India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருவாரூர் மாவட்டத்தில் அனைத்து கிராமங்களிலும், நாளை முதல் 21 நாட்களுக்கு நடைபெற உள்ள தோல் கழலை தடுப்பூசி முகாமில் கலந்து கொண்டு, கால்நடைகளுக்கு தோல் கழலை நோய் தடுப்பூசி செலுத்த அறிவுறுத்தியுள்ளார். மேலும் விவரங்களுக்கு, அருகிலுள்ள கால்நடை மருந்தக உதவி மருத்துவரை அணுகி பயன்பெறலாம் என திருவாரூர் மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ அறிவித்துள்ளார்.
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்க்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று தெரிவித்திருந்தது. அதன்படி தமிழத்தின் கடலோரப் பகுதிகளில் நேற்று இரவு முதல் பரவலாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் (ஆகஸ்ட்.5) காலை 10 மணி வரை கனமழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. உங்கள் பகுதியில் மழை பெய்கிறதா என்பதை கமெண்ட்டில் பதிவிடவும்.
வக்பு வாரியத்தில் 5 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரியும் உலமாக்கள் மானிய விலையில் இருசக்கர வாகனங்கள் பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ தெரிவித்துள்ளார். இதற்கு தகுதியாக தமிழ்நாட்டை சேர்ந்த 18-45 வயதுடைய நபராக இருத்தல் அவசியமாகும். வாகனத்தின் விலையில் 50% அல்லது ரூ.25,000 மானியமாக வழங்கப்படும். முன்னுரிமை அடிப்படையில் ஒருவருக்கு மட்டும் மானிய தொகை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருத்துறைப்பூண்டி ரயில் நிலையத்தில் இருந்து அகஸ்தியம்பள்ளி வரை நாளை அதிவேக ஆய்வு ரயில் வினாடிக்கு 121 கிலோமீட்டர் வேகத்தில் இயக்கப்பட உள்ளது. எனவே அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் இருப்பு பாதைகளை கடப்பதையோ, கால்நடைகளை மேய்ச்சலுக்கு விடுவதையோ தவிர்க்க வேண்டும் என ரயில்வே நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
திருவாரூர் ஆட்சியர் சாரு ஸ்ரீ வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருவாரூர் மாவட்டத்தில் தமிழ் செம்மல் விருதுக்கு தகுதியுடைய தமிழ் ஆர்வலர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விருப்பம் உள்ளவர்கள் இணையம் வாயிலாக விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் அலுவலகத்தில் வரும் 8-ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
இன்று சர்வதேச நண்பர்கள் தினம் கொண்டாடப்படுகிறது. இவ்வுலகில் நண்பர்கள் இல்லாமல் எவரும் இல்லை. கிணற்றில் குளித்தது, கிரிக்கெட் ஆடியது, பள்ளிக்கு செல்வதாக கூறி படத்துக்கு போவது என சினிமாவை மிஞ்சும் அளவுக்கு நண்பர்களுடன் செய்த சேட்டைகளுன்டு. அந்த வகையில், நீங்க உங்க நண்பனை பற்றி கீழே கமெண்ட் பண்ணுங்க, நண்பனுக்கு சேர் செய்யுங்க.
ஜூலை மாதத்தில் துவரம் பருப்பு, பாமாயில் பெற முடியாத அட்டை தாரர்கள், இம்மாதம் பெற்றுக்கொள்ளலாம். ஜூன் மாதம் து.பருப்பு, பாமாயில் பெற இயலாதவர்கள், ஜூலை மாதத்தில் பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது. இதனால், ஜூலை மாதத்துக்கான துவரம் பருப்பு, பாமாயிலை சிலரால் பெற முடியவில்லை. எனவே, திருவாரூர் மாவட்டத்தில் உள்ள 3,90,621 அட்டை தாரர்களில் ஜூலை மாதத்துக்கான பொருட்களை பெறாதவர்கள் இம்மாதம் பெறலாம்.
திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் தொழில் ஆணையர் மற்றும் இயக்குனர் நிர்மல்ராஜ் தலைமையில் சிறப்பு கூட்டம் நடைபெற்றது. இதில் அவர் கூறியதாவது: தமிழ்நாடு அரசு, அனைத்து தரப்பினரும் பயன் அடைகின்ற வகையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. வளர்ச்சி திட்ட பணிகளை அதிகாரிகள் கண்காணித்து உரிய காலத்திற்குள் முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் அவர்.
திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ் ஜெயக்குமார் (ஆகஸ்ட்.3) இன்று மன்னார்குடி நகர காவல் நிலையத்தில் பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகளை பார்வையிட்டார். அப்போது பத்திரிகையாளர்களை சந்தித்த காவல் கண்காணிப்பாளர், பொது மக்களுக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்படும் நபர்கள் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கூறினார்.
திருவாரூர் மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் மன்னார்குடி சட்டமன்ற தொகுதியில் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவ, மாணவிகளுக்கு உள்ளிக்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் இன்று நடைபெற்ற விழாவில் தஞ்சை நாடாளுமன்ற உறுப்பினர் முரசொலி பரிசுகள் வழங்கி, ஆசிரியர்கள் மற்றும் மாணவிகளை பாராட்டினார். தலைமை ஆசிரியர் பாலாஜி, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் கயல்விழி பொய்யாமொழி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Sorry, no posts matched your criteria.