India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருவாரூர் மாவட்டம் திருவாரூர் ஒன்றியத்திற்க்குட்பட்ட கல்யாணமகாதேவி ஊராட்சி அணைக்குடி கிராமத்தில் கால்நடை பராமரிப்பு துறை சார்பில் கால்நடைகளுக்கான நோய் தடுப்பூசி செலுத்தும் முகாம் இன்று நடைபெற்றது இதில் திருவாரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் கலந்து கொண்டு தடுப்பூசி முகாமினை பார்வையிட்டு நோய்த்தடுப்பு மருந்துகளை வழங்கினார் இதில் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் மருத்துவர்கள் கலந்து கொண்டனர்
முத்துப்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நேற்று டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வு மையம் அமைக்கப்பட்டு தேர்வு நடைபெற்றது. இதற்கு திருத்துறைப்பூண்டியை சேர்ந்த மாணவிகள் அபினா , மூகாம்பிகை உள்ளிட்ட மூன்று மாணவிகள் ஹால் டிக்கெட் குளறுபடியால் ஊர் மாறி சென்றுவிட்டு காலை 9.27 மணிக்கு தாமதமாக வந்ததால் அதிகாரிகள் தேர்வு எழுத அனுமதிக்கவில்லை. பின்னர் தேர்வு எழுதாமல் மூவரும் ஏமாற்றத்துடன் திரும்பினர்.
முத்துப்பேட்டை மருதங்காவெளி பிரசித்தி பெற்ற நல்லமாகாளியம்மன் கோயிலில் வருஷாபிசேக உற்சவ திருவிழாவில் நேற்று பக்தர்கள் பால் குடம் எடுத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் வேண்டுதலை வேண்டி முக்கிய வீதிகள் வழியாக பால் குடம் சுமந்து எடுத்து சென்றனர். அதன் பின்னர் சிறப்பு அபிசேகம் ஆராதனை ஆகியவை நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
திருவாரூரை சேர்ந்தவர் பாபு(திமுக பிரமுகர்). இவர் தஞ்சையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக இன்று தனது மகனுடன் காரில் வந்துள்ளார். தஞ்சாவூர் – நாகை தேசிய நெடுஞ்சாலையில் காரை வழிமறித்த மர்ம நபர்கள் அவரை சரமாரியாக மகன் கண்முன்னே வெட்டி கொலை செய்தனர். உடலை கைப்பற்றி காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவாரூர் மாவட்டம் அம்மையப்பன் பாரத் கேட்டரிங் கல்லூரியில் இன்று நடைபெற்ற தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வாணையம் நடத்தும் குரூப் 4 தேர்வு நடைபெற்று வருவதை நேரில் சென்று பார்வையிட்டார். திருவாரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் சாருஸ்ரீ திருவாரூர் வருவாய் கோட்டாட்சியர் சங்கீதா உடன் இருந்தார்.
தமிழகம் முழுவதும் 7,247 மையங்களில் குரூப் 4 எழுத்துத் தேர்வு தொடங்கியது. விஏஓ, வனக் காவலர் உள்ளிட்ட 6,244 பணியிடங்களுக்கான குரூப் 4 தேர்வை சுமார் 20 லட்சம் பேர் எழுதிவருகின்றனர். காலை 9.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை குரூப்4 தேர்வு நடைபெறுகிறது. இந்த நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் பல்வேறு பள்ளிகளில் இந்த குரூப் 4 தேர்வு நடைபெறுகிறது. பலத்த போலீஸ் பாதுகாப்பு அமைக்கப்பட்டுள்ளது.
திருவாரூர் தனியார் அரங்கில் சிஐடியு அமைப்பு தின பேரவை கூட்டம் மாவட்ட செயலாளர் முருகன் தலைமையில் (08.06.2024) நடைபெற்றது. இதில் சிஐடியு மாநில தலைவர் சௌந்தரராஜன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில குழு உறுப்பினர் நாகராஜன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். அப்போது 500 ஆண்டு சந்தாவிற்கான தொகை 80 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் சிஐடியு உறுப்பினர்கள் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
திருவாரூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தக்காளியின் கிலோ 40 முதல் 45 ரூபாய் விற்ற நிலையில் இன்று 55 ரூபாய் ஆக உயர்ந்துள்ளது. மேலும் அவரைக்காய் கிலோ ஒன்று இருக்கு 60 ரூபாயும், உருளைக்கிழங்கு கிலோ 50 ரூபாயும், பீன்ஸ் கிலோ 70 ரூபாயும், பாகற்காய் கிலோ 50 ரூபாயும், வெண்டைக்காய் 60 ரூபாயும், உருளைக்கிழங்கு 50 ரூபாயும் விற்பனையாகிறது.
திருவாரூர் மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் காரணமாக பொதுமக்கள் குறைதீர் கூட்டம் மற்றும் மக்கள் நேர்காணல் உள்ளிட்டவை தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டிருந்தது. மேலும் தேர்தல் நடத்தை விதிமுறை விளக்கிக் கொள்ளப்பட்டதால் வரும் 10 ஆம் தேதி முதல் திருவாரூரில் பொதுமக்கள் குறைதீர் கூட்டம் மற்றும் நேர்காணல் நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் சாரூஸ்ரீ தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் I.N.D.I.A கூட்டணி அனைத்து இடங்களையும் பிடித்து வெற்றி பெற்றதையடுத்து முத்துப்பேட்டை முதல் இந்தியா எல்லை லடாக் வரை பைக்கில் ஒற்றுமை பயணம் செல்லும் காங். கட்சியை சேர்ந்த முகமது முஜ்ஜம்மிலை பயணத்தை நேற்று நகர காங். தலைவர் சதீஷ்குமார் தொடங்கி வைத்தார். தர்கா முதன்மை அறங்காவலர் பாக்கர்அலி சாஹீப் வழி அனுப்பி துவக்கி வைத்தார். இதில், பல்வேறு அமைப்புகள் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Sorry, no posts matched your criteria.