India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழகத்தின் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை உள்ளிட்ட 34 மாவட்டங்களில் இன்று இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி திருவாரூர் மாவட்டத்தில் இன்று இரவு 7 மணி வரை இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காட்பாடி ரயில் நிலைய பராமரிப்பு பணிகள் காரணமாக வரும் ஆகஸ்ட்.15 அன்று மட்டும் நண்பகல் 11.55 மணிக்கு திருப்பதியில் இருந்து மன்னார்குடி நோக்கி புறப்படும் பாமணி விரைவு ரயில் சித்தூர், காட்பாடி, வேலூர், திருவண்ணாமலை என்கிற வழக்கமான பாதைக்கு பதிலாக ரேணிகுண்டா, அரக்கோணம், செங்கல்பட்டு, விழுப்புரம் வழியாக இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
திருவாரூர் மாவட்டத்தில், அம்பேத்கர் பிறந்த நாளையொட்டி வருகிற 21-ந் தேதியும், முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்த நாளையொட்டி வருகிற 22-ந் தேதியும், மாவட்டத்தில் உள்ள கல்லூரி, பள்ளி மாணவர்களுக்கு பேச்சு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசு தொகைகள் வழங்க தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்போட்டிகளில், மாணவ, மாணவிகள் பங்கேற்குமாறு திருவாரூர் மாவட்ட ஆட்சியர் நேற்று அறிவித்தார்..
திருவாரூர் எஸ்பி அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர் கூட்டம் எஸ்பி ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், புதிதாக மனு கொடுக்க வந்த 29 மனுதாரர்களிடம், எஸ்பி ஜெயக்குமார் நேரடியாக புகார் மனுக்களை பெற்று, அவர்களின் குறைகளை கேட்டறிந்தார். மேலும், சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகள் மூலம் நடவடிக்கை மேற்கொண்டார். இக்கூட்டத்தில், மாவட்ட காவல்துறை உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.
தேசிய கைத்தறி தினம் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. திருவாரூர் மாவட்டத்தில் அம்மையப்பன், கூறைநாடு, மன்னார்குடி பகுதிகளில் கைத்தறி நெசவாளர் உள்ளனர். வேலை வாய்ப்பிலும், பொருளாதாரத்திலும் முக்கிய பங்களிப்பை செய்து வரும் கைத்தறி நெசவாளர்களுக்கு, இந்த 10வது தேசிய கைத்தறி தினத்தில் வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன் என திருவாரூர் கலெக்டர் சாருஸ்ரீ தெரிவித்தார்.
மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழகத்தில் இன்று 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, திருவாரூர் மாவட்டத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. உங்கள் பகுதியில் மழை பெய்ய வாய்ப்புள்ளதா என்பதை கமென்டில் தெரிவிக்கவும்
நன்னிலம் அடுத்த அதம்பார், வேலங்குடி ஆகிய மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் அங்கிருந்து மின்வினியோகம் பெறும் பகுதியான மருதவஞ்சேரி, கடகம்பாடி, பாகசாலை, விலாகம், அதம்பார், எரவாஞ்சேரி, ஸ்ரீவாஞ்சியம், திருவிழிமிழலை, வேலங்குடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளுக்கும் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2மணி வரை மின்வினியோகம் இருக்காது என செயற்பொறியாளர் பிரபாகர் கூறினார்.
திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி திமுக கட்சி அலுவலகத்தில் இன்று முன்னாள் முதல்வர் கருணாநிதியின் ஆறாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அவரது திரு உருவப்படத்திற்கு திமுக மாவட்ட செயலாளரும், திருவாரூர் சட்டமன்ற உறுப்பினருமான பூண்டி கலைவாணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்நிகழ்வில் ஒன்றிய செயலாளர் பாலச்சந்திரன், பேரூர் செயலாளர் கலைவேந்தன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் ரயில் நிலையத்தில் வருடாந்திர பராமரிப்பு பணி இன்று நடைபெற உள்ளது. எனவே அந்த வழியாக தஞ்சாவூர் செல்லும் பேருந்துகள் திருவாரூரிலிருந்து திருச்சி நீடாமங்கலம் வழியாகச் செல்லும் வகையில் வழித்தடம் மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஆகவே பொதுமக்கள் யாரும் இந்த வழியை பயன்படுத்த வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க!
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் சாரு ஸ்ரீ வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் 10 வட்டாரங்களில் வட்டாரத்திற்கு ஒருவர் வீதம், வட்டார வள பயிற்றுநர்கள் பணியிடங்களுக்கு தகுதியுடைய சுய உதவிக் குழு பெண்கள் விண்ணப்பிக்கலாம். மேலும், 8-ம் தேதிக்குள் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள ஊரக வாழ்வாதார இயக்க இணை இயக்குநர் அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும் என அவர் அறிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.