Thiruvarur

News June 25, 2024

திருவாரூர் மாவட்டத்தில்  5 பேருக்கு பணிநியமன ஆணை

image

திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்த கூட்டத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் மூலம் நேரடி நியமனத்தில் பணிப்பார்வையாளர் பதவிக்கு திருவாரூர் மாவட்டத்திற்கு தேர்வு செய்யப்பட்டுள்ள 2 பேருக்கும் உதவியாளர் பணியிடத்திற்கு தேர்வு செய்யப்பட்டுள்ள 3 பேருக்கும் பணிநியமன ஆணையினை கலெக்டர் சாருஸ்ரீ வழங்கினார். டிஆர்ஓ சண்முகநாதன் உடனிருந்தார்

News June 25, 2024

போதை பொருட்கள் குறித்து போனில் சொல்லலாம் – திருவாரூர் எஸ்பி தகவல்

image

திருவாருர் மாவட்டம் முழுவதும் உள்ள பள்ளி குழந்தைகள் கஞ்சா, குட்கா, புகையிலை மற்றும் பான் மசாலா பொருட்கள், மது அருந்துதல் மற்றும் வைத்திருப்பவர்களின் விபரத்தை அறிந்தால் உடன் காவல் துறையில் உள்ள தொலைபேசி எண். 9498100865- அல்லது Whatsapp முலம் தகவல் தெரிவிக்கலாம் தகவல் தெரிவிப்பவர்களின் விபரம் இரகசியமாக காக்கப்படும் என திருவாரூர் எஸ்பி ஜெயக்குமார் இன்று தனது செய்தி குறிப்பில் கூறியுள்ளார்

News June 24, 2024

இளைஞர் பெருமன்றம் சார்பில் நூதன போராட்டம்

image

திருவாரூர் பழைய பேருந்து நிலையம் அருகில் இன்று அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம், மாதர் தேசிய சம்மேளனம் சங்கம் சார்பில் இறந்தவர்கள் போல் ஒப்பனை செய்து நூதன போராட்டம் நடைபெற்றது. கள்ளக்குறிச்சியில் உயிரிழந்த குடும்பத்திற்கு 50 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும், கள்ள சாராய வியாபாரிகள் இருந்த காவல் துறை மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்து முழக்கங்கள் எழுப்பினர்.

News June 24, 2024

திருவாரூர் மக்களே முக்கிய அறிவிப்பு

image

மன்னார்குடி தமிழ்நாடு மின்வாரியம் அலுவலகத்தில் வரும் 26ம் தேதி புதன்கிழமை காலை 11 மணியளவில் மின்நுகர்வோர் குறைதீர் நாள் கூட்டம் நடைபெற உள்ளது. மன்னார்குடி நகர், புறநகர், பேரையூர், நீடாமங்கலம், கோவில்வென்னி ,இடமேலையூர், வடுவூர் உள்ளிட்ட மின் நுகர்வோர்கள் தங்களுடைய குறைகளை நேரில் விண்ணப்பம் மூலம் அளித்து பயன்பெறலாம் என செயற்பொறியாளர் செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

News June 24, 2024

திருவாரூர்: உலோகச் சிலை கண்டெடுப்பு

image

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி வட்டம் சஞ்சீவி தெருவில் வசித்து வருபவர். நடராஜன் அமுதா இவர் மாடர்ன் தெருவில். தனது புதிய வீடு கட்டி வரும் நிலையில் அங்கு ஜேசிபி மூலம் குழி தோண்டும் பொழுது பழங்கால உலோக சிலை கண்டெடுக்கப்பட்டது. அதனை மீட்டெடுக்கும் பொழுது அது அம்மன் சிலையாக தெரிந்தது. அதை உடனடியாக வட்டாட்சியர் அலுவலகத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள் எடுத்துச் சென்று ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

News June 23, 2024

திருவாரூரில் மழைக்கு வாய்ப்பு

image

தென்மேற்கு வங்கக் கடலில் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சியால், திருவாரூர் உள்பட 22 மாவட்டங்களில் இன்று (ஜூன்.23) இரவு 10 ணி வரை மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அந்த வகையில், திருவாரூர் மாவட்டத்தில் இரவு 10 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

News June 23, 2024

திருவாரூர் பாஜக தலைவர் நீக்கம்

image

திருவாரூர் பாஜக மாவட்ட தலைவர் பாஸ்கரன் மற்றும் மாவட்ட பொது செயலாளர் செந்திலரசன் ஆகியோர் கட்சியின் பொறுப்புகளில் இருந்தும் விடுவிக்கபடுவதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அறிக்கை வெளியிட்டுள்ளார். பாஜக நிர்வாகி மதுதுசூதனன் அரிவாளால் வெட்டப்பட்ட விவகாரத்தில் பாஜக மாவட்ட தலைவர் பாஸ்கரன் போலீஸாரால் ஏற்கெனவே கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்த்கக்கது.

News June 23, 2024

ஆசிரியர்களுக்கான பாராட்டு சான்றிதழ்

image

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் பள்ளி கல்வித்துறை சார்பில் பத்தாம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 100 விழுக்காடு தேர்ச்சி பெற்ற தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான பாராட்டு சான்றிதழ்களை திருவாரூர் மாவட்ட ஆட்சியர் சாரு ஸ்ரீ வழங்கினார். இந்த நிகழ்வில் முதன்மை கல்வி அலுவலர் புகழேந்தி, மாவட்ட கல்வி அலுவலர் மாதவன் ஆகியோர் உடன் இருந்தனர்.

News June 22, 2024

சிவகார்த்திகேயனுக்கு தோழன் விருது

image

திருத்துறைப்பூண்டியில் இன்று (ஜூன்.22) நடைபெற்ற உலகப் புகழ் பெற்ற தேசிய நெல் திருவிழாவில் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு “உழவர்களின் தோழன் விருது!” வழங்கப்பட்டது. இந்த விழாவில் பேசிய சிவகார்த்திகேயன், எல்லோரும் நெல் ஜெயராமன் ஐயாவுக்கு தான் கடைசி நேரத்தில் செய்த உதவி என்கின்றனர். தயவு செய்து அப்படி யாரும் சொல்லி விடாதீர்கள். அது உதவி அல்ல நம் ஒவ்வொருவரின் கடமை என்றார்.

News June 22, 2024

கிறிஸ்தவ தேவாலய பணியாளர் நலவாரியத்தில் சேர ஆட்சியர் அறிவிப்பு

image

திருவாரூர் மாவட்டத்தில் கிறித்தவ தேவாலயத்தில் பணிபுரிவோர் நல வாரியத்தில் சேர விண்ணப்பிக்கலாம் என்று ஆட்சியர் சாரு ஸ்ரீ இன்று தெரிவித்துள்ளார். தேவாலயத்தில் பணிபுரியும் உபதேசியர் ,கல்லறை பணியாளர், பாடகர்கள் ஆகியோருக்கு நலவாரியம் அமைக்கப்பட்டுள்ளது இதில் உறுப்பினராக சேர பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நல அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம்.

error: Content is protected !!