India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்தில் ஒவ்வொரு வாரமும் புதன்கிழமை அன்று பொதுமக்கள் குறைதீர் முகாம் நடைபெறும். அந்த வகையில் இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தலைமையில் முகாம் நடைபெற்றது. முகாமில் புதிதாக 21 பேர் மனு அளித்தனர் மனுக்களை அனைத்தையும் வாங்கி பார்த்து குறைகளை கேட்டு அறிந்தார்.
திருவாரூர் எஸ்பி ஜெயக்குமார் தலைமையில் உட்கோட்டம் மற்றும் சிறப்பு பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர்களுடன் சிறப்பு கலந்தாய்வு கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் விசாரணை முடிவடையாமல் நிலுவையில் உள்ள வழக்குகள் மாற்று நீதிமன்ற விசாரணையில் உள்ள வழக்குகளில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்தும், சட்டவிரோத செயலில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
திருவாரூர் மாவட்டத்தில், நன்னிலம், குடவாசல், வலங்கைமான், நீடாமங்கலம், மன்னார்குடி பகுதிகளில் சுமார் 60,000 ஏக்கரில் குருவை சாகுபடி நடந்துள்ளது. இந்நிலையில் குருவை சாகுபடிக்கு தேவையான விதை நெல்கள் கோ 55, ஆடுதுறை 63, ஏ.எஸ்.டி 16, ரகங்கள் கையிருப்பு உள்ளதாகவும், மேலும் யூரியா, காம்ப்ளக்ஸ் பொட்டாஸ் போன்ற உரங்கள் கூட்டுறவு சங்கங்களில் கையிருப்பு உள்ளதாகவும் வேளாண் இணை இயக்குனர் தெரிவித்துள்ளார்.
திருவாரூர் மாவட்டத்தில் ‘முதல்வரின் காலை உணவுத் திட்டத்தின்’ மூலம் 40,104 மாணவர்கள் பயனடைந்து வருவதாக மாவட்ட ஆட்சியர் தி.சாருஸ்ரீ தெரிவித்துள்ளார். 750 கிராமப்புற அரசுப் பள்ளிகள் மற்றும் 27 பேரூராட்சி பகுதிகளில் உள்ள அரசுப் பள்ளிகள் என மொத்தம் 777 பள்ளிகளில் முதல்வரின் காலை உணவுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது என்றார் அவர்.
திருவாரூர் மாவட்டத்தில் சுய உதவிக்குழுக்கள், கிராம வறுமை ஒழிப்பு சங்கங்கள் ஊராட்சி அளவிலான குழு கூட்டமைப்புகள், வட்டார அளவிலான குழு கூட்டமைப்புகளின் தணிக்கைக்கான தணிக்கையாளர்கள் அல்லது தணிக்கை நிறுவனங்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் ஜூலை.30-ஆம் தேதிக்கு முன்பாக ஊரக வளர்ச்சி முகமை என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும் என திருவாரூர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
திருவாரூர் மாவட்ட காவல் நிலைய பகுதிகளில் கைப்பற்றப்பட்ட உரிமை கோரப்படாத ஒரு நான்கு சக்கர வாகனம் மற்றும் 185 இருசக்கர வாகனங்களை பொது ஏலத்தில் விட மாவட்ட ஆட்சியரால் அமைக்கப்பட்ட ஏல குழுவினரால் வரும் ஆகஸ்ட் 7-ஆம் தேதி காலை 10.00 மணியளவில் ஏலம் விட தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஏலம் எடுப்பவர் நேரில் கலந்து கொள்ளலாம் என மாவட்ட காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருத்துறைப்பூண்டி, காமராஜர் சிலை அருகே மின் கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி வரும் ஜூலை 25-ஆம் தேதி தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. மேலும் தமிழகத்துக்கு கிடைக்க வேண்டிய காவிரி நீரை முழுமையாக பெற்று தர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து தெற்கு மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி ஒன்றியம் ஆலங்கால் கிராமத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளியின் மகள் பிரியங்கா, தஞ்சை மாவட்டத்தின் மாவட்ட ஆட்சியராக நேற்று பதவி ஏற்றுக்கொண்டார். தஞ்சை மாவட்டத்தில் ஆட்சியராக பதவியேற்ற பிரியங்கா அவர்களுக்கு திருத்துறைப்பூண்டி பகுதி மக்கள் சார்பில் சமூக வலைத்தளங்களில் வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.
திருவாரூர் மாவட்ட மக்களுக்கு அரசின் சேவைகள் எளிதில் சென்றடையும் வகையில், நத்தம் பட்டா மாறுதலுக்கு இணையம் வாயிலாக விண்ணப்பித்து பதிவிறக்கம் செய்துகொள்ளும் முறை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட வட்டங்களில் நத்தம் பட்டா மாறுதலுக்கு இ-சேவை மையங்கள் வாயிலாக விண்ணப்பித்து பொதுமக்கள் பயன்பெறலாம் என திருவாரூர் மாவட்ட ஆட்சியர் சாரூ ஸ்ரீ தெரிவித்துள்ளார்.
பிரதம மந்திரி உணவு பதப்படுத்தும் குறு நிறுவனங்களை முறைப்படுத்தும் திட்டம்
அல்லது ஏதாவது ஒரு வேளாண் சார்ந்த தொழில் துவங்கும் 21 முதல் 40 வயதுடைய பட்டதாரிகளுக்கு இத்திட்டத்தின் கீழ் நிதி உதவி வழங்கப்படும். இத்திட்டத்தின் கீழ் பயனடைய விரும்பும் வேளாண் பட்டாதாரிகள் வேளாண் அதிகாரி தொடர்பு கொண்டு பயன்பெறுமாறு திருவாரூர் மாவட்ட ஆட்சியர் சாரூ ஸ்ரீ தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.