India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
TNPSC நடத்தும், குரூப்-2, குரூப் 2ஏ தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க நாளை (ஜூலை 19) கடைசி நாள் ஆகும். இதில், உதவி இன்ஸ்பெக்டர் மற்றும் பல்வேறு துறைகளில் உள்ள உதவியாளர் பணியிடங்கள் (2,327 பணியிடங்கள்) நிரப்பப்படவுள்ளன. விண்ணப்பதாரர்கள் https://tnpsc.gov.in/ அல்லது -1 ஆகிய தளங்களில் விண்ணப்பிக்கலாம் நாளை இரவு 12 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
திருவாரூர் ஆட்சியர் அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார். அதில், “அக்னிபாத் திட்டத்தின் அக்னிவீர் வாயு ஆட்சேர்ப்பு தேர்விற்காக கடந்த 8 ஆம் தேதி முதல் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன. இந்நிலையில், வரும் ஜுலை.28 ஆம் தேதி வரை விண்ணபிக்க இந்திய விமானப்படை கால அவகாசம் வழங்கியுள்ளது. தகுதியுடையவர்கள் https://agnipathvayu.cdac.in என்ற இணையத்தளத்தில் விண்ணப்பிக்கலாம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருவாரூர் எஸ்பி அலுவலகத்தில், ரவுடிகளை கண்காணிக்க அமைக்கப்பட்ட சிறப்பு குழுவினருடன் கலந்தாய்வு கூட்டம் திருவாரூர் எஸ்.பி ஜெயக்குமார் தலைமையில் இன்று நடைபெற்றது. இதில் நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்தும், ரவுடிகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டன.
தமிழகத்தில் இன்று இரவு 10 மணி வரை 13 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி திருவாரூர் மாவட்டத்திலும் இன்று இரவு 10 மணி வரை இடி, மின்னலுடன் மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. கடந்த சில நாட்களாகவே தமிழ்நாட்டில் அவ்வப்போது மழை பெய்து வருவது குறிப்பிட்டத்தக்கது,
திருவாரூர் ஏஐடியுசி அலுவலகத்தில் அனைத்து சங்க ஆலோசனைக் கூட்டம் CITU மாவட்ட செயலாளர் முருகையன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில், விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதாரவிலையை நிர்ணயம் செய்யவும், 4 தொழிலாளர் சட்டத்தொகுப்பை வாபஸ் வாங்கவும், 3 குற்றவியல் சட்டங்களை ஒன்றிய அரசு வாபஸ் பெற வலியுறுத்தியும் வரும் 24 ஆம் தேதி திருவாரூரில் தபால் நிலையம் முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டது.
சோழபுரம்-தஞ்சாவூா் தேசிய நெடுஞ்சாலையில் மேம்பாலம் கட்டும் பணிக்காக வேதாரண்யம் கூட்டுக்குடிநீா் திட்ட பிரதான நீா் உந்துக் குழாய், மாற்றுப் பாதையில் பதிக்கும் பணிகள் நடைபெறவுள்ளது. இதனால் வேதாரண்யம் கூட்டுக்குடிநீா் திட்டத்தில் பயன்பெறும் உள்ளாட்சிகளில் ஜூலை 18, 19-ஆம் தேதிகளில் குடிநீா் விநியோகம் இருக்காது என மாவட்ட ஆட்சியா் தி. சாருஸ்ரீ தெரிவித்துள்ளாா்.
தொடக்கப்பள்ளி இடைநிலை ஆசிரியர் பணிக்கு, கூடுதலாக 1,000 பணியிடங்கள் சேர்க்கப்பட்டுள்ளது. இதனால், 2,768 பணியிடங்களுக்கு வரும் 21ஆம் தேதி தேர்வு நடைபெற உள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் இந்த தேர்வானது நடைபெற உள்ளது. தேர்வு கூடங்கள் பற்றிய விவரங்களை ஹால் டிக்கெட்டில் தெரிவிக்கப்படும். இன்னும் ஓரிரு நாட்களில் ஹால் டிக்கெட்டுகள் <
அம்மன் கோயில்களுக்கு மூத்த குடிமக்களை இலவச ஆன்மிக சுற்றுலா அழைத்துச் செல்லும் திட்டம் இந்து சமய அறநிலையத்துறை மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி ஆடி மாதம் அழைத்துச் செல்லப்படும் இந்த சுற்றுலா செல்ல விரும்புவோர் விண்ணப்பிக்க இன்று (ஜூலை 17) கடைசி நாளாகும். திருவாரூரை சேர்ந்த 60 முதல் 70 வயது கொண்ட முதியோர் https://hrce.tn.gov.in/hrcehome/index.php என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
தமிழகத்துக்கு காவிரி நீரை தர மறுக்கும் கர்நாடக அரசை கண்டித்து இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிகளை சேர்ந்த விவசாயிகள் நேற்று(ஜூலை.16) பல்வேறு இடங்களில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன்படி திருவாரூர், நீடாமங்கலம், திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி ஆகிய இடங்களில் ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது.போராட்டத்தில் ஈடுபட்ட 77 பெண்கள் உட்பட 476 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னையில் தமிழ் வளர்ச்சித்துறை சார்பாக நடைபெற்ற பள்ளி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி இன்று (ஜூலை.5) இன்று நடைபெற்றது. மாநில அளவிலான இப்போட்டியில் திருவாரூர் மாவட்டம் பேரளம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 12-ஆம் வகுப்பில் பயிலும் ச.கௌ.பாவேஷ் பிரசன்னா முதலிடம் பெற்று ரூ.50,000 பரிசு தொகை வென்றார் .
Sorry, no posts matched your criteria.