India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
இந்திய தடகள வீரரான ராஜேஷ் ரமேஷ் (24) திருவாரூர் மாவட்டம் பேரளத்தைச் சேர்ந்தவர். இவர் 2022ல் ஆசிய விளையாட்டுப் போட்டியில் கலப்பு 4 × 400 மீட்டர் தொடர் ஓட்டப் போட்டியில் வெள்ளிப் பதக்கமும், ஆண்கள் 4 × 400 மீட்டர் தொடர் ஓட்டப் போட்டியில் தங்க பதக்கமும் வென்று அனைவரது கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்தார். மேலும் இந்தாண்டு ராஜேஷ் ரமேஷ், பாரிஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்கிறார்.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் இருந்து பாண்டிச்சேரி, பழனி, சென்னை, திருச்சி மற்றும் திருவண்ணாமலை என தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் இன்று 7 புதிய பேருந்துகள் இயக்கப்பட்டது. மேலும் தமிழக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி ராஜா பேருந்துகளை கொடியசைத்து தொடங்கி வைத்தார். மாவட்ட ஆட்சியர் சாரு ஸ்ரீ மற்றும் அரசு அதிகாரிகள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில், விவசாயிகள் குறைதீர் கூட்டம் 40 நாட்களுக்கு ஒரு முறை நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இன்று விவசாயிகள் குறைதீர் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் சாரு ஸ்ரீ தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் மற்றும் வேளாண் துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நன்னிலம் பேரூராட்சி, எழில் நகரில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் ரூ.1.17 கோடி மதிப்பில் கலைஞர் நகர்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் நூலகம் மற்றும் அறிவு சார் மையம் கடந்த 24.02.2024 அன்று திறக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இங்கு டிஎன்பிஎஸ்சி, எஸ்எஸ்சி போன்ற போட்டி மற்றும் திறனறி தேர்வு புத்தகங்கள் உள்ளன. இதனை மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
தமிழக அரசு அறிவித்துள்ள குருவை சிறப்பு தொகுப்பு திட்டத்தை பாகுபாடு இல்லாமல் அனைத்து விவசாயிகளுக்கும் வழங்க வேண்டும். கனமழையால் பாதிக்கப்பட்ட பருத்தி விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் முன்பாக விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவாரூர் முன்னாள் நகர்மன்ற தலைவரும், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் வழக்கறிஞர் பிரிவு மாநில துணைச் செயலாளருமான ரவிச்சந்திரனின் துணைவியார் கடந்த சில நாட்களுக்கு முன்பு இயற்கை எய்தினார். இதனையடுத்து அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் நேற்று திருவாரூரில் உள்ள அவரது இல்லத்திற்கு நேரில் சென்று ரவிச்சந்திரன் குடும்பத்தாருக்கு ஆறுதல் தெரிவித்தார்.
திருவாரூர் மாவட்ட திமுக செயலாளர் பூண்டி கலைவாணன் நேற்று கூறியதாவது: தமிழ்நாடு முதலமைச்சர் அறிவுறுத்தல்படி, ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கையில் மாற்றாந்தாய் போக்குடன், தமிழ்நாட்டை வஞ்சித்த ஒன்றிய பாஜக அரசை கண்டித்து, திருவாரூர் ரயில் நிலையம் முன்பு வரும் 27ஆம் தேதி, காலை 10 மணியளவில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது என்றார் அவர்.
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக நேற்று இரவு திருவாரூர் பகுதிக்கு வருகை தந்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், மத்திய அரசு பட்ஜெட்டில் தமிழகத்திற்கு எந்த நிதியையும் ஒதுக்காதது மிகுந்த வருத்தமளிப்பதாக தெரிவித்தார். மேலும், எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக, திமுகவின் பி-டீம் எனவும் விமர்சித்தார். இந்நிகழ்வில் அமமுக நிர்வாகிகள் உடனிருந்தனர்.
திருவாரூர் மாவட்ட கூட்டரங்கில் நாளை விவசாயிகள் குறைத்தீர் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் நன்னிலம், திருவாரூர், திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி, வலங்கைமான், குடவாசல், முத்துப்பேட்டை, கோட்டூர் உள்ளிட்ட மாவட்டத்தில் பல்வேறு பகுதியில் உள்ள விவசாய சங்கத்தினர் விவசாயிகள் கலந்து கொண்டு தங்களது குறைகளை தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ தெரிவித்துள்ளார்.
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் முன்னாள் படைவீரர்கள் நலத்துறை சார்பில் நடத்தப்பட்ட முன்னாள் படை வீரர்கள் சிறப்பு குறைந்திருக்கும் நாள் கூட்டத்தில் பயனாளிகளுக்கு கலெக்டர் சாருஸ்ரீ நலத்திட்ட உதவிகல்ளை வழங்கினார். முன்னாள் படை வீரர் நலன் உதவி இயக்குனர் மேஜர் சரவணன்(ஓய்வு) உடன் இருந்தார்.
Sorry, no posts matched your criteria.