India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருவாரூர் மாவட்டம் சார்பில் தேசிய நல்லாசிரியர் விருதுக்கு விண்ணப்பிக்கும் ஆசிரியர்களை விண்ணப்பிக்குமாறு வட்டார கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படும் தேசிய நல்லாசிரியர் விருது பெறுவதற்காக ஆசிரியர்கள் நேரடியாக http//_lawardstoteacher.education.gov.in என்ற இணையதள முகவரியில் வருகின்ற 15ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
திருவாரூர் மாவட்ட திமுக செயலாளர் பூண்டி கே. கலைவாணன் எம்எல்ஏ இன்று ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “திமுக இளைஞரணி மற்றும் கலைஞர் தொலைகாட்சி சார்பில் “என் உயிரினும் மேலான” என்ற தலைப்பில் பேச்சு போட்டி நடைபெறவுள்ளது. இதில் பங்கேற்க www.kalaingar100pechu.org என்ற வலைதளத்தில் வரும் 15.07.24 க்குள் விண்ணப்பிக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.
திருவாரூர் மாவட்டத்தில் இயங்கி வரும் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள டீச்சிங் அசிஸ்டன்ட் மற்றும் கெஸ்ட் பெகுளிட்டி பணியிடங்களுக்கு நேரடி நேர்காணல் மூலம் ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். வரும் 23.07.24(சனிக்கிழமை) அன்று நேர்காணல் நடைபெற உள்ளது. மேலும் விபரங்களுக்கு Com.college@cutn.ac.in என்ற இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
திருவாரூர் மாவட்டத்தில் நாளை முழு நேரமும் பள்ளிகள் செயல்படும் என திருவாரூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த அறிவிப்பில், “பள்ளிக்கல்வித்துறை நாட்காட்டியின்படி 13-07-2024 அன்று சனிக்கிழமை அனைத்து வகை பள்ளிகளுக்கும் பள்ளி வேலை நாள். எனவே மாணவர்கள் விடுப்பு இல்லாமல் வருகை புரிய வேண்டும்” என குறிப்பிடப்பட்டுள்ளது.
திருவாரூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில், 10 ஆம் வகுப்பு முதல் பட்ட வகுப்பு வரை படித்து பதிவு செய்து ஐந்தாண்டு காத்திருப்பில் உள்ள 45 வயது உட்பட்டவர்களுக்கு மாதாந்திர உதவித்தொகை அளிக்கப்பட உள்ளது. இதற்கு www.tnvelaivaaippu.gov.in என்ற இணையதளத்திலோ அல்லது மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டி மையத்தில் நேரில் வந்து விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ தெரிவித்துள்ளார்.
திருவாரூர் மாவட்டத்தில் பொது விநியோகத் திட்ட சிறப்பு பொது மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் வரும் நாளை காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரையில் நடைபெற உள்ளது. இதன்படி, புதுபத்தூர், ஆலங்குடி, ஆலத்தூர், விருப்பாட்சிபுரம், வடபாதி, மணலி, பூவனூர், புத்தகரம் ஆகிய பகுதிகளில் அந்தந்த கிராம நிர்வாக அலுவலகத்தில் முகாம் நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ நேற்று தெரிவித்துள்ளார்.
தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் ‘தமிழ்நாடு நாள்’ முன்னிட்டு இன்று(ஜூலை 11) திருவாரூரில் மாவட்ட அளவிலான பேச்சுப்போட்டி நடைபெற்றது. இதில் முதலிடம் பெற்ற பேரளம் அரசு பள்ளி மாணவர் ச.கெள.பாவேஷ்பிரசன்னாவுக்கு தமிழ்வளர்ச்சி துறை உதவி இயக்குனர் கஜலெட்சுமி ரூ.10,000 பரிசு தொகையும், சான்றிதழும் வழங்கி பாராட்டினார். மாணவர் பாவேஷ்பிரசன்னா மாநில அளவில் நடைபெறும் பேச்சுப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.
தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் ஆண்டுதோறும் தமிழ் ஆர்வலர்களுக்கு தமிழ்ச் செம்மல் விருது வழங்கப்படுகிறது. இதில் ரூ.25,000 ரொக்கப் பரிசுடன் தகுதியுரையும் வழங்கப்படுகிறது. இந்நிலையில், திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த தமிழ் ஆர்வலர்கள் <
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் அங்கன்வாடி திட்டத்தை தனியார் மையமாகும் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும். காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். புதிய கைப்பேசி வழங்க வேண்டும். உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று 200-க்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவாரூர் மாவட்டத்தில் நடப்பு ஆண்டில் நடைபெற்ற பருத்தி மறைமுக ஏலத்தில், 1328 டன் பெறப்பட்டு ரூ.8.48 கோடிக்கு வியாபாரிகள் பருத்தி கொள்முதல் செய்துள்ளதாக கலெக்டர் சாரு ஸ்ரீ தெரிவித்துள்ளார். திருவாரூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தை ஆய்வு செய்த கலெக்டர், சரியான முறையில் ஏலம் நடைபெறுகிறதா என பார்வையிட்டார். மேலும், கடந்த வாரங்களில் சராசரி விலையாக ரூ.6.909க்கு விற்பனை நடைபெற்றதாகவும் தெரிவித்தார்.
Sorry, no posts matched your criteria.