India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
2013 ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று 11 ஆண்டுகளாக வேலையில்லாமல் தவித்து வரும் நபர்களுக்கு உடனடியாக வேலை வழங்க வேண்டும், அரசாணை எண் 149 உடனடியாக ரத்து செய்ய வேண்டும், தேர்தல் வாக்குறுதி 177 உடனடியாக நிறைவேற்ற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூர் நகராட்சி அலுவலகம் முன்பாக 300 க்கும் மேற்பட்டோர் கைக்குழந்தையுடன் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே அமைந்துள்ள முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் உள் விளையாட்டு அரங்க வளாகத்தில் இன்று காலை 10 மணி அளவில் விளையாட்டு வீரர்களுக்கான தமிழக அரசின் சார்பில் விலையில்லா அனைத்து வகை விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது இதில் மாவட்ட ஆட்சியர் கலந்து கொள்கிறார்.
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், +2 தேர்ச்சி பெற்று உயர்கல்வி படிக்க முடியாத சூழல் உள்ளவர்களுக்கான உயர்வுக்கு படி என்ற விழிப்புணர்வு முகாம் இன்று (செப்.,26) வேலுடையார் பள்ளியில் நடைபெறுகிறது. இதில், பெற்றோர்கள் மாணவர்களை அழைத்து வந்து கல்வி கடன் மற்றும் உயர்கல்வி வாய்ப்பு பெற ஆட்சியர் அழைத்துள்ளார்.
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், +2 தேர்ச்சி பெற்று உயர்கல்வி படிக்க முடியாத சூழல் உள்ளவர்களுக்கான உயர்வுக்கு படி என்ற விழிப்புணர்வு முகாம் நாளை (செப்.,26) வேலுடையார் பள்ளியில் நடைபெறுகிறது. இதில், பெற்றோர்கள் மாணவர்களை அழைத்து வந்து கல்வி கடன் மற்றும் உயர்கல்வி வாய்ப்பு பெற ஆட்சியர் அழைத்துள்ளார்.
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக்கழகம் (தாட்கோ) சார்பில் மானியத்துடன் கூடிய கடன் உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி திருவாரூர் மாவட்டத்தில் உள்ள தகுதிவாய்ந்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின வகுப்பினை சார்ந்தவர்கள் மானியத்துடன் கடனுதவி பெற www.tahdco.com என்ற இணையதளத்தில் பதிவுசெய்து பயனடையுமாறு திருவாரூர் மாவட்ட ஆட்சியர் சாருஶ்ரீ தெரிவித்துள்ளார்.
திருவாரூா் நகரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியில் போலீஸாா் நேற்று சோதனைப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, மருதப்பட்டினம் தியாகி சின்னச்சாமி தெருவில் சந்தேகத்துக்கிடமான வகையில் நின்று கொண்டிருந்த அதே பகுதியைச் சோ்ந்த அலெக்ஸ் (25), வசம்போடைத் தெருவைச் சோ்ந்த ஞானசேகரன் (53) ஆகியோரை போலீசார் சோதனை செய்தனர். சோதனையில் ரூ.5,800 மதிப்பிலான கஞ்சாவை பற்றிய போலீசார் இருவரையும் கைது செய்தனர்.
திருவாரூர் மாவட்டம், அடியக்கமங்கலம் அருகில் குருக்கத்தி பைபாஸ் சாலை அரசு பேருந்து மோதியதில் இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த பிளஸ்1 மாணவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். உடன் இருந்த மாணவன் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தனது தம்பியுடன் ஸ்கூட்டியில் பள்ளிக்கு சென்றபோது மாணவி விபத்தில் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக்கழகம் (தாட்கோ) மூலமாக விவசாய தொழிலாளர்களை ஊக்குவிக்கும் வகையில் விவசாய நிலம் வாங்குவதற்கு தாட்கோ மானியத்துடன் கிரையம் தொகையினை இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் குறைந்த வட்டியில் கடனாக பெற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என திருவாரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் சாருஸ்ரீ தெரிவித்துள்ளார்.
திருவாரூர் மாவட்டத்தில் 2024 தனியார் வேலைவாய்ப்பு முகாம் வரும் 05.10.24 (சனிக்கிழமை) மன்னார்குடி இராஜகோபால சுவாமி அரசு கலைக் கல்லூரியில் நடக்கிறது. இதில் 150க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் பங்கேற்று சுமார் 5000 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதில் பங்கேற்க www.tnprivatejobs.in.gov.in விண்ணபிக்கலாம் .மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ கேட்டுக்கொண்டுள்ளார்.
திருவாரூா் மாவட்டத்தில் இல்லங்களில் பராமரிக்கப்படும் நூலகங்களில் சிறப்பான ஒன்றை தோ்ந்தெடுத்து ரூ.3,000 மதிப்பில் கேடயம் மற்றும் சான்றிதழ் வழங்கி கெளரவிக்கப்பட உள்ளது. திருவாரூா் மாவட்டத்தில் தனிநபா் இல்லங்களில் நூலகம் அமைத்து பராமரித்து வருவோா், தங்கள் நூலகத்தில் உள்ள நூல்களின் எண்ணிக்கை உள்ளிட்ட விவரங்களை 04366-251779, 9444523125 எண்களில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.
Sorry, no posts matched your criteria.