Thiruvarur

News July 31, 2024

கல்லணை நீர் திறப்பில் திருவாரூர் ஆட்சியர் பங்கேற்பு

image

டெல்டா பகுதிகளில் விவசாயம் மேற்கொள்வதற்காக கல்லணையில் இன்று தண்ணீர் திறக்கப்பட்டது. இந்நிகழ்வில் திருவாரூர் மாவட்ட ஆட்சியர், தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர், அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, டி.ஆர்.பி.ராஜா மற்றும் திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த முக்கிய பொறுப்பாளர்கள் அரசு துறை அதிகாரிகள் கல்லணை நீர் திறக்கும் நிகழ்வில் கலந்து கொண்டனர்.

News July 31, 2024

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

image

திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த, கிறித்தவர், இஸ்லாமியர், மற்றும் சீக்கியர் உள்ளிட்ட அனைத்து சிறுபான்மை மக்களுக்கான, தனிநபர் கடன், சுய உதவிக் குழு கடன், சிறுதொழில் கடன், கைவினைஞர்கள் கடன், கல்வி கடன் ஆகியவற்றை பெற விண்ணப்பிக்கலாம். மேலும், தேவையான ஆவணங்களுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் தகவல்கள் பெற்று பயனடையலாம் என்று மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

News July 31, 2024

நீர் நிலைகளுக்கு செல்ல வேண்டாம் என கலெக்டர் அறிவுரை

image

கல்லணையில் இருந்து இன்று தண்ணீர் திறக்கப்படுவதால், திருவாரூர் மாவட்டத்தில் அனைத்து ஆறுகளிலும் அதிகளவில் தண்ணீர் செல்லும். எனவே, தாழ்வான பகுதியில் வசிப்போர், உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும். மேலும், பொதுமக்கள் நீர் நிலைகளில் குளிக்க செல்ல வேண்டாம் எனவும், கால்நடைகளை பாதுகாப்பாக பராமரிக்க வேண்டும் என்றும் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.

News July 31, 2024

கோயில் திருவிழாவில் தகராறு

image

வடபாதிமங்கலம் அருகே வடகட்டளை அய்யனார் கோயில் திருவிழாவில் கடந்த 29ஆம் தேதி இரவு கலைநிகழ்ச்சி நடைபெற்றது. கலைநிகழ்ச்சியின் போது கீழப்பனங்காட்டாங்குடியை சேர்ந்த சரத்குமார் (31), சக்திவேல் (25), அபிமன்யூ (23), பிரவின் 27), ஆகியோர் தகராறில் ஈடுபட்டுள்ளனர். இதை தட்டி கேட்ட வேதையன் (36) என்பவரை நால்வரும் சேர்ந்து தாக்கியதில் காயமடைந்தார். பின்னர் போலீசார் 4 பேரையும் கைது செய்தனர்.

News July 31, 2024

பறவைகள் சரணாலயத்தில் அமைச்சர் ஆய்வு

image

மன்னார்குடி பகுதியில் உள்ள வடுவூர் பறவைகள் சரணாலயத்தில், தினந்தோறும் ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் வந்து செல்வது வழக்கம். இந்த சரணாலயத்தில் பல்வேறு வகையான பறவைகள் வருகின்றன. ஆகையால் பறவைகள் சரணாலயத்தை மேம்படுத்தவும், தண்ணீர் அதிக நாட்கள் தேங்கி இருக்கவும், அரசு நிதி ஒதுக்கீடு செய்து, தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது. மேலும் இப்பணிகளை நேற்று தொழில்துறை அமைச்சர் பார்வையிட்டார்.

News July 31, 2024

மன்னை எக்ஸ்பிரஸ் ரயிலில் மாற்றம்

image

தென்னக ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தாம்பரம் ரயில் நிலைய பணிகள் காரணமாக மன்னார்குடியில் இருந்து சென்னை செல்லும் மன்னை எக்ஸ்பிரஸ் ரயில் ஆகஸ்ட் 14,15,16,17 ஆகிய தேதிகளில் மட்டும் செங்கல்பட்டு வரை மட்டுமே செல்லும்.
சென்னையில் இருந்து மன்னார்குடி நோக்கி புறப்படும் மன்னை எக்ஸ்பிரஸ் ரயில் ஆகஸ்ட் 15,16,17 தேதிகளில் மட்டும் விழுப்புரத்தில் இருந்து புறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

News July 30, 2024

சீர்மரபினர் இனத்தை சார்ந்தவர்களுக்கு வாய்ப்பு

image

திருவாரூர் கலெக்டர் சாருஸ்ரீ வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை மூலம் சீர்மரபினர் இனத்தைச் சார்ந்தவர்களுக்கு SEED“ (Scheme for Economic Empowerment DNT’S) திட்டம் மத்திய அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் பல்வேறு சலுகை திட்டங்கள் உள்ளது. தகுதியுள்ள பயனாளிகள் www.dwbdnc.dosje.gov.in இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்” என்று தெரிவித்துள்ளார்.

News July 30, 2024

மக்களை தேடி மருத்துவ பணியாளர்கள் கைது

image

மக்களை தேடி மருத்துவம் பணியாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை டிஎம்எஸ் வளாகத்தில் இன்று காத்திருப்பு போராட்டம் நடைபெற உள்ளது. இதற்காக திருவாரூர் மாவட்டத்திலிருந்து மக்களை தேடி மருத்துவ பணியாளர்கள் ரயில் மூலம் செல்வதற்காக நேற்று இரவு ரயில் நிலையத்தில் காத்திருந்தபோது திருவாரூர் மாவட்ட காவல்துறையினர் கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்தனர்.

News July 30, 2024

தொழிலாளிக்கு 27 ஆண்டு சிறை தண்டனை

image

கொரடாச்சேரி பெருமாளகரம் பகுதியை சேர்ந்தவர் ராஜ்குமார்(41). கூலித்தொழிலாளியான இவர் கடந்த 2021-ம் ஆண்டு திருவாரூர் பகுதியை சேர்ந்த சிறுமியை கடத்திச் சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். மேலும் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து இவரை கைது செய்த நிலையில், இந்த வழக்கில் மகிளா விரைவு நீதிபதி ராஜ்குமாருக்கு 27 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.15 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.

News July 30, 2024

அனைத்து அரசு பள்ளிகளிலும் பெற்றோர் கூட்டம்

image

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வகை பள்ளிகளிலும் பெற்றோர்கள் கூட்டம் நடத்தி பள்ளி மேலாண்மை குழுவை மறு கட்டமைப்பு செய்யுமாறு திருவாரூர் முதன்மை கல்வி அலுவலகம் அறிவுறுத்தி உள்ளது. அதன்படி, இன்று முதல் அனைத்து மாணவர்களின் பெற்றோர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு, ஆக-2 அன்று நடைபெறும் பெற்றோர்கள் கூட்டத்தில் கலந்து கொள்ள செய்யுமாறு தலைமையாசிரியர்களை முதன்மை கல்வி அலுவலகம் கேட்டுக் கொண்டுள்ளது.

error: Content is protected !!