India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருவாரூர் முன்னாள் நகர்மன்ற தலைவரும், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் வழக்கறிஞர் பிரிவு மாநில துணைச் செயலாளருமான ரவிச்சந்திரனின் துணைவியார் கடந்த சில நாட்களுக்கு முன்பு இயற்கை எய்தினார். இதனையடுத்து அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் நேற்று திருவாரூரில் உள்ள அவரது இல்லத்திற்கு நேரில் சென்று ரவிச்சந்திரன் குடும்பத்தாருக்கு ஆறுதல் தெரிவித்தார்.
திருவாரூர் மாவட்ட திமுக செயலாளர் பூண்டி கலைவாணன் நேற்று கூறியதாவது: தமிழ்நாடு முதலமைச்சர் அறிவுறுத்தல்படி, ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கையில் மாற்றாந்தாய் போக்குடன், தமிழ்நாட்டை வஞ்சித்த ஒன்றிய பாஜக அரசை கண்டித்து, திருவாரூர் ரயில் நிலையம் முன்பு வரும் 27ஆம் தேதி, காலை 10 மணியளவில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது என்றார் அவர்.
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக நேற்று இரவு திருவாரூர் பகுதிக்கு வருகை தந்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், மத்திய அரசு பட்ஜெட்டில் தமிழகத்திற்கு எந்த நிதியையும் ஒதுக்காதது மிகுந்த வருத்தமளிப்பதாக தெரிவித்தார். மேலும், எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக, திமுகவின் பி-டீம் எனவும் விமர்சித்தார். இந்நிகழ்வில் அமமுக நிர்வாகிகள் உடனிருந்தனர்.
திருவாரூர் மாவட்ட கூட்டரங்கில் நாளை விவசாயிகள் குறைத்தீர் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் நன்னிலம், திருவாரூர், திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி, வலங்கைமான், குடவாசல், முத்துப்பேட்டை, கோட்டூர் உள்ளிட்ட மாவட்டத்தில் பல்வேறு பகுதியில் உள்ள விவசாய சங்கத்தினர் விவசாயிகள் கலந்து கொண்டு தங்களது குறைகளை தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ தெரிவித்துள்ளார்.
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் முன்னாள் படைவீரர்கள் நலத்துறை சார்பில் நடத்தப்பட்ட முன்னாள் படை வீரர்கள் சிறப்பு குறைந்திருக்கும் நாள் கூட்டத்தில் பயனாளிகளுக்கு கலெக்டர் சாருஸ்ரீ நலத்திட்ட உதவிகல்ளை வழங்கினார். முன்னாள் படை வீரர் நலன் உதவி இயக்குனர் மேஜர் சரவணன்(ஓய்வு) உடன் இருந்தார்.
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில், ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி கொண்டாடப்பட இருக்கும் நாட்டின் சுதந்திர தின விழா முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் சாரு ஸ்ரீ தலைமை வகித்தார். மாவட்ட வருவாய் அலுவலர் சண்முகநாதன் நேர்முக உதவியாளர் ராஜா மற்றும் உயர் அதிகாரிகள் கூட்டத்தில் பங்கேற்றனர்.
ஐக்கியநாடுகள் சபை ஜூலை 26ம் தேதி அலையாத்தி காடுகள் பாதுகாப்பு தினமாக அறிவித்துள்ளனர். 2016 ஆம் ஆண்டு ஜூலை 26 முதல் அலையாத்தி காடுகள் பாதுகாப்பு தினம் அனுசரிக்கப்படுகிறது.1998 ஆம் ஆண்டு ஜூலை 26 தேதி ஈக்வெடார் நாட்டில் அலையாத்தி காடுகள் உருவாக்க நடத்திய போராட்டத்தில் மாரடைப்பால் இறந்த சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆர்வலர் கேகேவ் டேனியல் நானோ நினைவாக இந்த தினம் அனுசரிக்கப்படுகிறது.
திருவாரூர் மாவட்டத்தில், ஊர்க்காவல் படை துணை வட்டார தளபதி பணிக்கு இளங்கலை பட்டப் படிப்பு முடித்த பெண் விண்ணப்பதாரர்கள் வருகிற ஜூலை 31-ஆம் தேதிக்குள் தங்களது சுய விவரத்துடன் கூடிய விண்ணப்பத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் சமர்ப்பித்து பயன்பெறுமாறு காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தன்னார்வ அடிப்படியில் மேற்கொள்ளும் இப்பணிக்கு ஊதியம் ஏதும் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.
திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகளை மேம்படுத்தும் விதமாக கலை, விளையாட்டு, ஓவியம், இசை ஆகியவற்றில் சிறந்து விளங்கும் மாற்றுத்திறனாளிகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் வளர்ச்சிக்கு உதவும் சமூக அமைப்புகள், தொண்டு நிறுவனங்கள் ஆகியவை www.awards.gov.in என்கிற இணையதளம் வாயிலாக விருதினை பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் சாரூ ஸ்ரீ தெரிவித்துள்ளார்.
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அரசு கல்லூரிகளில் முதுநிலை மாணவர் சேர்க்கை விண்ணப்பம் பதிவு வருகிற 27.04.24 முதல் 07.08.24 வரை நடைபெற உள்ளது. தரவரிசை பட்டியல் ஆகஸ்ட் 10-ஆம் தேதியும், மாணவர்களுக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 19-ஆம் தேதி முதல் 23-ஆம் தேதி வரை நடைபெற்று, முதுநிலை முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் வரும் 28.08.24 அன்று தொடங்கும் என திருவாரூர் திரு.வி.க கல்லூரி முதல்வர் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.