India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருவாரூர் மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நாளை நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ தெரிவித்துள்ளார். இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நாளை காலை 10.30 மணியளவில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தில், விவசாயிகள் மற்றும் விவசாய சங்கப் பிரதிநிதிகள் அனைவரும் பங்கேற்று, பயன் பெறலாம் என்று தெரிவித்துள்ளார்.
திருவாரூர் மாவட்டத்தின் சில பகுதிகளை உள்ளடக்கிய நாகப்பட்டினம் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சிபிஐ வேட்பாளர் செல்வராஜ் இன்று நாடாளுமன்ற எம்.பி-யாக பதவி ஏற்றுக்கொண்டார். நடைபெற்று வரும் நாடாளுமன்ற கூட்டத் தொடரில், தற்காலிக மக்களவைத் தலைவர் மஹதாப் அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். செல்வராஜ் நாகை மக்களவைத் தொகுதிக்கு முதல்முறையாக எம்.பி-யாக பதிவியேற்றுள்ளார்.
திருவாருர் மாவட்டம் முழுவதும் உள்ள பள்ளி குழந்தைகள் கஞ்சா, குட்கா, புகையிலை மற்றும் பான் மசாலா பொருட்கள், மது அருந்துதல் மற்றும் வைத்திருப்பவர்களின் விபரத்தை அறிந்தால் உடனே காவல்துறைக்கு தொலைபேசி எண். 9498100865 அல்லது Whatsapp முலம் தகவல் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்பவர்களின் விபரம் ரகசியமாக காக்கப்படும் என திருவாரூர் எஸ்பி ஜெயக்குமார் நேற்று தனது செய்தி குறிப்பில் கூறியுள்ளார்.
திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்த கூட்டத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் மூலம் நேரடி நியமனத்தில் பணிப்பார்வையாளர் பதவிக்கு திருவாரூர் மாவட்டத்திற்கு தேர்வு செய்யப்பட்டுள்ள 2 பேருக்கும் உதவியாளர் பணியிடத்திற்கு தேர்வு செய்யப்பட்டுள்ள 3 பேருக்கும் பணிநியமன ஆணையினை கலெக்டர் சாருஸ்ரீ வழங்கினார். டிஆர்ஓ சண்முகநாதன் உடனிருந்தார்
திருவாருர் மாவட்டம் முழுவதும் உள்ள பள்ளி குழந்தைகள் கஞ்சா, குட்கா, புகையிலை மற்றும் பான் மசாலா பொருட்கள், மது அருந்துதல் மற்றும் வைத்திருப்பவர்களின் விபரத்தை அறிந்தால் உடன் காவல் துறையில் உள்ள தொலைபேசி எண். 9498100865- அல்லது Whatsapp முலம் தகவல் தெரிவிக்கலாம் தகவல் தெரிவிப்பவர்களின் விபரம் இரகசியமாக காக்கப்படும் என திருவாரூர் எஸ்பி ஜெயக்குமார் இன்று தனது செய்தி குறிப்பில் கூறியுள்ளார்
திருவாரூர் பழைய பேருந்து நிலையம் அருகில் இன்று அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம், மாதர் தேசிய சம்மேளனம் சங்கம் சார்பில் இறந்தவர்கள் போல் ஒப்பனை செய்து நூதன போராட்டம் நடைபெற்றது. கள்ளக்குறிச்சியில் உயிரிழந்த குடும்பத்திற்கு 50 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும், கள்ள சாராய வியாபாரிகள் இருந்த காவல் துறை மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்து முழக்கங்கள் எழுப்பினர்.
மன்னார்குடி தமிழ்நாடு மின்வாரியம் அலுவலகத்தில் வரும் 26ம் தேதி புதன்கிழமை காலை 11 மணியளவில் மின்நுகர்வோர் குறைதீர் நாள் கூட்டம் நடைபெற உள்ளது. மன்னார்குடி நகர், புறநகர், பேரையூர், நீடாமங்கலம், கோவில்வென்னி ,இடமேலையூர், வடுவூர் உள்ளிட்ட மின் நுகர்வோர்கள் தங்களுடைய குறைகளை நேரில் விண்ணப்பம் மூலம் அளித்து பயன்பெறலாம் என செயற்பொறியாளர் செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி வட்டம் சஞ்சீவி தெருவில் வசித்து வருபவர். நடராஜன் அமுதா இவர் மாடர்ன் தெருவில். தனது புதிய வீடு கட்டி வரும் நிலையில் அங்கு ஜேசிபி மூலம் குழி தோண்டும் பொழுது பழங்கால உலோக சிலை கண்டெடுக்கப்பட்டது. அதனை மீட்டெடுக்கும் பொழுது அது அம்மன் சிலையாக தெரிந்தது. அதை உடனடியாக வட்டாட்சியர் அலுவலகத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள் எடுத்துச் சென்று ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
தென்மேற்கு வங்கக் கடலில் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சியால், திருவாரூர் உள்பட 22 மாவட்டங்களில் இன்று (ஜூன்.23) இரவு 10 ணி வரை மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அந்த வகையில், திருவாரூர் மாவட்டத்தில் இரவு 10 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
திருவாரூர் பாஜக மாவட்ட தலைவர் பாஸ்கரன் மற்றும் மாவட்ட பொது செயலாளர் செந்திலரசன் ஆகியோர் கட்சியின் பொறுப்புகளில் இருந்தும் விடுவிக்கபடுவதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அறிக்கை வெளியிட்டுள்ளார். பாஜக நிர்வாகி மதுதுசூதனன் அரிவாளால் வெட்டப்பட்ட விவகாரத்தில் பாஜக மாவட்ட தலைவர் பாஸ்கரன் போலீஸாரால் ஏற்கெனவே கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்த்கக்கது.
Sorry, no posts matched your criteria.