India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
முத்துப்பேட்டை அடுத்த செருகளத்தூர் கிராமத்தில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ விசாலாட்சி அம்பிகா சமேத ஶ்ரீ காசி விஸ்வநாதர் கோயிலில் திருப்பணிகள் முடிந்து கும்பாபிஷேகம் இன்று 200 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்றது. முன்னதாக யாக சாலை பூஜைகள் தீபாராதனைகள் நடைபெற்று சட்டநாதன் சிவாச்சாரியார் தலைமையில் 15க்கு மேற்பட்ட சிவாச்சாரியார்களால் புனித நீர் ஊற்றப்பட்டு விமான மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
திருவாரூர் மாவட்ட காவல் துறை அலுவலகத்தில் அணைத்து உட்கோட்ட காவல் கண்காணிப்பாளர்களுக்கு சிறப்பு கலந்தாய்வு கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார் தலைமையில் இன்று நடைபெற்றது. இதில் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் மற்றும் கஞ்சா கடத்தல் மற்றும் விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும், சிலுவையில் உள்ள மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தப்பட்டது.
திருவாரூர் தபால் நிலையம் முன்பு மத்திய அரசை கண்டித்து இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்றும் தற்போது இந்த ஆண்டு மருத்துவ மாணவர் சேர்க்கையை உயர்கல்வி மதிப்பெண்கள் அடிப்படையில் மாநில அரசுகளே முன்னெடுக்க வேண்டும் என்று அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் – திருவாரூர் மாவட்ட குழு சார்பில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.
முத்துப்பேட்டைக்கு தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக்கழகத்தின் மாநில பொதுச்செயலாளர் பேராசிரியர் ஹாஜா கனி நேற்று வருகை தந்தார். அவருக்கு காங்கிரஸ் சார்பில் நகரத் தலைவர் எம்.சி.சதீஷ்குமார், இளைஞர் காங்கிரஸ் மாநில செயலாளர் ஜெகபர் பாஷா, காங்கிரஸ் சட்டமன்ற பொறுப்பாளர் அன்வர்தீன் மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் சால்வை அணிவித்து வரவேற்றனர் அப்பொழுது கூட்டணி கட்சியினரும் உடன் இருந்தனர்.
திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் நகர்மன்றத்தலைவர்
பாத்திமா பசீரா தாஜ் தமிழக முதலமைச்சர்
மு.க.ஸ்டாலினை இன்று சென்னை தலைமை செயலகத்தில் நேரில் சந்தித்தார். பாராளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணி 40க்கு 40 தொகுதிகளையும் முழுமையாக வெற்றி பெற்றதற்கு முதலமைச்சருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தார்.
நன்னிலம் வட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று வருவாய் தீர்வாயம் 1433 பசலி ஆண்டிற்கான ஜமாபந்தி வருவாய் கோட்டாட்சியர் சங்கீதா தலைமையில் நடைபெற்றது. இதில், 20 கிராமங்களில் இருந்து பொதுமக்களிடம் 101 மக்கள் பெறப்பட்டது. இந்த நிகழ்வில், வட்டாட்சியர் குருமூர்த்தி மண்டல வட்டாட்சியர் ஓம் சிவகுமாரன் மண்டல துணை வட்டாட்சியர் குப்புசாமி துணை வட்டாட்சியர் கருணாமூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி கிருஷ்ணா தனியார் திருமண அரங்கில் ஆதிரங்கம் நெல் ஜெயராமன் பாதுகாப்பு பண்ணையின் சார்பில் தேசிய நெல் திருவிழா ஆண்டு தொடரும் நடைபெற்று வரும் நிலையில் 2024 ஆம் ஆண்டிற்கான தேசிய நெல் திருவிழா ஜூன். 22ஆம் தேதி திருத்துறைப்பூண்டியில் நடைபெற உள்ள நிலையில் இதற்கு சிறப்பு அழைப்பாளராக மாவட்ட ஆட்சியர் சாரு ஸ்ரீ பங்கேற்க உள்ளார்.
திருவாரூர் நாகை நாடாளுமன்ற உறுப்பினராக நடைபெற்ற முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பெருவாரியாக வெற்றி பெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இந்திய கூட்டணி வேட்பாளர். வை செல்வராஜ், கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் ராஜாவை அலுவலகத்தில் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். இந்த நிகழ்வில் திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் சுப்ராயன் உடன் இருந்தார்.
திருவாரூர் அருள்மிகு ஸ்ரீதியாகராஜ சுவாமி திருக்கோயிலில் தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் கமலமுனி சித்தருக்கு குரு பூஜை நேற்று மாலை நடைபெற்றது பூஜை செய்த சித்த மருத்துவர்களை திருவாரூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பூண்டி. கே. கலைவாணன் அவர்கள் கெளரவித்து நினைவு பரிசும் வழங்கினார தொடர்ந்து பொதுமக்களுக்கு அன்னதானமும் நடைபெற்றது
திருவாரூர் மாவட்டத்தில் கடந்த இரண்டு வருடங்களாக ITK என்ற திட்டம் மூலம் பல தன்னார்வலர்கள் இணைந்து மாணவர்களிடம் மாலை நேரங்களில் பாடம் நடத்தி வருகின்றனர். இத்திட்டம் கொரோனா காலங்களில் மாணவர்களிடம் இருந்த கற்றல் இடைவெளியை நீக்க கொண்டு வரப்பட்டது. ஆனால் இந்த ஆண்டு மே மாதம் முதல் ITK மையம் செயல்படவில்லை பள்ளி திறந்தும் இன்று வரை வகுப்பு நடத்துவதற்கு அனுமதி வரவில்லை என வருத்தத்துடன் கூறி வருகின்றனர்
Sorry, no posts matched your criteria.