India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நன்னிலம் அருகே ஆலங்குடி பகுதியில் நேற்று மாலை, இரு சக்கர வாகனத்தில் அடையாளம் தெரியாத நபர் முழுவதும் எறிந்த நிலையில் கிடந்துள்ளார். இதனைக் கண்ட அக்கம் பக்கத்தினர் தண்ணீரைக் கொண்டு அணைத்துள்ளனர். ஆனால் இரு சக்கர வாகனமும் அடையாளம் தெரியாத நபரும் முழுவதுமாக எரிந்து கருகிய நிலையில், இது குறித்து நன்னிலம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருவாரூர் தெற்கு மாவட்டம் தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் சட்டமன்றத் தொகுதி திருத்துறைப்பூண்டி மன்னார்குடி இரண்டு தொகுதிகளையும் இணைத்து செயல்வீரர் கூட்டம் நடைபெறுகிறது. ஆகஸ்ட் 14-ஆம் தேதி மன்னார்குடி தனியார் அரங்கில் நடைபெற உள்ளது. இது அனைத்து பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு முக்கிய தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட உள்ளதாக தகவல் வழங்கப்பட்டுள்ளது.
இந்திய பிறப்பு, இறப்பு பதிவாளர் அறிவுரைப்படி 01.01.2000 தேதியிலிருந்து 15 ஆண்டுகள் கடந்த பிறப்பு பதிவுகளில் பெயரை சேர்த்து பிறப்பு சான்றிதழ் பெற 31.12.2024 வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த கால அவகாசம் நீட்டிப்பு 31.12.2024க்கு பிறகு மீண்டும் வழங்க இயலாது. எனவே, திருவாரூர் மாவட்ட மக்கள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ தெரிவித்துள்ளார்.
திருவாரூர்-திருத்துறைப்பூண்டி-காரைக்குடி ரயில் வழித்தடத்தில் இயக்கப்பட்டு வந்த ரயில் எண் 06051, 06052 இனி தாம்பரத்தில் இருந்து ராமநாதபுரம் வரை 22.8.2024 முதல் 14.9.2024 வரை வாரந்தோறும் வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் சிறப்பு விரைவு ரயிலாக இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதற்கு முன் இந்த ரயிலானது வாரம் ஒரு முறை மட்டுமே இயக்கப்பட்டு வந்தது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
திருவாரூர் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் இன்று நடைபெற்ற பருத்தி ஏலத்தில் அதிகபட்சமாக குவிண்டால் ஒன்றிற்கு ரூ.7,239 விலை கிடைத்தது. இதனால் ஒரே நாளில் ரூபாய் 1 கோடியே 20 இலட்சம் என்கிற அளவில் ஏலம் நடைபெற்றது. இதனால் விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர். மேலும் பருத்தியை நன்றாக உலர்த்தி எடுத்து வந்தால் பருத்திக்கு நல்ல விலையை பெறலாம் என்று விவசாயிகளுக்கு அதிகாரிகள் அறிவுறுத்தினார்.
தமிழகத்தின் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை உள்ளிட்ட 34 மாவட்டங்களில் இன்று இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி திருவாரூர் மாவட்டத்தில் இன்று இரவு 7 மணி வரை இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காட்பாடி ரயில் நிலைய பராமரிப்பு பணிகள் காரணமாக வரும் ஆகஸ்ட்.15 அன்று மட்டும் நண்பகல் 11.55 மணிக்கு திருப்பதியில் இருந்து மன்னார்குடி நோக்கி புறப்படும் பாமணி விரைவு ரயில் சித்தூர், காட்பாடி, வேலூர், திருவண்ணாமலை என்கிற வழக்கமான பாதைக்கு பதிலாக ரேணிகுண்டா, அரக்கோணம், செங்கல்பட்டு, விழுப்புரம் வழியாக இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
திருவாரூர் மாவட்டத்தில், அம்பேத்கர் பிறந்த நாளையொட்டி வருகிற 21-ந் தேதியும், முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்த நாளையொட்டி வருகிற 22-ந் தேதியும், மாவட்டத்தில் உள்ள கல்லூரி, பள்ளி மாணவர்களுக்கு பேச்சு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசு தொகைகள் வழங்க தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்போட்டிகளில், மாணவ, மாணவிகள் பங்கேற்குமாறு திருவாரூர் மாவட்ட ஆட்சியர் நேற்று அறிவித்தார்..
திருவாரூர் எஸ்பி அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர் கூட்டம் எஸ்பி ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், புதிதாக மனு கொடுக்க வந்த 29 மனுதாரர்களிடம், எஸ்பி ஜெயக்குமார் நேரடியாக புகார் மனுக்களை பெற்று, அவர்களின் குறைகளை கேட்டறிந்தார். மேலும், சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகள் மூலம் நடவடிக்கை மேற்கொண்டார். இக்கூட்டத்தில், மாவட்ட காவல்துறை உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.
தேசிய கைத்தறி தினம் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. திருவாரூர் மாவட்டத்தில் அம்மையப்பன், கூறைநாடு, மன்னார்குடி பகுதிகளில் கைத்தறி நெசவாளர் உள்ளனர். வேலை வாய்ப்பிலும், பொருளாதாரத்திலும் முக்கிய பங்களிப்பை செய்து வரும் கைத்தறி நெசவாளர்களுக்கு, இந்த 10வது தேசிய கைத்தறி தினத்தில் வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன் என திருவாரூர் கலெக்டர் சாருஸ்ரீ தெரிவித்தார்.
Sorry, no posts matched your criteria.