India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருவாரூரை சேர்ந்த இறந்த கூலி தொழிலாளி ராஜேந்திரன் என்பவரின் உடல், தவறுதலாக சேலத்தை சேர்ந்த குடும்பம் ஒன்றிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்நிலையில் அவரது குடும்பத்தினர் தொடர்ந்த வழக்கில், ஒரு மாதத்திற்கு முன்பு தவறுதலாக ஒப்படைக்கப்பட்டு அடக்கம் செய்யப்பட்ட ராஜேந்திரன் உடலை தோண்டி எடுத்து மீண்டும் அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.
திருவாரூர் மாவட்டத்தில் பெற்றோரால் கைவிடப்பட்ட 6 வயதுக்குட்பட்ட குழந்தைகளை பராமரிக்க, சிறப்பு தத்துவ வள மையம் துவங்குவதற்கான விருப்பத்தை தெரிவிக்கும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். இதற்கு செப்டம்பர் 2-ஆம் தேதிக்குள் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, திருவாரூர் என்ற முகவரியில் நேரில் சமர்ப்பிக்க கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
திருவாரூர் மாவட்டத்தில் பெற்றோரால் கைவிடப்பட்ட 6 வயதுக்குட்பட்ட குழந்தைகளை பராமரிக்க, சிறப்பு தத்துவ வள மையம் துவங்குவதற்கான விருப்பத்தை தெரிவிக்கும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். இதற்கு செப்டம்பர் 2ஆம் தேதிக்குள் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, திருவாரூர் என்ற முகவரியில் நேரில் சமர்ப்பிக்க கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
கூத்தாநல்லூர் வட்டத்திற்குட்பட்ட வேளுக்குடி கிராமத்தில் அமைந்துள்ள மாணிக்க வாசகர் பெருமான் ஆலயத்தில் இன்று கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது. இதில் கலந்து கொள்வதற்காக தூத்துக்குடி செங்கோல் ஆதீனம் நேற்று இரவு வேளுக்குடி கிராமத்திற்கு வருகை புரிந்தார். கிராம மக்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து அவரிடம் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் ஆசி பெற்றுச் சென்றனர்.
திருவாரூரை சேர்ந்த இறந்த கூலி தொழிலாளி ராஜேந்திரன் என்பவரின் உடலுக்கு பதிலாக வேறொருவரின் உடலை காட்டியதால், தவறுதலாக ஒரு மாதத்திற்கு முன்பு சேலத்தை சேர்ந்த குடும்பத்திடம் ஒப்படைக்கப்பட்டது. காவல்துறை. ராஜேந்திரன் உடல் அடக்கம் செயப்பட்டு ஒரு மாதம் ஆகிவிட்டதாகவும், அவரது உடலை தோண்டி எடுத்து மீண்டும் அவரது குடும்பத்திடம் ஒப்படைக்கப்பட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நாகை நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜ் கூட்டணிக் கட்சித் தலைவர்களுடன் திருவாரூர் மாவட்டத்தில் 31.8.2024 அன்று நன்றி அறிவிப்பு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இதில் திருநெல்லிக்காவல், செருவாமணி, சேந்தங்குடி, மாவட்ட குடி, ஆலத்தூர், விக்கிரபாண்டியம், 57 குலமாணிக்கம் பள்ளி, வர்த்தி, சேந்த மங்கலம் ஆகிய பகுதிகளுக்கு செல்கிறார்.
சுற்றுச்சூழலை பாதுகாக்கும் மாநிலமான தமிழகத்தில் நீர் நிலைகளை பாதுகாக்கும் வகையில் விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாடும் போது, சிலைகளை கரைப்பதற்கான மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரிய வழிகாட்டுதலின் படி மாவட்ட நிர்வாகத்தினரால் குறிப்பிட்டுள்ள இடங்களில் மட்டும் சிலைகளை கரைத்து சுற்றுச்சூழலை பாதுகாக்க ஒத்துழைப்பு வழங்குமாறு திருவாரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் சாருஸ்ரீ கேட்டுக் கொண்டுள்ளார்.
திருவாரூர் மாவட்டத்தில் 50 சதவீத மானியத்தில் மண்புழு உரம் தயாரிக்கும் மையம், இயற்கை இடுபொருட்கள் தயாரிக்கும் மையம், உயிரி பூச்சிக்கொல்லி பண்புடைய தாவரங்களை வளர்த்தெடுப்பதற்கான ஆடாதொடை, நொச்சி நடவு பொருட்கள் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு விவசாய திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளதால் இதில் பயன் அடைய விரும்புவர்கள் வேளாண் உதவி இயக்குனரை தொடர்பு கொள்ள மாவட்ட ஆட்சித் தலைவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
திருவாரூர் ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், விவசாயிகள் உழவு முதல் அறுவடை வரை தேவைப்படும் அனைத்து வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் முறையான பயன்பாடு மற்றும் பராமரிப்பு முறைகள் குறித்த விழிப்புணர்வு முகாம் நாளை (30/8/24) காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை கலெக்டர் அலுவலகத்தின் பெருந்திட்ட வளாகத்தில் நடைபெறுகிறது. இதில் விவசாயிகள் பயன்பெறுமாறு அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
திருவாரூர் மாவட்டத்தில் ஆகஸ்ட் மாத இயல்பான மழை அளவு 9.3 செ.மீ. ஆக உள்ளது. மாவட்டத்தில் விவசாயிகள் குருவை சாகுபடி துவங்கி உள்ள நிலையில் நேற்று முதல் அதிக வெயில் இல்லாத வானிலை காணப்படுவதால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இன்றைய நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 117 அடியாக உள்ளது. அனைக்கு வினாடிக்கு 4550 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கும் நிலையில், 12850 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.
Sorry, no posts matched your criteria.