India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருத்துறைப்பூண்டி புதிய பேருந்து நிலையத்தில் ஸ்வீட் கடை மோகன் இவருடைய மகன் அருள் பிரகாஷ் கடந்த மாதம் இட தகராறில் அடித்து படுகொலை செய்யப்பட்ட நிலையில், காவல்துறை சார்பில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். விசாரணையில் மூன்று நபர்கள் கைது செய்யப்பட்ட நிலையில் நான்காவது நபராக இன்று காலை ராமலிங்கம் என்பவர் கைது செய்யப்பட்டு திருத்துறைப்பூண்டி காவல் நிலையத்தில் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
திருவாரூர் மாவட்டத்தில் மழைப்பொழிவு நிலவரம் (மிமீ) நேற்று (செப்.11) காலை 6 மணி முதல் இன்று (செப்.12) காலை 6 மணிவரை நிலவரப்படி திருவாரூர்-13.0, நன்னிலம் – 0.0, குடவாசல்-5.2, வலங்கைமான்-5.0, மன்னார்குடி -29.0, நீடாமங்கலம்-21.8, பாண்டவையாறு-12.4, திருத்துறைப்பூண்டி- 11.4, முத்துப்பேட்டை-17.4, மொத்தம் – 115.2, சராசரி – 12.8. அதிகபட்சமாக மன்னார்குடியில் 29 மில்லி மீட்டர் மழை அளவு பதிவாகியுள்ளது.
நன்னிலம் வட்டத்திற்குட்பட்ட 38.ஆலங்குடி கிராமத்தில் நடைபெற்ற மக்கள் நேர்காணல் முகாமில் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் சாரூஸ்ரீ கலந்து கொண்டு 275 பயனாளிகளுக்கு ரூ.98,86,200 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை இன்று வழங்கினார். இதில் மாவட்ட ஊராட்சி தலைவர் பாலசுப்பிரமணியன் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
நன்னிலம் பகுதியில் நடைபெற்று வரும் அரசு திட்ட பணிகளான கலைஞரின் கனவு இல்லம் திட்டம், புதிய அங்கன்வாடி மைய கட்டுமானம், புதிய சாலைகள் அமைப்பு உள்ளிட்ட பணிகளை மாவட்ட ஆட்சியர் சாரூஸ்ரீ இன்று நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். நிகழ்வில் அரசு துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
இஸ்லாமிய மக்கள் அரசு தமிழக அரசு சார்பில் ஹஜ் பயணம் மேற்கொள்ள விண்ணப்பிக்க கடைசி நாள் 09.09.24 என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், கால அவகாசத்தை வரும் 23.09.24 வரை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் விபரங்களுக்கு www.hajcommittee.gov.in இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை தெரிவித்துள்ளது.
திருவாரூர் மாவட்டத்தில், பொது விநியோகத் திட்டத்தினை மேம்படுத்திடும் வகையில் பொது விநியோகத் திட்ட சிறப்பு பொது மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் செப்.14 ஆம் தேதி காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரையில் மாவட்டத்தில் உள்ள பத்து வட்டாரங்களிலும் ஒவ்வொரு இடத்தில் நடத்தப்பட உள்ளது. மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் அலுவலர்களிடம் அளித்து பயன்பெறலாம் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார
தொழிற்கல்வி பயிலும் முன்னாள் படைவீரர்களின் சிறார்களுக்கு பாரதப் பிரதமரின் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க, முன்னாள் படைவீரர்கள் மற்றும் சார்ந்தோர்கள் முதலாமாண்டு தொழிற்கல்வி பயிலும் தங்களின் சிறார்களுக்கு “www.ksb.gov.in” என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள விளக்கம் மற்றும் விவரக்குறிப்பின்படி, இணையதளம் வழியாக மட்டும் விண்ணப்பிக்க வேண்டும் என திருவாரூர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்து உள்ளார்.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் இருந்து மயிலாடுதுறை செல்லும் பாசஞ்சர் ரயில் மற்றும் திருவாரூரில் இருந்து மயிலாடுதுறை செல்லும் ரயில் ஆகியவை மயிலாடுதுறை ரயில் நிலையம் யார்டில் நடைபெறும் பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று (11ம் தேதி) முதல் வருகின்ற 15ஆம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. இதற்கு மாவட்ட கலெக்டா சாருஸ்ரீ தலைமை தாங்கி பேசினார். இதில் புதிதாக மறுசீரமைப்பிற்குள்ளாகும் வாக்குச்சாவடிகளின் பட்டியல் சம்பந்தப்பட்ட அலுவலகங்களில் வெளியிடப்பட்டுள்ளன. மேற்படி வாக்குச்சாவடிகளை மறுசீரமைப்பு குறித்து ஆட்சேபனை ஏதுமிருப்பின் வருகிற 13-ந் தேதிக்குள் சம்பந்தப்பட்ட தெரிவிக்கலாம்
திருவாரூர் மாவட்டத்தில் நெல் விதை பண்ணை அமைத்திட 670 ஹெக்டர் இலக்கு வழங்கப்பட்டுள்ளது. நெல் ,உளுந்து, பச்சை பயிறு விதை பண்ணை அமைத்திட ஆர்வமுள்ள ஆதிதிராவிட விவசாயிகள் வட்டார உதவி விதை அலுவலரை தொடர்பு கொண்டு விதைப்பண்ணை அமைத்து உற்பத்தி செய்து பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித் தலைவர் சாருஸ்ரீ தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.