India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருவாரூர் ஆட்சியர் சாரு ஸ்ரீ வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தகுதியுடைய தமிழ் ஆர்வலர்கள் தமிழ் செம்மல் விருதுக்கு ஆகஸ்ட் 8 வரை விண்ணப்பிக்கலாம். இதில் மாவட்டத்திற்கு ஒருவர் தேர்வு செய்யப்பட்டு ரூ.25000 பரிசும், தகுதியுரையும் வழங்கப்படும். இதில் விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் தமிழ் வளர்ச்சித் துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில் விண்ணப்பங்களை பெற்று விண்ணப்பிக்கலாம் என தெரிவித்துள்ளார்.
திருவாரூர் ஆட்சியர் சாரு ஸ்ரீ வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் வங்கி கடன் பெற்று தொழில் தொடங்க படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம். வியாபாரம் சார்ந்த தொழில்களுக்கு கடனாக ரூ.15 லட்சம் வழங்கப்படும். கடன் உதவிக்கு 25 சதவீதம் அல்லது ரூ.375000 மானியம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் மாவட்ட தொழில் மையம் அல்லது 04366 290518 என்ற தொடர்பு கொள்ளலாம்.
திருவாரூர், மன்னார்குடி அருகே உள்ள புள்ளவராயன்குடிகாட்டை சேர்ந்தவர் ஜெகதீசன்(19). கடந்த ஆண்டு அர்ஜெண்டினாவில் நடைபெற்ற 19 வயதுக்குட்பட்டோருக்கான சர்வதேச வாலிபால் போட்டியில் இந்திய அணிக்காக விளையாடினார். இந்தோனேசியாவில் நாளை(ஜூலை.23) தொடங்கும் ஆசிய வாலிபால் போட்டியில் இந்திய அணிக்காக விளையாட தேர்வாகியுள்ளார்.
திருவாரூர் மாவட்டத்தில் பட்டதாரி ஆசிரியர்களுக்கான மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் கலந்தாய்வுக்கான முன்னுரிமை எண் வெளியிடப்பட்டுள்ளது. வருகின்ற 22ஆம் தேதியன்று ஆங்கிலம், கணிதம், அறிவியல் ஆகிய பாட ஆசிரியர்களுக்கு 1 முதல் 300 வரையிலான எண்களுக்கும் தமிழ் ஆசிரியர்களுக்கு 1 முதல் 25 வரையிலான எண்களும் உள்ள ஆசிரியர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என மாவட்ட கல்வி அலுவலகம் அறிவித்துள்ளது.
திருவாரூர் பழைய பேருந்து நிலையத்தில் கட்டுமான பணிகள் நடைபெற உள்ளது. எனவே மயிலாடுதுறை, காரைக்கால், சென்னை செல்லும் பேருந்துகள் புதுப்பாலம் இ.பி. ஆபிஸ் வட கண்டம் வழி செல்லுமாறும், அந்த ஊர்களில் இருந்து திருவாரூர் வரும் பேருந்துகள் கங்களாஞ்சேரி வடக்குவீதி அலங்கார் இன், இ.பி. ஆபிஸ் வழியாக வருமாறும் போக்குவரத்து துறை சார்பில் கேட்டு கொள்ளப்பட்டுள்ளது.
திருவாரூர் மாவட்டம் திருத்துறைத்பூண்டி சட்டம்-ஒழுங்கு காவல்நிலையம் 22 ஆம் ஆண்டு சிறப்பாக செயல்பட்டமைக்காக, தமிழக அரசு அதனை சிறந்த காவல் நிலையம் என அறிவித்துள்ளது. இதற்கான பாராட்டு சான்றிதழ் மற்றும் கேடயத்தை சென்னையில் தமிழக காவல்துறை தலைவர் சங்கர் ஜிவாலிடம் திருத்துறைப்பூண்டி துணை காவல் கண்காணிப்பாளர் சோமசுந்தரம் வரும் ஜுலை.24 ஆம் தேதி பெற உள்ளார்.
அகில இந்திய அளவில் சப்-ஜூனியர் பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டி பெங்களூருவில் நேற்று(ஜூலை 19) நடைபெற்றது. இந்தியா முழுவதும் 800க்கும் மேற்பட்ட வீரர் வீராங்கனைகள் கலந்து கொண்டனர். இதில் திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை பகுதியைச் சேர்ந்த வீரசெல்வம் செந்தில்குமார் நீளம் தாண்டுதலில் 5.13மீ தாண்டி வெள்ளி பதக்கத்தையும், குண்டு எறிதலில் 8.6மீ தூரம் எரிந்து வெண்கல பதக்கத்தையும் கைப்பற்றினார்.
திருவாரூர் மாவட்டம் அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில், “ மின்சார கட்டண உயர்வு மற்றும் நியாய விலை கடைகளில் பொருட்களை நிறுத்துவதற்கு முயற்சி செய்வது ஆகிய காரணங்களுக்காக திமுக அரசை கண்டித்து வருகின்ற 23.07.2024 அன்று திருவாரூர் ரயில் நிலையம் முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருவாரூர் மாவட்டம் குடவாசல் தாலுக்கா 60 அபிவிருத்திஸ்வரம் கிராமத்தில் வருவாய் மற்றும் பேரிடர் வேளாண்மைத் துறையின் சார்பில் இன்று(ஜூலை 19) மக்கள் நேர்காணல் முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை திருவாரூர் மாவட்ட ஆட்சியர் திருமதி சாரு ஸ்ரீ வழங்கினார். அப்போது திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கே கலைவாணன் உடன் இருந்தார்
மகளிா் உரிமைத் தொகை பயனாளிகளைத் தோ்வு செய்யும் பணிகளை, ரேஷன் கடை ஊழியர்கள் கடந்தாண்டு மேற்கொண்டனர். கடந்த ஜூலை 23, ஆகஸ்ட் 4 ஆகிய விடுமுறை தினங்களில் பணிகளை மேற்கொண்டதால், அதனை ஈடுசெய்யும் வகையில் நாளை (ஜூலை 20) விடுமுறை அளித்து தமிழக அரசு உத்தரவிட்டிருக்கிறது. இதனால் திருவாரூர் மாவட்டம் முழுவதும் நாளை ரேஷன் கடைகள் இயங்காது. எனவே, பொதுமக்கள் இன்றே ரேஷன் கடைகளில் பொருட்களை வாங்கி கொள்ளுங்கள்.
Sorry, no posts matched your criteria.