India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மன்னார்குடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட நீடாமங்கலம், ரிஷியூர், பெரம்பூர், காரிச்கான்குடி, கீழாளவந்தசேரி, தேவன்குடி மற்றும் ராஜப்பையன்சாவடி பகுதிகள் பயன்பெறும் வகையில் கோரையாற்றின் குறுக்கே, VP கட்டளை கிராமத்தில் நடைபெற்றுவரும் பாலம் கட்டுமானப் பணிகளை தமிழ்நாடு அரசு தொழில்துறை அமைச்சர் முனைவர் TRB ராஜா இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ஆசியாவிலேயே மிகப் பெரிய இரண்டாவது தெப்பக்குளம் ஹரித்ராநதி எனப்படும் குளத்தில் தமிழ்நாடு அரசு தொழில் துறை அமைச்சர் டிஆர்பி ராஜா முயற்சியால் தமிழ்நாடு அரசு சுற்றுலா துறையின் மூலமாக படகு சவாரிக்கு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி அமைக்கப்பட்டுள்ள படகு சவாரி அலுவலகங்களை நகரமன்ற தலைவர் சோழராஜன் இன்று ஆய்வு செய்தார்.
கொரடாச்சேரி அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பள்ளி கல்வித்துறையின் சார்பில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா இன்று நடைபெற்றது. இதில் திருவாரூர் வட்டத்திற்கு உட்பட்ட 6 பள்ளிகளை சேர்ந்த 767 மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட ஆட்சியர் சாரு ஸ்ரீ வழங்கினார்
தஞ்சாவூர்-கோடியக்கரை நெடுஞ்சாலையில் அமைந்துள்ள வடுவூர் பறவைகள் சரணாலயம், திருவாரூரில் இருந்து 25 கிமீ தூரத்தில் மன்னார்குடி அருகே அமைந்துள்ளது. சுமார் 112 ஹெக்டேர் பரப்பளவு கொண்ட இந்த பறவைகள் சரணாலயத்திற்கு ஆண்டுதோறும் 50,000க்கும் மேற்பட்ட வண்ண வண்ண உள்நாட்டு & புலம் பெயர்ந்த பறவைகள் வந்து செல்கின்றன. குறிப்பாக செப்டம்பரில் அதிக பறவைகள் வருகின்றன. நீங்க இந்த சரணாலயத்தை விசிட் பண்ணிருக்கீங்களா?
நேற்று தேசிய யானைகள் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு அரசு தொழில் துறை அமைச்சர் டிஆர்பி ராஜா மன்னார்குடி ராஜகோபால சாமி கோயில் யானை செங்கமலத்துடன் சேர்ந்து நின்று புகைப்படம் எடுத்து முகநூலில் பதிவிட்டார். இதில், ‘அழகான செங்கமலம் யானை’ என்கிற கமெண்ட்ஸ் உடன் பதிவு செய்துள்ளார். இதற்கு பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர்.
மன்னார்குடி பகுதியைச் சேர்ந்த தூய்மை பணியாளரின் மகள் துர்கா குரூப் 2 தேர்வில் வெற்றி பெற்ற நிலையில். தற்போது திருத்துறைப்பூண்டி நகராட்சி ஆணையராக தமிழக முதல்வர் அரசாணை வழங்கி சிறப்பித்துள்ளார். இந்நிகழ்வில் அரசு துறை அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர். அதற்கான அரசாணையை துர்கா இன்று பெற்றுக்கொண்டார்.
மன்னார்குடி ஊராட்சி ஒன்றியம் அசேஷம் ஊராட்சி சிங்கங்குளம் மற்றும் சேரன்குளம் இடையே பாமணி ஆற்றின் குறுக்கே ரூ 6.06 கோடி மதிப்பீட்டில் PMGSY திட்டத்தின் கீழ் ஊரக வளர்ச்சி துறை மூலம் நடைபெற்று வரும் பாலம் கட்டுமான பணியினை இன்று தமிழ்நாடு அரசு தொழில் துறை அமைச்சர் டி ஆர் பி ராஜா ஆய்வு செய்தார். இதில் மாவட்ட ஊராட்சி தலைவர் தலையாமங்கலம் பாலு கோட்டாட்சியர் கீர்த்தனா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
திருவாரூரில் பிறந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூறாவது பிறந்த நாளை முன்னிட்டு நூறு ரூபாய் நாணயம் மத்திய அரசாங்கத்தால் வருகிற ஆகஸ்ட் 18 ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது. இந்நிகழ்வில் மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் கலந்து கொள்ள உள்ளனர்.
இந்திய பிறப்பு இறப்பு பதிவாளர் அறிவுரையின்படி 1.1.2000க்கு முன்னர் பிறப்பு பதிவு செய்யப்பட்டு 1.1.2000 தேதியிலிருந்து 15 ஆண்டுகள் கடந்தும் பிறப்பு பதிவுகளிலும் பெயரைச்சேர்த்து குழந்தை பெயருடன் பிறப்பு சான்றிதழ் பெற டிச.31ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த வாய்ப்பினை திருவாரூர் மாவட்ட மக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ அறிவித்துள்ளார்.
திருவாரூரில் பிறந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூறாவது பிறந்த நாளை முன்னிட்டு நூறு ரூபாய் நாணயம் மத்திய அரசாங்கத்தால் வருகிற ஆகஸ்ட் 18 ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது. இந்நிகழ்வில் மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் கலந்து கொள்ள உள்ளனர்.
Sorry, no posts matched your criteria.