India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் சாரு ஸ்ரீ இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மாவட்டத்தில் நெடுஞ்சாலை துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி வசமுள்ள 86 ஏரி மற்றும் ஆறு, குளம் ஆகியவற்றில் தமிழ்நாடு அரசு உத்தரவின் படி விவசாயிகள் மற்றும் மண்பாண்ட தொழில் புரிவோர் களிமண் மற்றும் வண்டல்மண் ஆகியவற்றை எடுத்து கொள்ளலாம். இணையம் வழியாக விண்ணப்பித்து தாசில்தார்களிடம் அனுமதி பெற வேண்டும் என தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு ஆண்டும் ஜீலை 11 ஆம் நாளை உலக மக்கள் தொகை நாளாக ஐக்கிய நாடுகள் சபை மூலம் உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு ஜீலை 11ஆம் தேதி உலக
மக்கள் தொகை தினம் கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, திருவாரூர்
மாவட்டத்தில் மக்கள் தொகை விழிப்புணர்வு பேரணி, தாய்மார்கள் குழுக்கூட்டம் மற்றும் மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என மாவட்ட ஆட்சியர் சாரு ஸ்ரீ தெரிவித்துள்ளார்.
தமிழக முதல்வர் இன்று சென்னையில் காணொளி காட்சி மூலம் பொதுப்பணி துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி கட்டுப்பாட்டில் உள்ள ஏரி மற்றும் குளங்களில் விவசாயிகள் மற்றும் மண்பாண்டம் செய்வோர் கட்டணமின்றி வண்டல் மண், களிமண் எடுக்க அனுமதி ஆணையை வழங்கினார். இதனை தொடர்ந்து திருவாரூர் மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ மற்றும் எம்.பி வை.செல்வராஜ் ஆகியோர் திருவாரூரில் விவசாயிகளுக்கு ஆணையை வழங்கினர்.
தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் பருவ மழை பெய்து வருகிறது. இதனால் நீர்நிலைகள் கணிசமாக நிரம்பி வருகின்றன. இந்நிலையில், இன்று (ஜூலை 7) இரவு 7 மணி வரை திருவாரூர் உள்ளிட்ட 19 மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு விவசாய சங்க தலைவர் பி.ஆர்.பாண்டியன் இன்று ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டி படுகொலை செய்யப்பட்டு இருப்பது மிகுந்த வேதனை அளிக்கிறது. முன் விரோதம் என்ற பெயரில் படுகொலை செய்வதை அனுமதிக்க முடியாது. தமிழ் நாடு அரசு விரைந்து செயல்பட்டு உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடித்து தண்டிக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள நீடாமங்கலம் மற்றும் கோட்டூர் அரசு தொழிற்பயிற்சி மையங்களில் பயிற்சியாளர்கள் சேர்க்கை 2024 நேரடி சேர்க்கை மூலம் நடைபெற உள்ளது. சேர்க்கைக்கு, www.skilltraining.tn.gov.in இணையதளத்தில் ஜூலை 15 ஆம் தேதி வரை மாணவ மாணவிகள் பதிவு செய்து கொள்ளலாம் என திருவாரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் சாரு ஸ்ரீ தெரிவித்துள்ளார்.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி தாலுகா உள்ளிக்கோட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் திருவாரூர் மாவட்ட திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி சார்பில், பள்ளி மாணவர்களுக்கான மாபெரும் குத்து சண்டை போட்டி நாளை(ஜூலை 7) பள்ளி விளையாட்டு மைதானத்தில் நடைபெற உள்ளது. இதில் திருவாரூர் மாவட்ட பள்ளி மாணவர்கள் கலந்துகொள்ள வேண்டும் என திமுக விளையாட்டு மேம்பாட்டு குழு தலைவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் அருகே திரு ராமேஸ்வரம் ஊராட்சி கோட்டகச்சேரியில் கோயில் விழாவிற்கு விளம்பர பலகை வைக்கும் போது, விளம்பர பலகை மின்கம்பியில் உரசியதில் மின்சாரம் பாய்ந்து மதன்ராஜ் என்ற சிறுவன் உயிரிழந்தார். அந்தச் சிறுவனின் குடும்பத்திற்கு ரூ.2 லட்ச ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து அறிவித்துள்ளார்.
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே செட்டி சத்திரம் கிராமம் பெரியார் நகரைச் சார்ந்த பிரவீன் சித்திரவேல் இந்தாண்டு பாரீஸில் நடைபெற உள்ள ஒலிம்பிக்கில் டிரிபிள் ஜம்ப் போட்டியில் பங்கேற்க தேர்வாகியுள்ளார். அவருக்கு அவரது பெற்றோர்கள் மற்றும் கிராம மக்கள் பாராட்டுகளை தெரிவித்தனர். இவர் யூத் ஒலிம்பிக்கில் வெற்றி பெற்றதை தொடர்ந்து ஒலிம்பிக்கிற்கு தேர்வாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி பாரதிதாசன் அரசு கலைக் கல்லூரியில் 2024-25 ஆம் ஆண்டிற்கான முதலாம் ஆண்டு மாணவ மாணவிகளின் அனைத்து துறைகளிலும் சேர்வதற்கு 2ஆம் கட்ட கலந்தாய்வு கூட்டத்தின் கடைசி நாள் ஆக.,8 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் இணையதளம் மூலம் விண்ணப்பித்து ஆக.,8 அன்று இறுதி கலந்தாய்வில் பங்கெடுக்க வேண்டும் என கல்லூரி நிர்வாகத்தின் சார்பில் தகவல் வழங்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.