், பரப்பனமேட்டை சேர்ந்த முனியப்பன் ஆகிய மூவர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர். மேலும், அவர்கள் விற்பனைக்காக வைத்திருந்த குட்கா 150 கிலோ மற்றும் நான்கு சக்கர வாகனம் இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யபட்டது.
3 நாட்கள் துணை காவல் கண்காணிப்பாளர்கள் தலைமையில் உட்கோட்டங்களில் நடைபெற்று வருகிறது. திருவாரூர் உட்கோட்டத்தில் காவலர்களுக்கு நடத்தப்பட்டு வரும் சட்ட பயிற்சி வகுப்பு (2nd Batch) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் இன்று நேரில் பார்வையிட்டு சட்ட வகுப்புகள் குறித்து கேள்விகள் கேட்டு, அவர்களின் சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்து சட்ட வகுப்புகள் குறித்து நிறை, குறைகளை கேட்டறிந்தார்கள்.
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அரசு கலை மற்றும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவ மாணவிகள் இளங்கலை பட்டப்படிப்பில் முதலாமாண்டு சேர்வதற்கு இணையத்தளம் மூலம் விண்ணப்பிக்க கால அவகாசம் வரும் 24.05.24(வெள்ளிகிழமை) வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. நேற்றுடன் முடிவடைந்த நிலையில் மே 24ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக திருவாரூர் அரசு கல்லூரி முதல்வர் தெரிவித்துள்ளார்.
பாரதிய டாஸ்மாக் தொழிலாளர் சங்கத்தின் சார்பில் திருவாரூர் மாவட்ட தலைவர் அசோக்குமார் தலைமையில் மாநில பொதுச் செயலாளர் கோபு, நிர்வாகிகள் ராஜகோபால்,கணேசன்,ஜீவா, ஆகியோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று கோரிக்கை மனு அளித்தனர். அதில் அரசு ஊழியர்கள் போல் டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஓய்வு பெறும் வயதை 60 ஆக்கிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன் வைத்தனர்.
Sorry, no posts matched your criteria.